CJ for You: satsang

satsang

Showing posts with label satsang. Show all posts
Showing posts with label satsang. Show all posts

Welcome Patrons, Sponsors and Supporters for Vethathiriya Channel



அன்பர்களே, 

பொதுவான தளத்தில், உங்களைப்போன்ற, நம் வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமே பதிவுகள் வழங்குவதில் ஒரு தொய்வு இருப்பதாக அறிகிறேன். ஏனென்றால், பொதுவெளியில் தரப்படும் எதுவும், நேரடியாக உங்களுக்கு வந்து சேர்வதில் தாமதமாகலாம். ஆனால் நீங்களே விரும்பி ஏற்கும் நிலையில், அது நேரடியாகவும், உங்கள் விருப்பத்திலும், உங்களுக்கான தீர்வாகவும், முழுமையாகவும் அமைந்துவிடும். சரிதானே?

அப்படியாக ஜூம் (ZOOM) வழியாக காலையும், மாலையும் பதிவுகள் வழங்க விருப்பம் கொண்டுள்ளேன். இதற்கு புரவலர்களும், நன்கொடையாளர்களும்,ஆதரவாளர்களும் தேவை. (Patrons, Sponsors and Supporters).  உங்களில் அத்தகைய விருப்பமுள்ளவர்கள், உங்களால் அனுகூலமான தொகையை, குறைந்தபட்சமாகக்கூட கொடையாக மாதம் ஒருமுறை, இந்திய ரூபாயாக அனுப்பிவைக்கலாம். அது உங்களின் விருப்ப கட்டணமாகவும், நன்கொடையாகவும் இருக்கலாம். கூகுள் மீட் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகியனவும் திட்டத்தில் உள்ளது. உங்கள் நன்கொடை விரைவில் தொடங்கிட உதவி செய்யும். 

இந்த நிகழ்வு, உங்களுக்கும் பயன்படும், உங்களைப்போன்ற பிற அன்பர்களுக்கும் பயன்படும். தனித்தனியாக அன்பர்களுக்கு கட்டணம் அமைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இந்த சேவை தொடங்கவும், வளரவும் உங்கள் ஆதரவை விரும்பும், வேதாத்திரிய சானல்!

வாழ்க வளமுடன்.

-

நன்கொடை அனுப்பிட:
9442783450@UPI

வங்கி விபரம்:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

விபரம் வேண்டுவோர் தொடர்புகொள்ள:
wa.me/919442783450

-

* இது வேதாத்திரியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமான அழைப்பு!

-

Dear Friends, 

In the general domain, I understand that there is a slackness in providing posts only to our Vethathiriya lovers like you. This is because anything that is given in public will be delayed in reaching you directly. But if you accept it voluntarily, it will be direct, voluntary, remedy and complete for you. Right?

So I would like to offer morning and evening events via ZOOM. It needs patrons, donors and supporters. Those of you who are interested can send a favorable amount of Indian Rupees as a minimum by month. It can be your preferred fee and a donation. Google Meet and Microsoft Teams also on process. It helps to start live discussion as soon as possible..

This event will be of use to you as well as to other lovers like you. I'm not interested in setting fees for individual deacons. We would like your support to start and grow this service, Vethathiriya Channel!

Live prosperously.

-

For Digital Donate:
9442783450@UPI

Bank Details:
Name: J Sugumaran
Bank: HDFC
Type: Savings
Ac No: 50100081694540
Branch: Thillainagar
Branch Code: 058
IFSC: HDFC0000058
MMID: 9240401

-

Feel free to contact for details:
wa.me/919442783450

-

* This is an invitation only for those interested in Vethathiriyam!

Shall we get initiation, guidance on self realization from you as a Master?


உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.

பதில்:

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல்,  பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!

எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை  விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.

தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய வாட்சாப் http://wa.me/91944273450 என்ற கைபேசி இணைப்பு வழியாக அனுப்பி வைக்கலாம்.  வேதாத்திரிய கேள்வி பதில் வாட்சாப் குழு ’ https://chat.whatsapp.com/H9g30UE1iWf2H7aAeM1qHc ' உள்ளது, அதிலும் உங்களைக்குறித்த, விபரங்கள் சொல்லிவிட்டு பிறகு உங்கள் சந்தேகம் கேட்கலாம். நிச்சயமாக உங்கள் அறிமுகம் தேவை. அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை, தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.

சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாழ்க வளமுடன்
-

AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION presents SEREVIYO


AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION

ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி

வணக்கம் அன்பர்களே,

கடந்த அக்டோபர் மாத்தில், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி (AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION) என்ற பெயரில் தனிப்பட்ட ஒரு சேவை நிறுவனம் அமைத்தாகி விட்டது! 

இதன்வழியாக, ஒரு குறிப்பிட்ட வரையறை எல்லைக்குள்ளாகவும், வளையத்திற்குள்ளாகவும் செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது. ஏனென்றால், ஒருவரை பின்பற்றி நடந்தால் (அதாவது குரு மகான் வேதாத்திரி மகரிஷியை), நாம் பெற்ற வேதாத்திரிய கருத்துக்களைக்கூட சொல்ல முடியவில்லை. இது அவருடையதா, உன்னுடையதா? என்று சந்தேகிக்கின்றனர். அதை பல பின்னூட்டங்கள் வழியாக நான் அறிவேன். இதனோடு எப்படி, நாம் பெற்ற நம்முடைய அனுபவங்களை சொல்லமுடியும்? 

மேலும் அப்படியான ஒருவரை, பின்பற்றி அவர் வழி நடக்க மாபெரும் சங்கமும் இருக்கிறது, மக்களும் இருக்கின்றனர். சிலவேளை, நாம் பகிர்கின்ற ஒரு சில பதிவுகளை, கருத்துக்களை ‘எங்களுடையது’என்று காப்புரிமை கோருகிறார்கள். என்னுடைய வேதாத்திரிய யோகா காணொளி பதிவிலும் அப்படி ஒரு பிரச்சனை எழுந்து, அதை ஏற்று, அழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால், YouTube அதை என்னிடம் சொல்லி, நீக்குமாறு எச்சரிக்கையாக சொல்லிவிட்டது. அதை நாம் மீறினால் குற்றம் என்றாகிவிடும். பிறகு நம்முடைய காணொளி சேவையும் நீக்கப்படும்.

இதுகுறித்து எனக்கு கவலையில்லை. என்றாலும், இதை நாம் எளிமையாக கடந்து நகர்வோம். ஏனென்றால், நமக்கு அந்த ஒருவரும், அவர் தந்த உண்மை விளக்கமும், அதன் வழியாக நாம் பெற்ற உண்மையும், அனுபவமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதுபோதும்!

அதனால்தான், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும், அது அவசியமானதாக இருக்கிறது என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. அந்த அடிப்படையில்தான், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி என்ற் அமைப்பின் வழியாக, சேரெவியோ எனும் அறம், யோகம் வழியாக தன்னையறிதல் (Sereviyo : Self-Realization with Virtue and Yoga) என்ற சேவை தொடங்கப்பட்டது. 

இதனுடைய நோக்கம், ஏற்கனவே தீட்சை எடுத்துக்கொண்ட அன்பர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களை உயர்த்திட துணை செய்வதும், தீட்சை பெறாதோர்க்கும், சராசரி அன்பர்களுக்கும், வாழ்வில் துன்புற்று வருந்தி, கலங்குவோருக்கும் உதவிடும் வகையில், பதிவுகள் அமைந்திருக்கும்.

பதிவுகளை கேட்டுக்கொண்டே எல்லோரும் தவம் இயற்றிடவும் இங்கே வழிகள் சொல்லித்தரப்படும். அது உங்களையும், உங்கள் மனதை புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து இங்கே பயணம் செய்வது மட்டுமே உங்களை, தன்னையறிதலை நோக்கி நகர்த்தும் என்பது உண்மை.

முக்கியமாக, இங்கே உங்களுக்கு இருக்கின்ற எல்லாவிதமான நம்பிக்கைகளையும், வழக்க, பழக்கங்களையும் கைவிட்ட நிலையில் நீங்கள் இணைந்துகொண்டால், உங்கள் வளர்ச்சி அபரிதமாக அமையும் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் அதை விட்டுவிலகுதலும், கைவிடுதலும் அவ்வளவு சுலபமும் அன்று. ஆனால் அதை நீங்களே முடிவு செய்யலாம். தொடர்ந்து பதிவுகளை காணுங்கள். உங்களை வரவேற்று மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி

இது தொடர்பான விளக்கங்கள், மேலும்...

Sereviyo Welcomes you!

செரெவியோ வழியாக உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும்! முன்னுரையாக எப்படி செயல்பட விரும்புகிறோம் என்பதையும், அது உங்களுடைய வாழ்விற்கு எவ்விதம் உதவும் என்ற வகையிலும் விளக்கம் தந்துள்ளோம். கண்டு கேட்டு பயன்பெறுக. நாம் தொடர்ந்து பயணிப்போம். நன்றி!

வேதாத்திரிய உண்மைகளை, இயல்பான வாழ்வோடு கலந்து, இன்னொரு பரிணாமத்தில், நம்மை அறிவதற்கான பயணம் இது. விருப்புவோர் இணைந்துக்கொண்டு, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@sereviyo

-

முதல் காணொளி பதிவு (அறிமுகம்)

Do you like to understand the secret of you and this universe? ரகசியத்தை அறிந்துகொள்ள விருப்பமா? 

https://www.youtube.com/watch?v=iOKawT1Ghu8

-

Sereviyo WhatsApp Group

Sereviyo என்பது, அறம், யோகம் வழியாக தன்னையறிதல் என்ற சேவை ஆகும். இது ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும் வழங்கப்படுகிறது!

உங்களுடைய கருத்துக்கள், பின்னூட்டங்கள் தெரிவிக்கலாம். பதிவுகள் குறித்த முன்னூட்டம், விளக்கம் பெறலாம். உங்களுக்கான ஆறுதல், சந்தேக தீர்வு, கேள்விக்கான பதில்களை பெறலாம்.

https://chat.whatsapp.com/H6KiDLTtSfG9gXusm9czGp

-

Is it true to say that there is a purpose in the birth of man?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு நோக்கம், மனிதனின் பிறப்பில்  இருப்பதாக சொல்லுவது உண்மையா?


பதில்:

இந்த கேள்விக்கான பதிலை நீங்கள், உங்களுடைய வாழ்க்கையிலேயே புரிந்துகொள்ள முடியும் என்பதே உண்மை. நான் தனியாக விளக்கிச் சொல்வதற்கு தேவையே இல்லை என்று நினைக்கிறேன். உங்களைப்போலவே எல்லோருமே இந்த சந்தேகத்தில்தான் இருந்திருப்பார்கள். நாளடைவில், தங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அது தொடர்பான துன்பம், இன்பம், குறை, நிறை இப்படி பலவகைகளில் அனுபவம் பெறும்பொழுது, நம்முடைய வாழ்வில், இப்படியான சராசரி வாழ்வையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்ற கேள்வி பிறந்துவிடும்.

ஒருசிலர் தானாகவே அதற்கான பதிலை கண்டுபிடித்து அதற்கான வழியில் செல்ல தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் பக்தி, வேதாந்தம், ஆன்மீகவாதிகள், மகான்கள், ஞானிகள் தருகின்ற விளக்கங்களின் வழியாக தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். சிலர் தன்னுடைய வாழ்வில் கிடைக்கக்கூடிய விளக்கத்திற்காக, யோகத்தில் தன்னை இணைத்துக் கொள்வார்கள்.

ஆனாலும் பெரும்பாலோர், நம்முடைய பிறப்பில் எது இருந்தால் என்ன? இப்போது வாழ்வோம், அதெல்லாம் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்து, வழக்கமான வாழ்வையே வாழ்ந்து அனுபவிக்க தயாராகிவிடுவார்கள். நான் பிறந்தே தப்பு, நான் பிறந்த நேரம் சரியில்லை, என் ஜாதகம் பிரச்சனை, கிரகக்கோளாறு, போன பிறவியில் நான் செய்த பாவம், தெய்வத்திற்கு என்மீது இரக்கமே இல்லை, கடவுளே இல்லை, எல்லாம் பொய், வாழ்க்கையும் பொய் என்பதாக அப்படி இப்படி என்று புலம்பிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டுவார்கள். அவர்களை வேறொன்றும் செய்யவேண்டாம், அவர்கள் தேர்ந்தெடுத்தது அது என்றால் நாம் என்ன செய்யமுடியும்?

நீங்கள் இந்த கேள்வி கேட்டதே ஒரு நல்ல நகர்வு என்று சொல்லலாம். அதற்காக உங்களை பாராட்டுகிறேன்.

மேலும் தெளிவான விளக்கம் பெற, இந்த காணொளியில் கேட்டு அறியலாம். உண்மைகளை அறிய குரல்வழி விளக்கம் போதுமானது என்பதால், குரல்பதிவாக தந்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்.

-

How long I need to connect with yoga center after completed course?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுணர்வு பெறவும் தன்னை அறியவும் எவ்வளவுகாலம் மன்றத்தொடர்பு அவசியமாகிறது?


பதில்:

உங்கள் வேதாத்திரிய யோக கல்வி பயணத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே எல்லா பயிற்சிகளையும் முடித்துவிட்டு ‘அருள்நிதி’ என்ற நிலைக்கு உயர்ந்துவிடலாம். இதுவே போதுமானதுதான். அதாவது, நாம் நம்முடைய பிறவிக்கடன் தீர்ப்பதான, கர்மா என்ற வினைப்பதிவு களங்கள் போக்குதல், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து நம்மை தெளிவான முடிவுகளின் வழியாக, அளவுமுறையோடு வாழ்ந்து இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு வாழ மாற்றம் பெறலாம். தொடர்ந்து ஓவ்வொருநாளும் இயற்றுகின்ற தவத்தின் வழியாக, நான் யார்? என்ற கேள்வியின் ஊடாக, தன்னையறியலாம், இறையுணர்வும் பெறலாம்.

இதற்கிடையில் நாம் நம்மை ஊக்கம் பெற்றுக்கொள்ளவே, மன்றத்தொடர்பும், கூட்டுத்தவமும், சிந்தனை விளக்க உரைகளும் தேவைப்படுகிறது. மேலும் மன்றத்தில் பலரோடு பழகி தம் சிந்தனையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். அவர்களுடைய யோக அனுபவம் நமக்கு உதவக்கூடும். அங்கே நிகழும் கலந்துரையாடலில் விளக்கம் பெறலாம். கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். சந்தேகங்களுக்கு தீர்வும் பெறலாம். இக்காரணங்களால் தான், குறிப்பிட்ட காலம்வரை, அதாவது உங்களுக்கு போதுமானவரை என்றும் சொல்லலாம், மன்றத்தொடர்பு அவசியமாகிறது.

உங்களுக்கு, நீங்கள் கற்றுக்கொண்டதை பிறருக்கும், பகிர்ந்தளிக்க, பாடமாக தர விருப்பம் கொண்டால், அருள்நிதிக்கு அடுத்த நிலைகளான, உதவி பேராசிரியர் நிலை, பேராசிரியர் நிலைக்கும் உயரலாம். அதற்கும் மன்றத்தொடர்பு உதவிடும்!

எனவே நீங்கள் எந்த அளவிற்கு விளக்கம் பெற விரும்புகிறீர்களோ, எந்த அளவிற்கு ஆர்வமுளோர்க்கு பகிர விரும்புகிறீர்களோ அதைப்பொறுத்தே மன்றத்தொடர்பு உங்களுகு தேவைப்படும். ஆனால் இது எதுவும் கட்டாயமல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்!

வாழ்க வளமுடன்.

-