யோகத்தில் ஆர்வம்
கடவுளே இல்லை என்ற ஒரு தலைமுறையும் அவர்களின் மூன்று தலைமுறையினரும் நம்மோடு வாழ்ந்து வரும் காலம் இது. அப்படிபட்ட இடத்தில், தன்னையறியவும், இறையுண்மை பெறவும், யோகத்தில் ஆர்வம் எழுமா என்பதே சந்தேகம்தான். அதையும் மீறி யோகத்தில் இணைய விரும்பினால், சரியான குரு யார்? என்றும் சந்தேகம் எழுவது இயல்பு. வேறுவழியே இல்லை அவரவர், தன்னறிவின் துணை குருவையும், அவரின் விளக்க உரைகளை, விளக்கங்களை கேட்டு, பார்த்து, படித்து உண்மை ஆராய்ந்து தாங்களேதான் முடிவுக்கு வர வேண்டும். நான் சொன்னேன் என்பதற்காக, வேதாத்திரியத்தை பிடிப்பதும் சரியல்ல!
யோகத்தில் கட்டுப்பாடுகள்
பொதுவாக உலகில் எந்தவகையில் உள்ள யோக அமைப்பில் இணைந்தாலும் சில கட்டுப்பாடுகள் தரப்படுவதுண்டு. முதலாவதாக உடை, ஒழுக்க பழக்கங்கள், உணவு, தங்கும் விடுதி முறைகள், பிறரோடு பழகும் விதம், காலை எழும் நேரம், பயிற்சி கட்டுப்பாடுகள், இரவு படுக்கை நேரம் என இன்னும் பலவாறாக அமையும். இதற்கு ஒப்புகை அளித்தால் உள்ளே இருக்கலாம், இல்லையேல் அந்த அன்பர், தகுதியில் மீறிவிட்டார் என்று வெளியேற்றப்படுவார்.
உணவு மாற்றம்
யோக சாதனையில் இணைபவர்களுக்கு, அக்காலம் முதல் இக்காலம் வரை இருக்கும் பெரிய பயம், நினைத்ததை சாப்பிட முடியாதே என்பதுதான். ஏதோ இந்தக்காலகட்டத்தில் யோக அமைப்புக்கள் உள்ளன. இல்லை என்றால்,
நீ யோகத்தில் சேர்கிறாயா என்று கேட்டால்‘நான் என்ன பிச்சை எடுத்தா சாப்பிட முடியும்?’ என்று பதில் அளிப்பார்கள்.
யோகிகள் எல்லாருமே பிச்சை எடுக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அது அந்தக்கால கம்பிகட்டும் வேலை என்பதாக தெரிகிறது. சரி அந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம். ஆனாலும், யோகத்தில் இணைந்தால், இந்தந்த உணவு தான் உண்ணவேண்டும் என்ற திட்டம் உண்டு. ஏனென்றால் உடலை தேவையில்லாமல், இயல்பு மீறி ஊக்கிவிக்கக் கூடாது. சில தடகள விளையாட்டு வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யபடுவதை அறிவீர்கள் தானே?!
உடலை அதன் இயல்பு மீறி பலகாலமாக நாம் மாற்றிக்கொண்டுள்ளோம் என்பதே உண்மை. அதனால் நமக்கு பிடித்ததே உணவாகிவிட்டது. உடலுக்கு இது ஏற்குமா? வயிறுக்கு இது ஏற்குமா? செரிமானத்திற்கு இது ஏற்குமா? என்ற கேள்விகள் எழுவதே இல்லை. ஏதேனும் சொன்னால் எதிர்கேள்விக்கு குறைவில்லாமல் கேட்பார்கள். ஊக்குவிக்கும் உணவுகூட பரவாயில்லை தான். ஆனால்!
போதை தரும் உணவுகள்
உடலுக்கு, மனதுக்கு, மூளைக்கு போதை தரும் உணவுகள் முற்றிலும் தவிர்க்கபட வேண்டும் இந்த யோக சாதனைக்கு. ஏன் என்றால், நீங்கள் எதை நோக்கி நகர்கிறீர்களோ அது முற்றிலும் நிகழாது. ஒரு பிறழ்ந்த மயக்கத்தில் நீங்கள் சிக்கி விடுவீர்கள். அப்படி போதை தரும் பொருட்கள் என்னென்ன என்று நான் இங்கே குறிப்பிடுவது தேவையில்லை. அது இக்கட்டுரைக்கு முக்கியமும் அல்ல.
அமெரிக்க நாஸா ஆய்வு
ஒரு போதைப்பொருள் என்னென்ன செய்கிறது? எப்படியெல்லாம் இயக்கங்களை பாதிக்கிறது? மனிதனை மட்டுமா? எல்லா உயிரினங்களையுமா? என்று அமெரிக்க அறிவியல் / விண்வெளி நிறுவனமான நாஸா ஆராச்சி செய்ய முயன்றது. அவர்கள் அவ்வராய்சிக்கு எடுத்துகொண்டது, சிலந்தி பூச்சி. சில வகை ஊக்க / போதை உணவுகள் அதற்கு உணவாகக் கொடுத்து. அதனுடைய செயல், நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்களை, அந்த ஊக்க / போதை உணவுகள் விளைவிக்கின்றன என்று ஆராய்ந்தனர்.
அந்த ஆராய்ச்சியின் முடிவு இங்கே!
அந்த ஆராய்ச்சியில், நாம் சிலந்தி பூச்சியை அதன் போக்கில் விட்டுவிட்டோம். ஆனால் அதன் செயல் / நடவடிக்கை எப்படி இருக்கிறது / இருந்தன என்று பார்க்கலாமா? இதோ...
-
இதன் முடிவுகளை நான் தனியாக, கட்டுரையாக தரவேண்டிய அவசியமின்றி, நீங்களே பார்த்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் கேள்விகள் இருக்குமானால், கேளுங்கள் அல்லது அமெரிக்க நாஸாவிடமே கேட்டுவிடுங்களேன்!
-
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!
-
Thanks to: image by https://www.sciencenews.org/ and article idea source from: @WallStreetSilv (twitter) and NASA (USA)