CJ for You

Corona Prevention Game


 கரோனாக்கு எதிரான தடுப்பாட்டம்



தடுப்பாட்டம்

அன்பர்களே, கரோனா நோய் தொற்றுக்கு எதிராக நாம் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் தனக்கு தெரியாமலேயே சிக்கி, தன்னையே இரையாக கொடுத்தவர்கள் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை இழந்து தவித்தபடியும், தற்காப்பு செய்துகொண்டும் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளோம். 

கரோனா இயற்கையின் முரண் என்று சொல்லுவதற்கில்லை. ஏனென்றால் எப்போதோ நாம் இந்த இயற்கையை பழித்ததின் விளைவாக வெகுண்ட இயற்கை, இப்படி நோய் தொற்றாக எழுவதுண்டு. நோயும் ஒருவகையில் நமக்கு நன்மை பயப்பதுதான், எப்படியெனில், குப்பையிலும், மண்ணிலும் விளையாடும் குழந்தை ஒருவித நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிறது. இந்த கரோனா நோய்தொற்று அப்படியானதுதான், ஆனால் அதை தாங்கி, திருப்பித்தாக்கும் வலிமையை நாம் இழந்துவிட்டோமோ என்று கருதவேண்டியுள்ளது. 


அன்றும் ஆடினோம்

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், இன்று நாம் உயிரோடு இருப்பது நிஜம் என்றால், இந்த மனித உயிரினம் தோன்றி, இத்தனை ஆண்டுக் காலமாக எந்தவித நோய்க்கும், நோய்தொற்றுக்கும் ஆளாகாமல், தப்பித்து தொடர் தொடராக, தாய் தந்தை வழியாக பிறந்து வந்திருக்கிறோம் என்பது உண்மைதானே?! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால் நாம் தடுப்பாட்டம் ஆடித்தான் உயிர் பிழைத்திருக்கிறோம். எனவே கவலைப்படாதீர்கள். கரோனா தொற்றுக்கு எதிராகவும் சரியான தடுப்பாட்டம் ஆடுவோம் என்பது உறுதி. நம்பிக்கை இழக்காதீர். அதேநேரத்தில் அசட்டு தைரியம் கொள்ளாதீர்.



இறப்பும் பிறப்பும்

வேதாத்திரி மகரிசி சொல்லுவார், “இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், இரண்டு கடவுட்சீட்டு தரப்பட்டுள்ளது. ஒன்றில் நம் வந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொன்றில் தேதி குறிப்பிடப்படவில்லை. அந்த திரும்பும்சீட்டை யாருமே நீக்க முடியவில்லை, இந்த தேதிதான் என்று நாம் குறிப்பிடவும் முடியாது. பயணத்தை ரத்து செய்யவும் முடியாது”

உண்மைதானே?! நாம் பிறந்தபோதே, இறப்பு நிச்சயம் என்று தெரியாது போனாலும், நாம் வாழும் காலத்தில், நம்மை சுற்றி நிகழும் இறப்பின் வாயிலாக, இறப்பு நிச்சயம் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். மிக நெருக்கமானவர் இறந்தாலும், காலப்போக்கில் அதை, அந்த இழப்பை இயல்பாக்கிக்கொண்டு சராசரி வாழ்வுக்கும் வந்துவிடுகிறோம். அவர் இறந்துவிட்டாரே, நான் ஏன் வாழவேண்டும் என்று நாமும் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை. (சில ஜோடிகள் விதிவிலக்கு)

இறப்பு வரும்போது வரட்டுமே, என்று மனதை தேற்றிகொண்டு “மரண பயமின்றி” வாழ்க்கை கடன்களை செய்துவருவோம். அதுபோலவே கரோனாவும் பிறரின் உயிரைபறித்தாலும் நமக்கு பயமில்லை என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.


கரோனாவின் அறிவு மற்றும் வலிமை

கரோனா தனக்கென்று அறிவு கொண்டுள்ளது. எந்த பொருளுக்குமே உள்ளடக்கமாக அறிவு என்பது உண்டு. அது கல் ஆகட்டும், கல்கண்டு ஆகட்டும், ஆப்பிள் ஆகட்டும், ஆரஞ்சு ஆகட்டும் அறிவு உண்டுதான். கரோனாவிலிருக்கும் அறிவு தன்னை, ஓவ்வொரு சூழலிலும் தன்னை மேம்படுத்துகிறது என்பதை நுண்கிருமி ஆய்வாளார்களும், மருத்துவர்களும் சொல்லுகிறார்கள். குறிப்பாக நுரையீரல் சுவாசம் தொடர்பான மருத்துவர்கள் மிக விளக்கமாக கரோனாவின் செயல்பாடுகளை சொல்லுகிறார்கள்.

தற்போது வந்திருக்கும் இரண்டாம் அலை கரோனா, மறைந்திருந்து தாக்குகிறது என்று “எதிரி ராணுவத்தினரை” சொல்லி விளக்குவது போல விளக்குகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் அல்லது தடயத்தை மாற்றி மாற்றி தன்னை பரப்பிக்கொள்கிறது என்கிறார்கள்.


தடுப்பாட்டம் பலன் தருமா?

இந்திய அரசின் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் இரண்டும் போதுமான அளவில் தாக்குதலை தடுக்கும் ஆற்றலை மேம்படுத்தி தருகிறது என்கிறார்கள். முற்றிலும் கரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்துகள் இன்னும் ஆராய்ச்சியில்தான் உள்ளது. காலத்தாலும், ஆராய்ச்சியாளர்களின் முயற்சியாலும் சீக்கிரம் உலக மக்களுக்கு கிடைக்கவேண்டும். அதை நாம் இந்த இயற்கையிடமே வேண்டுவோம்.

இதற்கிடையில், நாம் ஒருவகையில் இந்த இயற்கையிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மனிதனும் இயற்கையின் பிரதிதான். ஆனால் மனிதனுக்காக இயற்கை படைக்கப்பட்டது எனும் “தன்முனைப்பு” மிக அதிகமாகிவிட்டது. எந்தவகையிலாவது இயற்கையை கெடுத்துக்கொண்டே இருப்பது என்பது மனிதனுக்கு வழக்கமாகிவிட்டது. 


இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை. மனிதனுக்காக (?!) இயற்கை பணியும் என்பது அர்த்தமில்லாதது. தன்னை முன்னிறுத்தி தன்னையே இல்லாதது ஆக்கிவிடும் பெரும் சக்தி அதனிடம் உண்டு. கொஞ்சமாவது இயற்கையின் முன் நான் அற்பம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.



முன்னெச்சரிக்கை

எப்படியாயினும், எங்கே சென்றாலும், யாரோடு சென்றாலும் முக கவசம் அணிந்து பழகுங்கள். மூக்கையும், வாயையும் மூடவேண்டுமே தவிர, உங்கள் தாடையை மூடவேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எதிரிலிருப்பவர் நண்பராக இருந்தாலும், காதலராக இருந்தாலும் முகமுடி தேவையில்லாது பழகுங்கள் ஆனால் முக கவசம் மறக்காதீர்கள்.

கண்ட இடங்களில் கைவைத்து, கைபிடித்து நடக்காதீர்கள், தேவையற்ற பொருட்களை தொடாதீர்கள். கடையில் பொருட்கள், காய்கறிகள், அசைவ வகைகள் நேரடியாக கை பட்டால் உடனே, அவ்வப்பொழுது 20 நொடி “கை கழுவும்” நீரால் கழுவிக்கொள்ளுங்கள். கையோடு அந்த பாட்டிலையும் எடுத்துச்செல்வது நல்லதே.

தேவையற்ற பயணம், பொழுதுபோக்கு, ஆட்டம், ஆர்ப்பாட்டம் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கும் பிறருக்குமான இடைவெளி மூன்று அடிதூரம் வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ஒரு அடியாவது தள்ளி நில்லுங்கள்.

வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் கை கால்களை மீண்டும் அதே 20 நொடி கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஆடைகளை தனி அறையில் வைத்துவிட்டு, புதிய ஆடைகள் உடுத்திக்கொண்ட பிறகே யாரோடு அருகிலும் செல்லுங்கள். குறிப்பாக வளர்ப்பு பிராணிகளிடமும் இந்த பாதுகாப்பு பிறகே கொஞ்சுங்கள். 

கவனம், கவனம், கவனம்!


உடலும் இயற்கையே

எப்போதும், தூங்கும் நேரம் தவிர இந்த உடலுக்கும், மனதிற்கும், புலன்களுக்கும் வேலை அளித்துக்கொண்டே இருப்பது மிகக் கொடுமையானது. சுழற்றிய சக்கரம் தானாக நின்றாலும் கூட ஒடு, ஓடு என்று உதைத்து தள்ளிக்கொண்டே இருந்தால் எப்படி? 99% மக்களின் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது. “அது யார்யா அந்த 1% சதவீகிதம்?” என்று கேட்டால் அதை பிறகு சொல்லுகிறேன். 

இந்த உடலும் நீங்களும் தனித்தனிதான் என்பதை இனிமேலாவது புரிந்துகொள்வீர்களா? இந்த உடலை எவ்வளவு கவனமாக, உங்கள் காதலரைவிடவும் மேலாக, வாழ்க்கை துணைவரை விடவும் மேலாகவும், உங்கள் செல்லத்தை விடவும் மேலாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை எப்போது உணர்வீர்கள்?

யார் சொன்னதையும் கேட்பதில்லை, சொல்வதில் அர்த்தமிருக்கிறதா என்றும் சிந்திப்பதில்லை. பொறுப்பற்ற வகையில் “வதந்தி” பரப்புவர்களும் உண்டுதான் என்றாலும், கிடைக்கும் தகவலின் உண்மை உங்களுக்கு தெரியாதா என்ன? அக்காலம் முதல், உணவே மருந்து என்பது உள்ளது. 


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். (குறள் 942) 


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.  (குறள் 941)


அறியாதவர்களா நீங்கள்? நாம்தான் தாத்தா பாட்டியை எல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டோமே? மேற்குலக வெள்ளை ஆராய்ச்சி அறிஞர்கள் சொன்னால்தானே எல்லாம் நம்புவோம்?! அப்படித்தானே?!

உணவு முறை, உணவுப்பொருட்கள், உணவு பழக்க வழக்கம் மாற்றத்தொடங்குக. உடலை பழக்கினால், எந்த நோய்த்தொற்றுக்கும் நீங்கள் தடுப்பாட்டம் ஆடவேண்டாம். உங்களுக்காக உங்கள் உடலே ஆடிக்கொள்ளும்.


சுவாசம் சுருங்கிட்டது?!

இந்த பொருளாதார உலகில் நீங்கள் மற்றவர்களைபார்த்து, பெருமூச்சு விட்டு விட்டே பழகிக்கொண்டீர்கள். அந்த பெருமூச்சை மட்டும் எப்படியோ கற்றுக்கொண்டீர்கள். ஆனால் எப்படி மூச்சு விடுவது? சுவாசிப்பது என்பதை மறந்தே விட்டீர்கள். அதனால்தான் கரோனா நோய்தொற்று காலத்தில், உங்களுக்குப்பதிலாக, இரு இயந்திரக்கருவிகள் சுவாசிக்கின்றன. இந்தக்கொடுமை உங்களுக்கு தேவைதானா?

உள்ளே இழுத்த மூச்சு ஒன்று என்றால் வெளியிடும் மூச்சு மூன்று என்ற அளவில் இருந்தால்தான் அது மிகச்சரியான சுவாசம்.  நுரையீரல் மட்டும் சுவாசம் என்பதில்லை, உதரவிதானம் என்ற வயிற்றின் மேல்பகுதி, ஏறி இறங்கி, காற்றை உள்ளிழுத்து வெளியே தள்ள வேண்டும். 

கை தூக்குக எத்தனை பேர் இப்படியான சுவாசம் செய்கிறீர்கள் என்று!

எல்லா குறைகளையும் நாம் செய்துகொண்டு இயற்கையை பழிப்பதில் ஏதும் அர்த்தமில்லை.


வந்தவேலை என்ன?

இந்த உலகில் பிறந்த நமக்கு வந்த வேலை என்ன என்று தெரியுமா? உங்கள் தாத்தாவைப்போல, அப்பாவைப்போல இருமடங்கு சொத்து சேர்ப்பதா? அல்லது ஏழையாக பிறந்த நீங்கள் கோடீஸ்வரனாக மிளிர்வதா? இல்லவே இல்லை. வாழ்க்கைக்கு பொருள் தேடல் மிகமிக அவசியமே. தேவை என்ற அளவில் நின்றால் போதுமானது. பொருள் தேடலில் வாழ்க்கை வீணடித்தால், எப்போது இன்பமாக வாழ்வீர்கள்?

உங்கள் கண்களால், அடுத்தவரின் வாழ்க்கையை பார்த்து அளவீடு செய்யாதிருங்கள். உங்கள் அடிப்படை தேவை போதுமானதா என்று சிந்தனை செய்யுங்கள். அடுத்தபடியாக உங்கள் வாழ்வை கொண்டாடி வாழ பழகுங்கள். 

நமக்கு வந்த வேலை இரண்டு. 1) தன்னை அறிதல் 2) இன்புற்று வாழ்தல் 

இந்த இரண்டையும் நாம் விட்டுவிட்டோம். ஆனால் இன்புற்று வாழ்வதற்காகத்தான் நான் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் என்று பதில் தருவார்கள் என்பதே உண்மை.


எப்படி இறப்பது?

வேதாத்திரி மகரிசி “உங்களை அறியாமல் உங்கள் உயிர் போகக்கூடாது என்பது சித்தர்களின் வாக்கு” என்று சொல்லுகிறார். அதாவது, எப்படி நீங்கள் தூங்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, படுக்கையில் தன்னை மறந்து தூங்குகிறீர்களோ அப்படித்தான் நீங்கள் இறக்கவும் வேண்டும்.


உங்களால் முடியுமா?

அதற்கு என்ன வழி? 

சிந்தனை செய்க! வாழ்க வளமுடன்!! 


 -----------------


Photo thanks to: Fusion Medical Animation & News Cn




My Vote Goes to


 என் ஓட்டு யாருக்கு?


முதல் ஓட்டு அனுபவம்

நான் 18 வயது நிரம்பி, புதிய “மனிதனாக” மாறிய நாட்களில், ஓட்டுசீட்டில் என் பெயர் ஏறிக்கொண்டது. ஓவ்வொரு கட்சி வாக்கு படிவத்திலும் என் பெயரை படித்துப்பார்த்து, வாக்குச்சாவடி சீட்டு வாங்கு வைத்துக்கொள்ளும் பொழுது பெருமையாகவே இருந்தது. என்வீட்டில் மொத்தம் என்னையும் சேர்த்து எட்டு ஓட்டுகள் கிடைக்கும். எங்கள் பகுதி குறிப்பிட்ட கட்சிக்குரியது என்றெல்லாம் இல்லை எனினும்,  திமுக, அதிமுக, ஆர்வமுள்ளவர்களே அதிகம். ஆங்காங்கே சிலர் காங்கிரஸ். சிலர் இ.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. எல்லோருமே கண்ணைப்பறிக்கும் புனிதமான வெள்ளை ஆடைகளில் “தங்களை” மறைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நானும் என் அம்மாவும், அருகே இருந்த வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட பள்ளிக்கு நடந்துசென்றோம். பக்கம் என்பதால், நடந்தே சில தெரு மாறி செல்கையில், ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் பல குதிரை வண்டிகள் நின்றிருந்தன. எங்களைப்பார்த்த அவர்,

“ஓட்டு சாவடிக்குத்தானேம்மா, இருங்க. வண்டி வைக்கிறேன்” என்றார்.

“வேணாண்ணா. நடந்துடறோம்” அம்மா

“அட, இருங்க போவோம். தம்பிக்கி கன்னி ஓட்டா? டேய் தம்பி எந்த கட்சிக்கு ஓட்டு போடனும் தெரியுமா?”

“தெரியும் சார்” நான்

“@க்கு போட்டுடு என்னா!” என்றார் சிரித்துக்கொண்டே.

இவ்வளவு சத்தமாக சொல்லுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில், எப்போதாவது அந்தவீட்டின் அருகே, கடந்துவருகையில் ஏறக்குறைய என்வயதை ஒட்டிய கான்வெண்ட் பள்ளி மாணவியை பார்த்திருக்கிறேன். என்னை விட அழகாகவும் இருப்பாள். அது அவர் மகளா, பேத்தியா என்பது கூட தெரியாது. இந்த நேரத்தில் என் கண்கள், பருவ வயதின் ஆர்வத்தில், அந்த மாணவியை தேடத்தான் செய்தன. வேறு வழியின்றி, எங்கள் வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரமிருந்த பள்ளிக்கு, ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டி பயணம். வாக்கு சாவடியில் என் பெயரையும் என்னையும் சரிபார்த்து, விரலில் மைவைத்து, 

“தம்பி, ஒரு தடவைதான், ஒரு பெயரில்தான், ஒரு சின்னத்தில் தான் குத்தனும் சரியா?”

ஓ அப்போ மூணு தடவை குத்தனுமா?! என்று கிண்டலடிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை. 

வேட்பாளர் பெயர், சின்னம் பட்டியல் கொடுத்து அனுப்பிவைக்க, ஒதுக்கப்பட்டிருந்த அட்டை மறைவுக்கு பின்னே, ஸ்வத்திக் சின்னம் மை தொட்டு அழுத்தி, பதித்தேன். 


அரசு + இயல் = அரசியல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்க்கை வளம், கல்வி, பொருளாதாரம், எதிர்கால சந்ததியினருக்கான வழி இவற்றை, இயல்பாக, அரசால் வழிநடத்துவதற்கு அமைவதுதான் அரசு. ஒரு காலத்தில் “மன்னர் பரம்பரை வழியிலில் இருந்து” மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இது காலப்போக்கில், தலைவர், தலைவர் மகன், தலைவரின் பேரன், தலைவரின் கொள்ளுப்பேரன் என்று நீண்டுக்கொண்டே போய் மறுபடி “தலைவர் பரம்பரை வழிக்கு” மாறிவிட்டது, அத்தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

என்றைக்கு அரசியலில் இருந்துகொண்டு, அதை, தன்னை, தன் குடும்பத்தை உயர்த்துவதற்கு ஒரு தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே இந்த நாட்டிற்கான மலர்ச்சியில் தடை வந்துவிட்டது. இன்னொன்று, சமூகத்தில் தனக்கு கிடைக்கும் மரியாதை, பதவியின் அதிகாரம் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தேவையாகியது. மக்களுக்கான, நாட்டிற்கான சேவைதான் “அரசியல்” என்பது பொய்யாக போனது. 

உன்னால் நான், என்னால் நீ என்று இருகட்சியினருக்கும் இருக்கும் பொது தன்மையில், யாரும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் “இன்றுவரை” வளர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.  


குரங்கும் பகிர்வுகளும்

குரங்குகள் மட்டுமே அதிகமாக வாழும் அந்த சிறு காட்டுப்பகுதியில்,  உணவு கிடைக்காது வாடின. நல்ல உள்ளம் கொண்ட அந்த கிராமத்து மக்கள், தங்கள் தோட்டங்களில் கிடைத்த மாம்பழங்களை, ஒரு பெட்டியில் போட்டு, அந்த குரங்குகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். முதலில் குரங்குகள் அப்பெட்டியில் இருந்த மாம்பழங்களை பார்த்தாலும், கிட்டே வராமல் தள்ளியே நின்றன. நம்மை விட விலங்குகளுக்கு “வாசனை உணர்வு” மிக அதிகம். ஆனாலும் கிட்டே வரவில்லை. சில பெரிய வயதான குரங்குகள் கொஞ்சம் கிட்டே வந்தன. ஆர்வத்தில் நெருங்கப்போன குட்டி குரங்குகளை, அதன் தாய்கள்,  வாலைப்பிடித்து இழுத்து நிப்பாட்டின. 

வயதான குரங்குகள் பெட்டியை பாதுகாப்பாக தட்டி பார்த்துக்கொண்டு, பழத்தை எடுத்தன. சாப்பிட்டன. உடனே மற்ற குரங்குள் அனைத்தும் கிட்டே நெருங்கி, ஒரு குரங்கு, பழத்தை எடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு நகர, அடுத்த குரங்கு பழத்தை எடுத்து அதுவும் பாதுகாப்பாக நகர்ந்துவிட இப்படியே எல்லா குரங்குகளும், மாம்பழத்தை எடுத்துக்கொண்டன. 

இந்த நிகழ்வில்,

1) ஒரு சில குரங்குகள் ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொண்டன.

2) சில குரங்குகள் இரண்டு கைகளிலும் இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டன.

3) எந்த குரங்கும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, இடித்துக்கொண்டு பழங்களை எடுக்க போட்டி போடவில்லை.

4) ஒன்றை ஒன்று தள்ளிவிட்டோ, தலைக்கு மேலே ஏறியே பழத்தை எடுக்கவில்லை

5) தனக்கு கிடைக்கவில்லை என்று எந்த குரங்கும், இன்னொரு குரங்கின் மேல் பாய்ந்து சண்டைக்கு செல்லவில்லை.

6) தனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்க கூடாது என்று பெட்டியை தள்ளி உருட்டிவிடவில்லை.

7) தன்னால் முடிந்த அளவில் மாம்பழம் வேண்டும் என்று நிறைய எடுத்துக்கொள்ளவில்லை.

8) யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று எந்த ஒரு குரங்கும், பெட்டியோடு மாம்பழத்தை தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

9) தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை, சினம் கொள்ளவில்லை, ஆத்திரப்படவில்லை

10) எந்தக்குரங்கும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து மாம்பழத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

குரங்குகளுக்கு கட்சி இல்லை, கொள்கைகள் இல்லை, அரசியல் ஆர்ப்பாட்டமும் இல்லை, தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் இல்லை. இப்படி இல்லாததினால் அவைகள் தாழ்ந்து போகவும் இல்லை. 


#குரங்கிலிருந்து மனிதன் வந்தானா? இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.


வாழ்த்தெரியார் ஆளத்தெரியாதோர்

வாழ்த் தெரியாதோர் பெரும்பாலும் வாழ்நாட்டில்

     ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்

கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

இந்த கவியை, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் 1958ம் ஆண்டு எழுதியிருக்கிறார். (ஞானக்களஞ்சியம் நூல் ஒன்று, 129ம் கவி)


மன்னிப்போம் மறப்போம்

மக்களிடையே பொய்யுரைகள், வெறுப்புரைகள், வெற்றுவாக்குறுதிகள் கொடுத்து, மக்களை தன் வசம் திருப்பும் கலையை, எல்லா கட்சி தலைவர்களும் கற்றிருக்கிறார்கள். தாங்கள் பிறர் மூலமாக தங்களை உயர்வாக சொல்லி, புகழ்பரப்பிக்கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் காலில் விழவும் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு “அதிகார போதையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மை உரக்கச்சொல்வோம் என்ற செய்தித்துறைகள் கூட, பூசி மழுப்பிக்கொண்டிருக்கின்றன, அதுவும் ஒரு கட்சி சார்பாகவே.

நாங்கள் தப்புசெய்திருக்கிலாம். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். என்று “சும்மா” கேட்டாலும், “பணம்” கொடுத்து கேட்டாலும், மக்கள் “மன்னிப்போம் மறப்போம்” என்று கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் பெற்ற எல்லா கொடுமைகளையும் கடந்து, மீண்டும் அதே அரசை வரவேற்கின்றனர்.

குடும்ப பரம்பரை என்பதுப்போலவே, தனி மனித சிந்தனையும், அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பலருக்கு இல்லை. கூடவே தனது “இந்த வளர்ச்சிக்கு” காரணம் இந்த அரசுக்கு ஓட்டு போட்டதால்தான், அதனால் நீயும் போடு என்று பிள்ளைக்கும் ஊட்டி வளர்க்கினர். 

இவர்களிடம் பணம் வாங்கிவிட்டேன். அதை செலவும் செய்துவிட்டேன். தின்ன காசுக்கு, நியாயமா “இவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்” என்று வாக்கு அளித்து விடுகின்றனர். பணம் பெற்று ஓட்டு போட்டால், அடுத்த அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கான தீர்வை எப்படி கொடுப்பார்கள்?!

“யோவ், நீதான் அன்னைக்கே காசு வாங்கிட்டேயேயா? இப்ப என்ன இதுக்கு வந்து இங்க நிக்கிற?!” என்று கேட்க மாட்டார்களா? 


கட்சியற்ற ஆட்சி

மனிதனின் அடிப்படையான தேவைகள் மூன்று,

1) உணவு 2) உடை 3) இருப்பிடம்

மேலும், அடுத்ததாக கல்வி, மருத்துவ உதவி, தொழில்வாய்ப்பு, மக்களின் பாதுகாப்பு ஆகிய அடுத்த நான்கு தேவைகள் போதுமானதாக இருக்கும்.  ஆனால் தனிப்பட்ட தேவைகள் என்றால் ஆளாளுக்கு மாறுபடும் எனவே தனித்தேவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த ஒரு அரசும் இந்த முக்கிய அடிப்படை முன்றும், அடுத்த நான்கும் நிறைவேற்ற முடிவு செய்தாலே போதுமானதுதான்.

ஆனால் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஓவ்வொரு கொள்கைகள், அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சேவை மக்களுக்கானது என்றால் “ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும்?!” எத்தனை கட்சிகள் அரசாள வந்தாலும், 1) கடன் 2) வறுமை 3) கல்வியின்மை ஆகிய மூன்றும் இன்றுவரை தீர்க்கப்படவே இல்லையே?!

எனவே கட்சிகளற்ற ஆட்சிதான் நன்மை தரும் என்றும், வேதாத்திரி மகரிசி அவர்கள் தீர்வு (ஆண்டு 1961) தருகிறார்.


இன்னும் சில வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசி அவர்கள் “அரசியல், ஆட்சி, தலைவர்கள்” குறித்து இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே.

1) அரசியலே மக்களை அடக்கிடவும், உறிஞ்சிடவும் ஏற்றவழி என்பதை தலைவர்கள் அறிந்துகொண்டனர்.

2) அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும் அவலநிலையை முதலில் மாற்றவேண்டும்.

3) தெளிவற்ற மக்களிடம் சுயநலத்தோர், தேச, மத, ஜாதி, இன வெறியூட்டி, தெரிந்தால்போல நடித்து புகழ் பெறும் நடிகராக, அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்


வாழவைக்கும் ஆட்சி

கடன் வறுமை கல்வியின்மை என்ற மூன்று

களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்

உடன்பிறந்தார் போலஉள்ளம் ஒன்றி மக்கள்

உயர்நிலையில் வாழ வைக்கும் ஆட்சி வேண்டும்.

என்று வேதாத்திரி மகரிசி அவர்கள், ஆட்சியாளார்களை வரவேற்கிறார்.


வாக்கு தேர்வு

யாரோ சொல்கிறார்கள், என் நண்பர் சொல்கிறார். என் தந்தை சொல்கிறார், என் வாழ்க்கைதுணை சொல்கிறார். சமூக வலைத்தளங்களில் சொல்லுகிறார்கள். செய்தி தொலைகாட்சியில் சொல்லுகிறார்கள். தொண்டரே சொல்கிறார். தலைவரே சொல்கிறார் என்றெல்லாம் “ஒரு சார்பு” நிலை எடுத்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

ஆட்சியாளர்களின் கடந்த கால நிலையை அலசுங்கள், இப்போது சொல்லும் வாக்குறுதிகளை கேளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள். கடந்த ஆட்சியை நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல் போன காரணமென்ன என்பதை சிந்தியுங்கள். அது அந்த அரசின் அலட்சியம் என்றால், அவர்களுக்கு மறுவாய்ப்பு தருவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். எளிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரோ, அறிமுகமானவரோ இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள். கட்சி என்ற பாசம், ஒட்டுதல் நிலையில், அவர்கள் நிறுத்தும் எந்த மனிதருக்கும், உணர்ச்சி வசத்தால் வாக்களிப்பதை தவிருங்கள்.

உங்கள் வாக்கும், உங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும் எனவே, ஒரு நாள் பணத்திற்கு ஏமாறாதீர்கள். விரலோடு ஒட்டும் மையில், மொத்த வாழ்க்கையையும் இருட்டாக்காதீர்கள். உங்கள் வாக்கால், பிற மனிதரையும், சமூகத்தை அவதிக்குள்ளாக்காதீர்கள்.


வாழ்க வளமுடன். 


-----------------

Photo thanks to: Trac Vu @tracminhvu

Is it true to God realization is very easy and without meditation


Vethathiriya Question and Answer
by 

Vethathiriya Channel

#VethathiriMaharishi #VethathiriyaChannel #VethathiriyaQandA
வேதாத்திரிய கேள்வி - பதில், ஞானம் பெற பிற ஆன்மீக மையங்களில் எளிதாக உள்ளதே? தியானம் தேவையில்லையாமே?

Why can not feel at moolathar chakra on shanthi meditation



Vethathiriya Question and Answer
by 

Vethathiriya Channel 


#VethathiriMaharishi #VethathiriyaChannel #VethathiriyaQandA
வேதாத்திரிய கேள்வி - பதில், ஆக்கினை, துரியம் போல, சாந்தியில் ஏன் உணர முடிவதில்லை?, எப்படி செய்வது?


Why I can not sitting for a meditation and how to fix?



Vethathiriya Question and Answer
by 

Vethathiriya Channel 


#VethathiriMaharishi #VethathiriyaChannel #VethathiriyamQandA
வேதாத்திரிய கேள்வி - பதில், தவத்திற்கு அமர்வதில் வரும் உடல்வலிக்கு தீர்வு என்ன? 


Body isn't your servant - Final post


இந்த உடல் உன் வேலைக்காரனல்ல, அப்படியானால் யார்? 





வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



----------------------

Photos Thanks to: Hian Oliveira / Eiliv-Sonas Aceron / National Cancer Institute



Body isn't your servant - Part 3


 உடல் உன் வேலைக்காரனல்ல




வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



---------------

Photos thanks to: at infinity @atinfinity l National Cancer Institute @nci