CJ for You: misinformation

misinformation

Showing posts with label misinformation. Show all posts
Showing posts with label misinformation. Show all posts

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?


தன்முனைப்பு என்பதுதான் நம்மை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்முனைப்பு கூடாது என்றுதானே சொல்லுகிறார்கள். நான் நன்றாக இருக்கவேண்டும், வளரவேண்டும், உயரவேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்? விளக்கம் தருக.

தமிழில் தன்முனைப்பு என்ற வார்த்தை, ஏதோ குறிப்பிட்ட காலங்களில் உட்புகுந்தது போல தோன்றுகிறது. சில வார்த்தைகளை, ஆங்கிலத்தில் இருந்து மொழி (முழி) பெயர்க்கும் பொழுது இப்படியான தமிழ் வார்த்தைகள் வந்துவிடுவதுண்டு. இந்த தன்முனைப்பை, motivation என்று கூட சொல்லுகிறார்கள். ஆனால் பொதுவான சமமான வார்த்தை Ego என்பதாகும்.

எனக்குத்தெரிந்தவரை, தன்முனைப்பு என்ற வார்த்தை, பழந்தமிழில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நல்ல தமிழறிஞர் யாரேனும் இருந்தால், என் சந்தேகம் தீர்க்கலாம். ஆனால், தன்முனைப்பு என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்களோ, அதற்குச் சமமான வார்த்தைகள் இப்படியாக இருக்கிறது. அவை, அகங்காரம்,. தான் என்ற எண்ணம்; செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். செருக்கு, இறுமாப்பு, முனைப்பு ஆகும்.

தான், தனது என்று வாழும் பொழுது, தான் என்ற அதிகார பற்றிலும், தனது என்ற பொருள்பற்றிலும் மனிதன் சிக்கிவிடுகிறான். இதைத்தான் தன்முனைப்பு என்று சொல்லுகிறார்கள்.  தான் என்றும், தனது என்றும் வாழ்வதில் சிக்கலில்லை, ஆனால் தான் மட்டுமே, தனது மட்டுமே என்று குறுகிக் கொள்வதுதான் சிக்கலாகிறது. அதனால்தான், தன்முனைப்பு கூடாது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த குறுகிய மனப்பான்மை அறியமுடிவதில்லை. அதனால்தான், மனிதனுக்கு மனிதனே துன்பம் செய்விக்கிறான். தன்னைப்போலவே இன்னொருவரும் மனிதரே என்று அவன் நினைப்பதில்லை.

மிருகங்களிலும், பறவைகளிலும் இந்த தொல்லை இல்லை. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை பழிவாங்குமா? கீழாக நினைக்குமா? அதன் வாழ்நிலையை சிதைக்குமா? இதைப்போல, ஒரு புலி இன்னொரு புலியை, ஒரு யானை இன்னொரு யானையை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவேளை இவைகளுக்கு ஐந்தறிவு என்பதால், இப்படி இருக்கின்றதோ? நமக்கெல்லாம் ஆறறிவு ஆகிற்றே?

தன்முனைப்பு பெரும்பாலும் சுயநலம் கொண்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு தேவையானது வேண்டும், நான் விரும்பியது வேண்டும். எனக்கானது வேண்டும் என்ற வகையில், தன்னளவில் வாழும்பொழுது, அவன் மனித தன்மையையே இழந்தவனாகிறான். இயற்கையின் இயல்பை கெடுக்கவும் செய்கிறான். ஆனால் அதை அவன் அறிவதும் இல்லை. எனவே நீங்கள் தன்முனைப்பு என்ற வார்த்தைக்கான உண்மையை அறிதல் அவசியமாகும்.

இந்த காணொளி கூடுதலாக சில விளக்கங்களை தரலாம்.

தன்முனைப்பு, சுயமரியாதை புரிந்துகொள்வது எப்படி? தவிர்க்க என்ன செய்யலாம்?

வாழ்க வளமுடன்


What is the impact of Bhakti in the recent time on the Human Life and Lifestyle?


கடவுள், அவதாரம், பக்தி, வழிபாடு, சடங்குகள், விழாக்கள் ஆகியன தற்கால மக்களிடம் எத்தகைய தாக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை விளக்குவீர்களா?


இந்த கேள்விக்கான பதிலை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிகத்தெளிவான பதிலும் தந்து, அதற்கான தீர்வும் தந்திருக்கிறார். அவர் வார்த்தைகளிலேயே படிப்போம். இதோ,

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார், ‘வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அது முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள், அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில், பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை, மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு, சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும், அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது, சிரமமாக இருக்கிறது.

அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும், இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும், ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை, எல்லாம் வல்லது எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும், அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.

கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும், மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது, குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும், ஒரு வடிவத்தையும் குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு, அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். 

இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர், தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால், அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான், வழிபடுகிற பொருளையும் காண்கிறார்.  இத்தகைய வழிபாடானது, ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை, அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை வாழ்க்கை, எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?

வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். 

மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன், ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. 

இந்த நிலைமை நீடிக்க விட்டால் தனி மனிதன், குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். 

ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே, அறியாமையினால் போட்டுக் கொண்ட, இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.’என்று விளக்கிச்சொல்லி, அறிவுறுத்துகிறார்.

இதை நீங்கள் மேலோட்டமாக படித்து நகராமல், மறுபடி மறுபடி படித்து, அதன் வழியாக சிந்தனையில் ஆழ்ந்து, யோசிக்கும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மை, உள்ளது உள்ளபடியே புரிந்திடும் என்பது உறுதி. இத்தகைய உண்மை விளக்கம், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று நம் குருவோடு இணைந்து, நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Vethathiri Maharishi's Realization moved to 21 years backward, Is it Correct?


இருபத்தொன்று ஆண்டுகள் பின்னோக்கிய வேதாத்திரி மகரிஷியின் உண்மை உணர்தல்! சரிதானா?


ஒரு சாராசரி, தனி மனிதருடையை சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் மாறாது நிலைபெறும் காலம் இது. ஒரு ஞானியின் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும் அதைவிடவும் மகத்துவமானது. காலம் மாறினாலும், சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிடாது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன் காலத்திலேயே, தன் சிந்தனையும், எழுத்துக்களும், படைப்புக்களும், தத்துவ உண்மைகளும் மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார். அதில் எப்போதும் எந்த மாற்றமும் கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார். இதற்கு காரணமும் அவரே சொல்லுகிறார்.

ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளுக்குக்கூட, தமிழறிந்த யார் வேண்டுமானாலும், விளக்கவுரை எழுதலாம் என்ற நிலை இன்னமும் தொடர்கிறது. ஒரே குறளுக்கு, வேதாத்திரி மகரிஷியின் விளக்கவுரையையும், இன்னொருவர் விளக்கவுரையையும் நீங்கள் ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்'  நூல்வழியே ஒப்பிட்டுப்பார்த்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக மறைபொருளை விளக்கும், ஐம்பது திருக்குறளுக்கு மட்டுமே விளக்கம் தந்திருக்கிறார். வேதாத்திரியத்திற்கு ஏற்றபடி இது போதும் என்றும் சொல்லிவிட்டார்.

‘நான் பேசவும், எழுதவும், விளக்கவும் ஆரம்பித்தது, எல்லாம் உணர்ந்த பிறகுதான். அதனால், அன்று சொன்னதையே இன்றும் சொல்லுவதுபோல உங்களுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலோர், ஆரம்பத்தில் ஒரு விளக்கத்தையும், உண்மை உணர்ந்த பிறகு வேறெரு விளக்கத்தையும் தருவார்கள்’ என்று உண்மையான காரணத்தை சொல்லுகிறார். மேலும், தன்காலத்திற்கு பிறகும், இப்படியே தொடரவேண்டும் என்பதையும் விளக்குகிறார். ‘ஒரு ஞானி, தான் உணர்ந்ததை பிறருக்கு வார்த்தைகளால் விளக்க முயற்சிப்பார். சீடரோ, மாணவனோ அந்த குறிப்பை எழுதிக்கொள்வான். ஆனால் அவன் அதை உணர்ந்தறிய மாட்டான். இதனால், ஞானியின் மறைவுக்குப்பின், தனக்கு தெரிந்ததை இணைத்துக்கொள்வான். அவன் காலத்திற்குப் பிறகு இன்னொருவன் வருவான். அவன் கூடுதலாக இன்னொன்றை சேர்த்துக்கொள்வான். இப்படியே கதை, கட்டுரை போல உண்மை, இவ்வுலகில் திரிந்து விட்டிருக்கிறது’ என்று சொல்லுகிறார். எனினும் வேதாத்திரி மகரிஷி தன்னை வான்காந்தத்தில் கலந்துவிட்டபிறகும், அவரின் கனவு நிறைவேறிட பிரமாண்டமாக, வேதாத்திரியம் வளர்ந்திருக்கிறது. வளர்ந்துகொண்டும் இருக்கிறது. அந்த வகையில் வேதாத்திரி மகரிஷியும் மகிழ்ந்திருப்பார்.

எனினும், கண்ணில் பட்ட ஒருபதிவு என்னை உறுத்தியது. இதோ அந்த பதிவிற்க்கான காட்சிப்படம். 


        வழக்கமாகவே நான் அடிக்கடி, வேதாத்திரிய ஞானக்களஞ்சிய கவிகளை படித்துக் கொண்டிருப்பவன். என்னுடைய உண்மை விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷியின் நேரடியான உரைகளும், கட்டுரைகளும், நூல்களும், கவிதைகளுமே உதவின. கவிதையை, பதிவில் படித்த பொழுது, எனக்கு ஒரு வரி இடித்தது. உடனே மூல ஞானக்களஞ்சிய கவி நூலைப் பிரித்தேன் படித்தேன். உண்மை அறிந்தேன்.

ஞானமும் வாழ்வும் கவிகள்: (கவி எண் 238) ‘இனி பிறவி இல்லை’ ‘நிறை உணர்வு’ என்பதை தாண்டி, ‘உருவெடுத்த காரணமும்’ என்று ஆரம்பித்து ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று யாரோ, வேதாத்திரி மகரிஷியின் கவிதையில், கை வைத்திருக்கிறார்கள்.


வேதாத்திரி மகரிசி 96 ஆண்டுகள் வாழ்ந்தது இருக்கட்டும். அதை சொல்லுவதற்கு, அவரே 28/05/1986 ல் எழுதிய கவிதையில் கை வைக்கவேண்டுமா? யார் செய்த திருத்தம் என்பது தெரியவில்லை. கிட்டதட்ட, வேதாத்திரி மகரிசியின், இறையுணர்தலை, உண்மை விளக்கத்தை, 21 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி விட்டார்களே? ‘உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து’ என்பதை ‘உலகினிலே தொன்னூற் றாறாண்டு வாழ்ந்து’ என்று மாற்றிவிட்டது தகுமா? திருத்தியதை படிக்கும் சமூகம், எதோ இறக்கும் தருவாயில்தான், உண்மை உணர்ந்தாரோ? என்று கருத இடமிருக்கிறதே?! உங்களுகு சந்தேகம் இருந்தால், கவி எண் 709, ‘நிறை உணர்வு’ எனும் தலைப்பில், ஞானக்களஞ்சிய கவிதை நூலைப்பாருங்கள்.

அட, ஏனய்யா இதெல்லாம் பெரியவிசயமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விடுங்க இதெல்லாம் சகஜம் என்று என்னையும், உங்களோடு அழைக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது. சரி விட்டுவிடுவோம். ஆனால் வேதாத்திரியம் சிறுகச்சிறுக தன் மதிப்பிழக்க விடலாமா? ஏற்கனவே, வேதாத்திரியத்தில் உள்ளவர்களே, வேதாத்திரி மகரிசி அவர்கள் ‘ஏன் ஜீவசமாதி ஆகவில்லை? மருத்துவ மனையில்தானே இறந்தார்?’ என்று உண்மை அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதில், கூடுதலாக 21 ஆண்டுக்கால உண்மை விளக்கமும் தள்ளிப்போய் விட்டது. இனி காலப்போக்கில், பதினோராவது மடமாக மாறிவிடக்கூடும் அல்லவா?

        வேதாத்திரி மகரிஷி, தன் அன்பர்களிடம் உரை நிகழ்த்தினாலும், பொதுமக்களுக்காக உரை நிகழ்த்தினாலும், அவர்களை உயர்த்திடவே, தன் கருத்துக்களை, தன் உதாரணங்களைக் கொண்டே விளக்குவார். ஒருபோதும் பொது தளத்தில் உள்ளவர்களை சொல்லி பேசுவதில்லை. மக்களின் அககாட்சி மாறக்ககூடாது என்பதில் கவனம் கொண்டிருப்பார். ஆனால் இப்போது, எல்லோருமே, மக்களின் தளத்திற்கு இறங்கிவிட்டனர், இப்படி சொன்னால்தான் மக்களுக்குப் புரியும் என்று, வேதாத்திரி மகரிஷி கண்டுபிடிக்காத கருத்தியலை கண்டுபிடித்துவிட்டார்கள். மணி நேரம் பேசினாலும் அப்படித்தான், குறைந்த நிமிடத்தில் பேசினாலும் அப்படித்தான். இதை நீங்களும் உணர்ந்திருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும்கூட நல்லதே நடக்கட்டும்.

உலக பேச்சு வழக்கில், உண்மைக்கு புறம்பாக, ஒரு மனிதர் இறந்த பிறகு, இறந்தவரின் கருத்தை பேசினாலும், பேசும் பொருளானாலும், அவர் தன் கல்லறையில் நெளிகிறார் என்று சொல்லுவார்கள். அதாவது அந்த அளவிற்கு வருத்தம் தரும் என்று குறிப்பிடுவார்கள். அப்படி ஆகிவிட வேண்டாமே?!

        ஒரு அன்றாடம் நிகழ்வதையே தவறான செய்தியாக தருவது, தவறு, குற்றம் எனும்போது, ஒரு ஞானியின், மெய்யுணர்தலை, தன் விளக்கத்தை, பொருத்தமாக மாற்றி அமைப்பது என்னவாகும்? ‘ஐயா, இதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்கிறீர்களா? சரி தான். அப்படியே ஆகட்டும்.  

வாழ்க வளமுடன்.

-

Why the changes are low level within people based on yoga even it is simplified?


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


பதில்:

யோகம் என்பது எளிமையாக்கப்பட்டு, மனிதர்களின் பிறவி நோக்கத்தை அறியவும், பிறவிக்கடன் தீர்த்திடவும் வழிகளாக, பயிற்சிகளாக பல கிட்டதட்ட 100 ஆண்டுகளாக உலகில் எத்தனையோ ஞானிகளால், மகான்களால், யோகிகளால், உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவும் இருந்தன எனினும் கடின முறைகளும், துறவு கட்டாயம் என்ற நிலையும்கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு இருந்தனர். என்றாலும் அதையும் விரும்பி ஏற்று கற்றுக்கொண்டு, தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த நினைத்த அத்தகைய உயர்ந்த நோக்கமும் எண்ணமுமே, பிற்காலங்களில் யோகத்தை எளிமையாக்கிடவும் வகை செய்தது எனலாம்.

அந்தக்கால கடின முறைகளும், கட்டாய துறவும் இப்பொழுது இல்லை. பயிற்சியில் எளியமுறையும், வாழும் வாழ்க்கையில் அளவும் முறையும் கொண்டு யோகத்தின் வழியாக உயரலாம். தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் அறியலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவே இன்றளவும் தொடர்கிறது.

எத்தனையோ யோக பயிற்சி மையங்களும் உலகெங்கிலும் உருவாகிவிட்டன. நோக்கம் ஒன்றாகக் கொண்டு பலவாறாக பயணிப்பது மக்களுக்கும் உதவும். அந்தவகையில்தான் மொழி, இனம், நாடு என்ற பிரிவுகள் இன்றி அனைவரும் யோகத்தில் பயணிக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனினும் சில குறுமதியர்கள், தங்களின் சுய லாபத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பிறரிடமிருந்து பொருள் பறிக்கவும் திட்டமிட்டு, மக்களுக்கு  தவறான பாதையையும், அச்சுறுத்தலையும் பரப்புகின்றனர். மிகையாகச் சொல்லி அதை மனிதர்களால் முடியாது என்றும் சொல்லுவார்கள். மனிதர்களாகிய நமக்குத் தேவையும் இல்லை என்றும் சொல்லுவார்கள். இப்படியான மனிதர்களுக்கும் பெரும்கூட்டம் பின்னால் செல்லுகிறது என்பதுதான் நாம் நேரில் பார்க்கின்ற உண்மையாகும்.

தகவல் தொடர்பு உலகம் முழ்வதும் எளிமையாகிவிட்ட இந்த நிலையிலும் கூட, இப்படியான உண்மைக்குப் புறம்பான மாற்றுக்கருத்துக்கள் வலிமையாக பரவி வருவது கண்கூடு. ஆனால் இதை உடனடியாக மாற்றிவிட முடியுமா? முடியாதுதான். வேகமாக நகரும் ஒரு விசையை, பொருளை, தடுப்பதில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை விதி. ஆனால் அதுவாகவே ஒர்நாளில் ஓரளவில் நின்றுவிடும் அல்லவா? அதுவரை காத்திருந்து பிறகு அதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கலாம்.

பொதுவாகவே யோகம் குறித்து எது பேசினாலும் ஏற்கும் மனநிலை, எந்த மனிதருக்கும் இல்லை என்பதுதான் இப்போதுள்ள தலைமுறைக்கும், அடுத்த இரண்டு தலைமுறையினருக்கும் இருக்கிறது. தவறில்லை. எல்லா மனிதர்களுமே உலகில் இன்பத்தை நுகர்ந்து அனுபவித்து வாழவே பிறந்தோம் என்ற உண்மையில், அவர்கள் பயணிக்கிறார்கள்.  யோகத்தின் வழியாக, இப்படியாகத்தான் அந்த இன்பத்தை நுகர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மற்றோர் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் எங்கே பிரச்சனை வருகிறதோ? தடை வருகிறதோ? குழப்பம் வருகிறதோ? அப்போது தானாகவே மாற்றம் நிகழும் என்பதே உண்மை. இயல்பான பாடமும், திருத்தமும் மனித சிந்தனையில் அமைந்துள்ளது. இயற்கையானது நமக்கு வழிகாட்டியது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டும் என்பதே உண்மையாகும். காத்திருக்கலாம் தவறில்லை.

வாழ்க வளமுடன்

-

Why most people says as a secret in yoga, almost it is simplified?


யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகம் எளிமையாக்கப்பட்ட போதிலும், இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவது ஏன்?


பதில்:

பெரும்பாலன ஊடகவழியிலான தகவல்கள் இப்பொழுது இல்லை. உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கும் பத்திரிக்கை வழியிலான செய்திகளும், ஒரு கூட்டம் தனியாக உட்கார்ந்து திட்டமிட்டு பரப்பும் செய்திகளும், தலைப்புச் செய்திகளும், சுடச்சுட செய்திகளும் இப்போது இல்லை. இப்போது இல்லை என்றால், உங்களுக்கு படிக்கக் கிடைப்பதில்லை அவ்வளவுதான். ஆனால் காலம் மாறிவிட்டதால், கையடக்க மொபைல் ஃபோனில் காட்சியாக வருமளவிற்கு முன்னேறிவிட்டது. உலகில் விஞ்ஞானம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது ஆனால் மனிதன் இன்னமும் பழமையான மனநிலையில்தான் இருக்கிறான். மனவளம் இன்றி தவிக்கிறான். என்றாலும்கூட சாராசரி மனிதனைவிட சிலர் இன்னமும், ஓஷோ ரஜனீஸ் சொல்லுவது போல ‘பழைய கில்லாடிகளாக’ இருக்கிறார்கள். இந்த கில்லாடிகள், மனிதர்களின் மனங்களையும், மனிதர்களையும் பந்தாடுகிறார்கள். அந்த விளையாட்டில் யார்வேண்டுமானலும் சிக்கிவிடக்கூடும். நீங்களும் நானும் விதிவிலக்கல்ல.

ஒரு செய்தியை, விஷயத்தை, உண்மை சொல்லுவதற்கு, மிகையான அலங்காரம் தேவைப்படும் காலம் இது. ஏனென்றால், ஒரு செல்லும் வழியில் பல பொருட்கள், அவைகளை, உங்கள் காலை பற்றி இழுக்கும் பொறிகள் என்று கூட சொல்லலாம். அது தன்னுடைய பொறியாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். தான் சொல்லும் விஷயத்தை, செய்தியை மட்டுமே மற்றவர்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். இது ஒருவகையான தன்முனைப்பின் நிலை என்றும் சொல்லமுடியும். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், ‘அப்படியெல்லாம் இல்லை, இந்த உண்மையை மக்கள் தவறவிடக்கூடாது’ என்றுதான் நாங்கள் விரும்புகிறேன் என்று பதில் தருவார்கள்.

நாம் வழங்குகின்ற வேதாத்திரிய சேனலில் கூட, ரகசியம் என்ற தலைப்பில் சில பதிவுகள் ‘மிக சமீபமாக’ தரப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த விருப்பமில்லை என்றாலும், ஒரு முயற்சியாக, சோதனையாக செய்யப்பட்டது.  ஆனால் நடந்தது என்ன தெரியுமா? உண்மையாகவே, ரகசியம் என்று தலைப்பிட்ட பதிவுகள் அதிக பார்வையை பெற்றன.

இதற்கு நாம் என்ன பதிலை தரமுடியும்? ரகசியம் என்ற வார்த்தையும், அதில் மறைந்திருக்கிற ஏதோ ஒன்றையும் மக்கள் விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகிவிடுகிறது அல்லவா? மக்களின் மனநிலை இப்படியாக மாறிவிட்டது. அதனால், யார்வேண்டுமானாலும், அவர்கள் யோகத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் ரகசியம் என்ற வார்த்தையை இணைத்து சொல்லுகிறார்கள். இவர்கள் மட்டுமா? அரைகுறையாக யோகம் குறித்து தெரிந்துகொண்டவரும், யாரோ சொல்லி புரிந்துகொண்டவரும், பழைமையான நூல்வழியாக படித்து அறிந்தவரும் கூட, யோகத்தில், ரகசியம், அப்படி, இப்படி என்று தலைப்பிட்டு, மக்களை கவர்வதை காணமுடிகிறது.

உதாரணமாக ஒன்றை சொல்லுவார்கள். மூடிய கைக்குள் என்ன இருக்கிறது? என்ற நிலைவரைதான் அது ரகசியம். அது உள்ளங்கை நெல்லிக்கனி என்று சொல்லிவிட்டால், ‘அவ்வளவுதானா?’என்று எல்லோரும் ஓடிப்போய் விடுவார்கள்.

எனவே, மாறவேண்டியது, மாற்றிக்கொள்ள வேண்டியது மக்களும், அவர்களின் மனநிலையும்தான். அதைவிடுத்து, ரகசியம், அப்படி, இப்படி என்று சொல்லி அழைப்பவர்களை குறைசொல்லி ஒரு பலனும் இல்லை. அவர்கள் போய்விட்டால், இன்னொரு கூட்டம் வந்து அழைக்கும். இது உலகில் பலகாலமாக இருந்துவருகின்றது. அழைப்பையும், செய்தியையும் ஆராய்ந்து பார்க்கின்ற பழக்கம், நமக்குத்தான் வரவேண்டும். அதுவரை இப்படி போலியான அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

நீங்கள் சொன்னதுபோலவே, யோகம் எளிமையாக்கப்பட்டு ‘வேதாத்திரியமாக’ வளர்ந்து நிற்கிறது. மிக எளிதாக பருவ வயதில் இருந்த கற்றுத்தேர்ந்தால், பிறவியின் நோக்கமும், நான் யார்? என்ற உண்மையும், தன்னையறிதலும், மெய்ப்பொருள் விளக்கமும் பெற்று, உலகில் நிறைவாக வாழலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, தனிமனித சுதந்திரமும், ஓர் உலக கூட்டாட்சியும், உலக சமாதானமும் கிடைக்க அதுவே சிறந்த வழியும் ஆகும். ஆனால் இத்தகைய தெளிவுக்குப் பிறகும், எண்ணற்ற கட்டுக்கதைகளை கோர்த்துவிட்டு, யோகத்தையும், அந்த யோகத்தில் இன்னமும் ரகசியம், அது இது என்று சொல்லப்படுவதும் வேதனைக்குறியதுதான். 

வாழ்க வளமுடன்

-

How we can identify the true Yogi, Mahan and Gnani?


ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? பார்த்தவுடன் எப்படி தெரிந்துகொள்வது?

பதில்:

வாழும் உலகில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை, தன்னையுணர்ந்த யோகிகள், மகான்கள், ஞானிகள் ஏராளம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம், அவரவர்களுடைய தோற்றங்களையும் மாற்றிவிடும் என்பது உண்மை. கற்காலம் என்ற நிலையை எடுத்துக்கொண்டால், எல்லா மனிதனுமே ஆடையின்றி திரிந்தகாலம் உண்டுதானே? ஆனால் ஐந்தறிவு விலங்கினத்திற்கும், ஆறறிவான தனக்கும் உள்ள வித்தியாசத்தையும், உயர்வையும் அறிந்தபிறகு தன்னை, மனிதன் ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டான். அவரவர்களுக்கு அந்தந்த சூழ்நிலைகள் கொண்டும், செய்கின்ற வேலைகள் கொண்டும், ஆடைகளும் தோற்றங்களும் அமைந்துவிட்டன. காலங்காலமாக அவை மாற்றம் பெற்றுக்கொண்டே வருகின்றன.

எப்படிப்பார்த்தாலும், ஒரு யோகி, மகான், ஞானி தன்னுடைய தோற்றத்தில், இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆனால் அவர்களுக்குள்ளாகவே இப்படி இருக்கவேண்டும் என்ற இயல்பான தன்மை உருவாகிவிடும். எந்தவகையிலும், அது உலகை, மக்களை பயமுறுத்துவதாகவே, தனிதன்மை வாய்ந்ததாகவோ, ஏமாற்றுவதாகவோ இருக்காது என்பதே உண்மையாகும்.

அந்தக்கால சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மகான்கள் ஜடாமுடி என்ற, முடிச்சுமுடிச்சான முடிகள், என்றுமே வாறப்படாத, எண்ணை காணாத தலைமுடி, உயர்த்திக்கட்டிய முடி, அதில் உத்திராட்சம், விரிந்த தலைமுடி என்ற நிலையில் இருந்தார்கள். உடை என்று எடுத்துக்கொண்டால், கோமணம், சிறிய துண்டு, காவி உடை, எப்போதும் ஒரே ஆடை, அழுக்கடைந்த கிழிந்த ஆடை, தலைப்பாகை, உடலை போர்த்திய துணி என்றெல்லாம் உண்டு. இப்போதும் சிலர் அப்படி தோற்றமளிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அந்தக்காலத்தில், ஆடையில்லா நிர்வாணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போதும் சில சமணர்கள் அப்படி இருப்பதை காணமுடிகிறது.

அதுபோலவே, படர்ந்து நீண்ட தாடி, அழுக்கான தோற்றம், பாமரன், ஏழை, பிச்சைக்காரர போன்ற தோற்றத்திலும் இருப்பதுண்டு. ஆனால் இத்தகைய வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு, இவர் தன்னை அறிந்தவர்தான், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தவர்தான் என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. பொதுவாகவே சராசரி மக்கள் மத்தியில், இப்படியான தோற்றங்களுக்கு மதிப்பு உண்டு. சிலவேளைகளில், மனநலம் குன்றிய மனிதர்களைக்கூட சித்தர், யோகி, மகான், ஞானி என்று நம்பி ஏமாந்துவிடுகிறார்கள். ஒரு பேசமுடியாதவர், தன்னிலை மறந்தவர், பித்துப்பிடித்த நிலையில் இருப்போரையும் போற்றுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்தான், இறைநிலை உணர்ந்தவர் என்றும் நம்புகிறார்கள். இந்த உலகை, பிரபஞ்சத்தை, இயற்கை, மெய்பொருளான உண்மையையும், தன்னையும் அறிந்த ஒருவர், பைத்தியக்காரனாக இருப்பாரா?

என்றைக்கு உலகில், தன் வயிற்றுப்பாட்டுக்கும், மக்களின் ஆதரவைப் பெறவும் ஏமாற்றலாம் என்று சிலர் நினைத்தார்களோ? அன்றைக்கே இதில் போலி உருவாகிவிட்டது. பெரும்பாலும் போலிச்சாமியார், பேசுவது புரியாது. ஏதேனும் பழைமையான நூலை வாசித்து அதில் உள்ளதை அப்படியே சொல்லுவார், அடிக்கடி தன்னை மறைப்பார், மௌன விரதம் என்று பேசா நோன்பு இருந்து, கேள்விகளை தவிர்ப்பார். பூஜை, யாகம் என்று அடிக்கடி மக்கள் சந்திப்பை தூரவைப்பார். அருகில் தன் நம்பிக்கையானவர்களை தவிர வேறு யாரையும் அண்டவிடமாட்டார். இன்னும் நிறைய சொல்லலாம் எனினும், அவர்களை குற்றம் காண்பதும், குறைகாண்பதும் நமது வேலையல்லவே?!

வெறுமையான தோற்றத்திலும், ஆடை அலங்காரத்திலும், தாடி மீசை முடி அமைப்புக்களிலும், சின்னங்களிலும், உருவங்களிலும் ஏமாறாதீர்கள். நேரடியாக, கேள்வி கேளுங்கள். அவராகவே எதையும் மேற்கோள் காட்டாமல், உணர்ந்ததை எளிமையாக, புரியும்படி சொல்லி விளக்குகிறாரா? என்று ஆராயுங்கள். வெறுமனே ஆலோசனை சொல்லுகிறாரா? என்பதையும் அறியுங்கள். பொதுவாகவே யாரையும் சந்தேகக்கண்கொண்டு பார்த்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பழகிக்கொள்வதே நல்லது. சராசரி மக்களில் சிலர், ‘வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக சொல்லுவார்கள். நாம் அப்படியாக இருக்கவேண்டாமே!

வாழ்க வளமுடன்
-

How we can manage who telling always all spiritual persons are fake?


ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு பதில் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு பதில் என்ன?


பதில்:

இதேபோலான கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் தந்திருக்கிறேன் என்றாலும், அவர்கள் அடிக்கடி குறை சொல்லுவதுபோலவே, நாமும் நிறை சொல்லுவது நல்லதுதான். அப்போதாவது அவர்கள் உண்மையை புரிந்துகொள்வார்களா? என்ற ஒரு விருப்பம் தான். ஆன்மீகவாதிகளை ஏமாற்றுக்காரர்கள் என்றும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி தாங்கள் நன்றாக, சொகுசாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லுகிறவர்களுக்கு, அடிப்படையாக ஒரு கருத்தும், நம்பிக்கையும் இருக்கும். அதிலிருந்து அவர்கள் விலகவே மாட்டார்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வெளிப்பாடை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற நினைப்பு இருக்கும். தங்களைத்தவிர மற்ற எல்லோருமே அறிவிலும், செயலிலும், அனுபவத்திலும் குறையுள்ளவர்கள். அவர்களை திருத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். இத்தகைய மனிதர்கூட்டத்தை, சமுதாயத்தை, உலகை திருத்திட வேண்டும் என்று செயல்படுவார்கள்.

ஒருவகையில் இப்படி சொல்லுபவர்கள் பரிதாபமான நிலையில் வாழ்வார்கள் என்று கருதலாம். தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாத ஏழ்மையிலும், எதிலும் சார்பற்ற நிலையிலும் இருப்பார்கள். பொருள்முதல்வாத உலகுக்கு எதிராகவும் இருப்பார்கள். இதனால் பணம்படைத்தவன், பணம் சம்பாதிப்பவன், தொழிலதிபர்கள் ஆகிய எல்லோருமே ‘ஏமாற்றுக்கார்கள்’ என்று கருதுவார். அந்த வரிசையில் இந்த ‘ஆன்மீகவாதிகளையும்’ இணைத்துக்கொள்வார். இங்கே குறிப்பிடுவது எல்லாம் பொதுவான கருத்துக்கள்தானே தவிர, யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்ற விளக்கத்தையும் தந்துவிடுகிறேன். தவறாக கருதிக்கொண்டால், நான் பொறுப்பல்ல.

ஆன்மீகவாதிகள் என்ன செய்கிறார்கள்? மக்களின் அறியாமையை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லுவது சரிதான். இந்த மனிதப்பிறவியின் உண்மையை விளக்குகிறார்கள், வாழ்வின் நோக்கத்தை அறியத்தருகிறார்கள். ‘வாழும் பொழுதே, இத்தகைய மாற்றங்களை செய்து, விளக்கம் பெறுக. ஏற்கனவே கோடானகோடி மக்கள் அறியாமல் இறந்துவிட்டார்கள். நீயும் அப்படி செய்துவிடாதே’ என்று அறிவுறுத்துகிறார்கள். இது தவறானதா? என்றாலும்கூட, ஆன்மீகவாதிகளுக்கு கிடைத்த, சமூகத்தின் உயர்ந்த மதிப்பையும், மரியாதையையும், அவர்களிடமிருந்து நன்மையும் பெற, ஏமாற்று ஆன்மீகவாதிகளும் முயன்றார்கள், முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. வெறுமனே அடையாளம் காட்டும் ஆடைகளும், மத ரீதியிலான சின்னங்களும் அணிந்துகொண்டு, நீண்ட தாடியும், முடியும் வளர்த்துக்கொண்டு, தனக்குப்பின்னால் சில நபர்களை சீடர்களாக வைத்துக்கொண்டு, யாருக்கும் புரியாமல் பேசுபவர்களையும், மௌனவிரதமாக ஆசீர்வாதம் மட்டுமே செய்பவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். உண்மைத்தேடும் ‘சராசரி மக்கள்’ ஆராய்ந்து பார்த்து அல்லவா இவர்களை நாட வேண்டும்? தானாகவே போய் உண்மையறியாது சிக்கிக் கொண்டால், பொருள், பணத்தை இழந்தால், அது யாருடைய தவறு?

ஒரு உண்மையை சொல்லட்டுமா? சாரசரி மக்களை திருத்த வேண்டும் என்ற கட்டாயம், எந்த ஒரு ஆன்மீக ஞானிக்கும், மகானும், யோகிக்கும் கிடையாது. எண்ணற்றவர்கள் இந்த உலகை கண்டும் காணாமல், தன்னளவில் வாழ்ந்துவருவதை நாம் அறிவோம். ஆனால், இயற்கையும், இறையாற்றலும் அவர்களை சும்மா விடுவதில்லை. 'மக்களுக்கு உதவுக' என்று அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கும். அந்தநிலையில்தான் அவர்கள், தன்னுடைய கருத்துக்களை, போதனைகளை, பயிற்சிகளை தருகிறார்கள். நிச்சயமாக, உண்மையான ஞானிகளும், மகான்களும், யோகிகளும் யாரையும், எவரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்பது நிச்சயம்.

அப்படியிருக்கின்ற நிலையில், போலியான ஆன்மீகவாதிகளிடம் சிக்கிக்கொள்பவர்களை என்ன சொல்லுவது? யாரோ ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால், மொத்தமாக எல்லாருமே ‘ஏமாற்றுப்பேர்வழிகள்’என்று முடிவுகட்டிவிடுவது சோகம். இழப்பு ஏற்படுவது ஆன்மீகவாதிகளுக்கு அல்ல, சராசரி மக்களுக்கும், அப்படியாக உண்மையறியாது ஒதுக்கிவிடுபவர்களுக்கும்தான்.

முக்கியமாக, இப்படி ஆன்மீகவாதிகளை குறை சொல்லுபவர்கள், அவர்களவில் ஏமாந்திருப்பார்கள், மற்றவர்கள் சொன்னதை ஏற்று கருத்தாக சொல்லுவார்கள். ஆனால் உண்மை ஆன்மீகவாதிகளின் வழியாக, நன்மை பெற்றவர்களின் கருத்துக்களை அறிந்தார்களா? என்பது ஐயமே. அவை குறித்த உண்மைகளையும், விளக்கங்களையும் அறிந்திருந்தால், தங்களின் கருத்தை தானாகவே மாற்றிக்கொண்டிருப்பார்கள் தானே? 

எப்போதுமே, உங்களுக்கு அருகில் இருக்கும், ஆன்மீகவாதி யாராக இருந்தாலும், அவரின் உண்மைத்தன்மையை பரிசோதனை செய்யுங்கள். அவரோடு கலந்துரையாடுங்கள். DEBATE என்று சொல்லக்கூடிய நேருக்கு நேரான கருத்துப்பரிமாற்றம் செய்து உண்மை அறிய முயற்சியுங்கள். அதில் அவர் தோல்வி கண்டால், ‘இவர் ஏமாற்று ஆன்மீகவாதி’ என்று உங்களைச்சுற்றி அல்ல, இந்த ஊரிலும், நாட்டிலும் மட்டுமல்ல, உலகெங்குமே பரப்புரை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்

-



How can newcomers approach elevated yoga in spiritual sadhana?


ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீக சாதனையில் உயர்வான யோகத்தை எப்படியாக அணுகுவது என்று புதியவர்களுக்கு சொல்லவேண்டும் என்று விளக்குவீர்களா?


பதில்:

மிக நல்ல கேள்வியாக கருதுகிறேன். மிக நீண்ட விளக்கம் தரவேண்டிய நிலையிலும், சுருக்கமாக இங்கே காணலாம். இந்த உலகெங்கும் மக்கள் பரந்து நிறைந்து வாழ்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே, மதிப்பாக சொல்லவேண்டுமென்றால் நூற்று முப்பது கோடிக்கு மேலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகமக்கள் தொகையை நீங்களே கணக்கிடலாம். இந்த கணக்கில் நாமும் இருக்கிறோம். சராசரியாக எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் நன்றாக, நிறைவாக, வளமாக உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால், பதில் இல்லை என்றுதான் சொல்லமுடியும். ஏன்? என்று கேள்வி கேட்டால், ஏற்றத்தாழ்வுதான் வாழ்க்கையில் நிதர்சன உண்மை என்று பதில் தருவார்கள்.

ஏனய்யா, உலகில் எல்லோருமே மனிதர்கள் தானே?  அப்படியானவர்கள் நன்றாக, நிறைவாக, வளமாக ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழமுடியாது? ஏன் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, குறைகளை உயர்த்தி வாழவைக்க முடியாது? இயற்கையோடு ஒன்றிணைந்த, முரண்பாடுகளற்ற வாழ்வை எல்லா வயதினரும் ஏன் கற்று, தனக்கும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் ஏற்ற நன்மையை பகிர்ந்து வாழமுடியாது? அந்த மாற்றத்தை ஏன் தரவும் முடியாது?

இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்கும் என்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்தான். ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பலப்பல சிக்கல்கள் இருக்கின்றன. உலகில் மக்கள் மேல் அக்கறையுள்ள, பெரும்பாலான எல்லா தலைவர்களும் இந்த விளக்கங்களோடுதான், மக்களிடம் சொல்லி அவர்களின் ஆதரவில், ஆட்சிப்பணிக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஆட்சிக்காலத்தில் செயலிழந்து விடுவதுபோல ஒரு தோற்றம் வந்துவிடுகிறது. நிஜத்தில் ஒரு மாற்றமும் நடப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த நிலையில்தான், தன்னையுணர்ந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் உதவ வருகிறார்கள். தலைவர்களுக்கு அல்ல, எளிய சராசரி மக்களுக்காக. வேதாத்திரி மகரிஷி ‘உலக சமாதானம் வேண்டும் என்றால், முதலில் ஒவ்வொரு தனிமனிதனும், அவனுள்ளாக திருத்தம் பெற்று மன அமைதியும் நிறைவும் பெறவேண்டும்’ என்று சொல்லுகிறார். சமீபகாலமாக அந்த மாற்றம், மனவளக்கலை வழியாக மாற்றம் பெற்று வருகிறது. என்றாலும்கூட, உலகம்முழுதும் உள்ள மக்களுக்கு, எண்ணற்ற பயிற்சி மையங்கள் அவசியமாயிற்றே? அந்த அளவில் ஆசிரியர்களும் அவசியமாயிற்றே? அந்தவகையில்தான் பலப்பல யோக அமைப்புக்கள் உருவாகி மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில்தான் சில, ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளே புகுந்து, மக்களை யோகம் என்ற பெயரில், பணமும் பொருளும் பறித்து, பெயரும் புகழும் பெற நினைக்கிறார்கள்.

இத்தகைய ஏமாற்றுப்பேர்வழிகள் குறித்த உண்மைகள் உடனடியாக உலகெங்கும் பரவி, ‘ஆன்மீகத்தை பரப்பும் யோகிகள், மகான்கள், ஞானிகள் எல்லோருமே ஏமாற்றுக்கார்கள்’என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதையே மற்றவர்களுக்கும் சொல்லி, உண்மையான ஆர்வம் உள்ளவர்களையும் தடுத்துவிடுகிறார்கள். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு பக்தியும், யோகமும் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அப்படியானால் அந்த வகையிலாவது இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்களா? என்றால், அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள். மனிதர்களுக்குள் பிணக்கு, சண்டை, சச்சரவு என்று நிம்மதி இழக்கிறார்கள். பணம், பொருள், செல்வாக்கு, புலன் இன்பம் என்ற நான்கில் சிக்கித்தவிக்கிறார்கள். தினந்தோறும் உடலையும், மனதையும் இழந்து வாழ்வின் நோக்கம் மறந்து துன்பத்தில் வருந்துகிறார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் பிரச்சனையும், சமூகத்தின் மொத்த வாழ்வியலில் பிரதிபலிக்கிறது. பிறகு அது உலகெங்கும் பரவிவிடுகிறது. நவீன தொழில்நுட்பங்களால் சுருங்கிய உலகம், இதற்கு நீண்ட நேரத்தை எடுத்துகொள்வதில்லை. இதற்கான உதாரணங்களை நீங்களே அறிவீர்கள்.

இத்தகைய தனிமனித போக்கிலிருந்து, உங்களை விடுவித்து, மனிதனின் தற்கால பிரச்சனைகள், துன்பங்கள் இவற்றிலிருந்து விலகி, உண்மை விளக்கம் பெறவும், உடலை வலுவாக்கி, நோய்களில் இருந்து தடுப்பு பெறவும், வருமுன் காக்கவும் யோகம் அவசியம். பிறப்பின் உண்மையையை, மனிதனாக பரிணமித்த காரணத்தை அறிவதற்கு, ‘நான் யார்?’ என்ற கேள்வி வழியாக விளக்கம் பெற, யோகம் மட்டுமே உதவும். இதை அறியாமல், புரியாமல், தெரிந்துகொள்ளாமல் இந்த உலகில் வாழ்ந்து மடிவதால், யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. ஏற்கனவே பலகோடி கோடி மனிதர்கள் அப்படித்தான் வாழ்ந்து மடிந்தார்கள், மறைந்தார்கள். அவர்களின் வரிசையில் நீங்களும் ஏன் இணையவேண்டும்? பரிசோதித்து பார்க்கலாமே?

இரண்டறிவு ஜீவனான மண்புழுவின் பாதையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்துங்கள். அது வந்த பாதையில் திரும்பிப்போவதில்லை. தடையை கண்டு விலகி வேறு பாதையில்தான் முன்னேறும். ஆறறிவு ஜீவனான மனிதர்கள், வழியில் தடை இருக்கிறது என்பதற்காக, வீட்டிற்கே திரும்பிவிட முடியுமா? அங்கேயே வருந்தி உட்கார்ந்து விடவும் முடியுமா? இனி என்னுடைய எல்லாபாதையிலும் தடைகள் இருக்கும், எனக்கெதற்கு பயணம்? என்று தனக்குள்ளாக கேள்வி கேட்டு, தன்னை முடக்கிக் கொள்வானா? உண்மையையும் பொய்யையும் அலசிப்பார்த்து, உண்மை விளக்கம் பெற முடியாதவனா? உணவு சமைக்கும் அரிசியில் கல் இருக்கிறது என்றால், அரிசியையே, வாழ்நாள் முழுவதும் துறந்துவிடுவானா? நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

வாழ்க வளமுடன்

-

I am worried about who not yet join in yoga within my friend list, is it correct?


எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?


பதில்:

இந்த பொருள்முதல்வாத உலகில், பொருளையே வாழ்வின் துணையாகவும்,, உயர்வாகவும், மதிப்பாகவும், ஆதாயமாகவும் நினைத்து தன் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மனிதர்கள், தன் இறுதிக்காலத்தில் எதையுமே எடுத்துப்போவதில்லை என்று தெரிந்தும், வாழும் பொழுது பற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். ‘அதனால் என்ன? எனக்கு வேண்டுமய்யா’ என்ற நிலையில்தான் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்களை குறைசொல்லவும் முடியாது. அவர்களின் வாழ்வியல் அனுபவம் அப்படிப்பட்டது. எவ்வளவு கிடைத்தாலுமே, குறைமனதோடு, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும் நிலை அவர்களுடையது. 

இப்படியான சக மனிதர்களிடம், ‘பக்தி என்ற நிலை கடந்து, உண்மையறிய யோகம் வாருங்கள்’ என்று அழைத்தால், வரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பக்தி போதுமானது. கடவுளே இல்லை என்பது கூட போதுமானதுதான். தன்னைமட்டுமே மையப்படுத்திக்கொண்டு வாழும் மனிதருக்கும், தன்னால் தான் எல்லாம் நிகழ்கிறது, தன்னறிவாலும், திறமையாலும், அனுபவத்தாலும், உழைப்பினாலும்தான் ‘நான் வாழ்கிறேன், நான் உயர்கிறேன்’ என்று நினைப்போருக்கு, பக்தியும், கடவுளும் தேவை இருக்காது. அவர்களிடம் நாம் அதை விளக்கிக் கொண்டிருக்கவும் முடியாது. கடவுள் என்பது கடந்து உள்ளே அறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட நாம் உண்மையை சொல்லமுடியாது. எல்லாம் எனக்குத் தெரியும் என்று மிகப்பெரிய தடுப்புச்சுவரை, நமக்கு முன்னே வைத்துவிடுவார்கள்.

இதனால், நீங்கள் அவர்மீது கொண்ட அக்கறையில், யோகம் குறித்து எத்தகைய விளக்கம் கொடுத்தாலும், அது அவர்களிடம் எடுபடாது. ‘உன் வேலையைப்பார்’ என்று சொல்லாமல் சொல்லிவிடுவார்கள். நமக்கோ, அவர்கள்மீது வருத்தமும், கவலையும் எழுவது உண்மைதான். வேறுவழி என்ன?

நீங்கள் அவரை எப்படியாயினும், விளக்கம் பெற வைக்கவேண்டும் என்று விரும்பினால், நீங்களே ‘யோகம்’ குறித்த விளக்கத்தை அளிக்காதீர்கள். இங்கே, இப்படி ஒரு அறிவுத்திருக்கோவில் என்ற ஒன்று இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரிய கருத்துக்கள் இங்கே விளக்கம் தரப்படுகிறது. ஏதேனும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால், வந்து பாருங்கள். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் முடிவில் இருக்கலாம்’ என்று சொல்லிப்பாருங்கள். அவர் தன்னளவில் மாறுதல் பெற வழி உண்டு. அப்படியும்கூட ஒரு மாற்றமும் இல்லை என்றால், அவரை நீங்கள் யோகத்திற்கு அழைப்பதில் இருந்து கைவிட்டுவிடுங்கள். இனி ஒருபோதும் யோகம் குறித்து அவரிடம் பேசாதீர்கள், அதன் அருமை, பெருமைகளை சொல்லாதீர்கள். ஒரு நண்பராக உங்களால் அவருக்கும், அவரால் உங்களுக்கும் என்ன நன்மை கிடைக்குமோ அதை வழிநடத்துங்கள். அது போதும். இதற்காக நீங்கள் வருந்தவேண்டாம், கவலைப்படவேண்டாம்.

அவருக்குள்ளாக இருக்கிற கர்ம வினைப்பதிவுகளின் தாக்கம் குறையும் பொழுது, தானாகவே யோகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகும். அது அவருக்கும் கிடைக்கலாம். அவருக்குப்பின் அவரின் வாரிசுகளில் யாருக்கேனும் கிடைக்கலாம். அதை காலம் முடிவுசெய்யும். அதன் போக்கில் விட்டுவிடுங்கள். வேறுவழியில்லை. இதில் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது அல்லவா?! கட்டாயப்படுத்தினாலும் அவர், வழக்கமான வாழ்விலுக்கு உடனே வந்தும் விடுவார்.

வாழ்க வளமுடன்

-

Is it true Kayakalpa yoga and kayakalpam for endless happy life?


காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?

பதில்:

சித்தர்களின் வழிவந்த பரம்பரையினர் உலகெங்கும் சிதறிப்போன பிறகு, பல்வேறு இடங்களில் ஆங்காங்கே இருந்தவர்கள், அவர்களுக்கு தெரிந்த காயகல்ப யோக பயிற்சிகளை, மக்களின் நல்வாழ்வுக்காக கற்றுக்கொடுத்தனர். அதை பார்த்த வேறுசிலர் அந்த பயிற்சியின் உண்மையை புரிந்து கொள்ளாமல், காயகல்ப பயிற்சியை, காயகல்ப மருந்தாக மாற்றி, மக்களின் ஆர்வத்தை தூண்டி, மருந்து வியாபராமாக்கி வாழ்ந்து வந்தனர். அந்த நிலையில்தான் காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்ற கருத்து பல நூறாண்டுகளாக நிலைத்துவிட்டது. 

காயகல்ப யோக பயிற்சி, அதன் சிறப்பு, பயிற்சி முறை என்று பலதரப்பட்ட உண்மைகளை, கவி வடிவில் குறிப்பாக எழுதி வைத்திருந்தாலும், உண்மையை மறைத்து, உளப்பூர்வமாக அறியும்வகையிலும், ஒரு குருவின் மூலமாகமட்டுமே கற்றுக்கொள்ளும் வகையிலும் அமைத்துவிட்டார்கள். அதனால் மொழிவல்லுனர் ஒருவர் படித்தால் கூட முற்றிலும் உண்மையை அதில் அறியமுடியாத நிலைதான் உள்ளது. என்றாலும், சித்தர்களின் வழியில் வந்த பலருக்கு, ஏதோ ஒருவகையில் இந்த காயகல்ப யோகபயிற்சி சொல்லித்தரப்பட்டு வந்தது.

ஆனால் அதற்கு நீண்டகாலம் குருவிற்கு தொண்டு செய்யும் சீடனாக இருக்க வேண்டிய நிலையும் தேவையானது. என்றாலும் கூட அந்த குருவிற்கு எந்த அளவு, பயிற்சியின் உண்மை தெரியுமோ? அதே அளவுதான் சீடனுக்கும் பகிரப்படும் நிலை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக, காயகல்ப பயிற்சி அதன் உண்மையை இழந்து, ஆண் பெண் நீடித்த போக இன்பத்துக்கான ஒரு பயிற்சியாக உலகில் இருந்துவந்தது.

குரு மகான் வேதாத்திரிக்கும், காயகல்ப பயிற்சி குறித்த ஐயப்பாடும், குழப்பங்களும் இருந்துவந்தது. எத்தனையோ சித்தர்களின் குறிப்புகளை ஆய்வு கண்டும், முழுமையான பயிற்சி வடிவம் கிடைக்கவில்லை. என்றாலும்கூட அதன் அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டார். உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று, அங்குள்ள ஆன்மீக அமைப்புகளில் உள்ளவர்களை சந்தித்து உண்மை அறிந்து, அவற்றை தன் ஆராய்ச்சியோடு ஒப்பிட்டு, ஒழுங்கு செய்து, பயிற்சியாக வடிவமைத்தார். அதுவே இப்போதுள்ள ‘வேதாத்திரிய காயகல்ப பயிற்சியாக’ மலர்ந்துள்ளது.
 
வாழ்க வளமுடன்

How to counter the general notion that devotion and spirituality deceive people?


பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


பதில்:

உண்மையிலேயே பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோலவே பொதுத்தன்மையான கருத்தாக மக்களிடம் பரவியும் உள்ளது. இன்னமும் கூடுதலாக, மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களின் பணத்தையும் பறிக்கிறது என்று சொல்லுகிறார்கள். எப்படி? அதிகவட்டிக்கும், மறைமுகமான இருமடங்கு லாபத்திற்கும், ஏதெனும் ஒரு போலியான நிதி நிறுவனத்தை நம்பி, பெரும் முதலீடு செய்து மக்கள் ஏமாந்து நிற்பதை விட அதிகமாகவா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பக்தியும் ஆன்மீகமும் ஏதோ ஒரு மதத்தில் மட்டுமே, ஏமாற்றுவதாகவும், பணத்தை பிடுங்குவதாகவும் பிரச்சாரம் நிறைந்துவிட்டது சோகமானதே. இதனாலேயே பக்தியும் இல்லை, ஆன்மிகமும் இல்லை, கடவுளும் இல்லை (அதாவது குறிப்பிட்ட வகையிலான மதத்தில் மட்டுமே) என்று சொல்லி வளர்ந்தும் வளர்த்தும் வருகிறார்கள். ஆனால் நாம் எந்த மதத்தையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் குறையாக பார்க்கவில்லை, அது குறித்து தனியாக அடையாளம் காட்டப்படுவதும் இல்லை. நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் விளக்கங்களை தரவேண்டியது உள்ளதே?!

பக்தி என்பது, பிறந்தது முதல் பருவத்திற்கு வரும் வயதுவரை எல்லோருக்குமே அவசியம். அது இந்த இயற்கையை, தெய்வீகமாக கருதி அதற்கு மதிப்பு தந்து அதற்கு முரண்பாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவும், கட உள் என்ற தன்மைக்கு நம்மை தயார் செய்வதற்காகவுமே சித்தர்களாலும், அறிவார்ந்த முன்னோர்களாலும், ஞானிகளாலும் வழங்கப்பட்டது. பருவம் நிறைந்து விட்டால், அந்த பக்தியில் இருக்கும் உண்மையை ‘யோகத்தின் வழியே’ அறிந்துகொள்ளவும் வழிவகை செய்திருந்தார்கள். இதுதான் சிதைந்துபோய், வழிபாடாகவும், சடங்காகவும் உண்மையை மறைத்துக்கொண்டு நிற்கிறது. இந்த சிதைவை திருத்திட வழிகாணாமல், அதில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்ளாமல், மொத்தமுமே தவறு கருவது பெரும்பாலான மக்களின் அறியாமை தான்.

ஆன்மீகம் என்பது பக்தி என்பதிலிருந்து வேறுபட்டது. பக்தியிலிருந்து உண்மையை நோக்கி நகரும் பாதை என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை புரிந்துகொண்டால், யோகம் என்பது என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்கால ஆன்மீகம், பக்தியைத்தான் பிடித்துக்கொண்டு நகர்கிறது. ஆன்மீகமும் பக்தியும் ஒன்றுதான் என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இந்த பணத்தை பிடுங்குவதில் பக்தி, பல ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிவிட்டது. அது ஓரளவில் உண்மைதான். எனினும் அதை எளிதாக கண்டு விலக்கிவிடவும் முடியும். ஆனால் ஆன்மீகமும் பணத்தை பிடுங்குகிறது, பறிக்கிறது, ஏமாற்றுகிறது என்பது சோகம். உண்மையான ஆன்மீகம் எது என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் பயணித்து, உண்மையறிந்து ‘யோகத்திற்குள்’ நுழையவேண்டும். யோகமே உங்கள் பிறப்பின் ரகசியத்தையும், நோக்கத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் உங்களுக்கு அறியத்தரும்.

இதன்படி, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை கொண்டவர்களுக்கு, அதை ஆழ்ந்து பார்த்து, உண்மையை அறிந்து கொள்ளக்கூடிய வழியை சொல்லித்தந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

How we can avoid and escape the fake Godman in this modern world?


இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?

பதில்:
நல்லதாக, எல்லோருக்கும் பயன்படும் ஒரு பதிலுக்கான கேள்விதான். இந்த கேள்வியில் நீங்கள் அறியாமலேயே, இத்தகைய நபர்களின் நோக்கத்தையும் சொல்லிவிட்டீர்கள். போலியான இறைத் தத்துவ விற்பனர்கள் என்று. இந்த விற்பனர்களின் நோக்கம் உங்களிடமிருந்து எதைதோ, அவர்களுக்கு சாதகாமான ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இது இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல, ஞானியர்களுக்கும், யோகியர்களும், மகான்களுக்கும் கிடைத்த மரியாதையை பெறுவதற்கு தாங்களும் முயற்சிசெய்தும் மக்களை ஏமாற்றியவர்கள் அந்தக்காலத்திலும் உண்டுதான். இப்படியான போலிகளிடம் ஏமாற்றம் அடைந்து உங்களிடமிருந்தோ, மற்ற மனிதர்களிடமிருந்தோ பணம் போனால் கூட பரவாயில்லை, மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மனம் போனால்? அது சிதைந்து விடுமே?!

இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது, உண்மையான இறைத்தத்துவம் வழங்கும் இறையுணர்ந்தவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் உண்டு. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். இந்த இறைத் தத்துவத்தை, மற்றவர்களுக்கு வார்த்தைகளால் செயல்படுத்த, விளக்கிச் சொல்ல முடியாதவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மற்றும் இன்னும் பலர், இதை மக்களிடம் எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் ஆர்வம் கொண்டு பயிற்சி திட்டமாகவும் வழங்குகிறார்கள், வேதாத்திரியம் அப்படியான பயிற்சி முறைதானே!

அப்படியான பயிற்சிக்கும், கற்றுக்கொள்ளலுக்கும் ஒரு இணைப்பு பாலமாக, பொறுப்புணர்ந்து செயல்படவும், கைவிடாது தொடரவும், உறுதி கொள்ளவும், கட்டணம் செலுத்தும்படியான நிலை இருக்கிறது.

இலவசம், கட்டமில்லா நிலை, சேவை என்றால் உங்கள் மனமே அந்த, தத்துவத்தை, இறையுண்மையை, விளக்கத்தை, ஒழுங்கமைப்பை, உறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் செய்துவிடும்.

சும்மா கொடுத்த மருந்து வேலை செய்யுமா? என்று ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இந்தவித, தற்போதைய உலக இயல்பை, அந்த போலியான விற்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அப்படி போலியானவர்களாக காண்பது ஒரு நோய். அப்படி இருக்கக்கூடாது. அந்த நபர், விற்பனர் என்ன சொல்லுகிறார்? அனுபவம் பெற்றவரா? இதுவரை அவரின் பதிவுகள் எப்படி இருக்கின்றன? அவரின் வாழ்க்கைமுறை என்ன? எப்படி நேரில் பழகிக் கொள்கிறார்? ஒரு உண்மையை விளக்கத்தை எப்படி புரியவைக்கிறார்? கதையளக்கிறாரா? எளிமையாக சொல்லுகிறாரா? நேரத்தை கடத்துகிறாரா? குழப்புகிறாரா? இதையும் செய், அதையும் செய் என்று ஓட்டுகிறாரா? எல்லாவற்றை விட்டுவிடு என்கிறாரா? சொந்த அனுபவத்தை சொல்லுகிறாரா? யாரோ சொன்னதை சொல்லுகிறாரா? கதையாக கலவையாக கலந்தடிக்கிறாரா? தீர்மானமாக இதுதான் என்று உறுதியாக சொல்லுகிறாரா? என்று பலவாறாக கேள்விகள் கேட்டு அதற்கு பதிலை பெற்றபிறகுதான், அவரின் தன்மை தெரியவரும். அதுவரையிலும் அவரை போலி என்றுகூட சொல்லாதிருங்கள்!

ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த விற்பனரை புரிந்து கொள்வதற்காகவே, உங்களுடைய காலம் கொஞ்சம் வீணாகும் என்பதுதான். ஆனால் வேறுவழியில்லை. ஒருவேளை அவர் சிறப்பானவராக இருந்தால் அது உங்களுக்கு உதவும் கூடுமே?! இனி உங்கள் முடிவுதான்!
வாழ்க வளமுடன்.
-

Is soul and life force (uyir) the same?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதானா? 


பதில்:

பொதுவான வழக்கத்தில் இரண்டும் ஒன்றே என்று புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. எப்படியென்றால், உலகில் வாழும் வாழ்க்கை வரை உயிர் என்றும், அதுவே இறந்துவிட்டால் ஆன்மா என்றும் சொல்லிவருகிறார்கள். ஆனால், உயிர் என்பதும், ஆன்மா என்பது வேறுவேறு என்பது உறுதியானது.

உயிர் என்பது நுண் துகளாகிய, விண் என்ற ஆகாஷ் துகள்கள் ஆகும். இவை நாம் கருவானது முதல், உடல் வளர்ந்து, அந்த உடலில் சிறைபட்டு, உடல்முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது தன்னுடைய சுழற்சியில் மாற்றம் கொள்ளும். அதாவது, மனிதனின் மன உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியேறிடவும் வாய்ப்பு உண்டாகிவிடும். இந்தக்குறையை உடனடியாக சரி செய்துவிட முடியாது எனினும், மன அமைதி, நற்சிந்தனை, தெய்வீக வழிபாடு, தவம், தியானம், தகுந்த உணவு முறைகள், மகான்களை சந்தித்து ஆசிபெறுதல் வழியாக சரி செய்யலாம்.

இந்த உயிரை அடிப்படையாகக்கொண்டே ஆன்மா செயல்படுகிறது. அதாவது உயிரின் படர்க்கை நிலையாக, மனமும் ஆன்மாவுமாக. மேலும் ஆன்மா என்பதே வாழும் பொழுதும், வாழ்க்கை முடித்த பிறகும், எக்காலத்தும் நிலைத்தும் இருக்கும் என்பதும் உண்மை. இந்த ஆன்மாவின் மேலோட்டமான இயக்க நிலையையே ஒவ்வொருவருடைய மனம் என்றும் சொல்லலாம்.

எனவே ஆன்மா என்பதும், உயிர் என்பது தனித் தனியானதுதான்.

வாழ்க வளமுடன்.

How do we deal with those who deny and oppose whatever they say?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்விலும், தொழில், வியாபார ரீதியிலும், சில நட்பு வட்டங்களிலும் எது சொன்னாலும் மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்களை எப்படி சமாளிப்பது?


பதில்:

மிக நல்ல கேள்வி, சமீப காலமாகவே நானும் கூட இதை அனுபவித்து இருக்கிறேன். இங்கே இணைய தளத்திலும் அப்படியான அனுபவங்கள் உண்டு. அதுவும் இந்த, வேதாத்திரிய சானல், (இப்பொழுது வேதாத்திரிய யோகா) ஆரம்பித்த பிறகு நிறைய நபர்கள், மறுத்தும், எதிர்த்தும் பேசுகிறார்கள், அதாவது பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்களை சமாளிப்பது ஒரு பெரும் கலைதான்.

பொதுவாகவே, இப்போதைய தலைமுறைக்கு ஒன்று அல்லது இரண்டு முந்தைய தலைமுறை என்று வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சொல்லுவதென்றால் 20 வயது முதல் 39 வயதுக்குள்ளான நபர்கள் என்று சொல்லலாம். இதில் பால் பேதம் இல்லவே இல்லை. இவர்கள்தான், எதை யார் சொன்னாலும், உடனே ‘உனக்கு ரொம்பத் தெரியுமோ? அதெல்லாம் அப்படியில்லை, என்னமோ தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது! இதைப்பற்றி ‘இவர்’ என்ன சொல்லுறார் தெரியுமா?’ என்று விலாவரியாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

சொல்லுவது யார்? அவரின் அனுபவம் என்ன? எதன் அடிப்படையில் சொல்லுகிறார்? எதற்காக சொல்லுகிறார்? யாருக்காக சொல்லுகிறார்? இதன் விளைவு யாருக்கு எப்படி இருக்கும்? நன்மைதானா? என்னதான் முடிவாக சொல்ல வருகிறார்?  என்றெல்லாம் நிறுத்தி நிதானமாக ஆராய்வதில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை, உதாரணமாக காட்டி, ‘நீ இதானே சொல்லுகிறாய்? இதற்கு மேலும் இதைத்தான் சொல்லுவாய்!’ என்று முடிவு செய்துவிடுவார்கள்.

இப்படி வாதிடுபவர்களிடம் நாம் ஒன்றும் பேசுவதற்கில்லை. அப்படியா? சரி இனி நான் திருத்திக் கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நகர்ந்து விடுவது நல்லது. ஏனென்றால், மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்கள், தன்முனைப்புக்கான நல்ல உதாரணப்புருஷர்கள். இவர்களோடு மல்லுகட்டுவது உங்களுக்கு கடினம். ஏனென்றால் நாம் பொதுவாக, யோகத்தில் இணைந்து அதன் வழியாக பயணிக்கிறோம். நாம் எதை விளக்க முயற்சித்தாலும் அது வேறுவிதமாகவே திரும்பும். நாம் சொல்லுவதை வைத்தே நம்மை மடக்கவே நினைப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்களின் தன்முனைப்பில், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆம் நீ வெற்றியாளன் தான் என்று நீங்கள் அவரை உறுதி செய்துவிட்டு நகர்ந்து விடுங்கள். கூடவே வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியும் விடுங்கள். அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்.

My Vote Goes to


 என் ஓட்டு யாருக்கு?


முதல் ஓட்டு அனுபவம்

நான் 18 வயது நிரம்பி, புதிய “மனிதனாக” மாறிய நாட்களில், ஓட்டுசீட்டில் என் பெயர் ஏறிக்கொண்டது. ஓவ்வொரு கட்சி வாக்கு படிவத்திலும் என் பெயரை படித்துப்பார்த்து, வாக்குச்சாவடி சீட்டு வாங்கு வைத்துக்கொள்ளும் பொழுது பெருமையாகவே இருந்தது. என்வீட்டில் மொத்தம் என்னையும் சேர்த்து எட்டு ஓட்டுகள் கிடைக்கும். எங்கள் பகுதி குறிப்பிட்ட கட்சிக்குரியது என்றெல்லாம் இல்லை எனினும்,  திமுக, அதிமுக, ஆர்வமுள்ளவர்களே அதிகம். ஆங்காங்கே சிலர் காங்கிரஸ். சிலர் இ.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. எல்லோருமே கண்ணைப்பறிக்கும் புனிதமான வெள்ளை ஆடைகளில் “தங்களை” மறைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நானும் என் அம்மாவும், அருகே இருந்த வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட பள்ளிக்கு நடந்துசென்றோம். பக்கம் என்பதால், நடந்தே சில தெரு மாறி செல்கையில், ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் பல குதிரை வண்டிகள் நின்றிருந்தன. எங்களைப்பார்த்த அவர்,

“ஓட்டு சாவடிக்குத்தானேம்மா, இருங்க. வண்டி வைக்கிறேன்” என்றார்.

“வேணாண்ணா. நடந்துடறோம்” அம்மா

“அட, இருங்க போவோம். தம்பிக்கி கன்னி ஓட்டா? டேய் தம்பி எந்த கட்சிக்கு ஓட்டு போடனும் தெரியுமா?”

“தெரியும் சார்” நான்

“@க்கு போட்டுடு என்னா!” என்றார் சிரித்துக்கொண்டே.

இவ்வளவு சத்தமாக சொல்லுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில், எப்போதாவது அந்தவீட்டின் அருகே, கடந்துவருகையில் ஏறக்குறைய என்வயதை ஒட்டிய கான்வெண்ட் பள்ளி மாணவியை பார்த்திருக்கிறேன். என்னை விட அழகாகவும் இருப்பாள். அது அவர் மகளா, பேத்தியா என்பது கூட தெரியாது. இந்த நேரத்தில் என் கண்கள், பருவ வயதின் ஆர்வத்தில், அந்த மாணவியை தேடத்தான் செய்தன. வேறு வழியின்றி, எங்கள் வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரமிருந்த பள்ளிக்கு, ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டி பயணம். வாக்கு சாவடியில் என் பெயரையும் என்னையும் சரிபார்த்து, விரலில் மைவைத்து, 

“தம்பி, ஒரு தடவைதான், ஒரு பெயரில்தான், ஒரு சின்னத்தில் தான் குத்தனும் சரியா?”

ஓ அப்போ மூணு தடவை குத்தனுமா?! என்று கிண்டலடிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை. 

வேட்பாளர் பெயர், சின்னம் பட்டியல் கொடுத்து அனுப்பிவைக்க, ஒதுக்கப்பட்டிருந்த அட்டை மறைவுக்கு பின்னே, ஸ்வத்திக் சின்னம் மை தொட்டு அழுத்தி, பதித்தேன். 


அரசு + இயல் = அரசியல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்க்கை வளம், கல்வி, பொருளாதாரம், எதிர்கால சந்ததியினருக்கான வழி இவற்றை, இயல்பாக, அரசால் வழிநடத்துவதற்கு அமைவதுதான் அரசு. ஒரு காலத்தில் “மன்னர் பரம்பரை வழியிலில் இருந்து” மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இது காலப்போக்கில், தலைவர், தலைவர் மகன், தலைவரின் பேரன், தலைவரின் கொள்ளுப்பேரன் என்று நீண்டுக்கொண்டே போய் மறுபடி “தலைவர் பரம்பரை வழிக்கு” மாறிவிட்டது, அத்தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

என்றைக்கு அரசியலில் இருந்துகொண்டு, அதை, தன்னை, தன் குடும்பத்தை உயர்த்துவதற்கு ஒரு தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே இந்த நாட்டிற்கான மலர்ச்சியில் தடை வந்துவிட்டது. இன்னொன்று, சமூகத்தில் தனக்கு கிடைக்கும் மரியாதை, பதவியின் அதிகாரம் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தேவையாகியது. மக்களுக்கான, நாட்டிற்கான சேவைதான் “அரசியல்” என்பது பொய்யாக போனது. 

உன்னால் நான், என்னால் நீ என்று இருகட்சியினருக்கும் இருக்கும் பொது தன்மையில், யாரும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் “இன்றுவரை” வளர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.  


குரங்கும் பகிர்வுகளும்

குரங்குகள் மட்டுமே அதிகமாக வாழும் அந்த சிறு காட்டுப்பகுதியில்,  உணவு கிடைக்காது வாடின. நல்ல உள்ளம் கொண்ட அந்த கிராமத்து மக்கள், தங்கள் தோட்டங்களில் கிடைத்த மாம்பழங்களை, ஒரு பெட்டியில் போட்டு, அந்த குரங்குகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். முதலில் குரங்குகள் அப்பெட்டியில் இருந்த மாம்பழங்களை பார்த்தாலும், கிட்டே வராமல் தள்ளியே நின்றன. நம்மை விட விலங்குகளுக்கு “வாசனை உணர்வு” மிக அதிகம். ஆனாலும் கிட்டே வரவில்லை. சில பெரிய வயதான குரங்குகள் கொஞ்சம் கிட்டே வந்தன. ஆர்வத்தில் நெருங்கப்போன குட்டி குரங்குகளை, அதன் தாய்கள்,  வாலைப்பிடித்து இழுத்து நிப்பாட்டின. 

வயதான குரங்குகள் பெட்டியை பாதுகாப்பாக தட்டி பார்த்துக்கொண்டு, பழத்தை எடுத்தன. சாப்பிட்டன. உடனே மற்ற குரங்குள் அனைத்தும் கிட்டே நெருங்கி, ஒரு குரங்கு, பழத்தை எடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு நகர, அடுத்த குரங்கு பழத்தை எடுத்து அதுவும் பாதுகாப்பாக நகர்ந்துவிட இப்படியே எல்லா குரங்குகளும், மாம்பழத்தை எடுத்துக்கொண்டன. 

இந்த நிகழ்வில்,

1) ஒரு சில குரங்குகள் ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொண்டன.

2) சில குரங்குகள் இரண்டு கைகளிலும் இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டன.

3) எந்த குரங்கும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, இடித்துக்கொண்டு பழங்களை எடுக்க போட்டி போடவில்லை.

4) ஒன்றை ஒன்று தள்ளிவிட்டோ, தலைக்கு மேலே ஏறியே பழத்தை எடுக்கவில்லை

5) தனக்கு கிடைக்கவில்லை என்று எந்த குரங்கும், இன்னொரு குரங்கின் மேல் பாய்ந்து சண்டைக்கு செல்லவில்லை.

6) தனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்க கூடாது என்று பெட்டியை தள்ளி உருட்டிவிடவில்லை.

7) தன்னால் முடிந்த அளவில் மாம்பழம் வேண்டும் என்று நிறைய எடுத்துக்கொள்ளவில்லை.

8) யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று எந்த ஒரு குரங்கும், பெட்டியோடு மாம்பழத்தை தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

9) தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை, சினம் கொள்ளவில்லை, ஆத்திரப்படவில்லை

10) எந்தக்குரங்கும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து மாம்பழத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

குரங்குகளுக்கு கட்சி இல்லை, கொள்கைகள் இல்லை, அரசியல் ஆர்ப்பாட்டமும் இல்லை, தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் இல்லை. இப்படி இல்லாததினால் அவைகள் தாழ்ந்து போகவும் இல்லை. 


#குரங்கிலிருந்து மனிதன் வந்தானா? இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.


வாழ்த்தெரியார் ஆளத்தெரியாதோர்

வாழ்த் தெரியாதோர் பெரும்பாலும் வாழ்நாட்டில்

     ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்

கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

இந்த கவியை, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் 1958ம் ஆண்டு எழுதியிருக்கிறார். (ஞானக்களஞ்சியம் நூல் ஒன்று, 129ம் கவி)


மன்னிப்போம் மறப்போம்

மக்களிடையே பொய்யுரைகள், வெறுப்புரைகள், வெற்றுவாக்குறுதிகள் கொடுத்து, மக்களை தன் வசம் திருப்பும் கலையை, எல்லா கட்சி தலைவர்களும் கற்றிருக்கிறார்கள். தாங்கள் பிறர் மூலமாக தங்களை உயர்வாக சொல்லி, புகழ்பரப்பிக்கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் காலில் விழவும் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு “அதிகார போதையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மை உரக்கச்சொல்வோம் என்ற செய்தித்துறைகள் கூட, பூசி மழுப்பிக்கொண்டிருக்கின்றன, அதுவும் ஒரு கட்சி சார்பாகவே.

நாங்கள் தப்புசெய்திருக்கிலாம். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். என்று “சும்மா” கேட்டாலும், “பணம்” கொடுத்து கேட்டாலும், மக்கள் “மன்னிப்போம் மறப்போம்” என்று கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் பெற்ற எல்லா கொடுமைகளையும் கடந்து, மீண்டும் அதே அரசை வரவேற்கின்றனர்.

குடும்ப பரம்பரை என்பதுப்போலவே, தனி மனித சிந்தனையும், அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பலருக்கு இல்லை. கூடவே தனது “இந்த வளர்ச்சிக்கு” காரணம் இந்த அரசுக்கு ஓட்டு போட்டதால்தான், அதனால் நீயும் போடு என்று பிள்ளைக்கும் ஊட்டி வளர்க்கினர். 

இவர்களிடம் பணம் வாங்கிவிட்டேன். அதை செலவும் செய்துவிட்டேன். தின்ன காசுக்கு, நியாயமா “இவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்” என்று வாக்கு அளித்து விடுகின்றனர். பணம் பெற்று ஓட்டு போட்டால், அடுத்த அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கான தீர்வை எப்படி கொடுப்பார்கள்?!

“யோவ், நீதான் அன்னைக்கே காசு வாங்கிட்டேயேயா? இப்ப என்ன இதுக்கு வந்து இங்க நிக்கிற?!” என்று கேட்க மாட்டார்களா? 


கட்சியற்ற ஆட்சி

மனிதனின் அடிப்படையான தேவைகள் மூன்று,

1) உணவு 2) உடை 3) இருப்பிடம்

மேலும், அடுத்ததாக கல்வி, மருத்துவ உதவி, தொழில்வாய்ப்பு, மக்களின் பாதுகாப்பு ஆகிய அடுத்த நான்கு தேவைகள் போதுமானதாக இருக்கும்.  ஆனால் தனிப்பட்ட தேவைகள் என்றால் ஆளாளுக்கு மாறுபடும் எனவே தனித்தேவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த ஒரு அரசும் இந்த முக்கிய அடிப்படை முன்றும், அடுத்த நான்கும் நிறைவேற்ற முடிவு செய்தாலே போதுமானதுதான்.

ஆனால் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஓவ்வொரு கொள்கைகள், அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சேவை மக்களுக்கானது என்றால் “ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும்?!” எத்தனை கட்சிகள் அரசாள வந்தாலும், 1) கடன் 2) வறுமை 3) கல்வியின்மை ஆகிய மூன்றும் இன்றுவரை தீர்க்கப்படவே இல்லையே?!

எனவே கட்சிகளற்ற ஆட்சிதான் நன்மை தரும் என்றும், வேதாத்திரி மகரிசி அவர்கள் தீர்வு (ஆண்டு 1961) தருகிறார்.


இன்னும் சில வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசி அவர்கள் “அரசியல், ஆட்சி, தலைவர்கள்” குறித்து இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே.

1) அரசியலே மக்களை அடக்கிடவும், உறிஞ்சிடவும் ஏற்றவழி என்பதை தலைவர்கள் அறிந்துகொண்டனர்.

2) அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும் அவலநிலையை முதலில் மாற்றவேண்டும்.

3) தெளிவற்ற மக்களிடம் சுயநலத்தோர், தேச, மத, ஜாதி, இன வெறியூட்டி, தெரிந்தால்போல நடித்து புகழ் பெறும் நடிகராக, அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்


வாழவைக்கும் ஆட்சி

கடன் வறுமை கல்வியின்மை என்ற மூன்று

களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்

உடன்பிறந்தார் போலஉள்ளம் ஒன்றி மக்கள்

உயர்நிலையில் வாழ வைக்கும் ஆட்சி வேண்டும்.

என்று வேதாத்திரி மகரிசி அவர்கள், ஆட்சியாளார்களை வரவேற்கிறார்.


வாக்கு தேர்வு

யாரோ சொல்கிறார்கள், என் நண்பர் சொல்கிறார். என் தந்தை சொல்கிறார், என் வாழ்க்கைதுணை சொல்கிறார். சமூக வலைத்தளங்களில் சொல்லுகிறார்கள். செய்தி தொலைகாட்சியில் சொல்லுகிறார்கள். தொண்டரே சொல்கிறார். தலைவரே சொல்கிறார் என்றெல்லாம் “ஒரு சார்பு” நிலை எடுத்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

ஆட்சியாளர்களின் கடந்த கால நிலையை அலசுங்கள், இப்போது சொல்லும் வாக்குறுதிகளை கேளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள். கடந்த ஆட்சியை நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல் போன காரணமென்ன என்பதை சிந்தியுங்கள். அது அந்த அரசின் அலட்சியம் என்றால், அவர்களுக்கு மறுவாய்ப்பு தருவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். எளிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரோ, அறிமுகமானவரோ இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள். கட்சி என்ற பாசம், ஒட்டுதல் நிலையில், அவர்கள் நிறுத்தும் எந்த மனிதருக்கும், உணர்ச்சி வசத்தால் வாக்களிப்பதை தவிருங்கள்.

உங்கள் வாக்கும், உங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும் எனவே, ஒரு நாள் பணத்திற்கு ஏமாறாதீர்கள். விரலோடு ஒட்டும் மையில், மொத்த வாழ்க்கையையும் இருட்டாக்காதீர்கள். உங்கள் வாக்கால், பிற மனிதரையும், சமூகத்தை அவதிக்குள்ளாக்காதீர்கள்.


வாழ்க வளமுடன். 


-----------------

Photo thanks to: Trac Vu @tracminhvu