Service Guru Thakshina Fund Fees Donate | CJ

Service Guru Thakshina Fund Fees Donate

Service Guru Thakshina Fund Fees Donate


 சேவை, குரு காணிக்கை, நன்கொடை, பணம் சேகரிப்பு, கட்டணம்

அன்பர்களே,

வேதாத்திரிய சானல், வேறெந்த அமைப்பையும், அறக்கட்டளையையும், சங்கத்தையும் சார்ந்தது அல்ல. எங்களின் நேரத்தில் பெரும் பகுதியை செலவு செய்து ஓவ்வொரு பதிவுகளாக, “சொந்தமாக” தந்து கொண்டிருக்கிறோம். வெறுமனே எல்லோரையும் போல, குரு புகழ் பாடிக்கொண்டிருபவர்களும் நாங்கள் அல்ல. நம் வேதாத்திரி மகரிசியே அதை விரும்பியதும் இல்லை. தானாகவே தனக்கு ஒரு மதிப்பும் அளித்துக் கொள்ளாதவர். மற்றவர் தருவதையும் விரும்பாதவர். தன்னை குரு என்று கூட சொல்லாமல், பேராற்றலே எல்லோருக்கும் குரு என்ற சொல்லியவர்.

நம் குருமகான் வேதாத்திரி மகரிசி, உணர்ந்து ஓதியதை, நாங்கள் ஓதி உணர்ந்து 34 ஆண்டுகள் வேதாத்திரிய பயணத்தில், நாங்களும் உணர்ந்து ஓதுபவர்களானோம். அதைத்தான் 2018 முதல் வேதாத்திரிய சானல் வழியாக தந்து கொண்டிருக்கிறேன். அதில் என் நண்பரும் இணைந்து கொண்டார். 

குரு மகான் வேதாத்திரி புகழ்பாடுவதும், அவர் பதிவுகளை தருவதும் சரி, ஆனால் நீ என்ன கற்று உணர்ந்தாய்? என்பது எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வியே. அந்த கேள்விக்கான பதில்தான் எங்களது பதிவுகள். 

ஒருவர், தன் குருவின் புகழ் பாடினால், அவர் தன்னளவில் வளர்ச்சி இல்லாமல், குருவோடு நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். அவர் சரணாகதியே ஆனாலும் கூட, அவருக்கென்று தனி கருத்து ஏதுமில்லை. எல்லாமே குரு, குருதான் எல்லாமே. இதில் தவறில்லை. ஆனால் இந்த அன்பர், தன் கருத்தாக எதையுமே சொல்ல முடியாது. சொன்னாலும் மாட்டிக்கொள்வார். குரு மகான் வேதாத்திரி இப்படிப்பட்ட அன்பர்களை ஏற்படுத்தியது இல்லை. என்னைப்போல நீயும் மாறுக என்றுதான் வாழ்த்தியிருக்கிறார்.

நாங்களும், குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சரணாகதி அடைந்தவர்கள் தான். ஆனால் அவரளவில் நிற்காமல், எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஆராய்ந்து தெளிந்தோம். உண்மை அறிந்தோம். அதை வார்த்தையால் விளக்குவது கடினம். 

-

* இதுவரை எங்களை புரிந்துகொள்ளாத அன்பர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தருகிறோம். நீங்கள் விரும்பினால் எங்களை, உங்கள் அறிவாட்சித்தரத்தால் அளந்து பார்க்கலாம். நாங்கள் தயார்.

-

குரு மகான் வேதாத்திரி மகரிசியிடமே, உங்களுடைய சிஷ்யர்கள் உங்களை மாதிரி இல்லை, அவர்களை எப்படி தரத்தில், உண்மை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொள்வது? அப்படி ஒருவரை காட்டுங்கள், நான் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் என்றார். அதற்கு மகரிசி அவர்கள் “உங்கள் அறிவாட்சித் தரத்தின்படிதான் அவர்களை பார்க்கிறீர்கள். எந்த அளவைக்கொண்டு அப்படி சொல்லமுடியும்? அதோடு உங்கள் வணக்கத்தை எதிர்பார்த்தும் அவர்கள் இல்லை, உங்களை உயர்த்திக்கொள்ள என்ன வழியோ அதைப்பாருங்கள், குறைகாண்பது வேண்டாம்” என்று சொல்லியுள்ளார்.

அதுபோலவே வேதாத்திரிய சானலில், 07/10/2022 அன்று நான் பதிவிட்ட ஒரு பதிவிற்கு அப்படியான வாதம் வந்துவிட்டது. 

-

அங்கே பதிவிட்டது இதுதான்!

-

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம்.

1) குரு காணிக்கையாக ஒருநாளைக்கு ரூபாய் 300 GPay வழியாக செலுத்தவேண்டும்.

2) 90 நிமிடங்கள் (இரண்டு பிரிவுகளாக) ஒருநாள் மட்டும் விளக்கம் கிடைக்கும்.

3) எந்த நேரம் உங்களுக்கு தேவை என்ற விபரம் தெரிவிக்கலாம்

3) பணம் செலுத்திய உடன், ஜூம் இணைப்பு வழங்கப்படும்

பணம் அனுப்ப GPay ID  xxxxxxxxxxxxxx

-

இதற்கு ஒருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் X: இந்தத் தொகை SKY டிரஸ்டுக்கு செல்லுமா?

என்னுடைய பின்னூட்டம்: இந்த சேவை வழங்குவது WCSC, SKY Trust இல்லை


இன்னொருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் Y: குரு காணிக்கை என்றால் ஸ்கை ஆழியாருக்குத்தான் வழங்க முடியும். வேறு யாரும் நன்கொடை கேட்பதை ஏற்கமாட்டோம்

என்னுடைய பின்னூட்டம்: சரி அப்படியானல் வருந்துகிறேன். பணம் செலுத்தாதவர்களுக்கு சேவை வழங்க முடியாது. வாழ்க வளமுடன்.

சிறிது நேரத்தில் இதை நான் அழித்துவிட்டேன், முதல் கோணல் முற்றும் கோணலாக மாறிவிடும் என்பதால்!

-

நான் மறுபடியும் ஒரு பதிவிட்டேன்.

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம் என்று பதிவிட்டிருந்தோம். அதற்காக வருந்துகிறோம்,

இவை எங்கே கிடைக்குமோ, அங்கேயே நீங்கள் பெற்றுக் கொள்ளவும். 

வாழ்க வளமுடன்!

-

இதற்கு என்னமாதிரியான வாதங்கள் நிகழ்ந்தது என்பதை நான் இங்கேயும் தருகிறேன்.

பின்னூட்டம் A: Super இப்போது தான் நீங்கள் சரியாக பதிவிட்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் வேதாத்திரியம் வியாபாரமாக்கப் படுகிறதே என்று வருத்தமாக இருந்தது

எனது பின்னூட்டம்:  நன்றி, ஓவ்வொரு அன்பருக்கும் அவரவர் வினைப்பதிவு செயல்படுகிறது. மெய்யுணர்ந்த ஆசிரியரின் சேவையை ஏற்கும் பக்குவமில்லை. வாழ்க வளமுடன்!

பின்னூட்டம் A: எதிர்பார்ப்பு இன்றி செய்வதே சேவை அல்லவா?

எனது பின்னூட்டம்: அதுதான் வழக்கமாக கொடுப்பதாயிற்றே, அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் பதில், “தனித்தனி நபருக்கும்  கிடைக்கும்” என்ற வார்த்தை பதிவிடப்படிருப்பதை கவனிக்க மறந்தீர்போலும். நல்லது. இதுவும் எனக்கு இறை கொடுத்த பாடமே என்பதை உணர்ந்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் B: வணக்கம்  தனித்தனியாக என்பதை  கவனித்தால்தான்  வேதாத்திரி மகரிஷியின்  அனுபவ விரிவை  புரிந்துகொண்டு  விளக்கம் அளிப்பீர்களா  அல்லது  தங்களது  நான் யார்  என்ற முழுமையின்  உச்சபட்சஅறிவின்  உணர்வின் தெளிவில்  உங்கள் விளக்கம் இருக்குமா?

எனது பின்னூட்டம்: அன்பரே, உங்களுக்காக தனியே பதில், கிழே தந்திருக்கிறேன்.

பின்னூட்டம் B: இவை எங்கே கிடைக்குமோ அங்கே சென்று  பெற்றுக் கொள்ளுங்கள்  என்று  பதிவில் உள்ளதை  கண்டு சேர்த்து கவனித்தால்தான்  உங்கள் விளக்கத்தை வேண்டி விரும்பினேன்   உங்கள் பதில்   வாழ்க வளமுடன்

பின்னூட்டம் A: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இனிப்பை சுவைக்க எறும்புக்கு, விளம்பரம் தேவை இல்லை. இனிப்பு இருந்தால் எறும்பு தானாக வரும் .மேலும் ...மேலும் சுயநலம் கருதாமல் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதிபலன் பாராமல் உழைத்து இறைத்தொண்டாற்றிய  மகான்கள் பலர் ..... புரிந்து கொண்டு செயல்படுங்கள்.. 

எனது பின்னூட்டம் :  உங்கள் அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி,  ஆனாலும் தாயானவள் வலிந்து உணவு ஊட்டவில்லையானல் குழந்தை வளர்ச்சி குன்றிப்போய்விடும். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் C: சரியான முடிவு.நீங்கள் அப்படி ஆலோசனை தருவீர்கள் என்றால்.1 நாள் மட்டும் இலவசமாக தந்திருக்க வேண்டும்.

எனது பின்னூட்டம்:  நல்லது, இனிமேல் திருத்திக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்

-

பின்னூட்டம் B: என் குருநாதர் வேதாத்திரி மகரிஷியின்  அவர் முகம் காணா மாணவன் நான்  அவரின் உன்னத செயலுக்கு இழுக்காக இருக்கிறது உங்கள் பதிவு   வேதாத்திரியத்தை படித்து  ஆசிரியர் பணி  செய்பவர்கள்  இறைவனுக்கே  பணி செய்பவர்கள் ஆகிறார்கள்  இதை சற்று புரிந்து கொள்ளுங்கள்  பாடத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும்  புரியும் நிலை இருந்தாலும்  புரிந்ததாகாது  உணர்ந்தால் மட்டுமே   அது முழுமையாக. உணர்ந்துகொண்டதாக ஆகும்  அப்படியிருக்கையில்  பயிற்சியின்போது   அனுபவத்தில்  சில நிலைகளை  உணர்ந்தவர்  மேலும் தெளிவு பெற படித்த உங்களிடம்  விளக்கம் கேட்டால்  உங்கள் நிலைப்பாடு என்ன. படித்த அறிவில்  உங்கள் பதில் இருக்குமா  அல்லது  அனுபவ உண்மையை உணர்ந்த நிலையில் இருக்குமா ???

எனது பின்னூட்டம்: வணக்கம், இந்த மாதிரியான வாதத்திற்கும், கேள்விகளுக்குமே நான் காத்திருந்தேன் என்பது உண்மை. ஏனென்றால் அப்போதுதானே நானும் சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் என்னுடைய அனுபவ உரைபதிவுகளை பார்க்க, கேட்கவில்லை என்றே கருதுகிறேன். நம் வேதாத்திரி மகரிசி சொன்னது போலவே, நான் உணர்ந்து ஓதுகிறேனா இல்லையா என்பதை, இங்கே பகிரும் பதிவுகளே சொல்லும். இந்த வேதாத்திரிய சானலில் இருக்கும் 533 பதிவுகளில், ஒரு சில பதிவுகள்தான் நேரடியாக, நம் வேதாத்திரி மகரிசி குரலில் இருக்கும். மற்ற எல்லா பதிவுகளும், குருமகான் சொன்னதை, நாங்கள் புரிந்து கொண்டவிதத்தில், அதன் சாரம் மாறாமல் நாங்கள் தந்தவையே. இதற்கு 13450 பகிர்வார்களே சாட்சி.

கிட்டதட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன். நம் மகரிசியின் மாக்கோலம் கவிதைகள் விளக்கம் ஒரு பாகம் எழுதியிருக்கிறேன், மூன்று உடல், மன நலன் குறித்த கட்டுரை எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் அமேசான் கிண்டில் நூலாக விற்பனைக்கு கிடைக்கிறது. தற்பொழுதும் எண்ணம் குறித்த கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் எந்த மாதிரியானது என்பதை நீங்களே ஆராயுங்கள்.

என் வயது 53, என்னுடைய 18 வயதில் தீட்சை எடுத்துக்கொண்டேன். 34 ஆண்டுகால வேதாத்திரிய பயணத்தில் நான் பெற்ற உண்மைகள்தான் இங்கே பதிவுகளாக 2018 ஆண்டு முதல் மலர்ந்திருக்கிறது.

என் ஓவியங்களுக்காக இரண்டு முறை, நேரடியாக குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சந்தித்ததும், அவரின் கையொப்பம் கேட்டு வாங்கியதும் என் அனுபவங்கள்.

உங்களிடம் இருக்கும் அளவுகோலில் என் அறிவையும் தெளிவையும் அளந்து கொள்ளலாம். தவறேதும் கருதமாட்டேன். வாழ்க வளமுடன்.

-

இதோடு இன்றைய வாதம் நின்றிருக்கிறது, இது தொடருமா என்பது நாளை தெரியும். பார்க்கலாம்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!