2014 | CJ

2014

Stay Tuned with Art


ஓவியத்தோடு கலத்தல்...


ஒரு குறிப்பிட்ட செய்திகளை உள்வாங்கிக்கொண்டு தனக்குரிய பாணியில் எழுத்தில் தரவல்லவர்கள் நிறைய நபர்கள் இருக்கும் இந்நாட்களில், நானும் அதில் ஒருவனாக சிறப்பிக்க ஆர்வமாக இதுவரை எழுதிக்கொண்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் ஒரு ஓவியனாக நான் நிலைத்திருப்பதும், அந்த ஓவிய திறமையினாலே நான் என் வயிற்றுப்பாட்டை நடத்திக்கொண்டிருப்பதும் உண்மை. இதை நினைவுக்கு கொண்டுவரும் வேளையில், இதுவரை நான் மறந்திருந்தேனோ என்று நினைக்கிறேன்.

இப்பொழுது எனக்கு நன்கு தெரிந்தது எது என்னும் நிலையில் ஓவியமே என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இதுவரை நான் என் வட்டத்தைக்கடந்து என் பெருவெளி என நினைத்து எழுத்திலும், பிறவகையான துறைகளிலும் ஒரு காலைப்பதித்து, என்னை ஒரு நிலையிலும் நிறுத்திக்கொள்ளாதிருக்கிறேன்.

பல ஆண்டுக்கால பயணத்தில், ஒரு குறிக்கோளுடன் தொடங்கிய பயணத்தில் என் நிறுத்தம் வந்துவிட்டதை அறியாமல் அல்லது அந்த நிறுத்தத்தில் மனமோ, உடலோ, நினைவோ எதோ ஒன்றை வைத்துவிட்டு அந்த பயணத்தை தொடங்கி போய்க்கொண்டிருப்பதாக என்னை கருதுகிறேன். தொடர்வண்டி பயணத்தில் தன் ஊர்வந்ததை அறியாது, மற்றவர்களிடம் கேட்டு அறியாமலும், தன் தூக்கத்தை தொடர்ந்தும், தன் பயணத்தை தொடர்ந்தும் பயணிக்கும் பயணி போல...

என் வாழ்வில் பல ஆண்டுகளை பலவகையான தேடல்களிலும், கற்றுக்கொள்ளலிலும், நிலைப்படுத்தி, அதன்மூலமான வேலைவாய்ப்பு தேடலிலும் என்னை இழந்திருக்கிறேன், இப்பொழுதைய கால கட்டத்தில், ஒரு ஓவியனாக என்னை நிலைபெறச்செய்யும் முயற்சியில் கொஞ்சம் வெற்றியோடு நின்றிருந்தாலும், இன்னமும் இதில் கவனம் செலுத்தவேண்டி இருப்பதாலும் இனிமேலும் சிதறி பறக்கலாகாது என்பது என் முடிவு.

அரசுத்துறை, தனியார் பணியாளர்கள் எப்போதும் தன் மேஜை எல்லைக்குள் மட்டுமே செயல்படுவதை பார்த்து வியந்திருக்கிறேன். ஒருவித மனக்குவிப்பு இதில் வரும் என்பதும், வேலைகளில், தன் செயல்களில் கவனம் வரும், தேவையில்லாத பிறரது செயல்களில் தலையிடுவதும், அதன்மூலமாக வரும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்பதும் உண்மை.

ஏற்கனவே ஓட்டைபானையாக இருக்கிற நான், ஓவியம் முதலான எல்லா ஓட்டைகள் வழியாக என் கவனங்களை செலுத்திக்கொண்டிருந்தது மகா விரயம் என்பது என்புத்திக்கு இப்பொழுதான் தெரியவருகிறது. இனி ஓவியத்துக்கான ஓட்டையில் மட்டும் விரயச்செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.

ஓவியம் தொடர்பான தகவல்களில் என்னை நிறுத்தினால், பிறருக்கு கண்டிப்பாக உதவுமா என அறியாத நிலையில், அது என் வயிற்றுக்கு உதவும் என்பது தெளிவு. இதோடு நான் இன்னும் ஓவியம் குறித்தான அனுபவத்தில் என்னை மேம்படுத்தவும் உதவும்....

இந்த ஓவியன் இதையும் செய்தான் அல்லது எழுதினான் என்றால்... ஓவியத்தையாவது நன்றாக செய்தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டால்... இவன் இரண்டையுமே சரியாக செய்யவில்லை என்ற பதில் எனக்கானதாக இருக்கவேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

இதனால் இழப்பொன்றும் யாருக்கும் இல்லை. இப்போது வரை என் நிலை, என் அனுபவம், என் ஆர்வம் என்று ஆய்வு செய்தால் “ஓவியம் தவிர ஏதுமில்லை” என்பதே முடிவாக இருக்கும் என்பதால் நான் அந்த நிலையிலேயே நின்று என்னை சிறப்பித்துக்கொள்ள விரும்புகிறேன்...

ஆனால் என் கற்றுக்கொள்ளலும், மேம்படுத்திக்கொள்ளலும் என்றும் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்... 

Caricature for Gift


Caricature for Birthday Gift

This one is done  for New Style -
Caricature with Real Photos on a Background...  Really it look nice!

If you need "Caricature" like this?
Make call +91 9442783450 or
Whatsapp me: +91 9442783450 or
Mail to: caricaturelives@gmail.com


Visit: www.caricaturelives.com


Music and Me


ராஜேஷ் வைத்தியா
திருச்சியில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு ஒரு நண்பரின் அழைப்பின்பேரில் செல்ல நேர்ந்தது. வழக்கமான ஆடம்பர நிகழ்வு. உள்ளே நுழைந்ததுமே வீணைவாத்திய இசை ஒலித்தது. அரங்கு முழுதும் குளிர்பதனமிட்டிருந்ததால் வெளியே நிசப்தமாக இருந்திருக்கிறது.


வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா சில திரைப்பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தார். இப்படியான ஒருவிழாவில் இசையை ரசிப்பதற்காகவும் ஒரு கூட்டம் வருமென்று நம்பி, நிறைய இருக்கைகள் போட்டிருக்க, அவற்றில் ஒரு சிலரே அமர்ந்து அந்த பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தனர். நானும் அதில் ஒருவனாக இருந்தேன்...

ஓவ்வொருபாடலாக நான் வரிசைப்படுத்தவில்லை. ஆனால் இந்த கட்டுரை எழுதத்தூண்டிய பாடலுக்கு முன்பு வாசித்தபாடல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். தன் பாணியில்...
ஆறிலிருந்து அறுபதுவரை - திரைப்பட பாடலான ”கண்மணியே காதல் என்பது...”
அடுத்து
கரகாட்டகாரன் - திரைப்பாடலான “இந்தமான் உந்தன் சொந்தமான்...” இதனை அடுத்து... இசைத்த அந்த பாடலின் ஆரம்ப இசை, ராஜேஷ் வைத்தியாவின் கீபோர்ட் கலைஞர் வாசிக்க ஆரம்பித்ததும், எனக்கு சிலிர்ப்பாகியது... கிட்டதட்ட மறந்துவிட்ட அந்தபாடல், அதோடு கூடிய நினைவலைகளை எனக்குள் மீட்டியது... ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை.


வெள்ளைரோஜா - 1983
“வாவ்” மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அந்தப்பாடலை கேட்டதும் வேறெதும் தோன்றாமல் வெறுமனே அந்த இசையை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்... அந்தபாடல் இதுதான்....

“சோலைப்பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்...” எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி ஆகியோர் பாடிய பாடல்...
ராஜேஷ் வைத்தியா அதற்குபிறகு என்னை அந்த 1983 ஆண்டுக்கு அனுப்பிவைத்துவிட்டார்... நிகழ்வில் என்ன அடுத்துவாசித்தார் என்பது நினைவிலில்லை.

வெள்ளை ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் அது. மறுநாளே இந்தபாடல் குறித்து கூகுளில் தேடினேன், உடனே யூடியுப் சென்று, அந்த பாடல் காட்சியை இயக்கினேன். நடிகை ராதாவும், நடிகர் சுரேஷும் ஒரு பூங்காவில் இந்தபாடலை பாட தயாராகினர். சட்டென நிறுத்தி, இந்த பாடலின் ஒலி வடிவம் இருக்குமா என்று தேடி, அதை என் கணிணிக்கு எடுத்துக்கொண்டேன்.  நல்லவேளையாக இந்த திரைப்படம் அந்த 1983 லேயே நான் பார்க்கவில்லை. இந்த காட்சியையும் பார்த்து என் உன்னத கற்பனையை அழித்துக்கொள்ள விரும்பவில்லை.

இன்றும் அந்தபாடல் பற்றிய தகவல்கள் முழுமையாக இல்லை எனினும் எனக்கு கிடைத்த தகவல் இது.... பாடலாசிரியர் வாலி. இயக்குனர் ஏ. ஜெகன்நாதன்,  அந்தக்கால இலங்கை வானொலி தமிழ்ச்சேவை ஒன்றும், இரண்டும் இந்த திரைப்பாடல்களையும், வசனங்களையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

பாடலை படிக்கவிரும்புவோர் இங்கேசெல்லவும்
http://thenkinnam.blogspot.in/2011/02/blog-post_2688.html


1983ல் நான்...
1983... இந்த திரைப்படம் வெளிவந்த வருடத்தில் என்வயது 13, பள்ளி இறுதியாண்டு மாணவன். திரைப்படம் மட்டுமின்றி, கொஞ்சம் உலக விசயங்களும் அறிந்துகொண்டிந்த காலம் அது. தினத்தந்தி நாளிதழ் வழக்கமாகவும், தினமும் மாலை நூலகம் சென்று நூல்கள், கட்டுரை இதழ்கள், தனி விருப்ப உறுப்பினர் நூல்களும் படித்துக்கொண்டிந்தகாலம்.

இந்தபாடலோடு  தொடர்புடைய, இதே திரைப்படபாடலான “தேவனின் கோவிலிலே யாவரும்..” நடிகர் திலகத்திற்காக, மலேசியா வாசுதேவன் பாடிய பாடலின், ஆரம்பத்தில்...
“உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்” வரிகள் தனிப்பாடலாக இருக்கும். நூலகத்தில் சில நூல்கள் தேடி புரட்டும் வேளையில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றிய அறிமுக நூல் ஒன்றும் கிடைத்தது. அதில் சில பாடல்களை அங்கேயே படித்துக்கொண்டிருந்தபொழுது இந்த பாடலின் வரிகள் காணக்கிடைத்ததில் மகிழ்ந்தேன். ஆனால் வேதாத்திரி மகரிஷின் முழுமை 1990ம் ஆண்டு இறுதிகளில்தான் எனக்கு கிடைத்தது

இளையராஜா...
இந்த 1980 ஆண்டுக்காலங்களில் இளையராஜாவின் இசை மிக உயரங்களை அடைவதாக இருந்தது.

இசை
இளையராஜா

என்று எங்கே தோன்றினாலும் கரவொலி ஒலிக்கும். இளையராஜாவின் பாடல்களில் இருக்கும் இசை நுணுக்கங்களை, சுகா, கலைச்செல்வன், விஜி கனெக்ட், இன்னும் பெயர் நினைவில்லாத பலர் சமூக வளைத்தளங்களில்  குறிப்பிட்டுச்சொல்லும் பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் அந்தந்த பாடல்கள் வெளிவந்த நாட்களிலேயே நானும், என் அரை, குறை காதுகளை வைத்து கேட்டு அனுபவித்திருக்கிறேன், இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை இங்கே நான் தெரியப்படுத்துக்கொள்கிறேன்.

இளையராஜாவின் இசைகுழுவிலிருக்கும் இசைகலைஞர்களையும் இப்பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. அவர்களில் சிலரை என் நண்பர்களாகக்கூட இணைத்திருக்கிறேன். அவர்களும் என் வேண்டுகோளை ஏற்று ஏற்புதந்திருக்கிறார்கள்... பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தில்....


இசை கேட்டல்
இந்த “சோலைப்பூவில் மாலை தென்றல் பாடும் நேரம்...” இன்று கேட்கும் பொழுது, இன்னமும் சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. என் கணிணியில் பாடல் ஒலிக்க நிறைய பிளேயர்கள் இருந்தாலும் நான் தேர்வு செய்திருப்பது...  Jet Audio...

5.1 என்கிற நம்மைச்சுற்றி ஒலிக்கும் முறையிலிருந்து மாறி, வழக்கமான “ஸ்டீரியோ” வாக கேட்கவேண்டும் என்று அலைந்து, இறுதியாக Edifier 2.1 மியூசிக் சிஸ்டம் முறைக்கு மாறி இந்த பாடலை கேட்கிறேன்.

வானொலி, டேப் ரிக்கார்டர், ஒற்றை, இரட்டை ஸ்பீக்கர்களில் நான் கேட்டு மகிழ்ந்த இந்த பாடல் இப்பொழுது வேறுமாதிரி ஒலிக்கிறது, காரணம் “Jet Audio” தரும் சிறப்பு ஒலி அமைப்பு. பாஸ்கிதார் மற்றும் பாஸ் தொடர்பான ஒலிகளை தனியே பிரித்து பெரிதுபடுத்தி தருவதாக அமைந்திருக்கிறது.

பாடல்
இந்த பாடலை இங்கே கேளுங்கள். உங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்திற்கு பைசா செலவில்லாமல் சென்றுவாருங்களேன்...
http://tamiltunes.com/ilayarajas-evergreen-hits-207-songs.html

இதன் தொடர்ச்சியாக அடுத்தும் எழுத நினைக்கிறேன்... 

Caricature service for all


Nowadays, I am available on 16 hours per day for my clients via Caricaturelives. Yes.. it helps to make a wonderful caricature on clients satisfaction.
Images based on free Stock
Now everyone loves Caricature, but no one ready to see their exaggerated face... so most of client needs Portrait type face and tiny body or cartoon type body.

On my Caricaturelives, gives perfect style face and bodies with world standard style and format. Caricaturelives never use template on orders. Each one client's order is created with individual style. theme, concept and dress-codes. Caricaturelives ready to do new type with client's interest.

Caricaturelives has own website... www.caricaturelives.com
Most of search engines listed and helps to reach my website directly. This site is build with clear details, rate and samples also. Someone says... "Your website has great story" Yeah... lot of details on there. Caricaturelives not believe on fluorescent words!

And Why I am available on 16 hours? Every client takes attention on their caricature. They want best result... so I give a updates, "what is going on?" via sms, whatsapp, facebook messenger and emails. Smart-phones works well on this section...

Whatsapp is now mostly used by all. easy to share our notes, images and video too. (Recorded voice service available)

My clients send their photos, concept detail etc via whatsapp. And I reply as same as by their sketch and updates. Original Master Digital document will be send via email or cloud storage only.

I try to give my best service to my clients. So get connect with me by name of Caricaturelives on...

Mobile: +91 9442783450
Whatsapp: +91 9442783450
Hike: +91 9442783450
BBMme: 7E2333AE

and
Blog: caricaturist-journal.blogspot.com
Facebook: Facebook.com/Caricaturelives
Twitter: twitter.com/Caricatuelives

No more Answers


ஒவ்வொரு முறையும் நான் மாம்பழம் நறுக்கும் பொழுது, இதில் வண்டு இருக்குமா என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ரசாயன உரங்களை பயன்படுத்தி இந்த வண்டுகளை அழித்தே விட்டார்களோ என்றும் நினைத்தேன். ஆனால் இன்று அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது.

மாம்பழத்தின் கண்ணப்பகுதிகளை வெட்டிய மாத்திரத்தில் இது வண்டு விழுந்த பழம் என்று தெரிந்துகொண்டேன். மாங்கொட்டையை சுற்றியுள்ள சதைகளை நறுக்கி எடுத்துவிட்டு, அதை தட்டிய வேளையில் உள்ளிருந்து வண்டு வெளியேவந்துவிட்டது.

வண்டை பார்த்ததும் எனக்குள் நான் சிறுவனானேன்... மாம்பழம் நறுக்கி, வண்டை தட்டி வெளியேற்றி எனக்கு தந்தபிறகும் பயந்துகொண்டே கொட்டையை சப்பிப்போட்ட நினைவு வந்தது... ”ஒரு கொட்டையில் ஒரு வண்டுதான் இருக்கும்டா, பயப்படாம சாப்பிடு” என் அத்தை விளக்கினார். அதெப்படி என்று தெரியவில்லை...

“அடடா, அது பறந்து வீட்டிலேயே இருந்துட போகுது, தூக்கி வெளியே போடுங்க” என்றார் என் மனைவி
“உள்ளே இருந்ததை வெளியே வரவழைத்ததே பாவம், இதை எப்படி வெளியே விடுவது...” சொல்லிக்கொண்டே அந்த வண்டை ஒரு ஓவியம் வரையாத காகிதத்தில் எடுத்து வாசல் கதவை திறந்து, மதில் சுவருக்கு வெளியே விட்டுவிட்டேன்.

வண்டு விழுந்தபழம் ருசிக்கும் என்பதற்கு மாறாக ஒரு சுவையும் இன்றி புதுச்சுவையாக இருந்தது... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது...

இந்த வண்டு இனி என்ன செய்யும், இன்னொரு மாம்பழத்தை தேடுமோ? ஒரு கொட்டையின் உள்ளே, வெளிச்சம் நுழையாத இருட்டிலே இத்தனைகாலம் இருந்ததே, இனி என்ன செய்யுமோ? இதுவரை இது தன் உணவுக்கு கொட்டையின் உள்பகுதியையும், அதன் வழியே வந்த சாறுகளையும் தின்றிருக்கும். இனி அதற்கான உணவாக என்ன தேடும்? அதற்கு இந்த புதிய சூழல் ஏற்றுக்கொள்ளுமா என்ன?

இந்த வண்டு இருக்கும் பழம் எங்கே முளைத்ததோ, பிடுங்கி எங்கே விற்கப்பட்டதோ, அதை நான் எனக்காக வாங்கி, நறுக்கி, அந்த வண்டுக்குரிய வாழ்க்கை சக்கரத்தை திசை திருப்பிவிட்டோனோ? ஒருவேளை வாங்காமலிருந்தால் இந்த வண்டு இன்னேரம் எப்போதும் போல இருந்திருக்குமே?

ஒருவேளை இதன் விடுதலைக்கு நான் ஒரு காரணியா என்ன? என் மூலமாக அது தன் இருட்டு வாழ்விலிருந்து, வெளிச்சத்திறகு வரவேண்டும் என்பதா? அந்த விடுதலை, வண்டுக்கான மறு வாழ்வா, இல்லை அது இனி சாகுமா?

இப்படி கேள்விகள் மேல் கேள்வியா கேட்டுக்கொண்டே, அதை இந்தவலையிலும் எழுதிவிட்டேன்...

வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்த பதில் தெரியாத கேள்விகளை உள்ளடக்கியது... இந்தவண்டாக நான், என்னைக்கூட உதாரணமாகக்கொள்ள முடிகிறது...

தொடர்வேன்...

Live Caricature at Trichy


Presented Live Caricature for Dr, Reddys Lab, Hyderabad at Hotel Sangam, Trichy...

Some Picture Updates

















Need Live Caricature?
Register on 3 days before on Event!
call: 91 944278 3450
Whatsapp: 91 9442783450
email: caricaturelives@gmail.com

visit: www.caricaturelives.com

Android Game Illustrations


எதை செய்தாலும் நன்றாக செய்யவேண்டும் என்பது என் எண்ணம் என்றாலும், நினைத்தமாத்திரத்தில் அப்படியே நிறுத்திவிடவும், விட்டதை அதே இடத்திலிருந்து தொடரவும் செய்வேன். ஒரு வேலையை ஆரம்பிக்கத்தான் எனக்கு காலதாமதம் ஆகும், அந்த வேலையை எடுத்து செய்ய ஆரம்பித்தால் உணவை, தூக்கத்தை  தவிர்த்து செய்துமுடித்துவிடுவேன். (இதை ஒரு பஞ்ச் டயலாக் செய்யலாம்... “ நான் வேலை எடுக்கமாட்டேன், எடுத்தா முடிக்காம வைக்கமாட்டேன்” )

நண்பர்கள் உதவிகேட்டால், என்னால் முடியுமானால் சீக்கிரமும், இல்லையென்றால் மிக தாமதமும் ஆகும்... பொதுவாக யார் உதவிகேட்டாலும் “சரி” என்பது என் வழக்கம். சிலவேளை அது எனக்கு தொடர்பானதில்லை, முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிடுவேன்.

காலப்போக்கில் கேரிகேச்சர் ஓவிய சேவைக்காக, தடையில்லாது
இயங்கும்படி என்னை மாற்றிக்கொண்டேன்.

அதோடு எனக்குத்தெரிந்த, நான் கற்றுக்கொண்ட வேறு எல்லா திறமைகளையும் சற்று நிறுத்திவிட்டு, கேரிகேச்சர், அது தொடர்பான ஓவியங்கள் மட்டும் போதும் என்று என்னை நிலைப்படுத்திக்கொண்டேன்.

சில நேரம் என் தொழில்சார்ந்த நண்பர்கள் தங்களுக்கான சில ஓவிய  தேவைகளை கேட்பார்கள். அந்தவகையில்தான் “நிலாடெக்”(Nilatech) செந்தில்வேலன் தன் நிறுவனத்தின் வெளியீடான தொடுதிரை கைபேசி விளையாட்டுக்கான ஓவிய தேவைகளை கேட்டுக்கொண்டார். (Android Mobile Game Development)
 
தன்னுடைய “Sixer Cricket" விளையாட்டுக்கு சிறு திருத்தம் கேட்டவர், நான் செய்துகொடுத்த மாற்றம், செந்தில்வேலன் அவர்களுக்கு பிடித்துப்போக. அந்த விளையாட்டின் முழு ஓவியம், வண்ண அமைப்பையும் நீங்களே மாற்றி அமைத்துகொடுத்துவிடுங்களேன் என்று சொல்லிவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில், இரவு தூக்கங்களை தவிர்த்து அதை முடித்துக்கொடுத்தேன். அந்த Android Mobile Game ல் எனக்குத்தெரிந்த சில மாற்றங்களையும் செய்யலாம் என்று சொன்னேன். பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அதன்படியே செய்தார். Nilatech ன் குழுவினரும் ஒட்டுமொத்தமாக என் ஓவியத்தை பாராட்டினர்...

இப்பொழுது “Sixer Cricket Hero" என்ற பெயரில் விலையில்லா வகையில் (Free Game)- Play.google.com ல் கிடைக்கிறது.

இந்த  “Sixer Cricket Hero” வழக்கமாக தளத்தில் கிடைக்கும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து மாறுபடுகிறது. முதலாவதாக, இத்தனை மீட்டர் தீர்வோடு, அதை ஆறு பந்து வீச்சுகளில், அதிவேகமாக சிக்சர்களாக அடிக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும்.

உங்களிடமும் Android கைபேசி இருந்தால், உங்கள் ஓய்வுநேரத்தில் இந்த விளையாட்டை, கைபேசியில் நிறுவி விளையாடலாம். உங்கள் கருத்துக்களை நானும், Nilatech குழுவினரும் வரவேற்கிறோம்.

தொடர்வேன்...

Day after Woe


இனிமேல் என் நண்பரின் தாயாரிடம்,  பேசுவதற்கும், என் தோல்வி வெற்றிகளை பகிர்ந்துகொள்ளவும் இனி இயலாது. தன் மகனின் கூட்டாளியாக இருந்தாலும், தன் மகன்களில் ஒருவனாக பொதுவாக நடத்தி, கண்டித்து, அறிவுரை சொல்லி, ஆலோசனை கேட்டு தன் சோகங்களைகளை இறக்கிவைத்தும் வந்தவர் ஒரு புதன்கிழமை தன் உடலை விடுத்துப்போனார்.  
கடந்த வாரத்தில் நிகழ்ந்த இந்த சோகத்தை ஆற்றுப்படுத்த மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்கு மூன்று நாள்முன்புதான் ஒரு திருமண நிச்சயத்திற்கு சென்றவன், உடல் நலமில்லாதிருந்த அவரை பார்த்து பேசிவிட்டு வந்தேன். அவர் இனி இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேல் என் வீட்டில் இருந்ததை விட என் நண்பரின் வீட்டில்தான் என் ஓய்வு நேரங்களை கழித்திருக்கிறேன். சில நாட்களில் அங்கெயே தங்கி மறுநாள் கூட என் இல்லம் சென்றிருக்கிறேன். என் பெற்றோரைத்தவிர, இவர்களையும் என் அம்மா, அப்பா என்றேதான் அழைத்துவருகிறேன். என் நண்பரின் இல்லம் அது என்று எனக்குத்தான் எண்ணம் ஓடுமே தவிர நண்பரோ, அவரின் பெற்றோரோ எந்த வித்தியாசமும் செய்துகொள்வதில்லை. அந்த வீடு எப்போதும் நண்பர்களால் சூழப்பட வீடு. கேலிக்கும், விளையாட்டுக்கும், பரபரப்புக்கும் என்றுமே குறையிருந்ததில்லை.

“எங்கே இவன்?” என்று யாராவது என்னை என் வீட்டாரிடம் கேட்டால்,
“அவன்” வீட்டுக்கு போயிருப்பான் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சுட்டிக்காட்டக்கூடிய நிலையில் என் நடவடிக்கை இருந்துவந்திருக்கிறது...

வாழ்வில் பொருள் தேடலும், சமூக கடமைகளும் ஓவ்வொருவராக தூக்கியடிக்க, நண்பர்கள் திசைக்கொன்றாக சிதறிப்போயினர். நானும் கூடவே! அந்த இல்லம் நீண்டகாலம் அமைதியாக இருந்தது. நண்பரின் தாயாரும், தகப்பனாருமாக இருவர்மட்டுமே இருந்தனர். விருந்தும், சில விழாக்காலங்களும் தன் பிள்ளைகளோ, அவர்களின் நண்பர்களோ வந்துபோகும் இடமாக மாறியிருந்தது. கால சுழற்ச்சியில் வயோதிகமும்வர தமக்குத்தாமே உதவியாக வாழ்ந்துவந்தனர்...

சென்றமாதத்தில் நண்பரின் தாயார் உடல் நிலை மிக மோசமான நிலையிலிருக்க, உடனடியாக மருத்துவ உதவிகிடைக்காமல்  தாமதமாகி, தற்செயலாக வந்த நண்பர்கள் மூலமாகவும், உறவினர்கள் மூலமாகவும், தன் அபாய கட்டத்தை தாண்டி வீட்டிற்குவந்தவரை சென்ற ஞாயிறு அன்று இல்லத்தில் சந்தித்தேன். வயோதிகம் எப்படியெல்லாம் ஆளைமாற்றுகிறது என்று மனதிற்குள் திகிலடித்தவாறே, தொண்டையிலிருந்து வார்த்தைவராமல்  விக்கித்து எதோ பேசுகிறேன்.
“ஒன்னும் முடியலை, எதோ பரவாயில்லை. ஆனா, சாப்பிட்டது எல்லாம் வாயில் எடுத்துவிடுகிறது” என்றார் அம்மா.
அப்பாவோ, “என்னப்பா செய்யறது. பாரு எனக்கும் இப்படி இருக்கவேண்டியதா இருக்கு” என்றார். அப்பாவுக்கும்கூட கடந்த வருடத்தில் அறுவை சிகிச்சை வரை சென்று, தப்பித்திருப்பதையும் சொல்லியாகவேண்டும். இப்படி கேட்டதும் என்னால் அங்கே நீண்ட நேரம் இருக்கமுடியவில்லை. மனம் முழுவதும் வேதனையும், சோகமும் அப்பியது. அப்போதும் நாங்கள் மேல் சிகிச்சைக்காக ஆட்டோ முலமாக, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டுத்தான் என் இல்லம் திரும்பினேன்.

புதன்கிழமை காலை என் நண்பர் அழைக்கிறார். வழக்கான தொழில்நுட்ப தகவலுக்காகவோ, கருத்துபரிமாற்றத்துக்கோ என்றெண்ணி அவரிடம் பேசுகிறேன்...
ஒரே வார்த்தையாக “அம்மா இறந்துட்டாங்க” என்று சொல்லி நிசப்தம் செய்தார். கையிலிருந்த எல்லாவேலைகளையும் அப்படியே வைத்துவிட்டு, மதிய உணவையும் தவிர்த்து, என் அலுவலக நண்பர்களிடம் தகவலை சொல்லிவிட்டு பேருந்தில் பயணிக்கிறேன்.

பேருந்து முன்னொக்கிச்சென்ற அந்த இரு மணி நேரமும், என் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிச்சென்றன. வீடு சென்றடைகையில், ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அம்மா. அருகில் சோகமாக அப்பா அமர்ந்திருந்தார்.
சற்று நேரத்திற்கும் முன் இருந்தவரை, நான் “இரண்டு நாளுக்கு முன்தானே பார்த்து பேசிவிட்டுப்போனேன்” என்றும் முட்டாள்தனமாக பேசி கலங்கினேன்...

அடுத்தும் ஆகவேண்டிய வேலைகள் பிறரால் தயாராகின்றன. வாழ்வில் ஒரு இறப்பு, நம் கன்னத்தில் அறைந்துவிட்டு “போடா போ, ஆகவேண்டியது நிறைய இருக்கு” என்று முதுகில் தட்டியும் கொடுக்கும். அன்றைய நாளோடு இறந்த, அவருக்கான இந்த வாழ்வின் அடையாங்கள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடுகிறது, இனி பிறரிடம் ஞாபகங்கள் மட்டுமே மிச்சமாயிருக்கும்.

வழக்கமான சடங்குகளுக்குப்பின் அம்மாவை அக்னிக்கு தின்னக்கொடுத்து வீடு திரும்புகிறோம். வீட்டில் விளக்கேற்றி வணங்கியபின் குளித்துவிட்டு, எல்லோருக்கும் உணவுபரிமாறுகிறார்கள். என்னையும் அழைக்கிறார்கள். நான் தவிர்க்கிறேன். தவிர்ப்பதைப்பார்த்து அப்பாவும் உண்ண அழைக்கிறார். அப்போதும் மறுக்கிறேன்.

“இந்த வீட்டில் அம்மா அல்லவா உணவுபறிமாரியாகவேண்டும்?!” எண்ணிக்கொண்டே, அப்பாவுக்குத்தெரியாமல் என் இன்னொரு நண்பரோடு பேருந்து நிலையம்வந்து என் இல்லம் திரும்புகிறேன்...

இனி என்ன?

“முடிந்தது. இதோ சூரியன் மேற்கே நகர்ந்து கொண்டிருக்கிறான். நம்மால் செய்யமுடிந்தது ஏதுமில்லை” ஜி.கே!





Live Caricature at Chettinad


Recently I did Live Caricature for CARICATURELIVES at Nemathanpatti, a Chettinad Village, near Karaikudi. Everyone enjoyed with their caricature... Thanks for calling Che. Vijay for this wonderful Live Caricature Event!























if you need Caricature on your Event? visit: Caricaturelives for more Details