2021 | CJ

2021

Is the whole universe in astrology chart? Part 1


 முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?

(Image credit: NASA/JPL)



Demo Horoscope only


Demo Planet Position Chart only


அன்பர்களே,

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PVN7GWG

-

Present by
Sugumarje

Nature's Gift 2


 இயற்கையின் பரிசு! 

அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 

-

Present by
Sugumarje

Nature's Gift


 இயற்கையின் பரிசு!



அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 


-

Present by
Sugumarje

Sixth and below!


ஆறும் அதற்கு கீழும்!



பதுங்குதல்

பெரும்பாலும் என் வீட்டில் சிறு பூச்சி, சிறிய வகை சிலந்தி, கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி மற்றும் தூசி தொந்தரவுகள் உண்டு. இந்த வீட்டின் மனிதர்கள் எப்போதடா விளக்கை நிறுத்திவிட்டு படுப்பார்கள் என்று காத்திருந்து வெளியே நடமாடுவது போல இருக்கும். நான் முன்பு குடியிருந்த வீட்டில், பாம்பு எல்லாம் சாதாரணம். பகலில் கூட வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக வெளியே பார்த்தால், பாம்பு தென்படுகிறது என்று என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சொல்லியிருக்கிறார். 

ஒருமுறை கூட நான் அப்படி பார்த்ததில்லை. இத்தகைய உயிரிங்களின் போக்கு, இரவில்தான் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதாவது மனிதர்களின் அசைவு, உடல் அதிர்வு, குரல் அதிர்வு, ஒலி ஒளி தாக்குதல், வெப்பம் குளுமை பாதிப்பு இதெல்லாம் குறைந்த பிறகு அல்லது நின்றுவிட்ட பிறகு தான், தன் இரை தேடி வெளியே கிளம்புகின்றன. ஆம் அந்த உயிரினக்களுக்கு உணவின் பொருட்டுத்தான் வீட்டிலும் தங்குகின்றன. அதுவரை மற்றெல்லா பொழுதுகளும் பதுங்கியே இருக்கின்றன.

உதாரணமாக, ஏதேனும் சிறு பூச்சியை நீங்கள் விரட்டி அடிக்க முயற்சித்தால் அவை உடனடியாக ஏதேனும் ஒரு இருட்டுப்பகுதியை நோக்கி பறக்கும் அல்லது ஓடும். ஏனென்றால் அப்போதைக்கு அவைகளுக்கு பாதுகாப்பு அந்த இருட்டு இடங்களே! சிலவேளை தரையில் ஓடும் பூச்சி, பல்லி இவற்றை விரட்டினால், அவை உங்களை நோக்கிவரும் போது, உங்கள் உள்ளங்காலுக்கு அடிப்பகுதியில் கூட தங்குவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால் அங்கேயும் இருட்டு இருக்கிறதே! நீங்கள் ஐயய்யோ என்று அலறி, காலை உதறி ஓடுவது எனக்கு காட்சியாகிறது. 


வாழ்விடம்

இந்த உயிரினங்கள் எல்லாமே ஏன் மனிதர் வாழும் இடங்களில் இருக்கிறது? இருங்க, இருங்க! நீங்களும் நானும்தான், அத்தகைய உயிரினங்கள் வாழும் இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாம் உரிமை எடுத்துக்கொண்டு, உனக்கு இங்கே இடமில்லை என்று விரட்டியும் விட்டு, அந்த உயிரினங்களுக்கு நவீன வாழ்வியல் மூலமாக, தொந்தரவுகளையும் கொடுக்கிறோம். 

அந்த சிறு உயிரினங்களுக்கான உணவுச் சங்கிலியையும் அறுத்த பெருமை நமக்கு உண்டு. கூடவே நம்முடைய சோம்பேறி தனத்தாலும், சுத்தத்தில் அக்கறை இன்மையாலும் வெளியே இருக்கக்கூடிய உயிரினங்களை நாமே வருக, வருக என்று வரவேற்கவும் செய்கிறோம்.


விட்டு விலகி விட்டோம்

எங்கள் வீட்டில் சில பாம்புகள் வரும் என்று சொன்னேன் அல்லவா? அவை ஒருபோதும் வீட்டிற்குள் வந்ததில்லை. ஒரு நேரம் வாசல்படி ஏறிவந்த பாம்பு, யாரோ வருகிறார்கள் என்று தெரிந்தவுடனே, வெளிவாசல் வழியே படி இறங்கி ஓடி மறைந்துவிட்டது. ஆனால் குளியலறையிலும், வீட்டு சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் வந்துவிட்ட பாம்பை அடிக்காமல், விரட்டி இருக்கிறோம். பாம்பை கொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு விசம் இருக்கலாம் ஆனால், சிறு அதிர்வு இருந்தாலே மிக விரைவாக ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மை கொண்டது. லாவகமாக அதை விரட்டி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் நமக்கு பழக்கம் இல்லை என்பதுதான் பொதுவான விசயம். 

எப்படி விவசாயத்தை விட்டு மிக நீண்ட பாதையில் விலகிவிட்டோமோ, அதுபோலவே பிற உயிரினங்களோடு கூடிய தடுப்பு, விலக்கல், பாதுகாப்பு இவற்றிலும் விலகிவிட்டோம். காலம் கடந்து செல்லச்செல்ல, இத்தகைய உயிரினங்கள் குறித்த தகவல்களைச் சொல்லும் பெருசுகளையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியமான குறிப்பு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி சொல்லிக்கொண்டே, அந்த ஏட்டுச்சுரைக்காயை கறிக்கு உயயோகப்படுத்த பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.


வாழ்தல் கேள்விக்குறி?!

ஒரு சுண்டெலியைப்போல உங்களால் வேகமாக திட்டமிட முடியுமா? ஒரு எறும்புபோல எங்கோ மறைந்த சர்க்கரையை தேடி எடுக்க முடியுமா? கரப்பான் பூச்சியைப்போல எந்த சூழலிலும் வாழ்ந்து பழக உங்களால் முடியுமா? என்று பலப்பல கேள்விகளை வரிசையாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் ஆறறவு பெற்ற மனித உயிரினம் அல்லவா? இருக்கட்டும்.

ஆனால், இந்த உயிரினங்களும், பிறக்கின்றன, வளர்கின்றன, இணையோடு கூடி களிக்கின்றன. முட்டைகள், குஞ்சுகள், குட்டிகள் இடுகின்றன. தேவையான நேரத்தில் உணவு தேடி தின்கின்றன. அமைதியாகின்றன, காலத்தில் இறந்தும் போகின்றன. நாம் ஆறறவு என்று நமக்கு தற்பெருமை இருக்கிறது, ஆனால் எங்கேயோ வாழ்க்கையை தொலைத்துவிட்ட யோசனை உள்ளுக்குள் எழுகிறதா இல்லையா?

யோசிப்பதற்குக்கூட நமக்கு நிறைய நேரம் இல்லைதான். ஆனால் கொஞ்சம் முயற்சிக்கலாம்.

 

What do the planets do to me?! - 02


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? - 02



இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்க:
இங்கே படிக்கலாம்

கிரக ஆராய்ச்சி - நவீன வரலாறு

உலகில் வாழும் எல்லோருக்குமே ஒரளவு ஜோதிடம் குறித்த அறிவு இந்நாளில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஜோதிடத்தை மறுத்துப்பேசும் ஆட்களும் அதற்கேற்பவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் அணுவியல், அறிவியல் வளர்க்கும், வளர்ந்த மேற்கத்திய நாடு மக்களும் விதிவிலக்கல்ல. விண்வெளியில், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் நீள அகல அமைப்பில், ஆனால் ஒரு பெரிய ஆங்கில எழுத்து H போல மிதந்து, ஒரு நாளைக்கு 16 முறை பூமியை வலம் வரும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கும் காலத்திலும், சோதிடம் சக்கைபோடு போடுகிறது. 


சூரினின் வெப்பக்கதிர்களை ஆராய்ச்சி செய்யும் துணைக்கோள் அணுப்பிவைத்து, சூரியப்புயலை படம் எடுத்து அனுப்பிவிட்டது, அந்த படங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். சூரியகுடும்பத்தை விட்டு வெளியே போய்விட்டது ஒரு தொலைநோக்கி துணைக்கோள், அதன் வழியாகவே பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்பதற்கான யூகத்திற்கு, சான்றுகள் கிடைத்தது. இப்பொழுது புதிதாக, இந்த பிரபஞ்சம் உருவாவதர்கு காரணமாக சொல்லப்படும் பெரும் வெடிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக, முற்றிலும் பெரிய நவீன தொலைநோக்கு துணைக்கோளும் அனுப்பியாகி விட்டது.  


கடந்த வருடத்தில், செவ்வாய் கிரகம் நோக்கி, ஆராய்ச்சிக்காக அனுப்பிவைக்கப்பட்ட துணைக்கோளும், ட்ரோனும், மண், நில பரிசோதனை வண்டியும் கூட, செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கி, அதன் அதன் வேலைகளை செய்து, அதன் மாதிரி படங்களை, செய்திகளை பூமிக்கு தந்துகொண்டு இருக்கிறது. தனுசு ராசிக்கட்டத்தில் அமைந்திருக்கும், இப்போதைக்கு பெரிதாக காணப்படும், கருந்துளையையும், உலகின் பல இடங்களில் அமைந்திருக்கும், நவீன வானியல் தொலைநோக்கி வழியாக, பகுதி பகுதியாக படம் எடுத்து, இணைத்து, அக்கருந்துளையின் உண்மை வடிவத்தையும் உலகுக்கு அறிவித்து விட்டார்கள். இப்படியாக விஞ்ஞானம் ஒருபக்கம், அந்த கிரங்களையே துளைத்துக் கொண்டிருக்கையில், ஜோதிடம் குறித்தான நம்பிக்கை மாறவே இல்லை என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.


ஜோதிடம் வழி எது?

பலப்பல வகையில், ஜோதிடம் நம் வாழ்நாளில் கலந்து பிண்ணிக் கொண்டது. இதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. இதில் வியாபார, வணிக பிண்ணனி உண்டா என்று ஆராய்ந்தாலும் அதுவும் சரியாக இல்லை. ஏனென்றால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது அரசர்கள் நாடாண்ட காலங்கள் வரை, ஜோதிடர்கள் காசுக்காக ஜோதிடம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு ஜாதகன் மனம் உவந்து கொடுப்பதை வாங்கிக்கொள்ள மறுக்கமாட்டார்கள். மேலும் ஜோதிடம் ஒரு கலையாக மதிக்கப்பட்டதால், மற்ற கலைஞர்களோடு, ஜோதிடர்களும் சமூகத்தில் மதிக்கப்பட்டார்கள். மேலும் அரசர்களின் ஆலோசகர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்பட்டது.

அந்த வழியாக வளர்ந்த ஜோதிடமே, தற்காலத்தில் பணத்திற்காக, வாழ்வாதாரமாக மாறி தொழிலாகவே எங்கும் பரவலாகிவிட்டது. மேலும் கூர்ந்த அறிவுள்ள யார்வேண்டுமானாலும் கற்றுத்தேர்ந்து, ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்றும் மாறிவிட்டது. 


ஊன்றிபோனது

ஜோதிடம் மக்களிடம் மிகுந்த சிறப்பு அடைந்ததற்கு முக்கிய காரணம், தன் குடும்பம், தொழில், வறுமை நிலை மாறுமா என்ற கேள்வியில்தான். எப்போதுமே நல்ல பொருள், பணம், நிலம், வீடு, வசதி என்று வாழ்பவன், நிச்சயமாக ஜோதிடத்தை நம்ப மறுப்பான். சிலர் கடவுளையே கூட நம்ப மறுப்பான் என்பதும் உண்மை. ஒரு ஏழை தனக்கு பிறக்கும் குழந்தை வழியாக, தன் நிலைமையும், குடும்ப வறுமையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான், பிறந்த அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதி, அதற்கான பலன் பார்க்கிறான். இந்த பழக்கமே தொடர்ந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது. 


அலைத்தொடர்பு

கிரகங்கள் எப்போதும், தன் சுழற்சியினால் அலைகளை இந்த பிரபஞ்சம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கின்றன. அந்த அலைகளில் நேரடியாக நாம் வாழும் பூமியை வந்தடைவதில்லை. அந்த அலைகள் வரும் வழியில் வேறென்ன கிரகங்கள் இருக்கிறதோ அதனுடைய அலைகளையும் இணைத்துக் கொண்டே வருகிறது. மொத்தமாக மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களோடும், உயிரற்ற பொருட்களோடும் தொடர்புகொண்டு, பூமியின் மையம் நோக்கி நகர்ந்தும் அல்லது பூமியைக்கடந்தும் செல்கிறது. இது ஓவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

அந்த அலைகள், மனித மனதோடு பெரும்பகுதியும், உடல் உறுப்புக்களோடு பிற பகுதியும் செயல்படுகிறது. உதாரணமாக உடல் உறுப்புக்களில்

கிரகம்உறுப்பு
சூரியன்எலும்புகள்
புதன்தோல்
சுக்கிரன்ஜீவசக்தி
சந்திரன்இரத்த ஓட்டம்
செவ்வாய்மஜ்ஜை
குருமூளைச் செல்கள்
சனிநரம்புகள்
ராகு-கேதுஓஜஸ் எனும் உயிர்சக்தி

அந்த அலைகள் எவ்வாறு செயல்படுகிறது என்ற உண்மையையே, கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? என்ற தலைப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு விதை மண்ணில் விதைக்கிறோம், அல்லது தானாகவே மரத்தின் விதைகள் மண்ணில் விழுகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். அந்த விதை ஈர மண்ணில் விழுந்தால் தானாகவே வேர் பிடித்துக் கொள்ளும் அல்லது மழைக்காக காத்திருக்கும். நாம் விதைத்தால் நாமே தண்ணீர் ஊற்றி காப்போம். 

ஒரு விதைக்குள் மரம் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தது தானே? மரம் உள்ளே இருக்கிறது என்பதர்காக, விதைத்த உடனே மரமாகிவிடுவதில்லை. அதற்கென்று காலம் தேவைப்படுகிறது. ஒரு விதை மரமாக வேண்டும் என்பதற்கான வழிமுறை, (கணிணி மென்பொருள் போல அல்லது வீடு கட்ட உதவும் மாதிரி படம் போல) அந்த விதைக்குள் இருக்கிறது. அந்த வழிமுறையை அவ்வப்பொழுது தூண்டுவதற்கு இந்த கிரகங்கள் உதவுகின்றன. ஏனென்றால் காலம் என்பது கிரங்கங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டதுதானே?! அப்படியானால் ஒரு விதைக்கும், மரத்திற்கும் ஜாதகம் எழுதலாமா என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. எழுதலாம் தவறில்லையே!


மனிதனுக்குள் தூண்டுதல்

இதைப்போலவேதான், மனிதனும் அவனின் வளர்ச்சி, வாழ்க்கை முறை, நடவடிக்கை, அவனின் முன்வினைபயனாக இனி செய்யவிருப்பது, பெற இருப்பது என்பதாக அவனுக்குள் வழிமுறை அமைந்திருக்கிறது. அது அவன் வாழும் காலத்தில் தானாகவே வெளிப்படும் என்பதும் உறுதி. அல்லது அவன் அவனுடைய எண்ணங்களாலும், சொல்லாலும், செயலாலும் வரவழைத்துக் கொள்வான். ஏற்கனவே தாயின் வயிற்றில் கரு, உடலாக மாறிடும் பொழுதே, கிரகங்களின் ஆளுமை பார்த்தோம். குழந்தையாக வளர்ந்து, பிறந்து வெளி வரும் காலத்தில், தனித்த உயிராக மாறிவிடுவதால், தனியான ஜாதக குறிப்பும் அமைந்து விடுகிறது.

அந்த ஜாதக குறிப்பின் படியே, அந்த குழந்தையின் உடல், மன, உயிர் நிலைமை, பெற்றோரிடம், பெரியவர்களிடம் நடந்துகொள்ளும் முறை, வெளியிடம் சமூகத்தில் நடந்துகொள்ளும் முறை, நட்பு, பகை, ஆர்வம், சிறப்பு, பொருளீட்டும் வாய்ப்பு, எதிர்பாலின கவர்ச்சி, அரசு உதவி, தெய்வ உதவி, ஆயுள் இப்படி பலப்பல தலைப்புக்களில் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் சொல்ல துவங்குகிறார்கள். இந்த குறிப்பின்படி சொல்லுவதெல்லாம் அப்படியே சிறப்பாக அமைந்துவிடுமா என்றால் அங்கேதான், இந்த இயற்கை ஒரு தடுப்பு வைக்கிறது.


நடந்தது, நடப்பது, நடக்கப்போவது

ஒரு ஜோதிடர் எந்த மனிதருக்கும், அவனின் ஜோதிடத்தை ஆராய்வாரானால், நடந்ததும், நடப்பதும் ஏறக்குறைய சரியாக அமைவது போல இருக்கும். நீ இப்படிப்பட்டவன், உனக்கு இந்த இடத்தில் நோய் வந்திருக்கும். நீ பிறந்த பொழுதே குடும்பத்தில் வறுமை, தகப்பனோடு ஒற்றுமையில்லை, ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டாய், திருமணம் தள்ளிப்போகிறது. குலதெய்வம் வழி விடவில்லை. குழந்தை தாமதம், தொழிலில் சிறப்பில்லை. கடல் கடந்துபோய் சம்பாரித்தால்தான் நல்லது. இப்பொழுது வீடு, நிலம் வாங்க வழியில்லை. நட்பு சரியில்லை, திருட்டுத்தனம் செய்யாதே மாட்டிக்கொள்வீர், அரசோடு மோதாதே என்றெல்லாம் சொன்னால் ஆமாங்க, சரிங்க என்ற பதில்தான் ஜாதகர் தருவார். 

ஆனால் நடக்கப்போவதை கணித்து சொன்னால், அம்மனிதர் வாய்பிளந்து கேட்டு சந்தோசம் செய்து, ஜோதிடர் கேட்ட பணத்தை அல்லது அதற்கு மேலாக கொடுத்து வீட்டிற்கு திரும்புவார். ஆனால் ஜோதிடர் சொன்ன காலம் வரும்பொழுது, சில பலன்கள் தலைகீழாக நடக்கும் அல்லது நடக்காது. ஏன்?


மனம் கிரகத்தை தொடர்புகொள்ளுமா? 

மனிதன் தன்னுடைய மனதால் வாழ்கிறான். அப்போதும், இப்போதும், எப்போதும் அப்படித்தான். இதில் மாற்றத்திற்கு இடமே இல்லை. ஏற்கனவே கிரகங்கள் மனித மனதோடு தொடர்பு கொள்ளும் என்றும் கண்டோம் அல்லவா? அது உண்மையானால், மனமும் கிரகங்களோடு தொடர்பு கொள்ளுமே!  

தனக்கு நிகழ்ந்த பிரச்சனைகளின் அடிப்படையில்தான், அம்மனிதன் தன்னுடைய ஜாதக ஆராச்சியை தொடங்குகிறான். அந்த நொடியே அவனுடைய மனம், கிரங்களை நோக்கி கவனம் கொண்டு விடுகிறது. அந்த எண்ணமேதான், ஒரு ஜோதிடரை பார்க்கும்படி அவனை தூண்டுகிறது. ஜாதக பலன் பார்க்கிறான். ஜோதிடர் சொல்லும் கருத்துக்களை கேட்கிறான். அவர் சொன்ன விளக்கம், வழிமுறைகள் கேட்டுக் கொள்கிறான். இப்பொழுது அவனுக்குள், அவனுடைய ஜாதக்கபடி, தனக்கு நல்லது செய்யும் கிரகம், கெட்டது செய்யும் கிரகம் என்று வகைப்படுத்திக் கொள்கிறான். ஒரு எச்சரிக்கையை அமைத்துக் கொள்கிறான். ஆனால் அதே கவனம் நீண்ட நாளைக்கு இருப்பதில்லை மறந்தும் விடுவான். பிறகு வழக்கம்போலவே ஜாதக பலன்களையே மறந்துவிடுவான். எல்லாம் என் தலையெழுத்து, அதுதானே நடக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொள்வான். 


தூண்டுதல்

இந்த நிலையில்தான் கிரங்கள் எப்போதும் செய்வதை செய்கின்றன. அது என்ன? தூண்டுகின்றன. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆரம்ப காரணியாக கிரகங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் அதைக் குறித்து கவனம் வைத்தாலும், வைத்துக்கொள்ளா விட்டாலும் அவனுக்குள் அக்கிரகங்கள் தூண்டுதலைத் தருகின்றன. ஆமாம், பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கிரகங்கள், மனிதனை தூண்டுகின்றன.


கட்டுரை இந்த பகுதியோடு முடிகிறது. 

வாழ்க வளமுடன்!


Present by:

Thanks to Images to: Internet source copyright to it's owners

Bharati Mani - Pattaiya


 பாரதி மணி... (Bharati Mani) 


பேஸ்புக்கில் அறிமுகம்

மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.

பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். 

ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...


கேரிகேச்சர் ஓவியம்

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.


எனக்களித்த பதில்

---

அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி

---

அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய் )

“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...

“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.


முதல் சந்திப்பு

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...

என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.

“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...

கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?

உங்க வாசலில்...

ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...

ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.

“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...

“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...


அடேய் சுகுமாரா

இந்த “அடேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...

பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!


 பதிவின் முடிவாக

ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!


facebook - http://on.fb.me/VkzC2I


மறுபதிப்பு சோகம்

இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு, இப்பதிவை மறுபதிப்பாக தருவதில் காரணமிருக்கிறது. ஆம், பாட்டையா பாரதி மணி, கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி கொண்டாட்டத்திற்குப் பிறகும் கடந்த அக்டோபர் 26 வரை பேஸ்புக் பதிவுகளிலும் இருந்திருக்கிறார். பிறகான நாட்கள் உடல் பிரச்சனைகளோடு இருந்து, அவற்றை தனக்கே உரித்தான இயல்பில் ஏற்று போராடி, நேற்று மாலை (17-10-2021) 5 மணி அளவில், தன் வாழ்க்கையை 84 வயதில், நிறைவு செய்துகொண்டார்.

இந்த பொருளாதாரத்தில் தூணாக விளங்கும் Birla தனியார் துறை நிறுவனத்தில் CEO ஆக பணியாற்றி, ஓய்வு பெற்று அதை தன் பழக்கத்தில் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாதவர். அதைப்பற்றி கேட்டால் கூட பேசாதவர். அத்தகைய எளிமை அவரிடமிருந்தது. 

அவர் இல்லத்திற்கு செல்லும்பொழுதெல்லாம் சுடச்சுட, அவர் கைகளாலேயே அரைத்த காப்பி கிடைக்கும், சரியான நேரத்திற்கு போனால், அவரே சமைத்த சாப்பாடும் கிடைக்கும். ஒரு தந்தைக்கு சமமாக என்னோடு பழகியவர். எனக்காக என் வேலைகள் குறித்து, என் வாடிக்கையாளர்களிடம் “நான் பேசுகிறேன்” என்று உதவியாக நின்றவர். 

இறையின் விருப்பமான,  உலக பிறப்பிலும் வாழ்விலும் மகிழ்ந்திருந்தவர் பாட்டையா பாரதி மணி அவர்கள், இப்பொழுது இறப்பிலும் மகிழ்வாகவே சென்றிருப்பார். இறையின் அரவணைப்பில், இந்த பிரபஞ்சம் முழுமையில் இருந்து, கலந்திருக்க நான் “பாட்டையாவை” வாழ்த்தி வணங்குகிறேன். 

வாழ்க வளமுடன்.

What do the planets do to me?! - 01


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது?!


பூமியும் ஓர் கோள் தான்!

கிரகங்கள் என்பதை விட கோள்கள் சிறப்பான வார்த்தையாக உள்ளது. அவை கோள வடிமானவை. இயங்குபவை என்றும் அர்த்தமாகும். இந்த பிரபஞ்சம் முழுதும் கோள்களால் நிரம்பியவை என்பதை ஒரு நொடி சிந்தித்துப்பாருங்கள். அத்தகைய கோள்களின் கூட்டத்தில், சூரியன் எனும் குடும்பத்தில் உள்ள, ஒரு கோளில், பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனோடு ஒப்பிட்டால், பூமி மிகச்சிறியது, மனிதன் நிலை என்ன?

ஆனால் ஒரு சிறு துளியில் ஆரம்பித்த உயிர்வாழ்க்கை, ஓர் உயிர் தாவரமாகி, தன் மூலம் அறிந்து இன்புற்று வாழும், ஆறாம் நிலை மனிதனாக முழுமை பெற்றிருக்கிறது. எனினும் மனிதரில் பெரும்பாலோர் இவ் உண்மை உணரவில்லை. அவர்களுக்கு அதனினும் வேறான ஒரு வாழ்க்கை போதுமானதாக இருக்கிறது. சரி அவர்கள் மெதுவாக வரட்டும். 

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, புவி என்ற ஒரு கோளில்தான் என்பதை மறந்திட வேண்டாம். எனவே கோள்கள் பொய்யில்லை. அக்கோள்கள் நம்மோடு தொடர்புடையன என்பதும் பொய்யில்லை. எனவே இந்த சூரிய குடும்பம் பொய்யில்லை. இந்த பிரபஞ்சமும் பொய்யில்லை.


அப்படியானல் இந்த கோள்கள் நம்மை என்ன செய்கின்றன?

சூரியனின் அலை

புரட்டாசி மாதம் துவங்கி கார்த்திகை மாதம் வரை மழைக்காலம், நம் இந்திய நாட்டில். நம் இந்தியா ஒரு தீபகற்பம் என்பதால், முக்கடல் சூழ்ந்திருக்க, அவ்வப்பொழுது புயல் வந்து தாக்கும். அப்படியான ஒரு மழை, பெருமழை வருகிறது. நகரமும், ஊரும் வீடும், மழையில் ஊறி, நமக்கும் குளிர் எடுத்து நடுங்க, என்று வெப்பம் வரும் என்று காத்திருப்போம். அதாவது சூரியனுக்காக காத்திருப்போம். 

சூரியன் என்ற கோள் என்ன செய்கிறது? அதன் அலைகளை 8 நிமிட பயணத்தில் பூமியை நோக்கி செலுத்துகிறது. அவ்வலைகள் பூமியில் காற்று மண்டலம் வழியாக நுழைந்து, ஒளியாக மாறி, இடங்களிலும், பொருட்களிலிலும் பட்டு தெறிக்க, அங்கே வெப்பம் ஏற்படுகிறது. அதன் வழியாக சராசரியான வெப்பம் ஏற்பட்டு குளிர் விலக்கப்படுகிறது. நம் உடலிலும் சூரியனின் அலை மூலமாக வெப்பம் உணர்ந்து மகிழ்கிறோம். வெப்பம் அதீதமானால் போதும் என்று நிழலுக்கு நகர்கிறோம்.


எல்லாம் அலைகள்

சூரியனிடமிருந்து ஒளி வருகிறதா? அலை வருகிறதா?

அலைதான் ஒளியாக தன்மாற்றம் பெறுகிறது என்று வேதாத்திரி மகரிசி தெளிவு செய்துள்ளார். இல்லை என்கிறீர்களா? சரி ஒளி என்றே நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. 

எல்லா கோள்களில் இருந்தும் அலை வருகிறது, உங்களைப் பொறுத்தவரை ஒளி வருகிறது. ஆனால் இங்கே அலை என்று அர்த்தம் கொண்டே படிப்போமே!  அப்படியானல் இந்த பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் இவற்றில் இருந்தும் அலைகள் வரும் அல்லவா? ஆம்.

மேலும் நாம் காணுகின்ற ஒவ்வொரு பொருளில் இருந்தும் அலை வருகிறது. அவை இயங்கலாம் அல்லது இயங்கா பொருளாகவும் இருக்கலாம்.


உங்களிடமிருந்தும் அலைகள்

என்னிடமும், உங்களிடமும் இருந்தும் அலைகள் வருகின்றன. ஆனால் நாம் அந்த அளவிற்கு நுணுகி அதை அணுகுவதில்லை. அதனால் அதை விளங்கிக்கொள்ள அல்லது விளக்கிக்கொள்ள கடினமாக இருக்கும். உங்களோடு ஒரு நண்பர் நட்பு பாராட்டுகிறார் என்றால் உங்களுக்கும், அவருக்கும் ஒரு சமமான அலைகள் தொடர்பில் இருக்கின்றன. 

எப்போதும் உங்களோடு ஒருவர், வம்புச் சண்டை இழுத்துக்கொண்டே இருக்கிறார் என்றால், உங்களுக்கும் அவருக்கும் ஒத்துமையான அலைகள் இல்லை என்றே கருதவேண்டும். அதை சரி செய்யலாமா? செய்யலாம்,

தடாலென்று அவர் கைகளை பிடித்து, “நண்பரே, ஏதோ என் தவறாகவே இருக்கட்டும், அப்படி செய்திருக்க கூடாது. இனிமேல் உங்களை துன்புறுத்தும் விதமாக, மனதிற்கு விரோதமாக நான் நடந்துகொள்ள மாட்டேன்” என்று சொல்லிவிடுங்கள். அவரும் கையிலிருப்பதை கீழே போட்டுவிட்டு, “சரி விடுங்க, பரவாயில்லை” என்று சொல்லலாம். அவரே உங்களை கட்டி அணைத்துக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. 

இன்னும் அலை வரும்!

இந்த கட்டுரையின் இரண்டாம்பாகம் படிக்க:

இங்கே படிக்கலாம்

-----

Present by:





Thanks to Image by: Nasa 

Mind Perfection is Human


மனம் + இதன் = மனிதன்


அனைத்தும் பணிகளிலும் சவால்கள் நிறைந்துள்ளன என்றாலும், உங்கள் பார்வையில் மிகவும் கடினமான அல்லது சவாலான பணி எது? ஏன்?

கடினமான, சவாலான பணி என்றால், “ஒரு மனிதனை மனிதத்தன்மையோடு” இருக்கத் தூண்டுவதுதான். மனிதன் என்ற போர்வையில் இருக்கும் “பல்லுயிர் மிருங்கங்கள்” என்பதாகத்தான், பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறான். மனிதன் மனம்+இதன் ஆக வேண்டும் என்றுதான், அவ்வப்பொழுது சித்தர்கள், ஞானிகளும், மகான்களும் தோன்றி வழிநடத்துகிறார்கள். 


ஏதோ ஒரு கவிதை இப்படி சொல்லும்...


எங்கள் பள்ளிகள்

கல்லூரிகள்

எத்தனையோ பட்டதாரிகளை

எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை

எத்தனையோ பொறியியலாளார்களை

எத்தனையோ தொழிநுட்பர்களை

எத்தனையோ சாதனையாளர்களை

எத்தனையோ திறமைசாலிகளை

உருவாக்கி தந்திருக்கிறது

எப்போது ஒரு மனிதனை

உருவாக்கித்தரும்?!


ஒரு மனிதன் பிறப்பிலேயே, இயற்கையோடு ஒன்றிய (அந்த ஒன்றியமல்ல)  திறமைகளை பெற்றிருந்த போதிலும், அவை எல்லாம் சிதைக்கப்பட்டு, மடை மாற்றப்பட்டு  குறிப்பிட்ட துறைக்கென வளர்த்தெடுக்கும் நிலை தான் இங்கே. எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்பில் இருக்கும்பொழுது, மனிதன் தன்னை எல்லா பிறப்பிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு, ஆறாவது நிலை அறிவானவன் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, சக மனிதனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். 

கூட்டம் கூட்டமாக விலங்குகள் ஒன்றாக வாழும் பொழுது, இரண்டு மனிதர்கள், கணவன் மனைவி கூட ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ முடியவில்லையே?! 

எனவே என்னைபொறுத்தவரை, மனிதனை மனிதனாக மாற்றுவதுதான் கடினமான, சவாலன பணி ஆகும்!

-----

நன்றி கோரா தமிழ்

Thanks to Image by: theexplanation.com

Today's world in people's sharing! 3


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 3



நிறைவுப்பகுதி

பகிர்வோரின் மனநிலை

இந்த கட்டுரையின் சாரமே இதுதான். உலகம் கையிலடங்கி விட்டதால், மனிதனுக்கு நிலை கொள்ளவில்லை. தன் கருத்தை பகிர்கிறேன் என்று பல வழிகளில், தானே சிக்கிக் கொள்கிறான். தன்னளவில் புரிந்துகொண்ட ஒன்று, பிறருக்கு சென்றடைகையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையும் தெரியவில்லை. அதை கற்றுக்கொள்வதும் இல்லை. அதுகுறித்து கவலை கொள்வதும் இல்லை.

இன்றைய தொல்லைகாட்சி செய்தி பகிர்வுகளும் அப்படித்தான். மக்களின் மூளையை சலவை செய்வதில் முதலிடம் இதற்குத்தான் தரவேண்டும். மக்களை ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே, நிறுத்தி வைக்க இவர்களால் முடியும். உதாரணமாக, ஏதோ இரண்டு வீடுகளில், அருகருகே நடந்த ஒரு சாதாரண பிரச்சனையை, சாதிப் பிரச்சனையாக மாற்றி, தெருவை, ஊரை, சமூகத்தை, நாட்டைச்சார்ந்த கலகமாக மாற்ற இவர்களால் முடியும். ஆனாலும் தொல்லைக்காட்சி ஒரு குழு அமைப்பு.

தனி மனிதனில், ஒரு சாதாரண பிரச்சனை வளரும், ஆனால் சீக்கிரமாக அடங்கிவிடும் என்பது பொதுவானது. இதில் பழிக்கு பழி வாங்குதல் என்பது, பிறர்தூண்டுவதால் மட்டுமே நடக்கும். உண்மையாகவே பிரச்சனையில் தொடர்புடையோர் சமாதனத்திற்கே தயாராக இருப்பார்கள். இங்கே தனி மனிதர்கள், தங்களின் கருத்துக்களை புகுத்தி இரண்டு பேருக்கும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

பொதுவாக தனிமனிதனின் மனம், இந்த சுருங்கிய உலகில், எந்நேரமும் கொந்தளிப்பாக இருக்கிறது. ஒரு குப்பைத்தொட்டியில், குப்பை சேருவதைப் போல, எல்லா விசயங்களையும் தனக்குள் ஏற்றிக்கொண்டு தன் நிலை என்ன, தன் குணம் என்ன என்பதை மறந்தே போகிறான். ஒரே ஒரு நெருப்புப் பொறி கிடைத்தால், குப்பென்று பற்றி எரிவார்கள் அல்லது எரித்துவிடுவார்கள். இதில் படித்தவரும், படிக்காதவரும் பொதுவே.


இணையத்தில் பகிர்வோரின் மனநிலை

வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற, வெள்ளந்தியான மன நிலையில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மனம் விரிந்த நிலையில் எல்லாவற்றை சமநோக்கில் பார்க்கும் மனிதனாக இருங்கள். இப்பொழுது, நீங்கள் இணையத்தில் ஏதேனும் ஒரு இணைய பத்திரிக்கை செய்தி, சமூக பகிர்வு வளைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடுயூப் இவற்றை சற்றே பார்வை இடுங்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் மனம் கொந்தளிக்கும் என்பது உறுதி. 

இப்படியான உலகிலா நாம் வாழ்கிறோம்? இவன் இப்படியா? அவன் அப்படியா? இந்தத் தலைவரா? என்று பலப்பல வகைகளில் சிந்தித்து, உங்களுக்குள் தீர்வு நோக்கி நகர்வீர்கள். இவனை அடக்கலாம், அவனை ஒடுக்கலாம், இதையெல்லாம் இப்படி செய்யலாமே என்று ஒரு கூட்டத்தின் தலைவனைப்போல திட்டமிடுவீர்கள் என்பது உறுதி. நீதியை நிலை நாட்ட வந்த தலைவனைப்போல நீங்கள் மாறிவிடுவீர்கள். இத்தகைய தூண்டுதலைத்தான் இந்த இணையவழி பகிர்வுகள் தருகின்றன. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.


பகிர்வில் தனி மனித மனநிலை

இது இன்னும் ஓர் முக்கியமான தலைப்பு. திரைப்படங்களில், “ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்ற சொற்றொடர் மிகப்பிரபலம். அது உண்மையல்ல என்றாலும், ஒரு மனிதனின் மனநிலையை நாம் யூகம் செய்ய முடியும். வெளிப்படையாக சிலர் சொல்லாமல் இருந்தாலும், இப்பொழுது இதைத்தான் அவன்/அவள் நினைத்துக் கொண்டிருக்கிறான்/ள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்தக்காலம் மலையேறிவிட்டது அல்லது மலையிறங்கிவிட்டது. ஆம்.

நான் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், நீங்கள் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், ஒரு மூன்றாம் மனிதன் தன் கருத்தை  தெரிவிக்கும் வழியில் இணையம் வளர்ந்துவிட்டது. அந்த கருத்துப்பகிர்வு எவ்வளவு தன்மையாக இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். 100 க்கு 99 சதம் வன்மம் தூண்டும் நிலையில்தான் எதிர்கருத்துக்கள் பகிரப்படுகின்றன. மனிதனின் மனம் இதத்தை இழந்துவிட்டது. எதிராள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை ஏதுமின்றி, உடனுக்குடனே வன்மம் தலைக்கேறி எழுத்தில் வந்து நிறைந்து நிற்கிறது. தற்பொழுது “கிளப்ஹவுஸ்”ஸில் வார்த்தைகளும் கிடைப்பதாக அறிகிறேன். 

ஒட்டுமொத்தமாக மனித சமூகம், தன் தகுதி இழந்து கிடப்பதாக எண்ண இடமிருக்கிறது. வளர்ந்தோரும், வளர்வோரும் இதில் வித்தியாசமில்லை. பேசவும், எழுதவும் தெரியாத குழந்தைகள் கூட காட்சி வடிவத்தில் வந்துவிட்டார் என்றும் சொல்ல முடியும்.


தீர்வுப் பகிர்வு

எப்பொழுதுமே நமக்கு இருக்கும் ஒர் உயர்ந்த எண்ணம் என்ன என்றால், எல்லாமே உடனடியாக மாறிவிட வேண்டும் என்று விரும்புவதுதான். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால் தனி மனிதனாக, நாம் மாறினால் நிச்சயமாக மாறிவிடும். அதாவது நம் மனம் மட்டுமே. ஒரு பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம். இருக்கட்டுமே, அதற்கு அதனுடைய உலகம் இருண்டுவிட்டது. உனக்கென்ன கவலை. நீ உன் உலகத்தில் இரு.

உன் வீட்டின் கதவுக்கு வெளியே புயலும், மழையும் என்றால், வீட்டில் கதவுக்குப் பின்னே நீ பாதுகாப்பாகத் தானே இருப்பாய்? கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கலாம். நீ இல்லை என்பதால் கூட, அந்த புயலும் மழையும் அடங்கிவிடாது என்றாலும், பார்வையாளர் இல்லை என்றால் அங்கே ஆட்டம் நடக்காது அல்லது ஒத்திவைக்கப்படும் அல்லவா? அதுபோல காலத்தால் அடங்கிவிடும்.

பகிர்தல் அல்லாது இந்த உலகம் இல்லை. பகிர்வுதான் இந்த உலகை, மனித சமூகத்தை நகர்த்துகிறது என்பது மாபெரும் உண்மை. பகிர்தலில் நமக்கும் கடமை இருக்கிறது. நல்லதை பகிர்வோம், விலகி நிற்போம். மீண்டும் நல்லதை பகிர்வோம். மாற்றம் கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது.

வாழ்க வளமுடன். 

-----

Perfect Judgement


 நின்று கொல்லும் இறை 


உலகில் எல்லோருக்குமே இறை உணர்வு எந்த வகையிலாவது கிடைத்துக் கொண்டிருக்கிறது. தான் உணர்ந்ததை பிறருக்கு தர வேண்டும் என்ற ஒரு மேம்போக்கான எண்ணம், உண்மை அறிந்தவர்களிடம் நிறைந்திருக்கும். அந்த வழியில்தான் நமக்கு முன்னே சித்தர்கள், ஞானிகள், மகான்கள் இந்த உலகுக்கு உண்மைகளை, அதை கண்டறியும் வழிகளையும் தந்தார்கள். 

சிலர் வெளிப்படையாக தந்தாலும், முக்கியமான உண்மைகளை, நீயே இந்த வழியாக தேடி எடுத்துக்கொள் என்று மறைத்தும் வைத்தார்கள். ஆனால் உண்மையை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், உண்மை என்பது சரியான நபருக்கு போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணம்.

இந்த உலகில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, இரட்டை எண்ணம் கொண்ட மனிதர்கள்  வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். எப்படியெனில், ஒன்றை இலவசமாக எதிர்பார்ப்பார்கள். வேண்டி வணங்கி, அழுது புரண்டு பெற்றுக்கொள்வார்கள். அதற்கு கைமாறாக எதும் செய்ய மாட்டார்கள். சிறிது காலம் கழித்து அதன் பலனை பெற்று அனுபவிப்பார்கள். வேறு ஒரு நபர் வந்து கேட்டால், “நான் ஒன்றும் சும்மா பெறவில்லை. இது உனக்கு வேண்டுமானால், இவ்வளவு பணமோ, பொருளோ கொடுத்து பெற்றுக்கொள்” என்று சொல்லிவிடுவார்கள். இவர் பெற்றதோ இலவசம், அதை அப்படியே பகிர்ந்து கொடுக்க மனமில்லை. 

இன்னும் உண்மையை சொல்லப்போனால், இவர் பெற்ற பலனை தரப்போவதில்லை. அதை பகிரவும் முடியாது. ஆனால் அந்த வித்தையை, அறிவை தர மறுக்கிறார். இதனாலே அந்த உண்மை, அவரளவில் நின்று விடுகிறது. பொருள் வாங்காமல் தரமாட்டேன் என்று முடிவு செய்து விடுவதால் அது அழிந்தும் போய்விடும். இந்த மாதிரியான நபர்களிடம் சிக்கிவிட கூடாது என்பதில், சித்தர்கள் கவனமாக இருந்தனர் என்று சொல்லலாம். 

ஆனாலும், சித்தர்கள் உண்மை உணர்ந்தவர்கள். அவர்கள் இத்தகைய தவறான மனப்போக்கு கொண்ட மனிதர்களை தண்டிப்பதில்லை. ஏனென்றால், அவரவர்க்கு அவரே நீதியரசர். எனவே தான் செய்த செயலுக்கு, இயற்கையின் வினை விளைவு நீதியால் தண்டிக்கப்படுவார். அது எப்பொழுது என்பது அவருக்கு தெரியாது. 

இதன் அடிப்படையில்தான், அரசன் அன்று கொல்வான், இறை நின்று கொல்லும் என்று சொல்லுவார்கள்.

வாழ்க வளமுடன்.

-----

Thanks to image by: BBC

Today's world in people's sharing! 2


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 2


முதல்பகுதி படிக்கலாமே


இரண்டாம் பகுதி

பகிர்தலின் வளர்ச்சி

ஒரு தனி மனிதனின் கருத்துப்பகிர்வு தடைசெய்ப்பட்டிருந்த காலம் ஒன்றும் உண்டு. அதாவது கருத்து சுந்ததிர தடை. இத்தடை இருந்தால்தான் அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று ஒரு கண்டிப்பு அல்லது மக்களிடம் பயம். ஆனாலும் கால மாற்றம் எல்லாவற்றையும் கடந்துவிட்டது.  

குழுவாக வாழ்ந்து வந்த மனிதர்கள், பிறர் அறிய முடியாத ரகசிய மொழிகளில் தங்கள் கருந்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இன்றும் கூட சில கிராமங்களில் நடப்பதுண்டு. மேலும் இப்போது, குழு அமைப்பு சிதைந்துவிட்டது. கூட்டுக்குடும்ப அமைப்பும் சிதைந்துவிட்டது. தனித்தனியாக, நான்கு நபர்கள், மூன்று நபர்கள் என்று குடும்பம் சுருங்கிவிட்டது. ஆனால் இது எவ்வளவு மோசமான விளைவுகளைத்தரும் என்பது யாருக்குமே புரியவில்லைதான். அத்தை மாமா என்ற உறவும், கூட்டமும் இனிவரும் காலத்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், குடும்பத்தை விட்டு வெளி நபர்தான் உதவிக்கு வரக்கூடிய சூழல். இனிவரும் காலத்திலாவது மாறவேண்டும் என்று விருப்பம் கொள்வோம்.

இப்படியாக தன் குழுவிடமும், குடும்பத்தாரிடம் மட்டுமே, கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த மனிதன், கடிதங்கள் வாயிலாக, தன்னை கடந்து தூரத்தில் இருப்பவரிடமும் தன் கருத்தை பகிர முனைந்தான். தொலைத்தொடர்பு புரட்சியில், எழுத்தை தவிர்த்து, தன் குரல் வழியாகவே கருத்தைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தான். மனிதனின் சிந்தனையில் எழுந்த உச்ச நிகழ்வாக, இணையம் (Internet, Worldwide web)வந்துவிட உலகமே சுருங்கி, தற்போது உள்ளங்கையில், கைபேசி அளவில் அடங்கிவிட்டது. அடேங்கப்பா, என்ன ஒரு அசுர வளர்ச்சி!


பகிர்வோரின் நிலை

இந்த வளர்ச்சிக்கு ஈடாக, சமமாக மனிதன் தன்னை உயர்த்திக் கொண்டானா? என்றால் இல்லை. அவன் அவனளவில் அப்படியே இருக்க, சும்மா சொரிந்து கொண்டிருந்தவனுக்கு கையில் கத்தியை கொடுத்தாக மாறிவிட்டது. அவன் தன்னையே, தன் இனத்தையே வெட்டி வெட்டி ரத்தக்களரி ஆக்கிக்கொண்டு இருக்கிறான். தனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு உதித்த, இணையம், எல்லோரையும் அள்ளி அணைத்து பினைத்துக்கொண்டது. ஆனால் மனிதன், இன்னொரு மனிதனை இணைத்துக்கொள்ள தவறிவிட்டான். 

இவ்வளவு காலத்திலும் கூட, வரப்பு சண்டைகள் போல எல்லைச் சண்டைகள் ஓவ்வொரு நாட்டிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.  எல்லைகள் இல்லா இணையம் சாத்தியமாயிற்று. ஆனால் எல்லைகளில்லா மனோநிலை சாத்தியப்படவில்லை. இதற்கு யார் காரணம்? உலகில் உள்ள பொறுப்புடைய தலைவர்கள் தான்.

உலகின் வல்லரசு யார் என்ற போட்டியில், மார்தட்டிக்கொண்டு, ஒரு கேக்கை இரண்டாக வெட்டுவது போல, உனக்கு பாதி, எனக்கு பாதி என்று நாடுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இன்று, இணைந்து கைகோர்த்து, விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து திடல் அளவான, விண்கப்பலில் (International space station-ISS) ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கு விண்ணில் எல்லைகள் இல்லை, ஆனால் மனித சமூகம் வாழும் பூமியில் எல்லைகள், “இவர்கள்மாதிரியான “ தலைவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்கள் என்னும் நிலை என்று மாறுமோ தெரியவில்லை. அது மாற வேண்டும் என்றும் விருப்பம் கொள்வோம்.

அன்பர்களே இதன் நிறைவு பகுதி, நாளை வரும்.


Today's world in people's sharing!


மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்!



கால மாற்றம்

மக்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வேகமாக மாறிவிட்டது. அறிவியல் முன்னேற்றமும், தொடர்பு சாதனங்களை எளிமையாக்கி மக்களிடம் கிடைக்கச் செய்ததின் மாற்றமே இது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தகாலம் போய், குரலாலே பேசி கருத்து பரிமாற்றம் மாறி, முகம்பார்த்து பேசிக்கொள்ளும் மிக எளிய முறைக்கு வந்துவிட்டோம். 

அதுவும் இந்த கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இன்னும் கூடவே மாற்றம் பெற்றுவிட்டது.  வாயிலே சில வார்த்தைகள் மட்டுமே பேசத்தெரிந்த, கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாத, தன் வீட்டு ஆட்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கத் தெரிந்த, வெளி உலகமே தெரியாத, ஆனால் ஒரு சின்ன, பெரிய LED திரையில் மட்டுமே பார்க்கத் தெரிந்த நான்கு வயது குழந்தைக்கு (?!) ஆரம்ப கல்வி பயிலும் நிலை, ஆன்லைனில் வந்துவிட்டது. அந்த குழந்தையிடம் கைபேசி வாயிலாக குரலாக பேசினால் “வீடியோ காலில் வரத்தெரியாதா?” என்று எதிர்கேள்வி கேட்கிறது.

ஆனால் இந்தக் கட்டுரை அலசல் அக்குழந்தைகள் எதிர்காலம் பற்றியதல்ல, எனவே யாரும் கவலைப் படவேண்டம் :P


கடமை

ஒரு பெரும்பான்மையான மக்களுக்கு, தான் அறிந்ததை சமூகத்திற்கு தரவேண்டும் என்ற உந்துதல் எப்போதுமே இருக்கும். அது உண்மையாகவே இயல்பான கடமை. பணம் வாங்கிக்கொண்டு தருதல் என்பது பின்னால் வந்த பிசினஸ் ரகசியம். தான் அறிந்ததை பிறருக்கு தராது இருந்தால், நாம் இந்த உலகில் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, மனித சமூகம் அற்புதமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பதை, தமிழ்சங்க கால நூல்கள் வழியாக அறியலாம்.

அப்படியான காலத்தில், இந்த உலகின் பல பகுதிகளில், “ஒரு சில மக்கள்” வாழ்க்கை முறை அறியாமல், பிறர் வளம் பறித்து கொள்ளையர்களாக, கொலைக்கார்களாக, பச்சைக்கறி திண்ணும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே.

தன் அனுபவத்தை, அறிவை இன்னொருவருக்கு பகிர்வதால், பெற்றுக்கொள்ளும் மனிதர், கற்றுத்தரும் மனிதருக்கு அறிவில், ஏறக்குறைய சமநிலை அடைவார். அவருடைய வாழ்வின் உயர்ச்சிக்கு அது உதவும். இந்த அறிவு அனுபவ பகிர்வு, மனிதன் உடல் அசைவுகளை, சைகைகளை, சப்தங்களை மொழியாக கொண்டபோதே வந்திருக்கும். உதாரணமாக, அந்தபக்கம் போகாதே காட்டுயானை இருக்கிறது, புலி இருக்கிறது என்று, எதிர்படும் மனிதனை எச்சரிக்கை செய்திருப்பார்கள். இந்தப்பக்கம் நல்ல பசி போக்கும் பழம் தரும் மரம் இருக்கிறது, நீ சாப்பிட்டுக்கொள் என்று வழிகாட்டி இருப்பார்கள்.

பேசும் மொழி வளர்ந்த பிறகு, மிக எளிதான வேலையாகிவிட்டது. எழுத்தும் வளர்ந்தபிறகு, அறிவு, அனுபவ பகிர்வு எல்லைகளை கடந்துவிட்டது. கடல் கடந்து மனிதர்கள் செல்லச்செல்ல உலகம் சுருங்கி, இப்பொழுது கையடக்க கைபேசியில் அமைந்துவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாமே, ஒருவர் தன் அறிவை, அனுபவத்தை பிறருக்கு, பிரதிபலன் பாராமல் பகிர்ந்து கொண்டதால் மட்டுமே. 


பகிர்தலின் வளர்ச்சி

இத்தலைப்பில் அடுத்த பதிவில் காண்போம். காத்திருங்கள்.

வாழ்க வளமுடன்!

Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 02


 குருவை சரணடைவோம் - பாகம் 02


கர்மா என்பது என்ன?

கர்மா என்றால் சித்தர்கள் இருவினை என்று சொல்லுவார்கள். பழவினை, புகுவினை என்பது சித்தர்கள் வழி, பழவினை என்பது கருவழியெ வரும் வினைகள். புகுவினை என்பது வாழும் காலத்தில் ஒருவன் தானாக பெற்றுக்கொள்வது ஆகும்.  வடநூலார் மூவினை என்றும், சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று பிரித்தும் சொல்வார்கள். சஞ்சிதம் என்பது கருவழி வினைகள், பிராரப்தம் வாழும் காலத்தில் பெறும் வினை, ஆகாமியம் தானே விரும்பி ஏற்றுக்கொள்ளும் வினைகள் ஆகும்.


கர்மா விதியும் அல்ல, தலையெழுத்தும் அல்ல!

இத்தகைய வினைகள் ஒருவனின் தலைஎழுத்தோ அல்லது விதியோ அல்ல. அவை திருத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. அதற்காகவேதான் இந்தப்பிறவி செயல்பட வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் பிறக்கும் நாம் வழக்கம்போல வழிமாறிய ஆடுகளாக போய்விடுகிறோம். திருந்து, திருந்து என்று இயற்கை பாடம் புகட்டினாலும் கேட்பாரில்லை. இங்கேதான் இறையாற்றல் நம்மை திசை திருப்புகிறது. ஆனாலும் நாம் அதை உதாசீனப்படுத்துகிறோம். 


குருவை தேடும் காலம் எது?

ஒருவேளை, வாழ்வில் கண்ட ஏமாற்றங்களின் முடிவில் தீர்வு, குழப்பம் தீர வழிதேடல், சலிப்பான நிலையில் வேண்டிய மலர்ச்சி, வாழ்வில் திருப்தியாய் அடுத்து என்ன என்ற கேள்வி இப்படி பலவாறாக காத்திருக்கும் அல்லது அடுத்த நிலைக்கு போக தயாரக இருக்கும் ஓவ்வொரு மனிதனுக்கும் உதவவே வருகிறார் குரு. நாம் தயாராக இருந்தால், நம்மை நோக்கி வர காத்திருக்கிறார் குரு. அப்படியாக நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்த ஒப்பற்ற குருவே, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிசி அவர்கள். 

கிடைத்த குருவை பரிசோதிக்க நமக்கு அருகதை இல்லை. ஆனால் அக்குருவை பரிச்சோதனை செய்ய, அந்த குருவின் வார்த்தைகளும், வாழ்க்கையுமே போதும். அப்படியான குருவை சரணடைதலே ஒரே வழி. அதுவே நம்மை நான் யார் என்ற தேடல் நோக்கி நகர்த்தும். மகான் மாணிக்கவாசகர், நிற்பார் நிற்க, நில்லா உலகில், இறைதேடி நாம் செல்வோமே என்று அழைக்கிறார். மேலும், இறைதேடும் அன்பர்களுக்கு ஒருபோதும் கதவைடையாது என்றும் சொல்லுகிறார்.


நாற்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பலன், எளிமை

அந்தக்காலத்திய 12 ஆண்டுக்கால தீட்சைமுறை இன்றி, இன்றே தீட்சை என்ற எளிய முறை குண்டலினி பயிற்சி கொடுத்து, இறை அறியும் வழி சொல்லி, நான் யார் என்ற கேள்வி நோக்கி பயணிக்கச் செய்தவர், வேதாத்திரி மகரிசி. உடலின் வினைப்பதிவுகள் களைய, நோய்கள் தீர, வருமுன் காக்க, எளிய முறை உடற்பயிற்சி, உயிரை காக்க, வாழ்நாள் நீடிக்க காயல்பம், மனதை செம்மை செய்ய, தற்சோதனை, அகத்தாய்வு பயிற்சிகள் இப்படியாக, ஓவ்வொரு தனி மனிதனையும் ஒழுங்குபடுத்தி வாழ்வில் சிறக்க வழிதந்தவர், வேதாத்திரி மகரிசியே ஆகும். 


அடுத்த பிறவிக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்!

எல்லோரும், உலகம் முழுக்க “விட்டுக்கொடுக்காதே” Do not Give Up என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்னடா என்றால், குருவுக்கு விட்டுக்கொடுங்கள் என்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது. 

உங்களுடைய இந்தப்பிறவியை, உங்கள் வினைகளுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள். Do Not Give Up for Your Imprints என்று சொல்லுகிறேன் போதுமா? ஆனால் குருவுக்கு உங்களை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் எந்த வகையிலும் குறைவுபட மாட்டீர்கள். உங்களை குரு தன் தோளில் ஏற்றித்தான் அழகுபார்ப்பார் என்பது உண்மை.

உங்கள் வாழ்வில் நீங்கள் வேதாத்திரி மகரிசியை தவற விட்டால், நீங்கள் இந்தப்பிறவியையே இழந்தவர் ஆகிறீர்கள். ஆம். இந்த உலகில், வாழும் காலத்திலேயே நீங்கள் முழுமை பெற ஒரே வாய்ப்பு தருவது மனளக்கலையே.  வேதாத்திரி மகரிசி போல இறை உண்மைகளை, வெட்டவெளி தத்துவத்தை, விளக்கிச்சொல்லி, நான் யார் என்று அறிந்து, அறிவே தெய்வமாக உணரவும், அதற்கு காந்த தத்துவம் என்ற சிறப்பான வழியும் தந்தவர் யாருமே இல்லை. இனிமேலும் அவரைப்போல இறை தத்துவம் விளக்கி நம்மை உயர்த்தவும் யாரும் இல்லை. வேதாத்திரி மகரிசியை சரணடைவோம். 

வாழ்க வளமுடன். 

Let's Give Up to Guru - Part 01


 குருவை சரணடைவோம் - பாகம் 01


உலகின் சிறப்பு என்ன?

இந்த உலகின் சிறப்பே, நேற்றிருந்தோர் இன்றில்லை என்பதே என்றார் அய்யன் திருவள்ளுவர். ஒரு மனிதனின் வாழ்க்கை, சாராசரியாக அறுபது ஆண்டுக்காலம் என்று வைத்துக்கொண்டால். அந்த ஆண்டுகளில் இறை உணர்வு பெற்று, உண்மை விளக்கத்தோடு பிறப்பின் கடமையை முடித்துவிட முடிகிறதா என்றால், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. ஒரு சிலருக்கே நிகழ்கிறது என்பதும் உண்மை.


வாழும்காலம் போதவில்லையே?!

பெரும்பாலான மனிதர்களுக்கு, தான் பிறந்த குடும்பத்தில் இருக்கும் ஏழ்மையை தீர்க்கவே முழுகாலமும் செலவாகிறது. சிலருக்கு கல்வி கிடைப்பதில்லை, சிலருக்கு வேலை கிடைப்பதில்லை, வேலையும் தொழிலும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் கெட்ட நட்புக்கள், வழக்க பழக்கங்கள் இவற்றில் சிக்கி திசை மாறுதல் நடந்துவிடுகிறது. தன் தவறுகளால் சிக்கிக்கொள்ளுதல், தானாக, எதிர்பாரா விபத்தில் சிக்கி மரணமடைதல் உண்டு. சிலர், எதிர்கால பயம், குழப்பம் இவற்றால் தற்கொலை செய்து கொள்ளவும் செய்கின்றனர். சிலருக்கு தீடீரென வரும் நோய் அவற்றால் முடக்கம் அல்லது நோய்தொற்று இவற்றாலும் வாழ்க்கை பாதிக்கிறது. இப்படியாக வாழ்க்கையை முழுமையாக வாழக்கூட வழியில்லை.

இத்தகைய சூழலில், பிறப்பின் கடமையாக, தன்னை அறிதல், இறை உணர்தலுக்கு ஏது வழி? என்றுதான் பொதுவாக தோன்றும். உண்மையாகவே, இத்தனை குழப்பங்கள் உங்களை சூழ்வதே இறையாற்றலின் விளைவால்தான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த புவியில் உங்களின் பிறப்பு நீங்கள் கேட்டு வாங்கவில்லையே? அது உண்மைதானே? அப்படியென்றால் உங்கள் பிறப்பின் உள் அர்த்தம், உண்மை என்னவாக இருக்கும்? 


உங்கள் பிறப்பின் ரகசியம்!

என்னையா இது? ஆண் பெண் சேர்ந்தால் ஒரு குழந்தை பிறக்காதா? என்று கேட்பீர்கள். எல்லா சேர்க்கையிலும் குழந்தை என்றால் இப்புவி தாங்காது. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு காரணம், வினைப்பயனே ஆகும். கர்மா என்று வடமொழியில் சொல்வார்களே அதுவே. அவ்வினைகளை தீர்க்க, புதிய அவதாரமாகவே ஒரு குழந்தை இந்தபுவியில் பிறக்கிறது. ஏன் தீர்க்க வேண்டும்? அப்போதுதான் உங்கள் பிறவி முழுமை அடையும். பிறப்பது யார் என்பதும் தெரியும். ஆதிகால மனிதன் முதல் இக்கால மனிதன் வரை தன் வாழ்க்கையை, திசைமாற்றிக்கொண்டே பயணித்துக்கொண்டிருக்கிறான், தன் இலக்கை எதுவென்று தீர்மானிக்காமல்.


வழிகாட்ட வந்தவர்கள்!

அந்த இலக்கை சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள் சொல்லிச்சென்றார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறையும் ஞானிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பக்தி மார்க்கம் வணிகமாகி, வாழ்க்கையை சிறப்பிக்காத நிலையிலும், அதை விட்டு விலகினால், இறையின் சாபம் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். யோகமார்க்கத்தை விட பக்தி மார்க்கம் எளிதாக இருக்கிறது. ஏதோ மனிதனால் ஆன, வழிபாடு, பூஜை, படையல், தேங்காய் உடைத்தல், பொங்கல் படைத்தல், அம்மாவாசைக்கு பிண்டம் வைத்தல் என்று சுலபமாக செய்யமுடிகிறது, இது போதாதா? இறைவனையும், முன்னோர்களையும் குளிர்விக்க! இதெல்லாம் இந்து மதத்தில் மட்டுமா என்ன? எல்லா மதங்களிலும் கடவுளை குளிர்வித்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

 எத்தனையோ ஞானிகள் சொன்னாலும், வழி நடத்தினாலும்,  இவன் கேட்டபாடில்லை. நான் வாழப்பிறந்தேன், உண்ணப்பிறந்தேன், அனுபவிக்கப்பிறந்தேன் என்றே சொல்லிச்சொல்லி வாழ்க்கை சூழலில் சிக்கி சிதறடிக்கப்படுகிறார்கள். 

சரி கர்மா என்பது என்ன? அது என்ன தலைவிதியா அல்லது தலைஎழுத்தா? அடுத்த பதிவில் காண்போம். 

வாழ்க வளமுடன்.


Note: அடுத்த பதிவில் தொடர்கிறது


NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google





Incomplete Birth-debt on Life


பிறவிக்கடன் தீர்க்காத வாழ்க்கை


அன்பர்களே, என்னுடைய இணைதள பத்திரிக்கை தேடுதல் என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஏனென்றால், இத்தளங்களை பார்த்து செய்தியை வாசிப்பது என்பது, தற்போதைய இணையம், அந்தக்கால, மொட்டையான ஆர்வத்தை தூண்டும் துண்டு தலைப்புக்களை போல எழுதி, மீன் புழுவுக்கு ஆசைப்பட்டு கொக்கியில் மாட்டி சிக்கி தவிப்பது போல, நாமும் அந்த இணையதளத்தில் சிக்கி விடுவோம். ஆனால் சில நல்ல தகவல்களும் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். 


ஓய்வில் உழைப்பு

கடந்த மாதத்தில் அப்படி படித்த, ஒரு இணைதள பத்திரிக்கை ஒரு கட்டுரை படித்தேன். அதில் கிடைத்த செய்தியோடு, என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரில் இருக்கும், முதியோர் இல்லத்தில், அங்கே இருந்து வாழக்கூடிய பணிஓய்வு பெற்றோர்  ஒரு குழுவாக இணைந்து, பண்பலை வானொலி நடத்திவருகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எங்கள் வாழ்க்கை, இப்பொழுது வெறுமனே கழிவதில்லை, எல்லோருக்கும் பயன்படும்வகையில் நாங்கள், ஓவ்வொருவருமே செயல்படுகிறோம்.

இதுவரையில் எங்களின் வாழ்வில், எங்களுக்கு விருப்பமானதை செய்யமுடியாது இருந்தோம், இப்பொழுது அப்படி இல்லை.

எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லாமலிருந்தது. தற்பொழுது அதை செய்கிறோம்.

ஓவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை, வெளிக்காட்ட முடியாமல் அடைத்திருந்தோம். அதை செய்ய தள்ளிப்போட்டோம், அதற்கான கால அவகாசம் இல்லாமலிருந்தோம். கால ஓட்டத்தில் பிறரின் பார்வைக்காக செய்ய தயங்கினோம். இன்று ஓவ்வொருவரும் அத்திறமைகளை வெளியே தருகிறோம். திருப்தியாக இருக்கிறோம்.

இன்று எங்கள் பிள்ளைகளுக்கே, இதுவரை தெரியாத ஒரு முகத்தை அவர்களுக்கு காட்டியுள்ளோம். அவர்களும் பாராட்டுகிறார்கள்.

எங்களைப்போல உள்ள ஓய்வு இல்லத்தில் இருப்பவருக்கும், பணி ஓய்வுக்குப்பிறகு வாழ்க்கை இல்லை என்போருக்கும் உதாரணமாக இருக்கிறோம். சொல்லப்போனால் இளையோருக்கும் உத்வேகமாக இருக்கிறோம்.


எத்தனை கேள்விகள்?!

இந்த உலக வாழ்வியலில் இப்படியான அனுபவ வார்த்தைகள் மிகச்சரியானது என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு மனிதர் எத்தனை காலம்தான் இப்படியான மிகை உணர்ச்சிகளுக்கும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? வாழ்நாளில் என்றைக்கேனும் “அமைதி” எனும் நிலை நாட வேண்டாமா? எதுவுமே செய்யாமல், உள்முக ஆராய்ச்சியிலேயே அந்த ஆழ்ந்த அமைதி கிடைக்கிறதே அது வேண்டாமா? உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறீர்களே, உங்களை யார் என்று அறிந்தீர்களா? “நான் யார்” என்ற கேள்விக்கான பதிலை தேட முயற்சித்தீர்களா?

ஏன் இந்த பூமியில் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன நோக்கம் கொண்டு என்னை பெற்றெடுத்தார்கள்? என்ன தேடுதலுக்காக நான் வாழ்ந்தேன்? ஏன் இறை? எது இறை? கோவிலிலா? வீட்டிலா? மலைகளிலா? மலைச்சிகரங்களிலா? எங்கே இறை? நான் யார்? இளமையின் வளர்ச்சியில் நான் ஏன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்? அவர் ஏன் என்வாழ்வில் இணைந்தார்? எங்களுக்கும் ஏன் குழந்தைகள் பிறந்தன? அவர்கள் யார்? எதற்காக பிறந்தார்கள்? இப்படி நீண்டு செல்லும் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தேட முனைந்தீர்களா?

இத்தனை சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் வாழ்ந்து சொல்லிச்சென்றதெல்லாம் பொய்யா? இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும் மேற்குலகம், மன அமைதியை தேடி இந்தியாவுக்கே வருகிறார்களே அதிலெல்லாம் அர்த்தமில்லையா? சில ஆன்மீக, யோக தலைவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள மக்களுக்கு கற்பிக்கிறார்களே அதெல்லாம் விசயமே இல்லையா?


கட உள் என்பதற்கு கூடவா அர்த்தமில்லை?!

இந்த உலகை, இந்த வாழ்க்கையை, இந்த உலக இன்பங்களை, நட்புக்களை, மனிதர்களை புரிந்துகொள்ள அல்லது உங்களை இந்த உலகுக்கு வெளிக்காட்ட, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் வேண்டும்?! இறக்கும் வரையிலும் “இவள்/ன்” உழைத்தான், திறமையோடு இருந்தான். உதாரண மனிதராக வாழ்ந்தார் என்று சொல்லவேண்டுமா? அந்த வார்த்தைகளை பெறுவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? உங்கள் பகிர்வாக இவற்றைத்தான் உங்கள் பங்காக, இந்த உலகில் விட்டுச்செல்ல வேண்டுமா?



பொதுவான வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது?

நம் எல்லோருக்குமே, நம் பெற்றோர் ஏழையோ, நடுத்தரமோ, பணக்காரரோ என்றாலும், பொதுவான ஒரு வாழ்வு உண்டு. 14 வயதுவரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் உண்டு. அதற்கு பிறகு, விளையாட்டுத்தனம் மறைந்து, குடும்ப சூழல் அறிந்து, கல்வி, வேலை, தொழில், வியாபாரம், கடல் கடந்த வேலை அல்லது வணிகள் என்றபடி, நம் எல்லை எல்லைகள் விரிந்துவிடும். கல்வியில் பெற்றோர் துணை செய்தாலும் கூட, வேலை தேடுதல் அவரராகவே தேர்ந்தெடுக்கவேண்டியது இருக்கும்.  பிறகு, வேலை, தொழிலில், வணிகத்தில் ஓரளவு சம்பாத்தியத்தில் நிறைவு பெற்றால், காதல் வழி, திருமணம் வழி வாழ்க்கைத் துணைவர் கிடைத்து விடுவார்கள். சம்பாத்திய நிறைவு இல்லாத காதல் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்ல  வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதற்குள் அல்லது இதற்கிடையில் பெற்றோரின் மறைவு, அவர்களை தன்னோடு வீட்டில் வைத்துக்கொள்ளுதல் உண்டு.


ஓய்வை நோக்கி!

இந்த திருப்தி, அதிருப்தி தம்பதியர் கால வாழ்வில், குழந்தைகள் வந்துவிடுவர், பிறகு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்புக்கு ஆளில்லாமல் கஷ்டம், தன்னுடைய ஓய்வின்மைக்கு நடுவே அக்குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி, அவர்களுக்கான வேலை தேடுதல், ஆம். இப்போதெல்லாம் பெற்றோர்கள்தான் பிள்ளைக்காக வேலை தேடுகின்றனர். பிறகு அவர்களுக்கான மணமகன், மணமகள் தேடுதல் என்று பரபரப்பாகி வாழ்க்கை ஓடும். இதற்குள் தன் வயது கிட்டதட்ட 55க்கும் மேலே வந்துவிடும். அதாவது பணிஓய்வு (Retirement) நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


நம் ஓய்வு வாழ்க்கை!

நம் பெற்றோரை நாம் பார்த்ததுப் போன்ற அன்பும், அக்கறையும் இப்போது இருப்பதில்லை. 58/60 வயதில் பணிஓய்வுக்குப் பிறகு, ஓய்வுகால ஊதியம் வந்தால் அவர்பாடு சுகம். இல்லையேல் அவதி. அதோடு இப்பொதெல்லாம் வெகு சீக்கிரமே உடல்நல குறைபாடுகள் தலைதூக்குகின்றன. அதுவும் சிரமமே. இதனால் தன் பிள்ளைகளுக்கு சுமையாக?! மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். தற்போதைய பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பணிஓய்வுக்கு பிறகு, தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல், நல்ல முதியோர் இல்லங்களில், தாங்களாகவே பணம் கட்டி சேர்ந்துவிடுகின்றனர். அங்கே ஏற்கனவே வந்து தங்கி இருக்ககூடிய மற்றவர்களோடு “நல்ல நண்பர்களாக” வாழத் துவங்கின்றனர்.



materialistic vs spiritual

இப்படியான பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்ப வாழ்க்கைதான், பொருள்முதல்வாத உலகியல் வாழ்வு (Materialistic Life) என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையில் என்ன இழக்கிறோம் என்றால், நாம் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், பிறப்பின் கடமை, நான் யார் என்ற தேடல் ஆகியவை நிறைவு பெறவில்லை. 

ஆனால், பெரும்பாலும் கடவுள் மறுப்பு மிகுந்த இக்காலத்தில் அந்த நாத்திகவாதிகளை விட்டுவிடலாம். சிலரே ஆத்திகவாதிகளாக பக்தி மார்க்கத்தில் திளைத்திருப்பார்கள். அதுகூட என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் பக்தி மார்க்கத்திலும் தொய்வு வந்துவிடும்.  அதோடு இந்த உலகில் “இறை வணிகம்” மிக நன்றாக நடக்கிறது. காவி உடுத்திய போலிச் சாமியார்களும் மலிந்துவிட்டனர். அதனால் அவர்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. 


எனக்கு அவசியமில்லை எனும் கருத்து!

இதில் முக்கியமாக கருதவேண்டியது, இயற்கை குறித்த விளக்கமில்லை என்பதால், இறையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற சிந்தனைதான். வேதாத்திரி மகரிசி அடிக்கடி இரண்டு உதாரண கேள்விகள் கேட்பார்.

நீங்கள் பசியாற உணவு எடுத்துக் கொள்கிறீர்கள். உணவை எடுத்து வாயில்போட்டு, அரைத்து மென்று முழுங்குவதை தவிர உங்கள் வேலை ஏதும் இல்லை. அவ்வுணவை செரிமானம் செய்து, சக்தியாகவும், ரத்தமாகவும், தசையாகவும் மாற்றுவது யார்வேலை? நீங்கள் செய்தீர்களா? வேறு யாரேனும் செய்தார்களா? இல்லை அரசாங்கம் செய்ததா? சரி இந்த உலகில் மிகப்பெரும் அறிவியல் நிபுணர்களிடம் இரண்டு இட்லியை கொடுத்து, ரத்தமாக, தசையாக மாற்றித்தர கேட்டால், அவர்களாலும் முடியுமா?

இந்த பூமி எவ்வளவு எடை இருக்கும்? கணக்குப்போட்டால் 5.972 × 10^24 kg வரும். சூரியனின் எடை கணக்குப் போட்டால் 1.989 × 10^30 kg வரும். இப்படியே எல்லா கிரங்களுக்கும் போட்டுப்பாருங்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருப்பது எது?  ஒரு எடையுள்ள பொருளை ஒன்று, சும்மா தாங்கி, மிதக்க விட்டுக்கொண்டு இருக்கிறது என்றால், மிதக்கும் பொருள் வலிமையானதா? தாங்கும் பொருள் வலிமையானதா?   



இயற்கையும் இறையும்

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். இது அறிவியல், இயற்கை என்று நீங்கள் வாதிடலாம், இதைத்தான் ஞானிகள் “இறை” என்கிறார்கள். பொதுவாக சொல்லுவார்கள், உண்மையான குருவை தேடுதலில் நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அந்த குரு உங்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்துவைப்பார். 

இறை சிந்தனையில் தெளிவு பெற, 18 வயது நிரம்பினால் போதுமானது. வாழ்வில் எப்போது நமக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அந்த வயதே சிறந்தது. அந்த எண்ணம் எழுவதில், ஒரு காரணமும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இதில் யோகம் அறிந்துகொண்டால், பிறக்கும் குழந்தை “கருவிலே திருவுடையார்” என மாறலாம்! ஆனால் 60 ஆகியும், நான் இந்த உலகியலில் இயங்கிக்கொண்டே இருப்பேன் என்பது தவறல்ல. ஆனால் உண்மை உணராமல் இருக்கிறீர்களே?! 

இறந்ததும், பிறர் நினைவுகளால் வாழ்வது, இறவாமல் வாழ்வது வேறு. கடந்து உள்ளே அறிந்து, பிறப்புமின்றி, இறப்புமின்றி, எந்நாளும் அழிவின்றி இருப்பது எதுவோ, அதை தன்னிலே அறிந்து இருப்பதும் வேறு. எது உங்கள் தேர்வு?!

------

Photos thanks to: istockphotos, 123RF,  Dreamstime  

Greet Your Children for their Greatness


உங்கள் குழந்தைகளின் மேன்மைக்காக, அவர்களை வாழ்த்துங்கள்!


 
உங்கள் அன்புக்குழந்தை தூங்கும்போது, அருகில் சென்று, மெலிதான குரலில், அன்பாக, திருத்தமாக சொல்லுங்கள். 


ஓவ்வொரு நாளும் திரும்பத்திரும்ப, தினமும் சொல்லுங்கள். அவளது ஆல்ஃபா மன நிலை அதனை ஏற்று, அக்குழந்தையின் ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக படிப்படியாக மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டு சூழல் தோன்றும். இதை சொல்லச்சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அக்குழந்தையின் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். 


உங்கள் பேச்சும், தொனியுமே மாறும். சூழல் மாறும். உங்களின் உயர்ந்த எண்ண அலைகள் அக்குழந்தையை தழுவி அன்பு செய்யும். மனம் மாறும், மாற்றங்கள் நிகழும். வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும். தொடர்ந்து வாழ்த்தி வாழ்த்தி மகிழுங்கள். மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள். வாழ்க வளமுடன். 



உங்கள் அன்பு மகளுக்கான வாழ்த்து!

---

என் மகளே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவளாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவளாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவளாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவளாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்.

----


உங்கள் அன்பு மகனுக்கான வாழ்த்து!

---

என் மகனே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவனாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவனாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவனாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவனாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்

---


இவ் வாழ்த்துகளை தினமுமே சொல்லலாம். கூடுமானவரை தொடர்ந்து ஒரு வாரம் (ஏழு நாட்கள்) சொல்லுங்கள். இப்படி வாழ்த்துவதை மாதத்திற்கு ஒருமுறை என்றும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் செல்லங்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை தரும். நிச்சயமாக பலன் அளிக்கும் உண்மை இது. வாழ்க வளமுடன். 

----

காணொளி வாயிலாக அறியலாம்!

----

Photos thanks to: @Kevin Keith