2013 | CJ

2013

Bangalore-caricaturist-sugumarje


Most of BMTC Buses has fantastic Air suspension, so it goes like as a BMW


I like the Majestic Bus Stand... Looks like Semi Circle type...

first day I entered in bus stand, the board says 19 Platform... I look next It says 19a and 19b Etc. I asked to one Back Bag neat guy, "Where is platform 20th number?" He replied "I dont Sir" We can meet these kind of guys in all cities :)

 I found the 20th Platform on that way next to 19d...

If you are a Patient, need to drink tonic? So you know every time you need to jerk your Tonic Bottle... I give you a good idea.

Drink your tonic first, without bottle jerk or go within tonic bottle on BMTC bus... Yes the BMTC bus helps.

On that my 3 Days on Bangalore i have not see beggars on the Road side, bus-stand and buses. Some of disabled persons asked some of money on
our crossing!

Dr. Rajkumar get most of places on Ad boards including people hearts... One hotel made flourish flower decoration on Dr. Rajkumar's Photo!

Opposite of the Bangalore city railway junction, best self service food shop is avail. It's name is Nandhini.
Cheap and best in taste!
Chappatti 2 Peices - Rs. 30
Poori 3 Peices - Rs. 30
Southindian Rice Food - Rs. 45
Iddaly 2 - Rs 20
Sampar Iddali 1 - 10

Most of Wine shops are looks good... lovely designed shop. all kinds of youths open their beer tin on platform... me? just cross them, thats all!

Buses are Equally part by 1st part for women, 2nd for Men

I heard lot of FM radios on original kannada language...  not like a Namma ooru taminglish!

Metro Rails are ongoing project in Bangaloru. It is called by "Namma Metro" in Chennai we calling "Chennai Metro"

Sometimes Kannada sounds like a Malayalam... Omthu, aythu, ompathu (1, 5, 9)

Most of Kannada letters are curved...

Finally I got a book for Kannada Bahsa within 30 Days :D


to be Continued...



  

Bangalore-live-caricature-biec


On the way of Bangalore I covered my head and ears tightly, it prevent from neck jerk by the climate changes at Bangalore. I reached on early 5 am.

I love this climate but not think it will be stimulate my body temperature on next day.

On the way of rest home, I need coffee. Every sales man or woman easily speak tamil, malayalam, hindi and english... kannada is their mother language.

After relaxed, the time says it is nine. Available one hour to reach BIEC. On Google map show this place needs 45 minutes from the Majestic. I think on my walk along to Majestic, how I reach by bus? Auto? Taxi?
 And I have lot of questions... how i can find that place? how much fair? Any Auto is best, it has meter or not... on main road many autos and drivers on the road side stand.

I meet one and asked fair for BIEC on well unqualified English. He replied... sir, hindi, malayalam or tamilu?  I said Tamil.  He replied, 450 ruba agum saar.  I shocked.

I got train ticket with berth by 250 only. Can we return Trichy and come till Salem re-once.

No. No. Can we use meter?

Meter pottu jasti vantha sariya saar? Illana oru 30 ruba kammiyagum.

Oh. Nan enga Ofs la kettuttu vanthu auto pesikiren. dialed to my friend he is bangalorian Said, "no problem, get the bill from him and get allowance... "

I  drop this idea...

Just I move out from auto stand.
I found some local government bus service man selling the one day journey tickets. I buy one... yes Rs. 60 only. And I asked to him, which bus goes to Tumkur, I need to go at Madavara stop?

He replies "go for bus number 256 use this pass.

I smiled and thanks to him... wow. I have 390 out of 450 auto fair.

But the Bus, BMTC takes 1.20 hours to reach the Madavara stop... I miss the inauguration on the event at that time. my lucky, no one ready to wait for Caricature on that time. after 15 minutes i am ready and sit on the chair with Glass round table for LIVE CARICATURE...


So Are you ready to get Live Caricature?


chennai-live-caricature-and-rainy-day


சாலிக்கிராமம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். வெளியே நல்ல மழை, நானும் ஏற்கனவே இங்கே வரும் வழியில் நனைந்திருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பேருந்து கிளம்ப அது மைலாப்பூர் செல்வதாக சொன்னார்கள்.

அடிக்கடி சென்னையை சுற்றியதில் ஓரளவு இடம் யூகிக்கமுடியும் என்பதால், மைலாப்பூர் எங்கே, RK சாலை எங்கே என்று மனதிற்குள் ஓடியது... பனகல்பார்க், தி.நகர், TTK சாலை இதில் இறங்கலாம் என் யோசித்தேன்.

நடத்துனரிடம் கேட்டேன்...
“RK சாலை போகணும், ஹோட்டல் சவேரா”
“டைரக்டா அங்க போக பஸ் இல்லை சார்.. மைலாப்பூர் போய்ட்டு, இன்னொரு பஸ்ல TTK ரோடு போய் போய்டுங்க...”
“வழில வேறே எங்கயாவது இறங்கமுடியுமா”
“நீங்க எங்க வேனாலும் எறங்கிக்கங்க... சவேரா போகமாட்டீங்க”
“ஆட்டோல”
“சார் ஏன் சார், காச வீண் பண்றீங்க...”
பதினைந்து ரூபாய் சீட்டு கொடுத்தார்... இந்த பேருந்தும் வழியெல்லாம் நீந்தியது... சாலை, தொகுப்பு குடியிருப்பின் தளங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது மழை நீரால்...CIT காலனி கடந்து TTK சாலை என்று ஒரு பெயர்பலகைகாட்டியது. ஆனால் பேருந்து வலதுபக்கமாக திரும்பியது...
“சார், இங்கே இறங்கலாம் போல இருக்கே”
“என்ன?”
“TTK சாலை தானே அது?”
“சார்ர்ர்ர்ர்ர்ர்ர், அது இங்கதான்தான் ஸ்டார்ட் ஆகுது... இங்கே இருந்து RK சாலைக்கு இன்னிக்கி நீங்க போய் சேரமாட்டீங்க”

நான் அமைதியானேன்... புனித மேரி சாலை வந்து, மைலாப்பூர் வந்து சேர்ந்தேன்...

-----------------
மைலாப்பூரில் ஆட்டோ பிடித்தேன்... மீட்டர் இருந்தது, தூறிக்கொண்டிருந்த மழையில் நனையாமலிருக்க துணியால் சுற்றப்பட்டிருந்தது.
“ஹோட்டல் சவேரா”
“உட்காருங்க”
“மீட்டர் போடலை?”
“மழைக்கு பிராப்ளமா இருக்குசார்... ஓடல”
“பொய்யெல்லாம் சொல்லாதீங்க, சண்டேனா லீவா? சரி. எவ்வளவு?”
“நாற்பது ரூபாய்”
“முப்பதுதாரேன்...”
”மீட்டர்ன்னா இந்த மழைல ஜாஸ்தியாவே வரும் சார்”
“சரி கிளப்பு”
தேங்கி கிடந்த மழை நீரில் ஆட்டோ மட்டுமில்லாமல் எல்லா வாகனங்களும் நீந்தி வந்தன. நெரிசலில் தாமதமும் ஆகிற்று. TTK சாலை வந்து, RK சாலை வந்தாயிற்று... நாற்பது கொடுத்தேன்...

“கண்டிப்பா முப்பதுதான் தரனும். ஆனா நீந்தி வந்தீங்கல்ல... அதான் நாற்பது” என்றேன் நான்!

boon-from-friendship


சென்னை, மாம்பலம்...காலை,
பாரதிமணி அய்யாவுக்கு  அழைப்புவிடுத்தவுடன், “சந்தோசம், ஆனா நான் நாரதகான சபாவிலே நாடகத்துக்கு போறேன். அதுக்கு பிறகுதான் வீடுக்கு வருவேன்”
“ஓ. அப்போ நான் கொஞ்சம் லேட்டாவே வரேன் அய்யா”
“உங்களுக்கு அது பக்கம் தானே, சபாவுக்கே வந்துடுங்க... அங்கே பார்த்துக்கலாம். நம்ம நண்பர்களையும் பார்த்துபேச வாய்ப்பு கிடைக்கும்”
“சரி, என் லைவ் கேரிகேச்சர் ஈவண்ட் எப்படியும் 6 மணி ஆகிடும்னு நினைக்கிறேன்... முடிஞ்சதும் சபா வந்துடறேன் அய்யா”

ஹோட்டல் சவேராவில் அன்றைய நிகழ்வின் கடைசி ஓவியத்தை வரைந்துமுடித்து வெளியே வர மாலை 6.30 ஆகிற்று. என் கைபேசி மூலமாக, கூகுள் மேப்பில் சபாவின் இடத்தை தெரிந்துகொண்டேன். காரில் போனால் 7 நிமிடம் ஆகும் என்றும் காட்டியது. நடந்தா 15 நிமிடத்தில் போகலாம் என்று கணக்கிட்டு, TTK சாலை வந்தேன். வழியில் ஒரு ஏலக்காய் தேனீர்... மழைத்தூறலாக இருந்ததில் சாலையில் நெரிசலும் இருந்தது... கவனமாக சாலை கடந்து, நாரதகான சபாவிற்குள் நுழைந்தேன்...
பெருங்கூட்டம் இருக்கலாம் என்று நினைத்தால் அளவான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளேயும் அளவான பார்வையாளர்களே இருக்கலாம்... அங்கேயிருந்த சிற்றுண்டி கடையில் இருந்தவரிடம் விசாரித்தேன்...
“சும்மா போலாம் சார். திரையில் நடிக்கிறவங்கள பார்க்கனும்னா பின்னாடி உள்ள அறைக்கு போய்டுங்க... ஆனா இன்னும் அரைமணி நேரத்தில் இடைவேளை விட்டுடுவாங்க..”
“அவங்களை தொந்தரவு செய்ய விரும்பலை... வெளியே காத்திருக்கிறேன்” என்றேன்...

அழுத குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு ஒரு பெண் தன் இரு குழந்தைகளோடு வெளியே வந்தார்... நாடக சப்தம் அறை விட்டு வெளியே கேட்டது...
அடுத்து ஒரு தம்பதி நேரமாச்சி, கிளம்பலாம் என்ற வகையில் வெளியே கிளம்பிவந்தனர்...
இதற்கிடையில் நான் பாரதி மணி அய்யாவுக்கு ஒரு அழைப்பும், இரு குறுஞ்செய்தியும் அனுப்பிவிட்டேன்... அதன் வாயை அப்போதைக்கு அடக்கி வைத்திருப்பார் என்பது தெரிந்தும்...
நான் வெளியே எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று தெரியாதவகையில், உள்ளே நாடகத்தை பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன்...

கடைசி இருக்கைகள் வழியாக, திரை பக்கம் பார்த்ததும், சினிமாவோ என்றெண்ண தோண்றியது... அவ்வளவு அருமையான செட்... ஆஹா... உள்ளே வந்தபோதே, உள்ளேயும் வந்திருக்கலாமே என்று வருந்தினேன்...  கடைசிக்கு மூன்று வரிசை முன்பாக உட்கார்ந்து நாடகத்தை ரசித்தேன்... இது ”சிலிக்கன் வாசல்” என்பதும், இரா. முருகன் எழுதியது என்பதனையும் நான் அறியேன்... நாடகம் பார்த்துக்கொண்டே, பாரதிமணி அவர்களின் தலை தெரிகிறதா என்றும் பார்த்துக்கொண்டிருந்தேன்... அரைமணி ஆனதே தெரியாத நாடக ஓட்டம்... அருமை... எல்லோருமே பாராட்டிவிட்டதால் நான் தனியாக சொல்ல ஏதுமில்லை... எனக்கு ஒரு நல்ல அனுபவமாக உணர்ந்தேன்...

அடுத்த “எழுத்துக்காரர்” இடைவேளையில் கொஞ்சம் முன்னே நடந்து பாரதிமணி அவர்களை தேடினேன்...
”சுகுமார்ஜி” அழைத்த குரல் புதிது... ஹா.. இது யாரு? என்று பார்க்க... நம்ம வெங்கட சுப்பிரமணியன் ராமமூர்த்தி... (இவர் பெயரை டைப் செய்தாலே ஒரு சோடா குடிக்கவேண்டும் என்று நண்பர் பரணிராஜன் சொல்லுவார்)
“ஆஹா. சந்தோசம்... எப்படி இருக்கீங்க?” நல விசாரணைக்குப்பிறகு
“பாரதிமணி அய்யாவை தேடிட்டிருக்கேன்”
“இதோ இங்கே தான் என்கிட்டே உட்கார்ந்திருக்கார்... வந்துடுவார்”
என்னைப்பற்றி, என் ஓவியம் பற்றி பேசியவாறே எல்லோரிடமும் கைகொடுத்தேன்... சந்திரமொளலீஸ்வரன் விஸ்வநாதனும் அருகில் அமர்ந்திருந்தார்...
“சுகுமார்ஜி, பாரதிமணி வர்றார் பாருங்க”
“ஓகே... இருங்க அவர்ட்ட சொல்லிட்டு வந்துடறேன்”

பாரதிமணி அய்யாவை பார்த்து பேசிக்கொண்டிருக்கையில்...
“ஏன் அங்கே போய் உட்கார்ந்திருகீங்க, இங்கே வந்துடுங்க..” என் இருக்கையை மாற்றி, அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்தேன்...
எழுத்துக்காரர் நாடகத்தை அருகில் இருந்து ரசிப்பதும் சுகமாக இருந்தது... நிகழ்கால நடப்பினையும், அதிலே ஒரு செய்தியையும் வைத்திருந்தது அருமை.

நாடகம் முடிந்து எழுகையில், திரை நட்சத்திரங்களையும் காணமுடிந்தது... ஆனால் யாரோடும் பேசமுயலவில்லை... ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு நடிகர் நாசரை பார்த்துப்பேசி, ஒரு ஆட்டோகிராப் கேட்டதில்... மனுசன் என்னை மேலும் கீழும் பார்த்த பார்வையில் நான் அங்கேயே கரைந்துபோய், இனி யார்கிட்டயும் இந்தமாதிரி கேட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்...

நாடகவாயிலின் வெளியே எழுத்தாளர், கட்டுரையாளர் ஞானி நின்றிருந்தார்... ஒரு யோசனையோடவே அவரிடம் என்னை அறிமுகபடுத்திக்கொண்டு,“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்... தன் நண்பர்களிடம் பாரதிமணி என்னை அறிமுகப்படுத்திவைத்தார்...மிகுந்த கொடுப்ப்பினையாக உணர்ந்தேன்... போட்டோ பிடிக்கும் வைபவம் அப்போதுதான் நிழந்தது... முடிந்தளவு ஒதுங்கியிருந்தாலும், அந்த ஃபிரேமுக்குள் நானும் இருப்பதை அறிந்தேன்...

எல்லோரும் கிளம்ப சபா காலியானது... நானும், பாரதிமணி அய்யாவும் மட்டுமே... இதற்கிடையில் இன்னொரு சுவரஸ்யமான மனிதரும் சேர்ந்துகொண்டார்... அவர் பற்றி தனியாகக்கூட ஒரு கட்டுரை எழுதலாம்...

திடீரென்று கொட்ட ஆரம்பித்த மழைக்கு இரண்டு சேர்களை தூக்கிக்கொண்டு ஓரமாக நான் ஒதுங்க, பாரதிமணி அய்யாவும் வந்தார்... அடை மழை, அரைமணி நேரம்... இடைப்பட்ட நேரத்தில் எத்தனைமுறை பைப் பற்ற வைத்தார் என்றெல்லாம் எண்ண முடியவில்லை... கால் டாக்சிக்காக, பேசிக்கொண்டே காத்திருந்ததில் நேரம்போனதே தெரியவில்லை...

என் இரவு ஜாகை பாரதிமணி அய்யா வீட்டில்தான்... நட்பு கொடுத்த வரம்...

Artist in Life Line



ஒரு ஓவியன் எழுதக்கூடாதாம்... வருத்தம் தரும் செய்தியோடு இந்த வார்த்தையையும் படித்தேன்... ஆம்... ஓவியனின் கைகள் வரையத்தானே வேண்டும்...

“நான் ஒரு ஆர்டிஸ்ட்”
“அப்படியா வேறே என்ன செய்யறீங்க?”
“ஐயா, நான் ஒரு ஆர்டிஸ்ட்”
“சரிங்க, வேறே என்ன வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்”

யாரையாவது புதிதாக சந்திக்கும்பொழுது இப்படியான கேள்விகளை நான் எதிர்கொள்வேன்... கடைசி வரை ஒரு ஆர்டிஸ்டாக இந்த உலகில் நீ வாழ்ந்திருக்க முடியாது, வாழவே முடியாது என்பதாகவே அவர் தன் கேள்விகளை கேட்பார்...

ஒரு ஆர்டிஸ்ட் நிலைமை அப்படித்தான் இருக்கிறது... உண்மைதான்... இன்னும் ஒரு சிலர்...
“வருமானம் எல்லாம் சரியாக இருக்கா?”
“எப்படி சமாளிக்கிறீங்க?”

இவர்கள் என் பதிலில் எதிர்பார்க்கும் எல்லாவகையான கூலி வேலைகளும்,(சம்பளம் வாங்கினாலும் அது கூலிதானே...) பார்த்து சலித்துப்போய், போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று புலம்பிவிட்டே ஓவியத்தை கையிலெடுத்தேன். அதுவரை இது சோறும், குழம்பும் தராது என்ற நினைப்பிலே கைவிட்டதை...

படிப்பாக இருந்தால் அதிக படிப்புவேண்டும்... அதிலும் தொடந்த படிப்பு வரிசை முக்கியம்... நிலம் விற்று, நகை அடகுவைத்து, மதிய சாப்பாட்டை தள்ளிவைத்து அப்பன் செலவு செய்து படிக்கவைத்த படிப்பு தகுதிமட்டுமே... சம்பளமோ மிக சொற்பம்...

அதிக சம்பளமிருந்தாலோ அவனுக்கு காலணி கயிறைக்கூட முடிச்சிடும் வேலைபார்க்க வேண்டும்...(நாகரீகமாக சொன்னேன்)

அறிவாளி முட்டாளிடம் வேலைபார்க்க வேண்டியிருக்கும். ஒன்றுமே தெரியாதவனிடம் உலக நடப்பை சொன்னாலும் ஒருவேலைக்கும் ஆகாது. எப்பொழுது வெளியே அனுப்புவானோ என்ற பயத்தோடு நாட்களை கழிக்கவேண்டும்...

“சம்பளம் வாங்கறேலே... செஞ்சா என்னா?” கேட்பார்கள்....


வருமானம் அதிகமில்லை என்றாலும், வருத்தமில்லை, சோகமில்லை, புலம்பலில்லை, மன் அழுத்தமில்லை. ஒரு மனிதன் பணத்தேவை வெளியில் கடன் வாங்காதிருந்தால்... இன்றைக்கும், நாளைக்கும் பணம் போதும்.

இன்று இறந்தால், நாளை அவனை நல்லடக்கம் செய்யும் அளவுக்கு இருக்கவேண்டும். திருமணமாகியிருந்தால் அவள் தன் அழுகை நிறுத்தும் வரைக்கும் போதுமானது, பிறகு அவள் தன் வழி பார்த்துக்கொள்வாள்...

சரி... இரண்டு தொழிலாளிகள் “யோவ் நானும் கூலிதான்யா” என்று கூறும்பொழுது ஏற்படுகிற அதே விசயங்கள் “நானும் ஆர்டிஸ்ட் தாங்க” எனும் போது கிடைப்பதில்லை...

ஒரு ஒவியன் எவ்வகையிலும் ஒரு புரவலரை சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது... ஓவியம் வரைய காலி வயிறும், அரை பட்டினியும் இல்லாத நிலைவேண்டும். தன் ஓவியத்தை கேட்டுவாங்கிக்கொள்ளும் அன்பர்கள் முக்கியம்... படுக்க இடமில்லாமல் இடத்தை அடைத்துக்கிடக்கும் ஓவியங்களை, ஊர் ஊராக தூக்கிக்கொண்டு அலைய நேரிடும். உயிர்கொடுத்து வரைந்த ஓவியத்தை, கடைசியிலோ, ஓரத்திலேயோ வைக்காமல் காட்சிபடுத்தவேண்டும்... அதை வாங்குபவர்கள் வரவேண்டும் என்பதும் முக்கியம்... இன்னொருவகையில், பத்திரிக்கைகளுக்கு ஓவியத்தை அனுப்பிவிட்டு, பிஸ்கெட்டுக்காக நாவை தொங்கப்போட்டு காத்திருக்கவேண்டும். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...

இந்தவகை ஓவியனில் இருந்து நான் சற்று மாறுபடுகிறேன்... நான் மரசட்டத்திலோ, அட்டையிலோ ஓவியம் வரைவதில்லை. எல்லாம் கணிணி... இடத்தை அடைக்காத கோப்புகளாக... எது விற்குமோ, எது வாங்கிக்கொள்ளபடுமோ அந்தவகை... அந்த என் வகை கேரிகேச்சர்... இது எப்படி சாத்தியம்?

வாசல்கள் திறந்துதான் இருக்கிறது... நாம் மூடிய சாளரங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்... வேறெதோ வேலைகளில் பிழைத்தவன் திடீரெனெ ஒருசில நாளின் முழு ஓவியனாக மாறிக்கொள்ளமுடிகிறபோது ஓவியராகவே இருக்கவேண்டும் என்றே வளர்ந்த உங்களால் ஏன் இயலாது???

தமிழகத்தின் முன்ணணி ஓவியர் ஒருவரோடு பேசும் பொழுது, என்னைக்கேட்டு மிகவும் மகிழ்ந்து, என்கைகளை இறுகப்பற்றி...
“கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றார்.

ஒரு ஓவியனை மதிக்கும் சமூகமும், தலைவரும் நம் நாட்டில்... மன்னிக்க, என் நகரத்தில் இல்லை... நகரத்தில் இருந்தாலல்லவா நாட்டில் தெரியவரும்.... அதோடு ஓவியம் தொடர்பான எந்த விசயமும் குழந்தைகளிடத்தில் சொல்லப்படுவதில்லை... கற்றுக்கொடுக்கப்படுவதில்லை... அப்படியிருந்தாலும் மேல்நிலைகல்வியில் அந்தப்பாடங்கள் இல்லை. கல்வி நிலையங்களும் கழுவி ஊத்தியாயிற்று... பிறகெப்படி ஓவியம் மதிக்கும் சமூகம் வரும்???

இயல் இசை நாடகத்தில்  அரசும் ஓவியத்தை ஊத்தி மூடியாகிவிட்டது... ஓவியம் தொடர்பான அரசு வழங்கும் பட்டங்கள் விபரம் மக்களை சேர்வதில்லை.

இத்தகைய நிலையிலும் நான் குழந்தைகள், பெரியவர்களுக்கான ஓவிய வகுப்பை வரும் மே மாதம் முதல் தொடர்கிறேன். வருங்காலமாவது சிறப்பாகட்டும்.

என் பதின் வயதில் நான் கேட்டவை...
என் நண்பரின் அம்மா,
“பேப்பர்லயும், சொவத்திலயும் கிறுக்காதடா... கிறுக்குறவன் உருப்படமாட்டாண்டா” என்று சொல்லுவார்....
என் உறவினர் என்னை அருகில் வைத்துக்கொண்டே தன் நண்பரிடம்...
“எப்பப்பார்த்தாலும் வரைஞ்சிகிட்டே இருக்கான்பா...”
“வரையறானா, அப்ப விளங்காதே... பேசாம இவனை வேலைக்கு அனுப்புங்க”
என் வீட்டில்...
“வரைஞ்சி வரைஞ்சி குப்பைய போடுறதே இவனுக்கு வேலையாபோச்சு”

இந்த்மாதிரியான வசவுகளையும் மீறி ஓவியம் பழகி, பணம் செலுத்தி, வருடங்களையும், வயதையும் தொலைத்து, பட்டம் வாங்கி முழு ஓவியனாக வருபவன், தனக்கான செலவுக்காகவும், தன் வீட்டிற்காகவும் படும்பாடு அதிகம்...

அடுத்தமுறை “நான் ஒரு ஆர்டிஸ்ட்” என்று நான் சொன்னால் பாராட்டி மகிழுங்கள்...

கேள்விகளால் துளைக்காத அந்தநாள் எங்கள் இனத்திற்கு விரைவில் வரட்டும்...




Mobile Service




நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில்,
“கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா என்கூட வாங்க ஜி, என் செல்போன் சர்வீஸ் செய்யனும், போய்ட்டுவருவோமே” என்றார்.
“என்னாயிற்று”
“என் கிட்டே இரண்டு போன் இருக்கு. ஒன்றை பேண்ட் பாக்கெட்டில இருந்தபடிக்கு என் மனைவி தண்ணீரில் துவைக்க போட்டுட்டா”
“அட பாவமே”
“ஒரு அரை மணியில் தேடி எடுத்தாச்சி, கவர் கழற்றி, வெயில் காயப்போட்டு(?!) பிறகு இயக்கினால் ஒரே ஒருநாள் மட்டும் உயிரோடு இருந்தது. பிறகு செயலிழந்துவிட்டது”
“நல்லவேளை வெடிக்காமலோ, வேறெதும் ஆகாமலோ இருந்தவரை நல்லது”
“என்ன ஜி, பயமுறுத்துறீங்க!”
“மின் குறுக்கு ஏற்பட்டால் வெடிக்கவும் செய்யுமே, சரி வாங்க, அதன் நிலைமையை சோதித்துவிடலாம்”

நகரில் இருந்த தனிப்பட்ட சோதனை நிலையத்தை அடைந்தோம். அங்கே வரவேற்பாள பெண்ணிடம் விபரம் சொன்னேன். செல்போனுக்கு நடந்ததை கேட்டு அடடா என்று கவலைப்பட்டாள். உள்ளே இருந்த சோதனைச்சாலை அறைக்கு விபரம் சொன்னாள். ஒரு நபர் எட்டிப்பார்த்தார். பிறகு வெளியே வந்தார், புன்னகைத்தவாறே!
அவரிடமும் கதையை சொல்லி, செல்போனை கையில் கொடுத்தோம். பேசிக்கொண்டிருக்கையில்... வழக்கமானபடி என் பிசினஸ் கார்டை கையில் கொடுத்தவாறே

“நான் ஒரு ஆர்டிஸ்ட்” என்றேன்.
“ஓ... உங்களை தெரியும் சார்”
“அப்படியா?”
“ஆமா, 6வது கிராஸ்லதானே இருக்கீங்க?”
“ஆமா”
“பாரதிநகர்”
“அட, ஆமாங்க, நீங்க அங்கேதான் இருக்கீங்களா?”
“சார், நீங்க இரண்டாவது வீடு, நான் முதல் வீடு”
அடப்பாவிகளா!!
“ஓ. அந்த மாடிவீடு?” (கிழ்வீட்டின் உரிமையாளரை எனக்குத்தெரியும்)
“ஆமா சார்”
“அடடா. மனிச்சிக்கங்க... நான் உங்களை பார்த்ததில்லே, அதான் யார்னு தெரியலை”
“அப்படியா, பரவாயில்லை சார்”

பிறகு செல்போன் சோதனைக்கு தயாரானது... என் நண்பர்,
“ஜி, சொல்லவே இல்லே. இவர் உங்க ஏரியான்னு”
“ஹே, எனக்கே இப்ப தானய்யா தெரியும்”

பரிசோதனையின் முடிவு: செல்போன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிலைக்கு போய்விட்டது. எரிக்கவோ, புதைக்கவே அது நண்பரின் விருப்பமாகிவிட்டது.

சோதனைக்கூட புதிய நண்பருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாங்கள் வீடு திரும்பினோம். என் வீட்டில், என் மனைவியிடம் புதிய நண்பரைபற்றி சொன்னேன். செம டோஸ் எனக்கு விழுந்தது.

“வெளியே போனா, வந்தா யார் பக்கத்திலே இருக்காங்க, என்ன பண்றாங்கன்லாம் பேசாம இருந்தா இப்படித்தான் நடக்கும், இனிமேலாவது திருத்திக்கங்க”
“சந்தர்ப்பம் இல்லாம (ஜாமீன் இல்லாம) திடீர்னு போய் நீங்க யாரு, என்ன செய்யறீங்கன்னு கேட்டா பயந்துற மாட்டாங்களா?”
“அதுக்காக... அப்புறம் இப்படித்தான் ஆகும், என்ன நினைப்பாங்க உங்களைபத்தி???”
“அது கவலை இல்லை. நானா போய் பேசுறது ஆகாதவேலை, இப்போதைய காலத்தில், தனக்கான ஆதாயமின்றி யாருமே பேசுவதில்லை. அப்படி பேசுபவர்களில் ஒருவராக என்னை தவறாக எடைப்போடவே வாய்ப்பு அதிகம்”
“அப்போ எப்பத்தான் பேசுவீங்க?”
“நண்பராக இருந்தா!”
“எப்படி நண்பராவீங்க?”

அதானே????

என் பார்வையில் மட்டும் தெரிந்த கொசுவர்த்தி ஒன்று சுழன்று, என்னை முப்பது வருடங்களுக்கு முன்னால் அழைத்துச்சென்றது...
என் நண்பரின் சகோதரி கேட்டார்...
“ஏன்ப்பா சுகுமார்... உன் ஃபிரண்ட் என்னடானா பேசியே கொல்றான். நீ பேசாம கொல்றே. நீ பேசவே மாட்டியா?”
“ஏன் பேசாம, நீங்க பேசினா பேசுவேன், யாராவது பேசினாத்தான் பேசுவேன்”

அவர் முகத்தில் என்ன ரியாக்சன் ஏற்பட்டது என்பதை கவனிக்க தவறிவிட்டேன், அந்தவயதில் வேறெதோ சாலையில் வேடிக்கை பார்த்தபடி...

*image source from istockphoto

Caricature Artist Writes



ஊரெல்லாம் சுற்றி வந்து இப்பொழுது, இங்கே மீண்டும் தொடங்குகிறேன். ஏற்கனவே எழுதிய என் கட்டுரைகளை திரட்டி ஒரு மின்னூலாக மாற்றி ஒரு மின்னூல் வலைத்தளத்தில் வெளியிட்டேன். அதன் சுட்டியை என் பேஸ்புக் நண்பர்குழுவுக்கு அனுப்பிவைத்தேன். நான் எதிர்பார்த்தற்கு மேலாக எல்லோரும் என்னை பாராட்டி மகிழ்வித்தார்கள். அதில் சிலர் நிஜமாகவே தொடர்ந்து எழுத ஊக்கமளித்தனர்.

அந்த சுட்டி: http://www.scribd.com/doc/124032423/My-Path-Disappear-by-Sugumarje

இதன் ஆங்கில தலைப்பில் கொஞ்சம் பிழை இருப்பதாக என் நண்பர் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்தம் செய்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

கிடைக்கும் நேரத்தை, பணிகள் நீக்கி, நான் தவறாக பயன்படுத்துகிறேனோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ஓவ்வொரு நிமிடமாக ஓவ்வொரு நாளை நான் இழந்துகொண்டே இருக்கிறேன். நாற்பத்தி இரண்டுவயது இந்த ஆவணியில் முடிவுக்குவருகிறது. என்னதான் யூத் யூத் என்றாலும், மனம் இருக்கும் என்றாலும் உடல் தளரும் அபாயம் இருப்பதால், இருக்கும்வரை, இருப்பதை செய்துவிட ஆயத்தமாகிறேன். பெரிதாக ஒன்றுமில்லை. நான் என் தினவாழ்வில் அறிந்த செய்திகளின் தொகுப்பு, முந்தைய பதிவுகளைப்போலவே.

தினமும் கிடந்து அழியும், குறுந்தகவலைவிட ஒரு தொகுப்பாக தந்தால் எனக்கு உதவும் என்பதாக தோன்றியதின் விளைவுதான் இந்த வலைப்பூ.

பழையதை கொஞ்சம் திருத்தம் செய்திருப்பதால், ஏற்கனவே இதில் இணைந்தோர் குழப்பம் அடைய வாய்ப்பிருக்கிறது. கவலைவேண்டாம்.

ஜாதகம்? ஆம் அது தேவையானோர்க்கு மட்டுமான சேவை...

சந்திப்போம்...