September 2022 | CJ

September 2022

The solution for you, in your horoscope!


 //This service not available now... இந்த சேவை இப்பொழுது கிடைப்பதில்லை...//

உங்களுக்கான தீர்வு, உங்கள் ஜாதகத்தில்!


Thanks to Times Now

வாழ்க்கை முறையும், துன்பங்களும்

அன்பர்களே, சமீபமாக பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை உயர்ந்த அளவிற்கு சமமாகவே அவர்கள் படுகின்ற துன்பங்களும் உயர்ந்திருக்கிறதோ என்று கருதவேண்டியுள்ளது. அந்த துன்பங்களை களைய ஒரு நல்ல அறிவார்ந்த ஒரு மனிதர் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 

அப்படி கிடைத்தாலும் தெளிவில்லாத பதில்களை கொடுத்து, தன் காரியம் சாதிக்கும் மனிதராகத்தான் கிடைக்கிறார். இதனால் அவர்கள் இன்னும் குழம்பிப்போய், முன்னே இருந்த நிலையே பரவாயில்லை எனும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். நல்ல நண்பரும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவரும், இவர்களோடு ஒன்றாகத்தானே இருக்கிறார். அதாவது அவருக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் இருக்கின்றன. 


அந்த அறிவார்ந்த மனிதர் யார்?

நீங்கள் என்னைக் கருதக்கூடும். ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் நானும் நீங்களும் ஒன்றுதான். எனக்கென்று தனிப்பட்ட ஏதும் இல்லை. ஆனால் என் வாழ்வின் அனுபவங்கள் வழியாக, எனக்கு கிடைத்த குருவின் ஆசியினாலும், அவரின் அறிவுரைகளாலும், எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள், நடத்திய ஆராய்ச்சிகள் வழியாக வாழ்க்கை குறித்த விளக்கங்கள் தெளிவாகின. 

மனிதன் ஏன்? எதற்கான பிறந்தான்? ஏன் வழி பிறழ்ந்தான்? ஏன் துன்பம்? எங்கே இருக்கிறது பேரின்பம்? என்பதற்கான விடைகள் என் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் வழங்கிய யோக சாதனையால் கிடைத்தது. அது உங்களுக்கும் கிடைக்கும். இப்போது கிடைக்கவில்லை எனினும், இன்னும் கொஞ்ச காலம் கழித்து கிடைக்கலாம். அறிதலில், அனுபவத்தில் முன்னே பின்னே தானே தவிர உயர்வு தாழ்வு ஏதுமில்லை. 

மேலும் நான் அறிந்ததை, அதன் வழியே எனக்கு கிடைக்கும் விசயங்களைத்தான் உங்களுக்கும் தர முயற்சிக்கிறேன். தனியாக வேறொன்றும் இல்லை!


துன்பம், இதன் காரணம் என்ன?

கடந்த 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், மனிதனின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்ற வித்தியாசத்தை உணரலாம். அறிவியல், நவீன உபயோக கருவிகள், பயண நேர குறைப்பு, ஆராய்ச்சி என்று உயர உயர போய்க்கொண்டே இருக்கிற முன்னேற்றம் நடந்துகொண்டிருக்கிறது, ஏன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

இதற்குச் சமமாக மனிதன்,  மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை. வாழ்க்கைத்தரம், தொழில், பண வரவு, செல்வாக்கு என்ற வாழ்வு அடிப்படை நோக்கத்தில் உயர்வு பெற்றிருந்தாலும், தான் தன் மனம், அறிவு என்ற இயற்கையின் கொடையில் அவன் உயர்வு பெறவில்லை என்பது உறுதி.

பதின்ம வயதுக்கான சட்டையை, 30 வயதிலும் போட்டுக்கொள்ள முயற்சித்து, அது எனக்கு பொருந்தவில்லையா, நான் அதற்கு பொருந்தவில்லையா என்பதே புரியாமல், வாழ்க்கை சிக்கலிலும் துன்பத்திலும் உழல்கிறான். 


கிரகங்களும் ஜாதகமும்

பல கட்டுரைகளில் நாம் ஏற்கனவே கலந்து பேசியதுதான் என்றாலும் கூட, மீண்டும் சில முக்கிய கருத்துக்களை தருகிறேன். ஒவ்வொரு கிரகமும், கோள்களும் மிகமிகப் பெரியன. கருத்துக்குக் கூட எட்டாத பெரியன, அவ்வளவு பெரிய கிரகங்களில் இருந்து வரும் அலைகள் ஏற்படுத்துகிற தாக்கமே, ஜாதகத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஒரு புளு பிரிண்ட், அடிப்படை வரைகலை என்று சொல்லலாம்.

பிறந்தபோது இருந்த கிரக நிலை, அவற்றின் தாக்கம், ஒரு தகுந்த ஜோதிடரால் கணிக்கப் பெற்றிருந்தால், ஜாதக கட்டத்தில் கிரகங்கள் நிலையும், இப்போதைய கிரக சஞ்சார நிலைகளும் கொண்டு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஊகித்து அறியலாம். ஆனால் ஒரே ஜாதகத்திற்கு, ஒரே மாதிரியான பலன்களை யாருமே தர முடிவதில்லை. அத்தகைய நிலை அந்தக்காலம் முதற்கொண்டே உள்ளது.

மாற்றுவழி, யோகம், பரிகார பார்வை, இடமாறுதல், வீடுகொடுத்தல், பாவம் பாகை என்று பல வழிகளில் பலன்கள் மாறிவர இடமிருக்கிறது.


மூலம் என்ன?

இந்த கிரகங்களால் பாதிக்கப்படுவது யார்? மனிதன். ஏன்? அவனுக்குத்தானே மனம் என்ற அற்புதக்கருவி இயற்கை கொடுத்திருக்கிறது. மன+இதன் தானே மனிதன். இந்த மனம் மனிதனைத்தாண்டி விரிந்து கொண்டே இருக்கிறதே? அதற்கு எல்லைதான் எது? அப்படி விரிந்து விரிந்து தானே, இப்பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா கிரகங்களின், நட்சத்திரங்களின் பலாபலன்களை பெற்றுக்கொண்டு இன்பமோ துன்பமோ அனுபவிக்கிறது. அம்மனதின் வழியாக மனிதனும் அனுபவிக்கிறான்.


இதற்கு வழி என்ன?

மிக எளியவழி இருக்கிறது. அது தன்னை அறிதல்தான்.  “நான் யார்?” என்ற கேள்வில் தொடங்கும் பயணம் எங்கே முடிவடைகிறதோ, அங்கே இவன் யார்? கிரகங்கள் யார்? என்ற வித்தியாசம் இல்லாத ஒற்றைத்தன்மை வந்துவிடுகிறதே? அந்த மாற்றமே இதற்கான வழி!

ஆனால் அதையும் நாம் உடனடியாக பெறுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லையே. ஏன் அப்படி? நாம் பெற்றிருக்கிற கர்மா என்ற வினைப்பதிவே காரணமாகிறது!

அதுவும் கூட நம் ஜாதகத்தில் கிரகங்கள் காட்டுக்கொடுக்கிறதே?!


சிறிய சேவையாக

என் வழியாக சிலருக்கு உதவும் நோக்கத்தில், ஜாதக பலன் தரலாம் என்று விரும்புகிறேன். எப்போதுமே ஜாதகம் பார்ப்பதை, கணித்துத் தருவதை தொழிலாக பார்க்கும் எண்ணம் இருந்ததில்லை. ஏனென்றால் எனக்கு ஜாதகம், ஜாதக நூல்கள் அறிமுகமான காலம் முதலே, அதைத்தாண்டிய ஒரு விளக்கம் என்னுள் விதைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அடிப்படை அறிவுக்காக பார்க்கவும், கணிக்கவும் பாடம் படித்தேன். ஆராய்ச்சிகள் தொடர்ந்தன, தொடர்கின்றன ஆனாலும் அதை தொழில்படுத்தவில்லை. 

வரும் 21ம் (21/09/2022) தேதி முதல், இந்த ஜோதிட சேவை தொடங்குகிறேன். ஒரு ஜாதகம் தருகிற பொதுப்பலனும், ஆன்மீக, யோக முன்னேற்றங்களும், கர்மா என்ற வினைப்பதிகளின்  நிலை, தீர்க்கும் வழி, கால மாற்ற நிலை, தீர்வு ஆகியன அறிந்துகொள்ள சேவை நன்கொடை:

3000 INR (இந்திய மதிப்பில் மூன்றுஆயிரம் ரூபாய் / Three Thousand Indian Rupees) 

UPI இணைய வழி மூலமாக பணம் அனுப்பிவைக்கலாம்: 

அதற்கான சுட்டி:

9442783450@UPI

Hi, You can send me money using this BHIM QR or using my UPI ID 9442783450@upi. Use BHIM or any other UPI App to make transactions.


உங்கள் ஜாதக குறிப்பை போட்டோ காப்பி செய்து மின்னஞ்சலில் அனுப்பலாம். ஜாதகம் எழுதப்படவில்லை என்றால் 1) பெயர் 2) பாலினம் 3) பிறந்த ஊர் 4) நேரம் 5)  பிறந்த நாள் 6) தாயின் பெயர் 7) தந்தையின் பெயர் 8) பூர்வீக ஊர் 9) தற்போதைய வசிப்பிடம் 10) கல்வித்தகுதி 11) வேலை 12) ஆர்வமான சில விசயங்கள் ஆகியன எழுதி அனுப்புக! 
அதற்கான மின்னஞ்சல் முகவரி இதோ:

checkmyhoroscope@gmail.com

(மின்னஞ்சலில் பணம் செலுத்தியதற்கான காட்சிப்பதிவை இணைத்து அனுப்பிவைக்கவும்)

உங்கள் தனிப்பட்ட கேள்விகள் 10 கேட்கலாம். 

பலன்கள் பெற குறைந்தபட்சமாக 5 நாட்களும் அதிகபட்சமாக 7 நாட்களும் ஆகலாம்! 

பலன்கள் அதன் விபர குறிப்புக்கள் அனைத்தும், மின்னஞ்சல் வழியாகவே எழுத்து வடிவில் அனுப்பி வைக்கப்படும். குரல் பதிவாகவும் கிடைக்கும். (Results will be send by text note via email only and  Voice over audio also available)

-

குறிப்பு: 

பணம் செலுத்தாத, பணம் செலுத்திய விபரக்குறிப்பாக காட்சிப்பதிவு இணைக்காத மின்னஞ்சல், அதில் வரும் ஜாதக குறிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது! (அதை மறுபடி தெளிவு செய்யவும்)

இது இலவச சேவை அல்ல

வழக்கமாக தொழில் ரீதியிலான ஜோதிட முறைகளுக்கு மாறுதலானது. எனவே அதைப்போலான பரிகாரம் என்றெல்லாம் இதில் சொல்லப்படாது!

இச்சேவை குறித்து தனித்து என் கைபேசிக்கு அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிக்கவும்!

பணம் செலுத்தியவர்கள் மட்டும், வாட்சப் வழியாக தங்கள் பலன்கள் குறித்த சந்தேகங்கள் கேட்டுக்கொள்ளலாம்!

இந்த சேவை, குறிப்பிட்ட காலத்திற்குள், பணம் செலுத்திய அனைவருக்கும் சேவை முடிந்தபிறகு, முடிவுக்கு வரும்!

-

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்!

 //This service not available now... இந்த சேவை இப்பொழுது கிடைப்பதில்லை...//

Rahu and Ketu - Part 02


 ராகுவும் கேதுவும் - பகுதி 2


ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் ஜாதகனுக்கு என்ன சொல்ல வருகிறது? கடந்த பகுதியில் இந்த கேள்வியோடு முடித்திருந்தோம்...

உன்னுடைய பிறப்பின் நிலை

ராகு கேது என்ற இரண்டு கிரகங்களும் சாயா கிரகங்கள். நிழலாக இருப்பவை ஆனால் தோற்றத்திற்கு சிக்காதவை. என்றாகும் தனக்குள் சிக்கும் கிரகங்களின் சக்தியை தனதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டவை. 12 ராசி கட்டத்தில் எந்த நட்சத்திர கூட்டத்தின் சக்தியை தாங்கி நிற்கிறது என்பதின் வழிகாகவும், எந்த கிரகத்தோடு நின்று, அக்கிரகத்தின் வலுவை குறைக்கிறது என்பதை கண்டால், இந்தப் பிறவியில் நம்முடைய நிலை புரியவரும்!

அதாவது, இந்த பிறவியில் நாம் செய்ய முடிந்தது என்ன? எந்தமாதிரியான வாழ்க்கை முறை என்பதும், என்னமாதிரியான தொழில், வியாபாரம், சேவை செய்து பிழைக்கமுடியும் என்பதும், அது நிலைக்குமா? உயர்த்துமா? நஷ்டத்தை தருமா? நல்ல பெயர் மட்டும் வாங்கித்தருமா? என்பதை அறிந்துகொள்ளலாம்!


பிறப்பின் முந்தைய நிலை

உங்களுடைய முற்பிறவி என்றால், பயப்படாதீர்கள் உங்கள் தாயும், தந்தையும்தான். அவர்களுக்கு முற்பிறவி, உங்கள் தாத்தாவும், பாட்டியும்தான். தனித்த நீங்களே முன்னாடியும் பிறந்ததில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை. ஆனாலும் ஜென்ம வாசனை என்ற ஒன்று, உங்கள் தாத்தா பாட்டி வழியாகவும், தாய் தந்தை வழியாகவும் உங்களோடு ஒட்டிக்கொண்டு வரும். சிலருக்கு வெளிப்படையாக தெரியும், சிலருக்கு உள்பூர்வமாக இருக்கும் அவ்வளவுதான்.

தாத்தா கர்நாடக சங்கீதம் அறிந்தவரானால், பேத்திக்கு இயல்பாக ராகங்கள் புரிந்துவிடும் என்பது இப்படித்தான். 

இப்படியான நிலையை, அதாவது தொக்கி நிற்கிற நிலையை ஒரு ஜாதகனுக்கு ராகு கேது கிரகங்கள் காட்டுகிறது. தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் உங்களுக்கும் முரண்பாடா? பாட்டிக்கும் தாயாருக்கும் உங்களுக்கும் ஒட்டுறவா? அதையும் தெளிவாக காட்டும்.


நண்பர் கூட்டும், வாழ்க்கை துணையும்

உலகில் பிறந்த உங்களுக்கு, துணையாக இருப்பவர்கள் என்றால், முதலில் இருப்பவர்கள் உங்களுக்கு முன்னே, பின்னே பிறந்த சகோதர சகோதரிகள் ஆவார்கள். அவர்களுடன் உங்கள் உறவு எப்படி என்பதும் ராகு கேது காட்டும்!

வீட்டைக்கடந்த துணை என்றால் பள்ளித்தோழமையும், பக்கத்துவீட்டு நண்பர்களும் ஆகும். அவர்களோடு உங்கள் உறவு என்ன என்பதும் ராகு கேது காட்டும்.

இந்த நவீன கால, முகம்பாரா நட்பாக மலரும், சமூக வலைத்தள நட்பும், அவை நல்லதோ, கெட்டதோ என்றாலும் கூட இந்த ராகு கேது அந்தந்த இடங்களில் நின்று காட்டிடும் என்பதே உண்மை.

உங்கள் பிற்கால வாழ்க்கை முழுவதும், திருமணம் வழியாக இணையும் துணை எப்படிப்பட்டவர்? எத்தகைய வாழ்வுக்கு துணை இருப்பார்? அவரால் உயர்வா? தாழ்வா? பிரச்சனைகளா? தீர்வுகளா? என்பதையும் இந்த ராகு கேது கிரகங்கள் காட்டுகின்றன!


ராகு கேது வலிமையாக உள்ளதா?

சூரியன் நமக்கு ஆத்மகாரகன். சூரியனாலேயே உலகம் தோன்றி, உயிர்களும் மலர்ந்தது. இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய சூரியனையே சூழும் ராகுவும் கேதுவும், சூரியனின் சக்தியை பிடிங்கிக்கொண்டு விடுகிறதே?!

சக்தி இழந்த சூரியன் உச்சமானலும், ஆட்சியானாலும் ஜாதகனுக்கு உதவ முடிவதில்லையே? ஜாதகனின் தந்தையை பழிவாங்குகிறதே? அப்பனுக்கும் மகனுக்கும் இடையில் நல்ல உறவு தரமறுக்கிறதே? ஜாதகனின் தொழிலை, வியாபாரத்தை கெடுக்கிறதே? அரசனாக இருக்கும் சூரியனுக்கே தடைபோடும் நிலையில், மற்றகிரங்கள் பற்றி சொல்லவா வேண்டும்?


ராகு கேதுவின் இத்தகைய வலிமைக்கு காரணம் என்ன?

ராகுவும் கேதுவும் வலிமையானதே, காரணம், ராகுவும் கேதுவும் “மூலத்தில் இருந்து” வந்தவை. எது இந்த சூரியனையும், பூலோகம் உட்பட எல்லா கிரகங்களையும், நட்சத்திர கூட்டங்களையும் தாங்கி நிற்கிறதோ அத்தகைய மூலத்தின் ஒரு சிறு இயக்க பகுதிதான் இந்த ராகுவும், கேதுவும். ஏன் இயங்குகிறது என்றால், இயங்கிக்கொண்டிருக்கிற சூரியனில் இருந்துதான் ராகுவும் கேதும் இயங்குகிறது என்ற உண்மை தெரியவரும்! சிலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனாலும் உண்மை இதுவே!


ராகு கேதுவின் வீச்சு என்ன?

நிச்சயமாக அளவிடமுடியாத நிலையில்தான் இந்த ராகு கேது கிரகங்களின் வீச்சு இருந்து கொண்டிருக்கிறது. ஓரிடத்திலிருந்து கிளம்பி, இந்த பிரபஞ்சம் முழுதும் கூட, அப்பிரதக்‌ஷிணமாக அதாவது கடிகார சுற்றுக்கு எதிர்திசை சுற்றாக சுழன்று வருகிறது! நீளமாக இருப்பதை குறிப்பிட “கயிறு” என்று சொல்லுவார்கள். அந்த கயிருக்கு உயிர் வந்தால் அசையுமே? அதனால் அதை “பாம்பு” “நாகம்” என்று நமக்கு முன்னோர்கள் குறிப்பால் உணர்த்தினார்கள். 

யாராலும், எதனாலும் கட்டுப்படுத்த முடியாத தன்மையை கொண்டது இந்த ராகு கேது கிரகங்கள். இவற்றோடு ஒரு ஜாதகன், மோதுவதும், திருப்தி செய்வதும், பரிகாரம் செய்வதும் பலன் தராது. ஒரே வழி சரணாகதி தான்!


ஒரே வார்த்தையில் ஜாதகனின் நிலை!

ஒரு ஜாதகனின் கட்டத்தில், கிரக நிலைகளை ஆராய்ந்து, அவை நின்ற சாரபலன் தேடி, உபசார பலன் தேடி, பல கணக்குகள் போட்டு, பாட்டாக பாடி பலன் சொல்லுவதை விட, ராகு கேது ஆகிய இரண்டு கிரங்களின் நிலை அறிந்து, இந்த ஜாதகனுக்கு, இந்த உலகில் பிறந்தற்கான தேவை என்ன? என்ன செய்யப்போகிறான்? எப்படி பிழைக்கப்போகிறான்? என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்!


மனித பிறப்பின் ரகசியம் அறிவோம்!

இந்த உலகில் மனிதப்பிறப்பு ஒரே ஒரு முறை நிகழ்வதுதான். ஆனால் ஏன் ஜென்ம வாசனையை பெற்றுக்கொண்டு, கர்மா என்கிற வினைப்பதிவை தாங்கிக்கொண்டு பிறந்து வாழ்கிறோம்? இன்பமே நிறைந்த இவ்வுலகில், திருப்தி இல்லாமல், எல்லாவகையிலும் துன்பப்பட்டு, உயர்ந்தும், தாழ்ந்தும் வாழ்ந்து மடிவதின் அர்த்தம் என்ன?

மனிதன் தன் மூலம் மறந்துவிட்டான். “நான் யார்?” என்ற தேடலை தொலைத்துவிட்டான். பிறவிக்கடமையை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதின் மூலம், பிரச்சனைகளை தன் முதுகில் ஏற்றிக்கொண்டான். இறக்கிவைக்க முடியவில்லை. தாத்தா, அப்பன், மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று இத்தனை வடிவம் எடுத்தும் “நான் யார்?” என்று கேட்பதற்கு அவகாசம் இல்லை.

நீயாக கேட்கிறாயா? அல்லது கேட்கவைக்கட்டுமா? என்பது தான் ராகு கேது ஆகிய கிரகங்களின் பாணி! உங்களுக்கு புரிகிறதா? புரிந்தால் எனக்கும் மகிழ்ச்சி!

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்!