2023 | CJ

2023

What is the meaning of Layman?


‘பாமரன்’ என்றால் என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ‘பாமரன்’ என்றால் என்ன?

பதில்:
பாமரம் என்பதுதான் பாமரன் ஆனது. பாய் + மரம் = பாமரம். காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது பாய்மரம். அதுபோல் குறிக்கோள் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் ‘பாமரன்’ ஆவான். அறிவின் வழியில் செல்லாதவன்; அறிவற்றவன் என்று பொருள்.

மேலும் விளக்கமாக,
இத்தகைய பாமரன், வாழ்வில் நோக்கம் ஏதுமின்றி, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வதற்கு தயாராவான். அவன் தன் விருப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் செயல்கள் செய்துவருவான். அந்த செயலின் விளைவில், தனக்கு நன்மை கிடப்பதாக கருதினாலும் கூட, தனக்கும், பிறருக்கும், இந்த இயற்கைக்கும் பொருந்தாத விளைவை காலத்தால் உருவாக்கிக் கொள்கிறான்.

அதுவே பின்னாளில் அவனுக்கு கர்மா என்ற வினைப்பதிவாக வெளிவந்து, இன்னும் துன்பத்திலும் சிக்கலிலும் வருந்த வைத்துவிடும்!

இந்த பாமரன், ஏற்கனவே தன்னுடைய கர்ம வினைப்பதிவுகளின் தாக்கத்தால்தான், குறிக்கோள் இல்லாத, மனம்போன போக்கில் செல்ல தயாராகின்றான் என்பதை எளிதில் நாம் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் விளக்கம் பெறாத பாமரன், விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். இதனால் அவனுடைய பிறவியும் வீணாகப் போய்விட வாய்ப்புள்ளது. 

அவனின் வழியாக வரும் வாரீசுகளும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்ற வகையிலும் இது தொடரும். என்றாலும் கூட ஏதேனும் ஒருவழியில், இறையாற்றல் ஒரு பாடத்தை நடத்தி திசை திருப்பும் என்பது உறுதி. அந்த பாடத்தை ஏற்று, வாழ்க்கையில் திருத்தம் அமைத்துக்கொண்டால், பாமரன் என்ற நிலையில் இருந்து விலகி, நன்மையை நோக்கியும், பிறவி உண்மையையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். இல்லையே திசையற்ற, நோக்கமற்ற வாழ்க்கைபயணம் நீண்டகாலம் தொடரவே செய்யும்.
வாழ்க வளமுடன்.

Will anyone give up domesticity, the world, and the earnings in order to know the duty of birth?


பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?


பதில்:

பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா? ஆமாம், சரியான கேள்விதான். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் கேட்கிறார். எதற்காக விடவேண்டும்? உங்கள் இல்லறத்தை, உலகை, சம்பாத்தியதை விட்டு விலக வேண்டிய அவசியம் என்ன? அப்படி விட்டுவிட்டால் எப்படி இந்த உலகில் வாழ்வீர்கள்? யாரையாவது அண்டிப்பிழைத்தால் அது மிக கடினம் அல்லவா? அப்படியாக யாரேனும் நமக்கு வாழ்நாள் முழுதும் உதவமுடியுமா? என்று தான் கேள்விகளை அடுக்குகிறார்.

முதலில், உங்களை இதையெல்லாம் விட்டுவிட்டுத்தான், பிறவிக் கடமையை அறியவேண்டும் என்று சொன்னவர் யார்? அப்படி அறிவுரை சொல்லி உங்களை திசை திருப்பிவிட்டது யார்? மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? உங்களுக்கும் யோகசாதனைக்கும் உள்ள தூரத்தை அதிகப்படுத்தியது யார்? இப்படியாக சொல்லி, உங்களின் இந்த பிறப்பை, உலகவாழ்வை வீண் செய்ய முயற்சித்தது யார்?

பிறவிக் கடமை என்பது, ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டு, அதற்கான உண்மையை அறிந்து கொண்டு வாழ்வதுதான். இந்த ஆராய்ச்சிக்கும், அறிதலுக்கும் தடையாக, இல்லறம், உலகம், சம்பாத்தியம் தடையாக இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் இனியாவது விளக்கம் பெற்றவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

யோகம் என்பது, ஓர் வழி ஆகும். அறம் என்ற இயற்கைக்கு முரண்படாத நிலையில், விளக்கத்தில், விழிப்புணர்வில் வாழ்வதற்கான கற்றுத்தேர்தல், ஒரு பாடமும், பயிற்சி முறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு வெறுமனே பயிற்சி என்பது இல்லாமல், குண்டலினி எனும் உயிராற்றலை அறிந்து உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. இதில் எந்த குழப்பமோ, தடையோ, பிரச்சனையோ இல்லவே இல்லை.

நாம் வாழும் இந்த உலகில், பெரும்பாலோர் இன்பத்தை நுகர்வதற்கு பதிலாக, இன்பத்தோடு துன்பத்தையும், இன்னும் பலப்பல பிரச்சனைகளையும்தான் சுமந்துகொண்டு, தீர்க்க வழியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியான மனிதர்களுக்கு உதவுவதுதான் யோகம் ஆகும். எப்படியும், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையிலேயே வாழ்ந்து வாருங்கள். காலம் உங்களுக்கு உதவும்.

வாழ்க வளமுடன்.

-

What does yoga do when it is certain to live and die in the world? How does it help?


உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம் எனும்போது, யோகம் என்ன செய்கிறது? எப்படி உதவுகிறது?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம் எனும்போது, யோகம் என்ன செய்கிறது? எப்படி உதவுகிறது?

பதில்:
இந்த கேள்வியை வரவேற்கிறேன். ஒரு சராசரி மனிதரும், ஆரம்ப நிலையில் இருக்கின்ற ஆர்வலரும், யோகம் விரும்பாத மனிதரும் கேட்கிற கேள்விதான் இது. இந்த கேள்வி சரியான கேள்விதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம்தான். யாருமே தப்புவதில்லை. எந்த ஜீவனும் தப்புவதில்லை. பொருட்களும் கூட தப்புவதில்லை. இதில் இன்னும் சிறப்பாக, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியனவும் கூட தோன்றும், இருக்கும் நீண்டகாலம் என்றாகும், ஏதோ ஒருகாலத்தில் சுருங்கி மறையும், சில வெடித்தும் சிதறும், இல்லாமலும் போகும். இப்படி எல்லாமே தோன்றி மறையும் இந்த பிரபஞ்சத்தில், ஒரு பூமியில், பிறந்து, வாழ்ந்து, மறையும் மனிதருக்கு யோகம் அவசியமா? என்று கேட்கத்தான் தோன்றும்.

இங்கே நாம் மிக விரிவாக, அலச வேண்டியதில்லை, மிக சுருக்கமாக பார்க்கலாம். நீங்கள் கேட்பதுபோல, உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம் எனும்போது அப்படியே வாழ்ந்துவிட்டு போவது ஒருவகை. எதற்காக பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? நாம் யார்? உயிர் என்பது என்ன? உயிர் போனபிறகு நான் என்ன ஆகிறேன்? உண்மையில் பிறப்பதற்கு முன்னே எங்கே இருந்தேன்? என்னவாக இருந்தேன்? அதுபோலவே இறந்த பிறகும் எங்கே போகிறேன்? இதற்கு முன்பாக பல சித்தர்கள், ஞானிகள், மகான்கள் எல்லோரும், தன்னை அறிந்தேன், இறையுணர்வு பெற்றேன், இயற்கையோடு கலந்து என் நிலை அறிந்துகொண்டேன் என்றெல்லாம் சொன்னார்களே அதெல்லாம் என்ன? உண்மையா பொய்யா?

இந்த உலகம் என்பது என்ன? யார் இந்த உலகை சுழற்றுவது? ஏன் சூரியன் கிழக்கில் உதிக்கிறது? மேற்கில் மறைகிறது? நட்சத்திரங்கள் எல்லாம் ஏன் விழாமல் வானத்தில் மிதக்கின்றன? எப்படி? என்று பலவாறாக கேள்வி கேட்டு சிந்திக்கிறார்கள். இதுபோல இன்னமும் பல்லாயிரம் கேள்விகள் இருக்கின்றனதான். இப்படி, இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா?

அவசியம் என்றால் அதற்கு யோகம் ஒரு வழியை உருவாக்கித் தருகிறது. யோகமே அவசியமா என்று நீங்கள் கேள்விகேட்டால் அது உங்களுக்கு தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. வாழும் வாழ்க்கையில், உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கை, சுகம், படிப்பு, தொழில், வேலை, வியாபரம், பணம் சம்பாதித்தல், சொத்து வாங்குதல், வீடு, பங்களா, தோட்டம், கார், பைக் வாங்குதல், திருமணம், குழந்தைகள்... இன்னும் பலப்பல என்று வாழ்ந்து அப்படியே எல்லாவற்றையும் கைவிட்டு உயிர் விடுதல் ஒருவகை. இந்த வாழ்கையோடு, யோகத்தில் இணைந்து, நான் யார்? என்று கேட்டு உண்மையை உணர்ந்து தெளிவது ஒருவகை. எதுவேண்டுமோ அதை தேர்ந்தெடுப்பது நீங்கள் தான்!

யோகம் என்பது, நம் பிறப்பின் உண்மையை, ரகசியத்தை, இயற்கையின் உன்னதத்தை நமக்கு அறியத்தரும் ஒர் வழிமுறை ஆகும்! இந்த யோகம் தேவையா? அவசியமா? முக்கியமானதா? என்பதெல்லாம், அவரவராகவே தன் விருப்பத்தில் அவராகவேதான் முடிவு செய்யவேண்டும். குரு சொன்னதாலோ, நான் சொன்னதாலோ, யாரோ ஒருவர் சொன்னதாலோ நீங்கள் வந்துவிடவும் மாட்டீர்கள், வேறு யாரும் வந்துவிடவும் மாட்டார்கள் என்பதை அறிக!
வாழ்க வளமுடன்.
-

How to correct the disturbances while practicing Kayakalpa Yoga?


காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?


பதில்:

வேதாத்திரிய காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகள், அதை புரிந்துகொள்ளாமல் செய்வதால்தான் வருகிறது. முக்கியமாக, இந்த பயிற்சியை யாரும் யாருக்கும் செய்துகாட்டி விளக்கமுடியாது. உள்முகமாக, உள்ளுணர்வாக செய்யக்கூடியது. ஒருவர் இந்த பயிற்சியை செய்கிறார் என்பதை, வெளிப்படையாக அறிந்துகொள்ளவும் முடியாது. பயிற்சியாளர், ஓஜஸ் மூச்சு வெளியிடும் பொழுதுதான், இவர் ஏதோ செய்கிறார் என்று பிறர் தெரிந்து கொள்வார்.

இதன் காரணமாகவே, ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை புரிந்துகொள்வது, பயிற்சி கற்றுக்கொள்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், பயிற்சி எங்கே கற்றுக்கொள்கிறீர்களோ, அந்த இடத்திலேயே, அந்த ஆசிரியரிடமே, உங்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு செய்துகொள்வதுதான் மிகச்சிறந்த வழி ஆகும். ஏதோ சொன்னார், எனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்றபடி கடந்துவிட்டால், நாம் வீட்டில் தனியாக செய்யும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்துவிடும். அதனால்தான் அந்த விளைவுகள் தவறாகிறது, நமக்கு தொந்தரவாகவும் இருக்கிறது. என்னதான் நீங்கள் பயிற்சியின் பொழுது குறிப்பு எடுத்துக்கொண்டு வந்தாலும், நேரடியாக கேள்வியில் கிடைக்கின்ற பதில்தான் சிறப்பாகும்.

முக்கியமாக, உங்களோடு பயிற்சி எடுத்த சிலரிடமோ, ஏற்கனவே பயிற்சி எடுத்து வந்திருக்கும் மற்றவரிடமோ உங்கள் சந்தேகத்தை கேட்டுக்கொள்ளக் கூடாது. அது உங்கள் குழப்பத்தை அதிகப்படுத்திவிடும் என்பதை அறிக. தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே உங்கள் குழப்பத்தை, சந்தேகத்தை, கேள்வியை கேட்க வேண்டியது அவசியம்.

பொதுவெளியில், இணையதளத்தில் எந்த சந்தேகத்தையும் யாரிடமும் கேட்க்கக்கூடாது. சிலர், நாம் படிப்பதற்கே அருவருப்பு அடைகிறவகையில், அப்படி, இப்படி என்று கேள்விகள் கேட்பதும் உண்டு. சிலர் பயிற்சியை கிண்டல் செய்யும் விதமாகவும் கேள்வி கேட்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம், அவர்கள் நல்லபடியாக வாழ்க என வாழ்த்தியும் விடுவோம். பொதுவெளியில் கேள்வி கேட்டால், பலவிதமான திசை திருப்பலுக்கு ஆளாகுவீர்கள். உங்களுக்கு அருகில் உள்ள, பயிற்சி மையத்தை அணுகி, அங்கே ஆசிரியரை கண்டு, நீங்கள் கற்றுக்கொண்ட காயகல்ப யோகப் பயிற்சி விபரங்களைச் சொல்லி, சந்தேகத்தை தெளிவு செய்துகொள்ளலாம். அதற்கான சான்றிதழையும் கையில் வைத்துக்கொண்டு போனால் நல்லதுதான்.

ஒருவேளை உங்களுக்கு அருகில், எந்த ஒரு பயிற்சி மையமும் இல்லை, நீங்களும் வெகுதூரத்தில் இருக்கிறீர்கள் என்றால், முக்கியமாக நீங்கள் கற்றுக்கொண்ட குழப்பம் தீரும் வரை, சந்தேகம் தெளிவு பெறும்வரை, காயகல்ப யோகப் பயிற்சியை செய்யாதீர்கள். அது ஒருவாரம், பத்துநாட்கள், ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை. கைபேசி, தொலைபேசி வழியாகவும் ஆசிரியரிடம் கேட்கலாம் எனினும் நேரில் கேட்டறிவதே நல்லது. சமீபகால ஜூம் வழியான சந்திப்பில் கேட்டாலும் பலன் உண்டுதான். எனவே அதற்குறிய வழியை, பயிற்சி மைய இணையம் வழியாகவும், அதுவழங்கும் சமூக வலைதள அறிக்கை மூலமாகவும் அறிக. பலன் பெறுக.

வாழ்க வளமுடன்.

-

What is the way I can live without suffering?


வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


பதில்:

இந்த உலகில் வாழும் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், இன்பமான வாழ்வுதான் கிடைக்கிறது. அதுதான் இயற்கையின் திட்டமாகவும் இருக்கிறது. ஏன் இங்கே இயற்கையை குறிப்பிடுகின்றோம்? இயற்கையின் வழியாக வந்த, பரிணாமத்தில் வந்தது தான் இந்த உலகம், அந்த உலகில் பரிணாமத்தால் உயிர்கள் உண்டானது. தாவரம் முதலான ஓரறறிவு முதல் ஐயறறிவு விலங்கினங்கள் வரை. அதன் பின்னும் அதன் தொடர்ச்சியாகத்தான் ஆறாம் அறிவாக மனிதனும் பரிணாமம் அடைந்தான். மனிதனின் பரிணாமத்தில் இயற்கையும் முழுமையை பெற்று நிறைந்தது. அதனால்தான் ஆறாம் அறிவுக்கு மேலான ஒன்று இல்லை, இவ்வுலகில்.

இப்படி வந்த உயிரினங்களில், மனிதன் மட்டுமே துன்பம் அடைகிறான் என்ற கருத்து நம் எல்லோருக்கும் உண்டு. முதலில் துன்பம் என்பது என்ன? என்று சிந்தித்தால், அதில் பலவகை வந்து நிற்கும். உதாரணமாக, உடலில் காயம், வலி, நோய், என துன்பம் வரலாம். மனதில் எழும் குழப்பாமான சிந்தனைகள், விரும்பத்தாகத நிகழ்வுகள், ஏமாற்றங்கள் வழியாக துன்பம் வரலாம். உங்களுக்கு என்ன வகையான துன்பம் என்பதை நீங்கள் தெளிவாகவும் சொல்லவில்லை. நீங்களே ஒரு நாள், தனியாக உட்கார்ந்து, என்ன வகையான துன்பம் எனக்கு இருக்கிறது? இது எதனால் வந்தது? என்றும் யோசித்துப்பார்த்து, வரிசையாக அதை எழுதுவைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை படித்துப்பார்த்தால், சில உங்களுடைய எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றமாக இருக்கும். சில உங்களுடைய தவறான செயல்களால் உருவானதாக இருக்கும், சில அளவு முறை மீறியதால் வந்த விளைவாக இருக்கும். சில இயற்கையை மீறிய செயலுக்கான தண்டனையாக இருக்கும். சில மற்றவர்களுக்கு செய்த செயல்களால் கிடைத்த எதிர்விளைவுகளாக இருக்கும். சில ஏற்கனவே உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருவதாகவும் இருக்கும். இதில் கிடைத்திருப்பது எல்லாமே துன்பம்தான், நாம் புரிந்து கொள்ளாதவரை.

இந்த துன்பங்களின் உண்மை நிலையறிந்து, திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொண்டால், இருக்கும் துன்பத்தில் இருந்து தீர்வு காணலாம், அதை விட்டு விலகலாம், அந்த துன்பங்கள் இனியும் எழாத வகையில் நம்மை பாதுகாத்தும் கொள்ளலாம். இதற்கு, வேதாத்திரியத்தில் அகத்தாய்வு, தற்சோதனை எனும் பயிற்சிகள் உதவும். துன்பத்திற்கு தீர்வும், வழியும் உங்களிடமே இருக்கிறது, அதை தேடிக்கண்டடைவதே உங்களுக்கான நோக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

The world is full of happiness! Isn't that a lie?!


இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!


பதில்:

இந்த உலகில், நிறைந்திருக்கும் இன்பத்தைக் காணாமல், பொய்யை பார்ப்பதும், பொய்யாக உணர்வதும் உங்கள் பார்வையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படியான அனுபவங்களையும் நீங்கள் பெற்றிருக்கலாம் என்றே கருத இடமிருக்கிறது. இதை, இந்த பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி. உங்கள் வயது என்ன என்று எனக்குத்தெரியவில்லை. உங்கள் கடந்த காலத்தை, யோசித்துப்பாருங்கள். ஒருநாள் கூடவா நீங்கள், இன்பத்தில் திளைக்காலம் இருந்தீர்கள்? அனுபவிக்காமல் இருந்தீர்கள்? உணராமல் இருந்தீர்கள்? அதை பிறருக்கும் பகிராமல் விட்டீர்கள்?

பெரும்பாலும் இதற்கு நீங்கள் பதில் சொல்லுவீர்கள். எப்படியென்றால், ‘ஐயா, அதெல்லாம் அந்தக்காலம்’ என்பதாக உங்கள் பதில் இருக்கும். இது என்ன அந்தக்காலம் என்றால், நீங்கள் சிறுவயதில் அனுபவித்த காலமாக இருக்கலாம். 

அந்த சிறுவயது என்றால், மூன்று முதல் பதினெட்டு வயது வரை என்று பொதுவாக கருதலாம். அந்த வயதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. தன்னையும், தன் குடும்பம் பற்றியும் கூட சிந்தனையில் வைத்துக்கொள்வதில்லை. எப்போதும் ஒரு பரபரப்பு, ஆற்றல் வேகம், செயல்பாடு, மனதில் உத்வேகம், ஏதோ சாதிக்க பிறந்ததான நினைப்பு, அப்படி, இப்படி என்று ஏதேதோ இருக்கும். எந்த செயல் செய்தாலும், உங்களை வெளிப்படுத்தி, அதன்வழியாக அன்பையும், நட்பையும், மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்கு விரும்புவீர்கள். முக்கியமாக தன்னநலம் கருதாத செயல்பாட்டில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அந்த வயதில் உங்களுக்கென்று தனி உலகமும் கூட அமைந்திருக்கும் என்பதே உண்மை. அது உங்கள் மனதளவில் கூட இருக்கலாம்.

எந்த குழப்பங்களுக்கும் சிக்கிடாமல், எனக்கெதுக்கு அது? என்று விலகி விலகி ஓடி, தனித்திருந்து, எதும் கிட்டே வராத தடுப்போடு, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்வதற்கு விருப்பமும், செய்திறனும், திட்டமும் கொண்டிருப்பீர்கள்.

இவை அனைத்துமே இன்று, உங்களுக்கு மாறிவிட்டது. இந்த உலகில் எல்லாமே துன்பமாக மாறிவிட்டது என்று கருதுகிறீர்கள். இன்பம் என்பதே பொய் என்ற கருத்துக்கும் வந்துவிட்டீர்கள். அதை நீங்களும் அறிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிவிட துடிக்கிறீர்கள். சரிதானே?!

இதற்கு முக்கிய காரணம், உங்களுடைய எதிர்பார்ப்பும், அதனால் விளைந்த ஏமாற்றமும் ஆகும்! எப்படி என்பதை சிந்தனை செய்யுங்கள். அதற்கான உண்மை உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.

How can fix fake people in the spiritual and yoga?


ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஆன்மீகத்திலும், யோகத்திலும் இருக்கிற ஏமாற்றுப் பேர்வழிகளால்தான் உண்மை சிதைகிறது, இதை எப்படி சரி செய்வது?

பதில்:
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள், இந்தக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நிறைந்து இருக்கக் கூடியவர்கள்தான். நெல் விதைத்தால் நெல்லும் விளையும், புல்லும் விளையும், களையும் விளையும் என்று விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்குத் தெரியும். விளைச்சல் காலத்தின் முடிவில், களைகள் அவ்வப்பொழுது களைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. விவசாயிக்கு என்ன தேவையோ அதை அவன் எடுத்துக் கொள்கிறான். நெற்கதிரை அறுத்து, அடித்து, நெல்லை பிரித்து, தனித்து வைத்துக் கொள்கிறான். நெல்லில் இருந்து அரிசி நமக்கு உணவாகிறாது. நெல்லின் உதிரிகள் பறவைகளுக்கு உணவாகிறது. கதிர்கள் விலங்கினங்களுக்கு உணவாகிறது.

அதுபோலவே இந்த உலகில், மனிதன் வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வாழ்வில் தேவைகளும் நிறைய இருக்கின்றன. ஒரு தன் உடல்பலம், வலிமை, இவற்றைக்கொண்டு உழைக்கிறார், பலன் பெறுகிறார். சிலர் அதன் அறிவை பயன்படுத்தி, அதன் வழியாக நன்மை பெறுகிறார். இன்னும் சிலர், இவர்கள் செய்வதைப்போல செய்து, அவர்களைப்போல நடித்து, அவர்களைச் சார்ந்து, அவர்களை ஏமாற்றி பிழைக்க தயாராகிறார்.

நமக்கு என்ன தேவை என்றால், யார் உண்மையானவர்? என்று ஆராய்ந்து, பிறகு அந்த நட்பை, பலனை பெறுவதுதான் முக்கியம். சிலவேளை நடிப்பு, உண்மையை விட உயர்ந்ததாகவும் இருக்கும். அந்த ஏமாற்று வித்தையை நாம் அடையாளம் கண்டுகொள்ள பழகவேண்டும்.

இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் அடையாளம் கண்டுகொண்டாலும், நாம் அவரை திருத்தவோ, தண்டணை வழங்கவோ, பெற்றுத்தரவோ அவசியமில்லை. நாம் அந்த நபரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டால் போதுமானது. திருத்தத்தை காலம் பார்த்துக்கொள்ளும் என்பதால் நாம் வருந்தவேண்டியதில்லை. நீங்கள் அவரிடம் சிக்கி வருந்தாமல் கவனமாக இருந்தால் போதுமே.

இப்படி ஒவ்வொருவரும், ஆன்மீகத்திலும், யோகத்திலும், போலியான நபர்களை, ஏமாற்றுப் பேர்வழிகளை கண்டு விலகிவிடவேண்டும். அவர்களை அடையாளம் காண பழகிக் கொள்ளவேண்டும். நம்முடைய அறிவு அவர்கள் வசம் சிக்கிவிடக்கூடாது. உங்களிடம் இருக்கும் பெரும் பொருள், பெரும் பணம் சிக்கிவிடக்கூடாது.

ஆனால், உண்மையானவரையும் போலி என்று கருதிவிடாத, ஒதுக்கித் தள்ளிவிடாது, ஏற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு வேண்டியதும் அவசியம்!
வாழ்க வளமுடன்.
-

Why no end to the suffering that is occurring of living?


வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?


பதில்:

ஓவ்வொருவரும் வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவு உண்டு, தீர்வும் உண்டு. அதன்வழியாக இன்பமாக வாழ்ந்து வாழ்வை கொண்டாடும் வாய்ப்பும் உண்டுதான். எப்படி என்பதை காணலாம்.

ஒரு துன்பம் என்பது எப்படி வருகிறது? என்று ஆராய்ந்தால் அதற்கு நிறைய வழிகள் இருப்பதை நாம் கண்டறிய முடியும். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. ஒரு துன்பம் நமக்கு வந்த உடனே, வருந்தி மனம் உடைந்து போவதைத்தான் செய்கிறோமே தவிர ஆராய்ச்சிக்கு இடம் அளிப்பதில்லை. துன்பத்தால் ஏற்படும் வலியும், வருத்தமும், சினமும், கோபமும், வஞ்சமும், பழி வாங்கிடும் குணமும் வருகிறதே தவிர, ஏன்? எதனால்? எதற்காக? இப்படி நடந்தது என்று கேட்டுக்கொள்வதே இல்லை. உண்மைதானே? இனிமேலாவது அதற்கு நாம் பழகிக் கொள்வோம்.

பொதுவாக துன்பத்திற்கு காரணம், ஏழ்மை என்று கருதுவது பெரும்பாலான மக்களின் கருத்தாகும். அப்படியானால், பணவசதி, பொருள் நிறைவு பெற்றோர்க்கு துன்பம் எழுவதே இல்லையா? என்று கேட்டால், அவர்களுக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் உண்டு என்று அடுக்குவார்கள். எனவே நீங்களே இதுதான் காரணம் என்று உங்கள் முடிவுக்கு வருவதில் பலனில்லை.

துன்பங்களுக்கு மூலமாக இருக்கின்ற, இருக்கக்கூடிய காரணங்களை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு, இனிமேல் அப்படியான செயலை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். இதற்கிடையில் கர்மா, அது இது என்று இப்போது குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இனி செய்கின்ற செயலை, திருத்தமாக, நிறைவாக, முறையாக செய்யுங்கள். அதுவே போதுமானது. வந்த துன்பம் தீர்க்க, என்ன வழி? என்று சிந்திக்க முயற்சித்தால் நிச்சயமாக தீர்வு கிடைத்திடும். எனவே வெறுமனே வருந்துவதால் பலனில்லை. மேலும், உங்களுடைய ஒரு செயலால், நீங்களும் வருத்தப்படக்கூடாது, மற்றவர்களும் வருத்தப்படக்கூடாது. அந்த விழிப்புணர்வில் செய்யுங்கள். அதுபோலவே, யார் துன்பத்தில் இருந்தாலும், அவரின் மீது அக்கறை கொண்டு அவருக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்துவாருங்கள். உங்கள் துன்பமும் வேறு யாரோ ஒருவரால், தக்க சமயத்தில் தீர்ப்பதற்கான வழிகள் உண்டாகிவிடும். இது இயற்கையின் செயல்விளைவு தத்துவமாகும்.

இனிமேலும் துன்பத்திற்கு வழியே இல்லையா? முடிவே இல்லையா? வருந்தவேண்டாம். விழிப்புணர்வு பெறுக!

வாழ்க வளமுடன்.

-

AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION presents SEREVIYO


AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION

ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி

வணக்கம் அன்பர்களே,

கடந்த அக்டோபர் மாத்தில், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி (AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION) என்ற பெயரில் தனிப்பட்ட ஒரு சேவை நிறுவனம் அமைத்தாகி விட்டது! 

இதன்வழியாக, ஒரு குறிப்பிட்ட வரையறை எல்லைக்குள்ளாகவும், வளையத்திற்குள்ளாகவும் செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது. ஏனென்றால், ஒருவரை பின்பற்றி நடந்தால் (அதாவது குரு மகான் வேதாத்திரி மகரிஷியை), நாம் பெற்ற வேதாத்திரிய கருத்துக்களைக்கூட சொல்ல முடியவில்லை. இது அவருடையதா, உன்னுடையதா? என்று சந்தேகிக்கின்றனர். அதை பல பின்னூட்டங்கள் வழியாக நான் அறிவேன். இதனோடு எப்படி, நாம் பெற்ற நம்முடைய அனுபவங்களை சொல்லமுடியும்? 

மேலும் அப்படியான ஒருவரை, பின்பற்றி அவர் வழி நடக்க மாபெரும் சங்கமும் இருக்கிறது, மக்களும் இருக்கின்றனர். சிலவேளை, நாம் பகிர்கின்ற ஒரு சில பதிவுகளை, கருத்துக்களை ‘எங்களுடையது’என்று காப்புரிமை கோருகிறார்கள். என்னுடைய வேதாத்திரிய யோகா காணொளி பதிவிலும் அப்படி ஒரு பிரச்சனை எழுந்து, அதை ஏற்று, அழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால், YouTube அதை என்னிடம் சொல்லி, நீக்குமாறு எச்சரிக்கையாக சொல்லிவிட்டது. அதை நாம் மீறினால் குற்றம் என்றாகிவிடும். பிறகு நம்முடைய காணொளி சேவையும் நீக்கப்படும்.

இதுகுறித்து எனக்கு கவலையில்லை. என்றாலும், இதை நாம் எளிமையாக கடந்து நகர்வோம். ஏனென்றால், நமக்கு அந்த ஒருவரும், அவர் தந்த உண்மை விளக்கமும், அதன் வழியாக நாம் பெற்ற உண்மையும், அனுபவமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதுபோதும்!

அதனால்தான், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும், அது அவசியமானதாக இருக்கிறது என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. அந்த அடிப்படையில்தான், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி என்ற் அமைப்பின் வழியாக, சேரெவியோ எனும் அறம், யோகம் வழியாக தன்னையறிதல் (Sereviyo : Self-Realization with Virtue and Yoga) என்ற சேவை தொடங்கப்பட்டது. 

இதனுடைய நோக்கம், ஏற்கனவே தீட்சை எடுத்துக்கொண்ட அன்பர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களை உயர்த்திட துணை செய்வதும், தீட்சை பெறாதோர்க்கும், சராசரி அன்பர்களுக்கும், வாழ்வில் துன்புற்று வருந்தி, கலங்குவோருக்கும் உதவிடும் வகையில், பதிவுகள் அமைந்திருக்கும்.

பதிவுகளை கேட்டுக்கொண்டே எல்லோரும் தவம் இயற்றிடவும் இங்கே வழிகள் சொல்லித்தரப்படும். அது உங்களையும், உங்கள் மனதை புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து இங்கே பயணம் செய்வது மட்டுமே உங்களை, தன்னையறிதலை நோக்கி நகர்த்தும் என்பது உண்மை.

முக்கியமாக, இங்கே உங்களுக்கு இருக்கின்ற எல்லாவிதமான நம்பிக்கைகளையும், வழக்க, பழக்கங்களையும் கைவிட்ட நிலையில் நீங்கள் இணைந்துகொண்டால், உங்கள் வளர்ச்சி அபரிதமாக அமையும் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் அதை விட்டுவிலகுதலும், கைவிடுதலும் அவ்வளவு சுலபமும் அன்று. ஆனால் அதை நீங்களே முடிவு செய்யலாம். தொடர்ந்து பதிவுகளை காணுங்கள். உங்களை வரவேற்று மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி

இது தொடர்பான விளக்கங்கள், மேலும்...

Sereviyo Welcomes you!

செரெவியோ வழியாக உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும்! முன்னுரையாக எப்படி செயல்பட விரும்புகிறோம் என்பதையும், அது உங்களுடைய வாழ்விற்கு எவ்விதம் உதவும் என்ற வகையிலும் விளக்கம் தந்துள்ளோம். கண்டு கேட்டு பயன்பெறுக. நாம் தொடர்ந்து பயணிப்போம். நன்றி!

வேதாத்திரிய உண்மைகளை, இயல்பான வாழ்வோடு கலந்து, இன்னொரு பரிணாமத்தில், நம்மை அறிவதற்கான பயணம் இது. விருப்புவோர் இணைந்துக்கொண்டு, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@sereviyo

-

முதல் காணொளி பதிவு (அறிமுகம்)

Do you like to understand the secret of you and this universe? ரகசியத்தை அறிந்துகொள்ள விருப்பமா? 

https://www.youtube.com/watch?v=iOKawT1Ghu8

-

Sereviyo WhatsApp Group

Sereviyo என்பது, அறம், யோகம் வழியாக தன்னையறிதல் என்ற சேவை ஆகும். இது ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும் வழங்கப்படுகிறது!

உங்களுடைய கருத்துக்கள், பின்னூட்டங்கள் தெரிவிக்கலாம். பதிவுகள் குறித்த முன்னூட்டம், விளக்கம் பெறலாம். உங்களுக்கான ஆறுதல், சந்தேக தீர்வு, கேள்விக்கான பதில்களை பெறலாம்.

https://chat.whatsapp.com/H6KiDLTtSfG9gXusm9czGp

-

Why I can't give up the Bhakti worship?


பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?


பதில்:

பக்தி வழிபாடுகளில் இருந்து விடுபடுங்கள் என்றும், அதை விட்டுவிட்டு மீண்டுவாருங்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? யார் அப்படியான அறிவுரையை கொடுத்தார்கள்? யார் அதுதான் சிறந்தது என்று வழிகாட்டினார்கள்? 

உண்மையாக பக்தி வழிபாடுகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ள வேண்டியது குறித்து கவலைப்படாதீர்கள். பக்தியும் வழிபாடும் இருக்கட்டும். அதில் இருக்கின்ற உண்மை, சொல்லப்பட்ட உண்மை என்ன என்பதை தேடுங்கள். ஏன்? எதனால்? எதற்காக? என்ன பலன்? என்ன நன்மை? என்ற கேள்விகள் வழியாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கான விடை என்ன? என்பதை அந்த ஆராய்ச்சியின் முடிவாக கண்டுபிடியுங்கள். உங்கள் முடிவு என்ன? என்பதை வேறு யாருக்கும் சொல்லவும் வேண்டியதில்லை. சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, அது எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள். உங்களைபோல அவர்களும் ஏதோ ஒருநாள், நீங்கள் கண்டுபிடித்த அதே உண்மையை, தானாக ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டுமே!

பக்தி என்பது நிச்சயம் வேண்டும். அது இல்லாது ஒரு மனிதனுக்கு தனித்தன்மைகள், மனிதனுக்கே உரித்தான உயர்ந்த தன்மைகள் மலர்ச்சி பெறுவதில்லை. அறிவின் முழுமையை அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னை முழுதாக அறிந்துகொள்வதற்கு, அந்த வழியே செல்வதற்கு, தன்னை தகுதியாக மாற்றிக்கொள்ள சிறந்த வழிதான் பக்தி, ஆனால், அதில் நின்றுவிடாது, உண்மையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அப்படியாக முயற்சித்தால், யோகத்திற்கு நுழையமுடியும்.

யோகத்திற்கு நேரடியாக வரமுடியாத பாமர மக்களுக்காகவே, அவர்களுக்கு துணை செய்யவே, யோகத்தில் உயர்ந்த சித்தர்களால், ஞானிகளால், மகான்களால், குருமார்களால்தான் பக்தி கொண்டுவரப்பட்டது.

அதில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் அதை வேறுவழிகளில் திசை திருப்பிவிட்டது. இன்னும் அந்த திசையில்தான் போய்க்கொண்டும் இருக்கிறது. அதுகுறித்து நமக்கு கவலை ஏதுமில்லை. நாம் இங்கே விழிப்பாக, உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் போதுமானது. எனவே பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே என்று வருந்தாமல், உண்மையை ஆராய்ந்து அறிய தயாராகுங்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்.

Is there any the truth-realizer living today with us?


இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா?


பதில்:

இது என்ன விளையாட்டுத்தனமான கேள்வி?! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், சொல்லும்பொழுது, ‘இறைநிலை உணர்ந்தவர்கள், உலகெங்கிலும் உண்டு. ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்’என்கிறார். இதுதான் இந்த உலகில் எப்போதும் இருக்கின்ற நிலைமை. 

நமக்குத்தெரிந்து, சில மகான், ஞானி, உண்மையறிந்தோர் குறிப்பிட்ட தோற்றத்திலும் இருப்பார்கள். உதாரணமாக, என்றுமே ஒழுங்குசெய்யாத தாடி, மீசை, வாறப்படாத தலை, சிக்கல்பிடித்த தலைமுடி, அழுக்கான பழைய ஆடைகள் என்பதாக இருப்பார்கள். ஒரு சிலர் நம் பார்வைக்கு, புத்திசுவாதினம் அற்றவராகவும் இருப்பார்கள். பேசவும் மாட்டார்கள், அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக்கொண்டே நகர்வார்கள். சிலர் தன்னை சுதந்திரமாக வைத்துக்கொண்டு கிடைத்ததை, யாரேனும் தருவதை சாப்பிட்டு காலம் நகர்த்துவார்கள். அவர்கள் குறித்த உண்மை அறிந்தவர்கள் அவரையும் வணங்குவார்கள். இவர்களுக்கு கிடைக்கின்ற இந்த மதிப்பை அறிந்துதான், ‘போலிச்சாமியார்கள்’ உருவாகிறார்கள்.

தன்னுடைய யோக சாதனையில், தன்னையறிந்து, இறையுணர்ந்து, அதை மக்களுக்கும் சொல்லித்தந்து, அவர்களையும் உயர்த்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள்தான் குருவாக மலர்கிறார்கள். இவர்களைக்கூட போலி என்றே நீங்களும் மற்றவர்களும் நினைக்கத்தோன்றும். ஏனென்றால், பொதுவாகவே தன்னை அறிந்தவர்களுக்கும், இறையுணர்வு பெற்றவர்களுக்கும் எந்தஒரு அடையாளமும் இல்லை. அதை அவரவர் தன்னுடைய அறிவால்தான் அறிந்துகொள்ள முடியும். இங்கேதான் சிக்கல் உங்களுக்கும் மற்றவர்களுக்கும். உண்மை, பொய் என்பதை ஆராய்ந்துதான் கண்டுகொள்ள முடியும். வெளித்தோற்றத்தில் ஏமாறவும் கூடாது! அதே நிலையில் யாரையும் உதாசீனப்படுத்தவும் கூடாது. நீங்கள் உதாசீனம் செய்தவர் உண்மையான ஞானி, குரு என்ற நிலையில் இருக்கவும் முடியுமே?!

தன்னை அறிந்தவர்கள், இறையுணர்வு பெற்றவர்கள், இதை அவர்களே சொல்லவும் மாட்டார்கள். ஒருவர் தன்னை, ‘இறையுணர்வு பெற்றவன்’என்று சொல்லுகிறார் என்றால், நீங்கள் உடனே ‘அப்படியானால், இன்று மழைபெய்யுமா? வெயிலடிக்குமா? எனக்கு லட்ச ரூபாய் பணம் கிடைக்குமா? என்னை உடனே பணக்காரனாக மாற்ற முடியுமா?’ என்று தானே கேட்பீர்கள். ஒருவேளை இதற்கான பதிலை போலிச்சாமியார் தரமுடியும், எதற்காக? உங்களிமிருந்து பணம், பொருள் பறிப்பதற்காக!

எனவே முடிவாக, இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அதை நீங்களேதான் தேடிக் கண்டு பிடிக்கவேண்டும். 

வாழ்க வளமுடன்.

-

Nothing miracle not happen by joining and way of yoga, then way?


யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்ததாலும், அதில் பயணிப்பதாலும் ஒரு அதிசயமும் நடக்கவில்லையே? பிறகு எதற்காக யோகம்?


பதில்:

இந்த கேள்விக்கு எதிர்வினையாக, நான் புன்முறுவல் செய்கிறேன். உங்கள் கேள்வியை, அதனுள் இருக்கும் ஏக்கத்தை வரவேற்கிறேன். அதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பதையும், அதனால் எழுந்த ஏமாற்றமும் கலந்திருப்பதை அறிகிறேன். 

உங்கள் கேள்வியின் வழியாக, நீங்கள் மிகப்பெரும் உண்மையை, பிரமாண்டத்தை, ஏற்கனவே நிகழ்த்தப்பட்டு இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை, மாயாஜாலத்தை அறியாமல் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதில் பயணிக்கிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள். ஆனால் பயணம் எத்தகையது என்று உங்களுக்கே புரியாமலும் இருக்கிறீர்கள். நேரிலே நாம் பார்த்துக் கொள்ளாததால் அந்த நிலையை என்னாலும் சொல்ல முடியவில்லை, எனினும் யூகிக்க முடியும்.

சரி, இப்போது உங்கள் அளவிற்கு நானும் இறங்கி நிற்கிறேன். உங்களுக்கு என்ன அதிசயம் நடக்கவேண்டும்? 

நினைத்த உடனே அந்தப்பொருள் உங்கள் கைகளில் தோன்றவேண்டுமா? ஒரு மலர் வேண்டுமென்றால், மலர் வேண்டும். பணம் வேண்டும் என்றால் பணம் வேண்டும். யாராவது வந்து உங்கள் கைகளில் திணித்துவிட்டு, 

‘இதை உங்கள் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள், திருப்பித் தரவேண்டாம்’ என்று சொல்லவேண்டுமா?

‘உங்களைப்போல ஒரு நல்ல மனிதர், உயர்ந்த மனிதர், என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’ என்று யாராவது பாராட்ட வேண்டுமா?

’உங்களை என் வாழ்க்கத்துணைவராக பெற்றது என் பாக்கியம்’ என்று வாழ்க்கைத்துணைவர் போற்றி வணங்க வேண்டுமா?

‘அப்பா, என் வாழ்வில் நீங்கள் பெரும் அதிசயம், உறுதுணை, நன்றி’ என்று பிள்ளைகள் பாராட்ட வேண்டுமா?

எனக்கு இருக்கும் நோய், துன்பம், பிரச்சனை உடனே தீரவேண்டும், அதுபோல மற்றவர்களின் நோய், துன்பம், பிரச்சனை என் மூலமாக தீர வேண்டும், அதன் வழியே உலகப்புகழ் பெறவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஊரும், உலகமும் உங்களுக்கு மட்டுமே உதவவேண்டும், போற்றவேண்டும், மரியாதை செலுத்தவேண்டும், வணங்கவும் வேண்டும் என்கிறீர்களா?

கோடிக்கணக்கான சொத்தும், எண்ணற்ற வைரம், தங்க கட்டிகளும், ஆபரணங்களும், நிலமும், வீடும், தோட்டமும், காரும், ஹெலிகாப்டரும், விமானமும், தனித்தீவும் வேண்டும் என்கிறீர்களா? இல்லை இந்த பூமி போல வேறேதும் உங்களுக்கென்று வேண்டுமா?

இப்படி எல்லாம் நடக்கவேண்டும், அதற்கு இந்த இறையாற்றல் உதவவேண்டும், அதற்காகவே நான் யோகத்தில் இணைந்துகொண்டேன். வேறெதும் எனக்கு தேவையில்லை என்று எதிர்பார்ப்போடுதான் நீங்கள் இங்கே, இந்த உலகில், இந்தப்பிறவியில் வாழ்கிறீர்களா?

போதுமா?

இப்போது இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள், பதில் தெரியவில்லை என்றால் சிந்தித்து பதிலை திரட்டுங்கள். கேட்கலாமா?

இந்த உலகில் எப்படி பிறந்தீர்கள்?

அதில் உங்கள் ஆர்வமும், முயற்சியும், உழைப்பும், விருப்பமும் என்ன?

வேறு எதற்காக பிறந்தீர்கள்?

பிறப்பதற்கு முன்னால் எங்கிருந்தீர்கள்?

பிறந்தபொழுது ஒரு முழம் இருந்த நீங்கள் இன்று கிட்டதட்ட ஆறு அடிக்கு வளர்ந்தது எப்படி?

நீங்கள் பிறந்தது, தவழ்ந்தது, நடக்கமுயற்சித்த மூன்று வயதுக்கு முன்னதான நினைவுகளை ஏன் சொல்லமுடியவில்லை?

உங்கள் தாத்தா, பாட்டி, அவர்களின் தாத்தா, பாட்டி இப்போது எங்கே?!

இதற்கு முன் பேரரசர்களும், மன்னர்களும், கோடீஸ்வர்களும், பெரும் உலக பணக்கார்களும் என்னவானார்கள்? எங்கே போனார்கள்? அவ்வளவு பெரிய நாட்டையும், பொன்னும், பொருளும்,  பணமும், தன் சொத்துக்களையும் எடுத்துக்கொண்டுதான் போனார்களா?

வாழும் நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு என்னவாக மாறப்போகிறீர்கள்? எங்கே போவீர்கள்?

இந்த அதிசயத்தை, மாயாஜாலத்தை நிகழ்த்துவது யார்? இதைவிட பெரிய அதிசயம், மாயாஜாலம் உங்களுக்கு வேண்டுமா?

சிந்தித்துப்பார்த்து விடை தேடுங்கள், விடை கிடைக்கவில்லை என்றால் ‘யோகத்தின்’ வழியாக முயற்சியுங்கள்.

உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வதுதான் யோகமா? என்று குறுக்கு கேள்வி கேட்காமல் மேலே கேட்டவற்றிற்கு முதலில் சிந்தனை செய்யுங்கள். அதிலே இந்த கேள்விக்கான விடையும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்.

Be alert in this external level of life okay, no need to yoga is correct?


மனம் என்ற விசயத்திலே சிக்காமல் புறவுலகில் விழிப்பாக இருந்தால் போதும் என்கிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

    வாழ்க வளமுடன் ஐயா, மனம் என்ற விசயத்திலே சிக்காமல் புறவுலகில் விழிப்பாக இருந்தால் போதும் என்கிறார்களே?


பதில்:

    ஆம், அப்படியான பயிற்சி முறையும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இதுபோல பலவிதமான பயிற்சி முறைகள் உலகெங்கும், எண்ணற்ற நபர்களால்,  உங்களைப்போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கும், ஏனைய சராசரி மக்களுக்கும் பயிற்சி வழியாக சொல்லித் தரப்படுகிறது. இதெல்லாம், இக்காலத்தில் மட்டுமல்ல, அந்தக்காலத்தில் இருந்தே வரக்கூடிய நடைமுறைதான் என்பதை நினைவில் கொள்க.

    ஒருவிதத்தில் இதையெல்லாம் குறை சொல்ல முடியாது. எனினும் எது நம்முடைய பாதை? எது நமக்கு பயணளிக்கும் பாதை? எது சிறந்தது? என்று அவரவரேதான் சிந்தித்து முடிவு செய்யவேண்டும். இது சிறப்பு அது சிறப்பு என்று யாராவது ஒருவர் சொன்னால், அவரை ஏமாற்றுக்காரர் என்று நீங்கள் கருதிவிட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் எல்லோருமே தாங்கள் செல்லும் வழிதான் சிறந்தது என்றுதான் மற்றவர்களுக்குச் சொல்லுவார்கள். அதுதான் எங்கும் நடக்கிற நிகழ்வாகும்.

    ஒரு வழக்கமான உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாமா? உங்கள் ஊரில் இருந்து, கேதார்நாத் செல்லவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த கேதார்நாத் ஊரில் இருக்கிற ஆலயம்தான், தன்னையறிதலின் முடிவு / நோக்கம் என்று உதாரணம் கொள்ளலாம். உங்கள் ஊரில் இருந்து இப்போது பயணிக்க வேண்டும். இது போல ஓவ்வொருவரும் பயணிக்க வேண்டும் என்றால்,

    ஒருவர் கிழக்கே பயணிப்பார், ஒருவர் மேற்கே பயணிப்பார், ஒருவர் வடக்கே பயணிப்பார், ஒருவர் தெற்கே பயணிப்பார். ஒருவர் தவழ்ந்துவருவார், ஒருவர் நடந்து வருவார், ஒருவர் ஓடி வருவார், ஒருவர் சைக்கிளில் வருவார், ஒருவர், மோட்டார் பைக்கில் வருவார், ஒருவர் காரில் வருவார், ஒருவர் இரயிலில் வருவார், ஒருவர் விமானத்தில் வருவார், ஒருவர் ஹெலிகாப்டரில் வந்தும் இறங்குவார். இப்படியான ஓவ்வொன்றிலும் நோக்கம் ஒன்று, வழிகள் ஒன்று, பயணம் ஒன்று, ஆனால் பயண அனுபவம் மாறுபடும், காலம் மாறுபடும்.

    இதில் எது சிறப்பு? என்று நீங்களே அறிவீர்கள் தானே? அவரவர்களுக்கு எது சாத்தியமோ, எந்த பயிற்சியை தேர்ந்தெடுத்தாரோ, யாரிடம் கற்றாரோ அதன்வழி, அந்த கற்றலின் வழி, தன்னையறிதலை நோக்கி பயணிக்கிறார் அவ்வளவுதான். இதில் அதுதான் சிறப்பு, இதுதான் சிறப்பு என்று ஏற்றியும் இறக்கியும் பேச வேண்டியதில்லை. உங்களுக்கு எது சரியானதோ அதை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். அது போதுமானது. 

வாழ்க வளமுடன்.

-

What is the kind of knowing through yoga extremely needed?


இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


பதில்: 

ஏதோ மிக சலிப்பாக கேட்பதுபோல தோன்றுகிறது. வாழும் இந்த வாழ்க்கையில், யோகத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவம் அப்படி ஆகிவிட்டதுதான் என்னசெய்ய? இந்த பொருள்முதல்வாத உலகில், பணத்தையும், வசதி வாய்ப்புக்களையும், வேலைவாய்ப்புக்களையும் தேடுவதற்கே நேரம் போதவில்லையே, இதற்கிடையில் யோகம் வேறா? என்ற சிந்தனையில்தான் இந்தக்கேள்வி பிறக்கிறது. தவறில்லை இது இயல்புதான்!

ஆனால், இந்த உலகில் பிறந்து வாழ்ந்து வெறுமனே மறைந்து போவது ஏன்? எதற்காக பிறந்தோம்? எதற்காக இப்படி வாழ்கிறோம்? வாழும் பொழுது இன்பமும் துன்பமும் ஏன்? துன்பம் நீக்கி வாழ வழி என்ன? நம்முடைய மூலம் என்ன? அது என்ன ஆறாவது அறிவு? எதற்கு பயனாகிறது? இந்த இயற்கை என்பது என்ன? இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், இந்த உலகை விட்டு நீங்கிவிடுவது சரிதானா?

வாழ்நாள் எல்லாம் தன்னை வருத்திக்கொண்டு, உழைத்து வருமானம் ஈட்டியதும், வாழ்க்கைக்கான பொருளை சேர்த்ததும், வீடு, வாசல், தோட்டம், தொறவு என்று பிரமாண்டம் காட்டியதும், பகட்டாக ஆடையணிந்து, நகை அலங்காரம் கூட செய்து, மிடுக்காக வாழ்ந்ததுமான இப்படி எல்லாவற்றையும் நொடியில் விட்டுவிட்டு போவதின் அர்த்தம் என்ன? இப்படி விட்டுவிட்டு போவதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?! என்றெல்லாம் சிந்தனையும், ஆராய்ச்சியும் செய்வதே இல்லையே?!

இதற்கெல்லாம் விடைதேடியே யோகத்திற்கு வருகிறோம். குருவின் துணையோடு பயணிக்கிறோம். இதெல்லாம் தெரிந்துதான் ஆகவேண்டுமா? அப்படி தெரிந்து கொண்டு என்னதான் ஆகப்போகிறது? என்பதுதானே உங்கள் கேள்வி? அப்படி உங்களுக்குத் தோன்றினால் விட்டுவிடலாம். இந்த பிறவியை எப்படி நீங்கள், இப்பொழுது வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்து கடந்து செல்லுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை!

உள்ளுணர்வாக உங்களுக்கு தோன்றாத வரையில், நீங்கள் யோகத்திற்கு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி வரவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு தேவையில்லை. Just like that, என்றபடி இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து முடியுங்கள். அதிலே நீங்கள் திருப்தி அடையுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

Is it right to think that we suffer like this because of the sin?


நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?


பதில்:

ஒரு தெளிவில்லாமல் அப்படி நினைத்துக்கொள்வது தவறு. இப்படி நினைப்பது உங்களை இன்னமும் துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதையும் மறவாதீர்கள். துன்பப்படுவதற்கு காரணம் பாவம் அல்ல. பாவம் புண்ணியம் என்ற புரிதலை விட்டு விலகியும் விடுங்கள். அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். மேலும் நீங்கள் செய்த பாவம் ஒன்றுமே இல்லை. ஆனால் உங்கள் பரம்பரையில், முன்னோர்கள் செய்த கர்ம வினைப்பதிவுகள் தொடர்கிறது என்பது உண்மையே!

மேலும் துன்பப்படுவதற்கு காரணம் பாவமோ, கர்மாவோ அல்ல, அதை புரிந்து கொள்ளாமல் நாம் செயல்படுவதால்தான் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு நெருப்பு எரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது தீபமாகவோ, அடுப்பாகவோ, வேறேதெனும் நெருப்பாகவோ இருக்கலாம். அதை நீங்கள் தொடுவீர்களா? தொட்டுத்தான் பார்ப்போமே? என்றாவது நினைப்பீர்களா? இல்லைதானே? ஏன் தொடமாட்டீர்கள்? விட்டு விலகுவீர்கள்? கடந்து போவீர்கள்?

அந்த நெருப்பு சுடும், சுட்டு பொசுக்கியும் விடும், தொடப்பட்ட விரலை, கையை புண்ணாக்கி விடும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? வாழ்வில் ஏதேனும் ஒரு நாளில் அந்த அனுபவம் கிடைத்திருக்கும், அப்படியாக நெருப்பில் சிக்கிய, பாதிக்கப்பட்ட நபர் யாரையாவது பார்த்திருப்பீர்கள். ஏதேனும் யாரேனும் சொல்லக்கேட்டுருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அந்த விழிப்புணர்வு இப்போதும், எப்போதும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவுகிறது. நெருப்பு என்பது இப்படிப்பட்டது, இது தரும் விளைவுகள் அத்தகையது. எனவே நெருப்போடு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.

அதுப்போலவே, நாம் விரும்பி, எதிர்பார்த்து, தனக்காகவும் ஒரு செயல் செய்து அதன் தவறான விளைவில் துன்பபட்டு வருந்தியதும், பிறருக்கு கேடு விளைவித்து அதன்வழியாக அவருக்கு துன்பம் ஏற்படுத்தியதும், அவருடைய வருத்தமும் நம்முடைய கர்மா என்ற வினைபதிவாக பதிந்து விடுகிறது. காலத்தால் அது தானாக நம்முடைய செயல்களில் வெளிப்படுகிறது. விழிப்புணர்வாக திருத்தி செய்யாவிட்டால், மேலும் துன்பம் உண்டாகிறது.

இப்போது இதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் விளைவில் நல்லது நிகழும்படி ஒன்றைச் செய்தால், உங்களுக்கும் நன்மை, அதனால் பிறரும் நன்மையடைய வாய்ப்பு கிடைத்திடும். இதுதான் கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்க்கும் வழி. என்றாலும் இது மட்டுமே போதாது, முழுமையாக தீர்க்க யோகம் ஒன்றே சிறந்த வழியாகும். இதை நீங்கள் புரிந்துகொண்டால், நீங்கள் வாழ்க்கையில் வருந்த வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக கர்மா என்ற வினையை தீர்த்து, இன்பவாழ்வுக்கு அஸ்திவாரம் போடலாம்!

வாழ்க வளமுடன்.

No need mantra and chanting if mind will be completeness by Siddhar Agathiyar


மனமது செம்மையானால் மந்திரம் எதுக்கடி?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை செம்மையாக வைத்துக்கொண்டால் மந்திரம் தேவையில்லை என்று சொல்லுகிறார்களே? அதன் விளக்கம் என்ன?


பதில்:

ஆதியோகியின் வழியில், சப்தரிஷிகளில் ஒருவர், தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த சித்தர்களின் வரிசையில் முதன்மையாக இருந்தவர், அகத்தியர் ஆவார். இவரை மகாமுனி, முனிவர், மகான் என்ற அடைமொழியோடு அழைப்பார்கள். அவர் எழுதிய கவியின் முதல்வரியே நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியாகும். அந்தக்கவி இதுதான்.,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா

மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

இந்தப்பாடலின் கருத்துப்படி, மனம் செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம், வாயுவை உயர்த்த வேண்டாம், வாசியை நிறுத்த வேண்டாம், மந்திரம் தானாக செம்மையாகிவிடும் என்று பொதுவான கருத்துரை எல்லோருக்கும் உருவாகும். ஆனால் இது படிநிலையாக நாம் பெறுகின்ற மாற்றத்தை விளக்கிச் சொல்லுகின்ற கவியாகும்.

பொதுவாகவே, சித்தர்கள் எழுதக்கூடிய கவிகள் குழூஉக்குறி என்ற பாணியில் அமைந்திருக்கும். அது என்ன என்றால், பரிபாஷையில் ஒரு கருத்தை சொல்லியிருப்பார்கள். சாதாரணமாக வாசிக்கும் பொழுது ஒரு அர்த்தமும், ஆழ்ந்து ஆராய்ச்சி நோக்கோடு படிக்கும் பொழுது உண்மை அர்த்தமும் விளக்கமாக கிடைக்கும். ஒருவகையில், சித்தர் பரம்பரையினர் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என்றும் சொல்லலாம். இந்த வரிசையில் இன்னும் நமக்கு புரியாத, விளங்கிக் கொள்ளமுடியாத எண்ணற்ற சித்தர் கவிபாடல்கள் இருக்கின்றன என்பதே உண்மை.

இந்த மனமது பாடல் குறித்த உண்மை வேறு யாரேனும் சொல்லியிருக்கிறார்களா? என்று தேடும்பொழுது, தமிழ்நாடு ஆன்மீக யாத்திரைக்குழு என்ற வலைப்பூவில், ஒர் பதிவையும் கண்டேன். நல்ல விளக்கம் எனினும் ஓரளவிற்கு யோக விளக்கத்தோடு அமைந்திருந்தது. அதை இன்னும் தெளிவாக இங்கே காண்போம்.

மெய்ப்பொருள் உண்மையை யோகத்தின் வழியே தேடும் ஒரு சீடருக்கு சொல்லுவது போல இந்த கவி அமைந்திருக்கிறது! இந்த மனம் செம்மை நிலைக்கு வரவேண்டும் என்றால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் கிடைத்துவிடாது. அதற்கு யோகத்தில் இணையவேண்டும். குருவின் உதவியும் கண்காணிப்பும் வேண்டும். உலகியலில் இப்போது வழங்கப்படும் யோகம் அல்லாத வேறெந்த மன பயிற்சியும் நிச்சயமாக உதவிடாது. சில நாட்கள் நன்றாக, தெளிவாக இருக்கலாம், மறுபடி பழையமாதிரியான நிலைக்கு தானாக மாறிவிடுமே?!

இப்போது, இந்த கவி, அஷ்டாங்க யோகத்தின் படி, ஓவ்வொரு உயர்வையும் காட்டுவதாகவே பார்க்கமுடியும். யோகத்தில் இணைந்து கொண்டு, அந்தக்கால முறைப்படி மந்திரம் சொல்லிவந்தால், முதல் நிலையில் மனம் செம்மையாகும். அது என்ன மந்திரம்? ‘ஓம் நமசிவய’  (பஞ்சாக்ஷர மந்திரம்)  என்பதுதான் சித்தர்களின் அடிப்படையான மந்திரம். இந்த பஞ்சாக்ஷர, ஐந்தெழுத்து ரகசியம் என்ன? என்று பார்த்தால்,  ந நிலம் /ம நீர் / சி நெருப்பு / வ காற்று / ய வானம் என்பதாகும்! இதனோடு முன்பாக ‘ஓம்’ என்று சொல்லப்படும். ஆனால் இப்போது நீங்கள் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது எனது ஆலோசனை.  ஏன் சொல்லக்கூடாது என்பதை பிறகு, இன்னொரு பதிவில் பார்க்கலாம்!

இப்படி மந்திரம் சொல்லிச் சொல்லியே மனம் செம்மையானால், அந்த மந்திரம் செபிப்பதை விட்டு விட்டு, வாயுவை உயர்த்தவேண்டும். அதாவது பிராணாயமம் செய்யவேண்டும். இந்நிலையில் மனம் செம்மையானால், பிராணாயமம் வழி வாயுவை உயர்த்த வேண்டாம். அடுத்ததாக, வாசியோகம் தொடரவேண்டும். அந்த வாசியோகத்தின் வழியே நம்முடைய மனம் செம்மையானால், வாசியையை நாம் நிறுத்தவேண்டியதில்லை, அது தானாகவே நிகழந்து, மனதை அடுத்தும் செம்மையாக்கிவிடும். இப்படி ஓவ்வொரு நிலைக்கும், இந்த மந்திரம் மனதை செம்மையாக்குகிறது. அதனால் மந்திரமே செம்மையானது என்று அகத்தியர் பெருமான் இந்த உண்மையை கவி வழியாக சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

Why is my mind always agitated and nervous?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனம் எப்போதும் படபடப்பாகவோ, பதட்டமாகவோ இருக்கிறது ஏன்?


பதில்:

உலக வாழ்வில் சராசரி மனிதர்கள், இயல்பாக இருக்கும் மன நிலை அப்படித்தான். எதையாவது செய்யவேண்டும், எதையாவது பெறவேண்டும், எப்படியாவது வாழ்வில் முன்னேறி மற்றவர்களை விட நன்றாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுடைய பெற்றோர் வளர்த்தமுறையும், இந்த சமூகத்தின் வழியாக அவர்களுக்கு கிடைத்த பாடமும் துணை செய்கிறது எனலாம். இந்தமாதிரியான மனிதர்களுக்கு ஒரு பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அது என்னவென்றால், ‘யாராவது என்னை ஏமாற்றிவிடுவார்கள், நாம் யாரிடமும் ஏமாறக்கூடாது, நம் உரிமையை இழந்துவிடக்கூடாது, போராடியாவது ஜெயிக்கவேண்டும், நாமே முதன்மையாக பெற்றுவிடவேண்டும், நாம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது’ என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருக்கும்.

இந்த நபர்களில் நீங்களும் ஒருவரா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் இப்படியான சிந்தனை ஓட்டம் இருப்பது உண்டு எனினும், வேதாத்திரியத்தில் கற்றுக்கொண்ட நாள்முதல், மாற்றம் பெற வாய்ப்பு அதிகம் உண்டு. என்றாலும், பழக்கதோசம் என்ற ஒன்று இருப்பதால், மனம் மாற்றம் பெற கொஞ்சம் காலமும் ஆகலாம்.

இதை நீங்களே உணர்ந்து, ஏன் நான் பழையபடியே இருக்கிறேன்? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு சிந்தனை செய்யுங்கள். வேதாத்திரிய வழியில், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்யுங்கள். மிக குறுகிய காலத்தில் உங்கள் மனம் தெளிவடையும். முக்கியமாக, இந்த சமூகம் குறித்தும், சக மனிதர்கள் குறித்தும் உங்களுக்கு இருக்கும் அச்சம், பயமே உங்களையும், உங்கள் மனதையும், உடலையும், படபடப்பாகவும், பதட்டமாகவும் வைத்திருக்கிறது. 

எந்த வகையிலும் உங்கள் வாழ்க்கையை, உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்பதை நீங்களாகவே அறிந்து உணரும் காலம் வரும். அதை நான் இங்கே விளக்கிச் சொன்னால் ‘நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், மேலும் தயங்குவீர்கள்’ என்பதே உண்மை. அனுபவமாக நீங்களே அந்த விளக்கத்தை பெறும்பொழுது ‘அடடா, இவ்வளவு காலம் இப்படியாக வீண் செய்து விட்டேனே’ என்று வருந்தும் அளவிற்கு உண்மையை புரிந்துகொள்வீர்கள். 

வாழ்க வளமுடன்.

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பரிகாரமாக, நவக்கிரக தவம் செய்யலாமா?


பதில்:

ஒரு சோதிட குறிப்பில், குழந்தை பிறந்த நேரம் என்பதைக் கொண்டு, வானில் எந்தெந்த கிரங்கங்கள் எங்கிருந்து தன்னுடைய காந்த அலையை வீசுகிறது என்பதைத்தான் நாம் ஜாதகம் என்று சொல்லுகிறோம். பெரும்பாலான ஜாதகங்களில், மிகச்சரியான நேரம் என்பது குறைவுதான். மேலும் வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டுவகையான பஞ்சாங்க உதவியும் கூட பிறந்த குழந்தையின் லக்கனம், பிறந்த நட்சத்திர பாதம் ஆகியவற்றையும், வக்கிர, நகர்ந்த கிரகங்களின் இருப்பிடத்தை மாற்றிவிடும். என்றாலும் கூட கிரகங்களின் காந்த அலை வீச்சு என்பது உறுதியானதுதான்.

ஒரு ஜாதக கணிப்பில், ஆராய்ச்சியில் ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சனை தீரவும், வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து தீர்க்கவும் நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஒரு ஆறுதலான வார்த்தைகள் தந்து உதவுவது போல. பெரும்பாலானவை அனுபவித்து தீர்ப்பது என்பதாகவே இருக்கும். ஆனாலும் வாழும் மனிதனுக்கு இயற்கை கொஞ்சம் கருணை காட்டத்தான் செய்கிறது. அதனால் மனம் உடைந்து கலங்கவேண்டிய அவசியமில்லை

இங்கே பரிகாரம் என்பது, மன நிறைவு, மனதுக்கு ஆறுதல் என்பதுதானே தவிர வேறெதும் இல்லை. இந்த பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கும் பல்லாயிர சோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதும் இப்போதைய நிலைதான். அதை நாம் குறைசொல்ல முடியாது எனினும் அவர்களிடம் சிக்காமல் விலகி இருக்கவேண்டும். கோவிலுக்கு போவது, பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது, தானம் செய்வது, யாகம் வளர்ப்பது என்று எத்தனையோ செய்தாலும் கூட இருப்பதும், வரப்போவதும் ஜாதகத்தில் மாறிவிடுவதில்லை. ஆனால் இதையெல்லாம் செய்தால் ஏற்படும் மன மாற்றம் நமக்கு உள்முகமாக நம்பிக்கையைத் தரும்.

ஆனால், வேதாத்திரியத்தின் வழியாக பயணிக்கின்ற ஒருவர், இந்த பரிகாரம் என்பதற்கு, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்தால், வழக்கமான பரிகாரதிற்கு மாற்றா? என்று கேட்டால் அது இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமாக பஞ்ச பூத நவக்கிரக தவம்  எந்த பரிகாரத்திற்கும் உதவுவதில்லை. என்றாலும் கூட, ஒவ்வொரு கிரத்தின், கோளின் மீதும் நம்முடைய மனதை நிறுத்தி, தவமாக செய்துவருகையில், அந்த கிரகம், கோளின் காந்த அலைவீச்சின் தாக்கத்தை, சமன் செய்துகொள்ளும் வகையில் மனம் மாறுகிறது என்பது உண்மையே! அந்த வகையில், வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் நிலைக்கு மனம் உறுதிபடுகிறது என்றும் சொல்லலாம். இது பரிகாரம் அல்ல எனினும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். 

தொடர்ந்து பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவரும் பொழுது, மனதின் சக்தியும், கிரகங்கள், கோள்களின் சக்தியும் கலப்புறுகிறது. அதன்வழியாக நாம் நன்மையே பெறலாம், பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக வந்துவிடும். நம்முடைய கடந்த கால நிலையை மாற்றிட முடியாது எனினும், வரப்போகிற நிலைமையை சரி செய்துவிடக்கூடிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் மட்டும், வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஒருவர் மட்டுமல்லாது, யார்வேண்டுமானாலும், தீட்சை பெற்றுக்கொள்ளாத எந்த ஒருநபரும் செய்து அதற்கான பலனைப் பெறலாம் என்பதுதான் இத்தவத்தின் சிறப்பாகும்! 

வாழ்க வளமுடன்.

I expect a lot of everything. When will I get it all?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் எல்லாமே நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். அது எல்லாமே எனக்கு எப்போது கிடைக்கும்?!


பதில்:

இந்த இயற்கையானது, அதன் மாபெரும் சக்தியானது, உங்களுக்குத் தேவையானதை நிச்சயமாக வழங்கும். அது உண்மை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், நீங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் தராது, கிடைக்காது. ஆனால், நீங்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. நிச்சயமாக நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்களுக்கு அதை பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கிறதா? என்று இந்த இயற்கையாற்றல் சோதனை செய்யும். அதன் வழியாக உங்களுக்கு என்ன தேவையோ, அதைமட்டுமே வழங்கத் தயாராகும்!

எனக்கு Law of Attraction, அது, இது, என்று எல்லாமே தெரியும்ங்க, எப்படியும் நான் கேட்டுப் பெறுவேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றுதானே சொல்லுவீர்கள். சரி, ஆனால் நான் உங்கள் ஆசையை நம்பிக்கை இழக்கச்செய்யவில்லை. ஆனால் புரிந்துகொள்ளுங்கள். எதன் வழியாக நீங்கள் எதிர்பார்த்தாலும் கூட , உங்களுக்கு எது தேவையோ அதுதான், வழங்கப்படுமேயன்றி  வேறெதும் கிடைக்காது! வேதாத்திரியம் வழியாக நீங்கள் கற்றுக்கொண்ட, தனா ஆகர்ஷ்ண சங்கல்பம் செய்தாலும் கூட, நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் கிடைக்காது. உடனே இதெல்லாம் பொய்யா? ஏமாற்றுவேலையா? என்று எதிர்கேள்வி கேட்டுவிடக்கூடாது.

உங்களுக்கென்று வழங்கப்படுவது தாமதமானால், நீங்கள் கேட்டு வாங்குவது தவறில்லையே?! அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எதிர்பார்ப்பே வேண்டாம், அது ஏமாற்றத்தைத்தான் தரும் என்று உறுதிபட சொல்லுகிறார். தேவை என்பது வேறு, விருப்பம் என்பது வேறு, எதிர்பார்த்தல் என்பது வேறு, வேண்டும் என்பது வேறு. இப்படி நான்கு வகையாக சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தனியாக சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நீங்களே கொஞ்சம் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.

இந்த எதிர்பார்ப்பு ஏன் வருகிறது? தேவை என்பதை மீறி நினைக்கும் பொழுதுதான் வருகிறது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவையோ அதை மீறி ஏன் எதிர்பார்ப்பு என்றால், அதற்கு மிக எளிய காரணம், நீங்கள் வேறு யாரையோ உங்களோடு ஒப்பிடுகிறீர்கள். அந்த யாரோ போல உயரவேண்டும், அவரை  விடவும் மேலாக உயரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் உங்களுடை தேவை என்பதை விட்டு விலகி, இவ்வளவு என்றோ, நிறைய நிறைய என்றோ எதிர்பார்க்கத் துவங்கிவிடுகிறீர்கள்.

இந்த ஏதிர்பார்ப்பதிலேயே நீங்கள் மனதை செலுத்தினால், மனதின் மகத்தான சக்தி வீணாகிவிடும். இருப்பதையும் இழக்கும்படியான வாழ்க்கை சிதறிவிடும். உங்கள் தேவைகள்கூட பறிபோகலாம். இதிலிருந்து விலக, அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து, உண்மையாகவே எனக்கு என்ன தேவை? என்று பட்டியலிட்டு அதை கேளுங்கள். கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.

-

Why there is scarcity always and no fulfillment in our earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில், பற்றாக்குறையாகவே, நிறைவே இல்லாமலேயே இருக்கிறதே ஏன்?


பதில்:

நம்முடைய பாரம்பரியமான இந்தியநாட்டில் இதற்கு நீண்டகாலமாலவே பதில் இருக்கிறது. இந்தியாவை இந்த உலக நாடுகள் ஆன்மீக நாடாகவும், ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும் நினைக்கின்றன. ஓவ்வொருவரும், இந்தியா வந்தால், ஏதேனும் ஒரு உண்மையான ஞானி, மகான், சாது, யோகி  தங்களுக்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் நாம்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதை உதாசீனம் செய்து வந்திருக்கிறோம். இன்றும் உதாசீனம் செய்துவருகிறோம். அது என்ன பதில்?

உலகில் பிறந்த மனிதரின் நோக்கம், பொய்யான, நிலையில்லாத இந்த வாழ்க்கையில், தன்னுடைய உண்மையை தேடுவது ஆகும். ஆனால் இதைச்சொன்னால் ‘இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, இது ஏமாற்று வேலை’ என்று முடிவுகட்டிட ஒரு தலைவர் வருவார். அவரின் அரைகுறையான சொல்லைக்கேட்டு பின்னால் செல்ல பெரும்மக்களும் தயாராவார்கள். இது ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. யாருமே உண்மை எது? என்று ஆராய்ந்து பார்க்க தயாரில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சமூகவாழ்வில், ஒருவர் தவறு செய்தால், அந்த சமூகமே குற்றவாளி என்று மொத்தமாக முடிவு கட்டிடத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆன்மீகத்தில் இப்படியான ஏமாற்றுப்பேர்வழிகள் உண்டு. அதை வைத்துக்கொண்டு மொத்தமான் ஆன்மீகமே பொய் என்றால் எப்படி?!

ஏன் ஆன்மீகத்தில் ஏமாற்றுபேர்வழிகள் உருவாகின்றனர்?! உலக வாழ்வில் தன்னையும் இயற்கையையும் உணர்ந்தவரையும், மெய்ப்பொருள் உண்மையை அறிந்தவரையும் நாம் ஞானி, மகான் என்று அழைக்கிறோம். அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம். கைகூப்பி வணங்கிடவும் செய்கிறோம் அல்லவே? இதைப்பார்க்கிற ஒரு ‘திருடனுக்கும்’ நாமும் இப்படி ஆகிவிடலாமே, மக்கள் என்னையும் வணங்கி, பொன்னும் பொருளும் தந்து காப்பார்களே! என்று நினைத்து ஒரு ஞானி, மகான் போல வேடம் தரித்துக் கொள்கிறான். இந்தமாதிரியான கபட வேடதாரிகள் தான் ஆன்மீகத்தை கெடுக்கிறார்கள். இவர்களால்தான் உண்மை சிதைகிறது!

உங்கள் வாழ்வில் பற்றாக்குறை இருப்பதும், நிறைவே இல்லாத மன நிலையும் இருக்கிறது என்றால், உங்களுடைய மனதின் தேடல் அது அல்ல! நீங்கள் தேடி அடைவதை அது விரும்புவதும் இல்லை. மனம் அதனுடைய இயல்பில், தன்னுடைய மூலத்தை அடைய விரும்புகிறது. ஆனால் அந்த மனதிற்கு உங்களிடம் கேட்கத்தெரியவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், இதுவா, அதுவா, என்று மனதை திருப்திப்படுத்த எல்லாவற்றையும் பெற முயற்சிக்கிறீர்கள். போராடுகிறீர்கள். மனமும் அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால் எல்லாம் கிடைத்தபிறகு மனம் ‘நான் கேட்டது இது இல்லையே?!’ என்று சொல்லிவிடுகிறது. இதுதான் தினமும் உங்களுக்கு நிழந்துகொண்டே இருக்கிறது. அப்படியானால் இதற்கு ஒரு தீர்வு என்ன? ஒரு ஆராய்ச்சி செய்து பாருங்கள். ‘உண்மையாக இந்த மனம் விரும்புவது என்ன?’ என்று கேள்வி கேட்டு அதற்கு விடை கண்டுபிடியுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Living on the earth where money is God, do we need to go through yoga and suffer?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் தான் கடவுள் என்ற சூழலில் வாழும் நமக்கு யோகத்தின் வழியாக செல்வதும், கஷ்டப்படுவதும் தேவையா?!


பதில்:

யோகம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாத கேள்வி இது என்று சொல்லலாம். தவறில்லை. ஆனால் இனியாவது உண்மையை புரிந்துகொள்ளுங்கள். உங்களைப் போலவே நிறைய அன்பர்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது உங்களை, யோகத்திற்கு வாருங்கள் என்று கட்டாயப்படுத்தினார்களா? என்று தெரியவில்லை. அப்படி அழைத்தாலும் உடனே ஒருவர் யோகத்திற்கு வந்துவிடுவதும் இல்லைதானே?!

இப்போதைய வாழும் சூழலில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு யோகத்திற்கு வந்துவிடவேண்டும் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள் என்று தெரியவில்லையே?! அது யாராக இருக்கும்?

வாழும் உலகில், பணம், பொருள், செல்வம் நிச்சயமாக தேவை. அது தனிமனிதனாக இருந்தாலும், குடும்பமாக வாழ்ந்தாலும், அவர் /அவர்களுடைய வாழும் காலம் முழுவதும் தேவைதான். அதில் ஒரு நிறைவு வருகின்றவரை, பொருளீட்டி சம்பாதித்துத்தான் ஆகவேண்டும். யாரும் உங்களுக்கு தானாக (தானமாகவும்) தரமாட்டார்கள், யாரை நம்பியும் அவர்கள் இந்த உலகில் வாழவும் முடியாது. அப்படியான சூழலில் ஏன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு யோகத்தில் இணையவேண்டியது என்று நினைக்கிறீர்கள்?. அப்படி, சம்பாத்தியம், வேலை, வியாபாரம், தொழில், குடும்பம், இன்பம், மகிழ்ச்சி, விருப்பம் இப்படி எல்லாவற்றையும் இழந்துதான் யோகத்திற்கு வரவேண்டும் என்று ஏன் / எதற்காக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லையே?! நீங்களாக அப்படி புரிந்துகொண்டீர்களா? வேறு யாரும் அப்படியான அறிவுரை சொல்லி வழி காட்டினார்களா?! 

தற்போதைய உலக வாழ்க்கையில் பணம் மிக அவசியமே, ஆனால் அதற்காக அதை கடவுள் என்ற உயர்ந்த மரியாதையை தராதீர்கள். அது தவறு. பணம் குறித்த புரிதலில் நீங்கள் இல்லை என்று நிச்சயமாக சொல்லலாம். ஆனாலும் உலகமக்களில் பெரும்பாலோர் இப்படி பணம் குறித்த மயக்கத்தில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

அடுத்தாக யோகத்திற்கு வந்தால் கஷ்டப்பட என்ன இருக்கிறது? யார் அப்படி கஷ்டப்பட்டார்கள்? வீட்டை துறந்து, பெற்றோரை விலக்கி, வாழ்க்கைத்துணையை, குழந்தைகளை, நண்பர்களை, உற்றாரை எல்லாம் விட்டுவிலகி, இதுவரை வாழ்ந்த வாழ்க்கையும் விட்டு காட்டுக்கு போய், துறவறம் பூண்டு, ஆடை இழந்து, ஏதெனும் குகையில், மரத்தடியில், ஜடாமுடி, தாடியோடு, பசிமறந்து இன்றைய காலத்தில் யார் அப்படியான யோகத்தில் இருக்கிறார்கள்? உங்களை அப்படி யாரும் போய்விடச் சொன்னார்களா?

உண்மையாக நீங்கள், பணம் மற்றும் யோகம் இந்த இரண்டுக்குமான உண்மையை புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் தெரிகிறது. அதை உங்கள் ஆசிரியரிடம் கலந்து பேசி விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள். அதுதான் மிகச்சிறந்த வழியாகும்! 

குறிப்பு: இப்படியான பதிலை படித்துவிட்டு,  மாற்றத்தை விரும்பிடாத ‘பழமைவாதிகள்'  சிலர், அப்படியானால் பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்து என்பதுபோல இவர் பதில் சொல்லுகிறாரே, இவரெல்லாம் யோகியா? என்று கேட்பார்கள். இந்த பழமைவாதிகள்தான் உங்களையும் குழப்பியிருப்பார்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற அந்த ‘பழமைவாதிகளை’ விட்டு விலகுங்கள்!

வாழ்க வளமுடன்.

-


If repentance is the basis of yoga, then there is no need for yoga at all?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பொதுவாக பார்த்தால் திருந்தி வாழ்வதுதான் யோகத்தின் அடிப்படி என்றால், யோகம் தேவையே இல்லையே?!


பதில்:

நீங்கள் மிக நன்றாக, ஆனால் குறுக்குவழியில் யோசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஒரு வகையில் நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் திருந்தி வாழ்வது என்பது சும்மா கிடைத்துவிடாது, திருத்தி வாழவும் முயற்சிக்க வேண்டுமே?! இந்த திருந்தி, திருத்தி என்ற இரண்டுக்கும் உள்ள அர்தத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள். திருந்தி என்பது இருப்பதை அப்படியே வைத்துக்கொண்டு திருத்தமாக வாழ்வது என்று தெரியவரும், ஆனால் திருத்தி என்பது இருப்பதை அடியோடு மாற்றியமைத்து முற்றிலும் புதிதாக வாழ்வது என்று தெரியவரும். இப்போது உங்களுக்கே தெரியும் எது சிறந்தது என்று? சரிதானா?

இப்போது உங்கள் வீட்டில் பழைய, அந்தக்கால பித்தளை பாத்திரங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம் பெரும்பாலும் எவர்சில்வர் என்பதுதான் பயன்பாடாக இருக்கிறது. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன. எனினும் ஓர் உதாரணத்திற்காக இங்கே காணலாம். பழைய பாத்திரங்கள் அளவில் பெரியதாகவும், வடிவமற்றும் இருக்கலாம். பயன்படுத்தாமல் போய் வீட்டில் பரணில் மூட்டை போட்டு கட்டிவைத்திருப்பார்கள். அவற்றை இன்று எடுத்துப்பார்த்தால் அழுக்காக, கருப்படைந்து இருக்கும் என்பது உண்மை.

அவற்றை கொஞ்சம், சமையலுக்கு பயன்படும் புளியை கரைத்த நீரில் கழுவினால், அந்த பித்தளை பாத்திரங்கள் அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும். இப்போதைய பயன்பாட்டிற்கு வரலாம். ஆனால் யாராது தூக்கி இறக்கி வைக்க முடியுமா? கடினம். இப்போது இந்த பித்தளையை இழக்க மனமில்லை. ஆனால் பயன்பாடு கடினமாக இருக்கிறது என்றால், அதை ஏதேனும் நிறுவனத்தில் கொடுத்து உருக்கி, உங்களுக்கு தேவையான பாத்திரமாக, தெய்வ உருவங்களாக, கலைப் பொருட்களாக மாற்றி அமைத்து, உங்கள் வரவேற்ரையில் வைத்து பாராட்டு பெறலாம் அல்லவா?

இந்த உருக்கி மாற்றி புதிதாக உருவாக்குதல் தான் யோகத்தில் நமக்கு நிகழ்கிறது. அதுதான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூலம் அறிய, நான் யார்? என்று பதிலைப் பெற, இயற்கையை அறிந்துகொள்ள, மெய்ப்பொருள் உண்மையை அறியவும் தேவையாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் யோகம் ஏன் தேவைப்படுகிறது? ஏனென்றால் உங்களின் பரம்பரையில் இதுவரை யாருமே செய்யாத, விரும்பாத, வாய்ப்பு கிடைக்காத, தவறவிட்ட ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்தக் களங்கள் நீக்கிட வேண்டாமா?!

வாழ்க வளமுடன்.

-

Hope we can understand the secret of the beyond universe by science. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நவீன அறிவியல் வழியாக மனிதனின் மூலத்தை, பிரபஞ்சதிற்கு அப்பால் உள்ள ரகசியத்தை அறிந்துகொள்ள முடியாதா?


பதில்:

நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவரா? நீண்டநாள் வேதாத்திரிய சாதகரா என்று தெரியவில்லை. எனினும் விளக்கமாகவே சொல்லுகிறேன். குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ற பாமர மக்களின் தத்துவஞானி, தன்னுடை மெய்ப்பொருள் விளக்கத்தை விஞ்ஞானப் பார்வையில்தான்தான் விளக்கிச் சொல்லுகிறார். சந்தேகம் இருந்தால், அவரின் மனவளக்கலை நூலின் மூன்று பாகங்களும் உடனடியாக படியுங்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் காணொளி பதிவுகளை கேளுங்கள். உங்களுக்கே அது புரியவரும்!

நீங்கள் சொல்லும் நவீன அறிவியல், இன்னமும் சூரிய மண்டலத்தையே கடக்கவில்லையே?! சரி, அது ஏன் அறிவியல் என்று சொல்லாமல் விஞ்ஞானம் என்று சொல்லப்படுகிறது என்றால், அணு, அண்டம், விண், விண்வெளி குறித்த ஆராய்ச்சியை விண்ஞானம் என்று தானே சொல்லமுடியும்? ஆனால் ஏதோ அறிவியல் என்று தவறாக தமிழ்ப்படுத்தி விட்டார்கள் என்றே கருத்து நிலவுகிறது! இங்கே நாமும் விஞ்ஞானம் என்றே சொல்லிப்பழகுவோம்.

‘முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்

மொழிவதற்கு வார்த்தையின்றி முட்டிமோதி நின்றனர்

இந்தநாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை

இயங்கிடும் மின்சாரம்மூலம் எல்லோர்க்கும் உணர்த்தலாம்’

என்று தன்னுடைய ஞானக்களஞ்சியம் கவி வழியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தத்துவமாக மெய்ப்பொருளை குறிப்பிடும் பொழுது, மொழியால், வார்த்தையால், விளக்கத்தால் அங்கே ஓர் முழுமை கிடைப்பது கடினம். உள்ளதை உள்ளவாறு அறிய நீண்டகாலமும் எடுத்துக்கொள்ளும். அதனால்தான், அந்தக்கால கடினமான யோகத்தின் வழியாக உயிரின் உண்மையையும், இறையுண்மையையும் கண்டறிந்த சித்தர்கள், எளிய மக்களுக்காக பக்தியை உருவாக்கினார்கள். அதாவது வார்த்தையின்றி, விளக்கமின்றி, வணங்கும் கருத்தின் வழியாக நாளடைவில் உண்மை அறியலாம் என்ற வகையில் அதை அமைத்தார்கள். ஆனால் தற்காலத்தில் அதன் நோக்கம் திசைமாறிவிட்டது.

அப்படியானால், விஞ்ஞான விளக்கம் மெய்ப்பொருளை, இறையுண்மையை சொல்லிவிடுமென்றால், யோகமே தேவையில்லையே என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்ப்பீர்கள் தானே? அதற்கும் பதில் உண்டு. ஒரு உண்மையை 1) அறிந்து கொள்ளுதல் 2) புரிந்துகொள்ளுதல் 3) உணர்ந்துகொள்ளுதல் என்ற மூன்று வழியாக நமக்குள் எடுத்துக்கொள்ளலாம். விஞ்ஞானம் இந்த முதல் இரண்டுக்கு மட்டுமே உதவுகிறது. உதவ முடியும். அதுதான் அதனுடைய எல்லை. அதற்குமேல் விஞ்ஞானம் நகராது. அப்படியெல்லாம் இல்லீங்க, அறிவியலால் என்னென்ன உண்மையகள் அப்பட்டமாக தெரியவருகிறது என்று நீங்கள் அறிவீர்களா? என்று நீங்களே சொல்லலாம். அப்படியானால், உங்களால் முடியுமானால் கூட நகர்த்திப்பாருங்கள். (இதை ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால், நீங்கள் என்றால் நீங்கள் அல்ல. எதைச் சொன்னாலும் எடக்குமுடக்காக எதிர்கேள்வி கேட்பதற்கு சிலர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்காக!)

இன்னொரு விளக்கத்தையும் சொல்லி முடிக்கிறேன், கன்னியாகுமரி என்ற ஊர், இந்தியாவின் தென் கோடியில், தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கிறது. அந்த ஊரில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை NH52 வழியாக, நம் நாட்டின் தலைநகர் டெல்லி வரை செல்லலாம். அங்கே டெல்லி என்ற ஒரு கைகாட்டி இருப்பதாக வைத்துக்கொண்டால், அது டெல்லி அல்ல. அந்த சாலை வழியாக 2860 கிலோமீட்டர் நகர்ந்தால்தான் டெல்லி என்ற நகரம் கிடைக்கிறது. அதுபோல விஞ்ஞானம் வழியாக மெய்ப்பொருள் நிலையை அறியலாம், புரிந்தும் கொள்ளலாம். ஆனால் தத்துவத்தின் வழியாக மட்டுமே உணரமுடியும்!

கடைசியாக, விஞ்ஞானமில்லா மெய்ஞானம் நொண்டி, மெய்ஞானமில்லா விஞ்ஞானம் குருடு என்ற பழமொழியும் நம்மிடையே உண்டு.

வாழ்க வளமுடன்.

Upadesh Mantra from the Guru!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குருவால் கிடைத்த உபதேச மந்திரம்  சொன்னால் இறையுண்மை அறியமுடியுமா?.


பதில்:

இந்த உலகில், இறையுண்மை எனும் மெய்ப்பொருள் உண்மை அறிய, பக்தி வழி, வேதாந்த வழி மற்றும் யோகவழி உண்டு. பக்தியைக்கூட வேதாந்தமாக சொல்லுவோரும் உண்டு. இந்த வேதாந்தம், யோகம் இரண்டுமே ஒரே நோக்கம் கொண்டது. ஆனால் பாதைகள் வேறு ஆகும். இரண்டு பாதைகளுமே குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும், அது பயணாளியின் நம்பிக்கை, ஆர்வம், முயற்சி, செயல்பாடு, ஆராய்ச்சி, அர்பணிப்பு என்ற வகை நிர்ணயம் செய்யமுடியும். ஒரு மனிதரால் எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ? அதை ஏற்று பயணிக்கலாம். எதை விரும்புகிறாரோ அதை விரும்பியும் பெற்று பயணிக்கலாம். எது சரியானது என்று தீர்மானிக்கிறாரோ அதன்படி அவ்வழியே செல்லலாம். அந்த வகையில் குறை நிறை என்றெல்லாம் சொல்லமுடிவதில்லை. என்றாலும் கூட வேதாந்தம் என்பது அருகில் கொண்டுபோய் நிறுத்தும் என்றுதான் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதை அடைவது என்பது யோகத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் உலகில் மாற்றுக்கருத்துகள் உண்டு!

ஒரு உபதேச மந்திரம் என்பது ஒரு குருவால், பக்தி வழியிலும் கிடைக்கலாம். வேதாந்த வழியிலும் கிடைக்கலாம். இந்த உபதேச மந்திரம் குருவால், அந்த புதிய, ஆரம்ப சாதகருக்கு, சீடருக்கு தனியாக, ரகசியமாக, பிறருக்குத் தெரியாமல், அறியாமல், காதுவழியாக சொல்லப்படுவது ஆகும். இந்த உபதேச மந்திரத்தை மனதிற்குள்ளாகவே சொல்லுவதும் உண்டு. தவ நிலையில் அமர்ந்து ஒலிக்குறிப்பாக சொல்லுவதும் உண்டு. இந்த வழியை, பதஞ்சலி முனிவர் தன்னுடைய அஷ்டாங்க யோகத்தில் ‘பிரத்தியகாரா’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி உபதேச மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தால் மனம் லயப்பட்டு, ‘தாரணா’ என்ற நிலைக்கு உயரும். தன் வழியாக ‘தியானம்’ கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு!

எனவே உங்களுக்கு அப்படியான ஒரு உபதேச மந்திரம் கிடைத்தால், தாராளமாக உள்வாங்கி சொல்லிவரலாம். எத்தனை முறை, எவ்வளவு காலம் என்ற கணக்குகள் இதில் அடங்காது. உங்கள் மனம் அதில் லயிக்கும் காலம் வரை சொல்லிக்கொண்டே வரலாம். அந்த நிலையின் ஏதோ ஒருநாள் இறையுண்மையை நீங்கள் உணரலாம்.

திருவண்ணாமலையில், வாழ்ந்து வந்து வாழ்ந்து, முக்தியடைந்த, யோகி ராம் சுரத்குமார் அவர்கள், தன்னுடைய குருவான சுவாமி பப்பா ராம்தாஸ் என்பவரிடம் இருந்து, உபதேச மந்திரம் கிடைக்கப்பெற்றார். அதுதான் பின்னாளில் அவர் சொன்ன,

‘ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம்! ஓம்!’ என்பதாகும்!

வாழ்க வளமுடன்.

Why astrologers mostly failed on the foretelling?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?


பதில்:

அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால்,  அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.

இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.

சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.

இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை  தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ  நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!

முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்.

Someone told to me, the vasiyoga is the best way. Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று என்னிடம் சொல்லுகின்றனர். அது சரிதானா?


பதில்:

சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று அவர்கள் சொல்லுவதில் தவறில்லை. ஆனால், இப்போது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாயிற்றே. ஏற்கனவே வாசியோகத்தின் வழியாக, குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து மேலேற்றி, ஆக்கினைக்கு கொண்டுவந்து நிறுத்திப் பழகியவர் மட்டுமே, அதை பிறருக்கு சொல்லமுடியும். இந்தப்பயிற்சியில் ஏகப்பட்ட தடைகள் வரலாம். உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் வரக்கூடும். எல்லோருக்குமே முதல் முயற்சியிலேயே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி எழுந்துவிடுவதும் இல்லையே. முதலில் இதற்கான நுட்பத்தை சொற்களால் விளங்கிக் கொள்வதே கடினம்.

சரி, இன்னமும் இந்த வாசியோகம் முறையில்தான், குண்டலினி சக்தியை ஏற்றிக்கொள்ள வேண்டுமா? வேறு ஏதேனும் வழிகளே இல்லையா? கிடையாதா? கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாதா? அப்படி பயன்படுத்தினால் என்னதான் சிக்கல்?

சித்தர்கள் காலத்தில், கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட அதே வாசியோகம் தான் இன்னமும் இருக்கிறது என்று எப்படி நம்புவீர்கள்? அதுப்போலவே அந்தக்கால கடின சாதனைகளை இப்போதும் நாம் செய்யத்தான் முடியுமா? அதற்கான உடல் வலுவும், மன வலுவும் கூட இருக்கிறதா? 

ஆனால், இயற்கையும், அந்த தெய்வீகமுமே, சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, ஏற்கனவே தன்னிலை அறிந்து, மெய்ப்பொருள் அறிந்த ஒருவர், தன்னுடைய தவ ஆற்றல் சக்தியினாலேயே, மற்றறொருவருடைய குண்டலினி சக்தியை தொட்டு எழுப்பி, உடனடியாக, ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற விளக்கம் வந்துவிட்டதே?! குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் ஆண்டுக்காலத்திற்கு முன்னேலாயே நடைமுறையில் இருந்திருக்கிறது.  ஆனால் பரவலாக்கப்படவில்லை. ஆனால், வேதாத்திரி மகரிசி தானும் பெற்று, விளங்கிக் கொண்டு, தன்னுடைய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ வழியான ‘மனவளக்கலை’ மூலம் உலகில் உள்ள எல்லோருக்கும் கற்றுத்தந்து இன்னமும், அந்த தொட்டு எழுப்பி உயர்த்தும் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், இன்னமும் பழமையே சிறப்பு என்று தன்னை வருத்திக்கொள்வதில் பலன் என்ன? காலம்தான் வீணாகும் அல்லவா? ஆனால் உங்கள் விருப்பம்போல தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அதையாரும் தடுப்பதற்கில்லை!

வாழ்க வளமுடன்.

-

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

Why astrology prediction is available for Jupiter, Saturn and Rahu Ketu only?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குரு கிரக பெயர்ச்சி, சனி கிரக பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று மட்டுமே ஜோதிடர்கள் பலன் சொல்லுவது ஏன்?


பதில்:

ஜோதிடர்கள், உங்களுடைய ஜாதக கணிப்புப்படி எல்லா கிரக நிலைகளையும் ஆராய்ந்து, இப்போதுள்ள கோள் சார பெயர்ச்சி நிலைகளையும் கொண்டுதானே பலன் சொல்லுகிறார்கள். என்றாலும் பொதுவெளியில், ஜாதகம் கொண்டு சொல்லாமல் பொதுபலன் சொல்லும் பொழுது, ராசிகட்டங்கள் படி, குரு, சனி, ராகு, கேது கிரங்களின் பெயர்ச்சிகளை சொல்லுவார்கள். அப்படி இந்த நான்கு கிரங்களை மட்டும் மைப்படுத்திக் கொண்டு சொல்லுவதற்கும் சில காரணங்கள் உண்டுதான்.

ஏனென்றால், இவற்றின் நகர்வு கடந்து நீண்டகாலம் ஒரே வீட்டில் சஞ்சரிக்கும் தன்மை கொண்ட கிரகங்கள் ஆகும். உதாரணமாக சனி கிரகம், கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஒரு ராசி வீட்டில் தங்கிச்செல்லும். சில காலம், பின்னோக்கியும் நகர்ந்திடும். அதை வக்கிர நிலை என்று சொல்லுவார்கள். மேலும் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகமும் ஆகும். இதனால் எப்படிப் பார்த்தாலும் 3 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மூன்று ஆண்டுகள் ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பது ஆராய்ச்சிக்குறியதுதானே?! எனவே சனி கிரகம் பட்டியலில் இருக்கிறது.

குரு கிரகம் அளவிலும், நன்மையான சக்தி அளிப்பதிலும் பெரியது. கிட்டதட்ட 1 ஆண்டுக்காலம் ஒரு ராசியில் தங்கி செயல்படும். இக்கிரகத்திற்கும் வக்கிர நிலை உண்டு. அதனால் குருவும் பட்டியலில் இருக்கிறது.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி, அந்த ராசிக்குரிய கிரக பலன்களை தருவார்கள். இக்கிரங்களுக்கும் வக்கிர நிலை உண்டு. நம்மை வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களில், ராகு கேது கிரங்களே முக்கியமானவையாகும். இதனால் ராகுவும் கேதுவும் பட்டியலில் இருக்கிறது.

மற்றபடி சூரியன், செவ்வாய், சுக்கிரன் 1 மாதம் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த ராசிகளுக்கு போய்விடுகிறது. புதன் கொஞ்சம் சீக்கிரமாகவே ஒவ்வொரு ராசிவீடாக போய்வரும். சந்திரன் 2.5 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசிக்கட்டமாக நகர்ந்துவரும். இந்த சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவையும் ஒரு ஜாதகருக்கு பாதிப்பை தருகிறது என்றாலும் கூட காலம் சிறியதாக இருப்பதால், உடனடியாக அது கடந்தும் விடுமே? அதனால் பொதுவாக சொல்லும் பொழுது தவிர்த்துவிடுகிறார்கள். இதுதான் காரணம்! 

மேலும் இத்தகைய பெரிய கிரகங்களின் அருகாமையும், தூரமும் கூட நம்மை பாதிக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.