July 2020 | CJ

July 2020

All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே!


இந்த உலகத்தில், ஆண், பெண், மூன்றாம் பாலினம் இப்படி கலந்துதான் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் தனித்த பாலினமாக நாம் உணர்வது எப்போது? எப்படியானாலும், தன் பாலினம் மீதும், பிற பாலினம் மீதும் கவர்ச்சி ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

சில வேலைகளில், சிலர் தன் பாலினத்தை இயற்கையை மீறி மாற்றிகொள்ளவும் துணிகின்றனர். அப்படியான விபரங்கள் குறித்த ஒரு காணொளி. 

வேதாத்திரி மகரிசி மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து தத்துவங்கள்


வேதாத்திரிய தத்துவங்கள்: Vethathiriya Philosophy Collection (Tamil Edition) Kindle Edition

 
அருட்தந்தை வேதாத்திரி மகரிசி, எளிய மக்களின் ஞானி. தன் வாழ்நாள் முழுதும், மக்களுக்காகவே, மக்களையே இறையாக பாவித்து தொண்டு செய்து உய்வித்தவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற அற்புத மந்திர வார்த்தைக்கு சொந்தக்காரர். எவரொருவரும் தன்னை அறிந்து, உணர்ந்து, அந்த வழியாகவே இறையை அறிந்து கொள்ளும், எளிய யோக சாதனையை, மனவளக்கலை மூலம் இந்த உலகுக்கு தந்தவர். உலக சமுதாய சேவா சங்கத்தின், நிறுவனர்.

ஓவ்வொரு தனி மனிதனும், தன் களங்கங்களை போக்கி, தன்னை மனதை, தன் அறிவை உயர்த்திக்கொள்வதன் மூலமாகவே, எல்லைகளில்லா ஓர் உலகமும், கூட்டாட்சியும், அதன் வழியாக உலக சமாதானமும் மலர வழி அமைத்து, எல்லோரையும் வழி நடத்துபவர். அவரின் தத்துவங்கள், கல்லூரி பாடமாகவும், பாடநூலாகவும் இளைய சமுதாத்தினரை சென்று சேர்ந்திருக்கிறது.

மனம் என்றால் என்ன என்பதற்கும், இறை என்றால் என்ன என்பதற்கும் தெளிவான விளக்கம் கொடுத்தவர். அந்த மனதை அறிந்தாலே அதனுள்ளே உறைந்திருக்கும் இறையையும் அறிய வழி கொடுத்தவர்.

இருபத்தைந்து ஆண்டுகளாக, 1953 ம் ஆண்டு முதலாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களில் துணைவியார், வாசலில் கோலமிடும்பொழுது, மகரிசி சொல்லும் அருளுரைகளையும் எழுதுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அருளுரைகளை நூலாக பதிவு செய்து, “மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து” எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க அன்பர்கள், வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அருளுரைகளின் சாரத்தை, இங்கே தத்துவமாக விரித்து, கருத்தாக்கம் செய்திருக்கிறேன். அருட்தந்தை வேதாத்திரி மகரிசியின் வார்த்தைளில் கண்ட உண்மைகளை, அவர் சொல்லிச்சென்ற வார்த்தைகளின், அனுபவங்களின் வாயிலாகவே தர முனைந்திருக்கிறேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி வழி செல்லும் அன்பர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், தேடலை துவங்கும் தனிமனிதருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களை, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

அமேசான் மின்னூல் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

https://amzn.to/38ewMWY