January 2016 | CJ

January 2016

PHOTOSHOP DOODLE ART - 5



Today,
I did this Photoshop Digital painting, and like to share with you and how i do it?

First
See the Final Result


Work process:

Gesture - I choose one photograph (from Google Search)

Secondly the unclean base sketch is ready

Base Color form - You can use pen tool for best curve lines or make it manual with mouse pen ( I used) 

Layer and over layer color process - You can use many layers

Background - finally I use motion blur filter effect

Final Result


Hope you like it and do study now :)

Photoshop Doodle Art - 3


Hi all
Today the Next one, this time I do not use blend. It looks very different but awesome.
See the Result...




Anyone can do like this, if you a art lover or art student? Break the rules, jump over the circle around you... Start just, start... do like new learner in Sketch and Paint!

Keep Going your study!!

PHOTOSHOP DOODLE ART - 2


Based on Photograph,
I started this sketch at nights for this doodle artwork with digital brushes, after 120 minutes, I got this result... It looking as simple lightings, but give a pain to fingers :P But I Love this result...

You can Try!


Click image, see bigger result

Photoshop Doodle Art


போட்டோஷாப் (Photoshop) என்னும் மென்பொருளில் வரையும் இத்தகைய ஓவியங்கள் (Doodle Art) மிகச்சிறந்த கவனத்தை பெறுகின்றன. இதற்கென தனி ஓவிய பொருட்கள் (Photoshop Brush) இலவசமாகவும், வாங்கக்கூடியவிலையிலும் கிடைக்கின்றன.

இவை பேஸ்டல் (Pastel) எனும் வரை பொருளில் வரைந்தது போலவே தோற்றமளிக்கின்றன. ஓவிய பாடமுறைகளில் இவை காட்சி வடிவமைப்பு (Visual Development) என்று அழைக்கப்படுகிறது. கார்டூன் (Cartoon), அனிமேசன் (3D Animation) திரைப்படங்களில் ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று வரையப்படும், கோட்டு ஓவியங்களைக்கடந்து, இத்தகைய வண்ணமய ஓவியங்கள் நிலைப்பெற்றிருக்கின்றன. இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எல்லையில்லாது, ஓவியரின் காட்சித்திறனை அப்படியே பெற்று ஒளிர்கின்றன.

கதாபாத்திரங்களின் தன்மையை, உணர்ச்சியை, ஆற்றலை, காட்சியின் காலநிலையை, கடந்துசெல்லும் ஒளி, காட்சிப்பொருளோடு இருக்கும் இருள், அதன் நிழல் இவற்றை அழகாக சொல்லுகின்றன. 30 நிமிடங்கள் முதல் முப்பது மணி நேரம் வரையிலும்கூட இந்த ஓவியங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.

இந்த ஓவியபாணியை கற்றுக்கொண்டால் ஹாலிவுட் சினிமா ஸ்டுடியோக்களில் பணிபுரியம் வாய்ப்புக்கு நீங்கள் தயாராவிர்கள் என்பது உறுதி. அதோடு கதை நூல்கள், காமிக்ஸ், விளம்பர ஓவியங்கள் இவற்றை தனியாகவோ, நிறுவனத்திற்கோ தயார்செய்யும் நிலைக்கு உயரலாம்...

நான் வழக்கமாக கேரிகேச்சர் ஓவியங்கள் வரைந்தாலும், கற்றுக்கொள்ளதூண்டிய இந்த வகை ஓவியங்களை வரைந்து பழகினேன். அந்த வகையிலான ஒன்றை நானும் பகிர்ந்துகொள்கிறேன்...


நீங்கள் முயற்சி செய்யுங்களேன்... 

Revival Words


சமீபமாக ஃபேஸ்புக்கில் என் பக்கத்திலிருந்து விலகிவிட்டேன்...  அற்புதமான நண்பர்களை கொஞ்சம் இழந்திருக்கிறேன் தற்பொழுது. ஈடில்லாத இழப்புத்தான், ஆனால் அவர்களை அங்கே (ஃபேஸ்புக்கில்) இருந்தால்தான் இணைப்பில் வைத்திருக்கமுடியும் என்பதில்லை.

பொழுபோக்குக்காக சாப்பிட்ட மருந்து, விசமாகும் தருணத்தை உணர்ந்ததால் இந்த அவசர முடிவு எடுத்துக்கொண்டேன். சில நேரங்களில் அங்கே எப்படி நடந்துகொள்வது என்று அறியாமலிருக்கிறேன். இந்த இடைவெளி அதை எனக்கு கற்றுக்கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடகம் ஊடகமாக இருந்த நிலையில் எல்லாமே நன்றாக இருந்தது. அதில் தனிநபர் திணிப்பு இருந்தாலும் கூட, வெளித்தெரியாத நிலையில்... ஆனால் அது அதுகுறித்த அனுபவம், அறிவு, கல்வி இல்லாதவர்கைகளுக்கு மாறியவுடன், அதன் வீச்சு அதிகமாக மாறி, ஓவ்வொரு தனி மனிதரின் மன அழுத்தங்களை தரவிறக்கி, இயல்பான மனிதர்களின் மனதை சுழற்றியடிக்கிறது. எனக்கு அதன் தாக்கம் தாங்கமுடியவில்லை...

இணையத்தில் எதோ தேடிக்கொண்டிருக்கையில், இந்த பாடலை பார்க்கவேண்டி எண்ணினேன்,... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில்தான் எத்தனை அர்த்தம்... காலம் கடந்தும் உயிர்ப்போடு... பாடல்வரிகளோடு பாடலையும் பகிர்ந்திருக்கிறேன்.



பாடல் வரிகள்:

தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
 சரித்திரத்தைச் சான்று சொல்வார்
 தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
 தன்மான வீரரென்பார்
 மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
 வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
 கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
 கடவுள்மேல் குற்றமென்பார்...................
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
 கடவுள்மேல் குற்றமென்பார்.........

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

 _ நாம

 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

 எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி


பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
 போக்கினில் அனேக வித்தியாசம்
 புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
 புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
 பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
 நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் இந்த
 திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி


கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு

 கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
 கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
 கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
 நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
 நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க

 பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
 பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
 படிப்பவங்க வீடு புடிப்பவங்க
 பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
 பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
 இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
 அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
 வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
 உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் நம்ம

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
 உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்

 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்


 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி