February 2024 | CJ

February 2024

Can we live at this present, at this second and live without mind in our life?


நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் சாத்தியமானதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் சாத்தியமானதா?


பதில்:

உலகில் மனிதனின் வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையை வாழும் மனிதனுக்கும் உதவும் வகையில் எண்ணற்ர பயிற்சி முறைகள், இப்பொழுது கிடைத்துவருகின்றன. அக்காலத்திலும், மனிதனின் உண்மையறிய, பிறப்பின் நோக்கம் அறிய, இறை என்ற மெய்ப்பொருளின் உண்மையறிய யோகம் என்றும் பயிற்சி முறை சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது. யோகத்திற்கு வரமுடியாத, புரிந்துகொள்ளமுடியாத எளிய மனிதர்களுக்கு பக்தி என்ற முறை தோற்றுவிக்கப்பட்டது. நல்லது செய்தால்  புண்ணியம், கெட்டதும் தீயதும் செய்தால் பாவம் என்ற அறநெறி வாழ்க்கை முறையும் வழங்கப்பட்டது.

யோகம் என்பது சித்தாந்தம் என்றும், பக்தி வழியில் உருவானதை வேதாந்தம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த சித்தாந்தமும், வேதாந்ததமும் கூட காலத்தால் மாற்றம் பெற்றுவிட்டதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அதில் உள்ள சிரமங்கள், குழப்பங்கள், தடைகள் எல்லாம் நீங்கி எளிமையாகிவிட்டதை நாம் அறிவோம். எனினும் வேதாந்தத்தின் துணை அருகில் செல்வதற்கு மட்டுமே உதவும். சித்தாந்தம் மட்டுமே அந்த உண்மையை முழுமையாக அறிந்து கொள்ள உதவும்.

இந்த வளர்ச்சியில், நவீன காலத்தில் நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும், மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வதும் என்றும் பலப்பல பயிற்சிமுறைகள் வந்துவிட்டன. இதை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் நிகழ்காலத்தில் வாழ்வதும், இக்கணத்தில் வாழ்வதும் ஏறக்குறைய ஒன்றுதான் எனினும், சிற்சில வித்தியாசங்கள் இருக்கலாம். நிகழ்காலம் என்பது, இன்று, இப்பொழுது, இந்த நொடி என்பதாக மட்டுமே சொல்லமுடியும். இதை சொல்லி முடிக்கும் பொழுதே அது இல்லாமல் போய், அடுத்த நொடி வந்து நின்றுவிடும். எனவே நிகழ்காலம் என்பதும், இக்கணம் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ள, ஆழ்ந்த பயிற்சி வேண்டும். கடந்து போனதையும், வரப்போவதையும் நினைக்காத மனம் அமையவேண்டும். அத்தகைய மனம் அமைவதற்கு பயிற்சிகள் வேண்டும்.

அத்தகைய பயிற்சிகள், யோகத்தில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நவீன கால பயிற்சிகளில் அது உண்டா? நிச்சயமாக உதவுமா? என்று சொல்லுவதற்கில்லை. மனம் மிக வலிமையானது. மிக நன்றாக நடித்து ஏமாற்றிவிடக் கூடியது. நம்மைவிடவும் திறமைசாலி. நாம் சொல்லிக்கொடுக்காமல் எல்லாவற்றையும், கற்று, பதிந்து, எடுத்துக்காட்டிவிடக் கூடியது. அப்படியான மனதை, வெறுமனே பயிற்சியால், நிகழ்காலத்தில் இரு, இக்கணத்தில் இரு என்று பழக்கிவிட முடியாது. ஒருவேளை அப்படி பயிற்சி கொடுத்தால், அதை, மனதை பழக்கிட நம் வாழ்நாள் போதாது என்று கருதிவிட இடமிருக்கிறது.

மனதை தள்ளிவைத்து மனமற்ற நிலையில் வாழ்வது என்பது கட்டுக்கதை என்றுதான் சொல்லமுடியும். மனிதன் என்றாலே மனம்+இதன்=மனிதன் என்று வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். இதில் மனதை தள்ளிவைத்தால், மனமற்ற நிலையில், மனிதன் இருப்பானா? அவனிடம் இதம் தான் இருக்குமா? மனமற்ற நிலையில் எப்படி அவன் வாழமுடியும்? செயல்பட முடியும்? ஒருவேளை அப்படி வாழ்வதாக தன்னையே ஏமாற்றிக்கொள்வானா? எனினும் இதற்கெல்லாம் பயிற்சி இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அந்த பயிற்சியால் மனதை தள்ளிவைத்தும், மனமற்ற நிலையிலும் வாழ முடியும் என்றுதான் சொல்லுகிறார்கள். ஆனால் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’. மனதை அறிய நினைக்காமல் தள்ளிவைப்பதும், மனமற்ற நிலையில் வாழ்வதும் எப்படி சாத்தியமாகும்?

எப்படியோ, இந்த பயிற்சிகளால் உங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளாமல் இருந்தால் சரிதான். ஏதோ ஒருவழியில், உங்கள் பிறப்பின் நோக்கமான ‘நான் யார்?’ என்ற உண்மையறிதலை நோக்கி பயணம் செய்தால் நல்லதுதான். எந்த வகையிலும் நீங்கள் சிறக்க, நீங்களே முடிவெடுங்கள். நான் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

I am worried about who not yet join in yoga within my friend list, is it correct?


எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?


பதில்:

இந்த பொருள்முதல்வாத உலகில், பொருளையே வாழ்வின் துணையாகவும்,, உயர்வாகவும், மதிப்பாகவும், ஆதாயமாகவும் நினைத்து தன் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மனிதர்கள், தன் இறுதிக்காலத்தில் எதையுமே எடுத்துப்போவதில்லை என்று தெரிந்தும், வாழும் பொழுது பற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். ‘அதனால் என்ன? எனக்கு வேண்டுமய்யா’ என்ற நிலையில்தான் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்களை குறைசொல்லவும் முடியாது. அவர்களின் வாழ்வியல் அனுபவம் அப்படிப்பட்டது. எவ்வளவு கிடைத்தாலுமே, குறைமனதோடு, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும் நிலை அவர்களுடையது. 

இப்படியான சக மனிதர்களிடம், ‘பக்தி என்ற நிலை கடந்து, உண்மையறிய யோகம் வாருங்கள்’ என்று அழைத்தால், வரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பக்தி போதுமானது. கடவுளே இல்லை என்பது கூட போதுமானதுதான். தன்னைமட்டுமே மையப்படுத்திக்கொண்டு வாழும் மனிதருக்கும், தன்னால் தான் எல்லாம் நிகழ்கிறது, தன்னறிவாலும், திறமையாலும், அனுபவத்தாலும், உழைப்பினாலும்தான் ‘நான் வாழ்கிறேன், நான் உயர்கிறேன்’ என்று நினைப்போருக்கு, பக்தியும், கடவுளும் தேவை இருக்காது. அவர்களிடம் நாம் அதை விளக்கிக் கொண்டிருக்கவும் முடியாது. கடவுள் என்பது கடந்து உள்ளே அறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட நாம் உண்மையை சொல்லமுடியாது. எல்லாம் எனக்குத் தெரியும் என்று மிகப்பெரிய தடுப்புச்சுவரை, நமக்கு முன்னே வைத்துவிடுவார்கள்.

இதனால், நீங்கள் அவர்மீது கொண்ட அக்கறையில், யோகம் குறித்து எத்தகைய விளக்கம் கொடுத்தாலும், அது அவர்களிடம் எடுபடாது. ‘உன் வேலையைப்பார்’ என்று சொல்லாமல் சொல்லிவிடுவார்கள். நமக்கோ, அவர்கள்மீது வருத்தமும், கவலையும் எழுவது உண்மைதான். வேறுவழி என்ன?

நீங்கள் அவரை எப்படியாயினும், விளக்கம் பெற வைக்கவேண்டும் என்று விரும்பினால், நீங்களே ‘யோகம்’ குறித்த விளக்கத்தை அளிக்காதீர்கள். இங்கே, இப்படி ஒரு அறிவுத்திருக்கோவில் என்ற ஒன்று இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரிய கருத்துக்கள் இங்கே விளக்கம் தரப்படுகிறது. ஏதேனும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால், வந்து பாருங்கள். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் முடிவில் இருக்கலாம்’ என்று சொல்லிப்பாருங்கள். அவர் தன்னளவில் மாறுதல் பெற வழி உண்டு. அப்படியும்கூட ஒரு மாற்றமும் இல்லை என்றால், அவரை நீங்கள் யோகத்திற்கு அழைப்பதில் இருந்து கைவிட்டுவிடுங்கள். இனி ஒருபோதும் யோகம் குறித்து அவரிடம் பேசாதீர்கள், அதன் அருமை, பெருமைகளை சொல்லாதீர்கள். ஒரு நண்பராக உங்களால் அவருக்கும், அவரால் உங்களுக்கும் என்ன நன்மை கிடைக்குமோ அதை வழிநடத்துங்கள். அது போதும். இதற்காக நீங்கள் வருந்தவேண்டாம், கவலைப்படவேண்டாம்.

அவருக்குள்ளாக இருக்கிற கர்ம வினைப்பதிவுகளின் தாக்கம் குறையும் பொழுது, தானாகவே யோகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகும். அது அவருக்கும் கிடைக்கலாம். அவருக்குப்பின் அவரின் வாரிசுகளில் யாருக்கேனும் கிடைக்கலாம். அதை காலம் முடிவுசெய்யும். அதன் போக்கில் விட்டுவிடுங்கள். வேறுவழியில்லை. இதில் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது அல்லவா?! கட்டாயப்படுத்தினாலும் அவர், வழக்கமான வாழ்விலுக்கு உடனே வந்தும் விடுவார்.

வாழ்க வளமுடன்

-

Most of people not interested on yoga and they living till end, no issues on that. correct?


யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வளமுடன் ஐயா, யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கையில் தானாகவே யோகத்திற்கு வருபவர்களும், பிறர் சொல்லி கேட்டு யோகத்திற்கு வந்து அதை கடைபிடித்து வருபவர்களும் ஒருசிலர் தான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதனால் நீங்களும் அப்படியே இருந்துவிடலாமே என்று நினைக்கிறீர்கள். சரிதானே?

அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு, நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிலிருக்கும் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். அதுதான் என்னுடைய கடமை. இந்த உலகில் நாம் அடிக்கடி பிறப்பதில்லை. ஏற்கனவே பிறந்தோமா? என்பதும் நினைவில் இல்லை, இனி எப்போதாவது பிறக்கப்போகிறோமா? என்பதும் நமக்குத் தெரியாது தானே? அப்படியானால் இருக்கின்ற இந்த வாழ்க்கையை நல்லவிதமாக, எல்லா இன்பங்களையும் பெற்று அனுபவித்து வாழ்வது நல்லதுதான். ஆனால் உண்மையாகவே அப்படி வாழ்ந்து அனுபவித்தீர்களா? அப்படி அனுபவிக்கவும் முடிகிறதா? என்ற கேள்விக்கு பதிலை சொல்லுவீர்களா?

வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்னிடமே எதிர்கேள்வியும் கேட்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை நீங்கள் ஏன் மறுக்குறீர்கள்? என்று நானும் கேள்வி கேட்பேன். அது உண்மைதானா? ஆம். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்து இருக்கிறது. அதை நானும் அனுபவித்து மகிழ்கிறேன். உங்களைப்பொறுத்தவரை, ஏதேனும் செய்தால்தான் இன்பம் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் சும்மா இருக்கும் சுகம் பற்றிய உண்மையை அறிவீர்களா? எதுவுமே செய்யாமல், இன்பத்தை தேடாமல், இன்பத்திலேயே நிறைந்து இருப்பது குறித்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?

தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதனால் என்ன பிரயோஜனம்? என்று மறுபடி என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறீர்களா? சரி, நீங்கள் பிறந்ததே அந்த உண்மையை அறிவதற்குத்தானே? அதை மறந்துவிட்டீர்களே? அந்த உண்மை அறிந்துவிட்டால், நீங்களாக இருப்பது யார்? என்ற ‘நான் யார்?’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே? அதை கிடைத்த இந்த பிறவியில் அறிந்து கொள்ளாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்வீர்களா? அது சோகம் இல்லையா? உணராமல் இறந்துவிடுவது கொடுமை தானே? இனி அந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்? முடிந்தது முடிந்ததுதான்.

எனவே சுருக்கமாக முடித்துக்கொள்ளாலாம், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யோகத்தில்’ பயணியுங்கள். உங்களோடு வராதவர்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களை முடக்கிவிடும். அதற்கு இடம்கொடுக்காமல், தொடர்ந்து பயணித்து, உண்மை விளக்கம் பெறுங்கள். குருவருள் உங்களுக்கு துணை இருக்கட்டும். நானும் உங்களை வாழ்த்து மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

I am sad that there is no one to comfort me. Who will give me a shoulder?


என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?


பதில்:

உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நாம் பிறந்து வளர்ந்து வரும் பருவ காலத்தில், எதைபற்றியும், எதுகுறித்தும் கவலைப்படாது வாழ்ந்த காலம் உண்டு. ஆனால், குடும்பத்தில் சூழல்காரணமாக, நமக்கு கிடைத்த வாய்ப்புக்கள் வழியாக, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, வெளியில் சொல்லமுடியாத துயரம் நம்மை ஆழ்த்திவிடும். உண்மையில் அதை விட்டு விலகிட முடியாத அளவில் சிக்கி இருப்போம். ஏதோ ஒருவகையில், மற்றவர்கள் என்னால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணமும் அதில் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் மேலும்மேலும் சிக்கல் நிறைந்து, என்னசெய்வது என்று புரியாமல் காலம் கடத்திவருவோம்.

அத்தகைய காலகட்டத்தில், நாம் தனிமனிதனாக அல்லாமல், நமக்கென்று ஒரு குடும்பம், நம்மை எதிர்பார்த்து சில உறுப்பினர்களும் இருப்பார்கள். இதற்கிடையில் நமக்கு ஆறுதல் சொல்லவோ, ஏதேனும் உதவி செய்தோ, நல்லவார்த்தைகள் சொல்லி ஊக்கப்படுத்தவோ, நம்முடைய பெற்றோர்களும் இருக்கமாட்டார்கள். ஆம் அவர்கள் வயதாகி, முடியாத சூழலில் இருக்கலாம். காலத்தில் நிறைவாகியும் போயிருக்கலாம். நம்மோடு இருப்பவர்களும், நமக்கான எந்த உதவியும், ஆறுதலும் தரமுடியாத சூழலில் இருக்கலாம். அவர்களை சொல்லியும் குறையில்லை. அவர்களுக்கும் நம்மைப்போலவே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்தானே?

இப்போதைய இந்த சூழலில், நமக்கு உதவி எதுவும் கூட தேவையில்லை. ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட யாருமில்லையே என்பதுதான் மிகப்பெரும் பிரச்சனை. ஆனால் ஓவ்வொருவருமே, அவரவர் உலகில் தனித்து, ஒரு எல்லையோடு வாழ்ந்து வருவதால், யாரையும் யாரும் தன்னிடத்தில் அண்ட விடுவதில்லை. ‘நீ உன் எல்லைக்குள் இரு, நானும் என் எல்லைக்குள்தான் இருப்பேன்’ என்று சொல்லிவிடுவார்கள். இதையும் நாம் குறை சொல்லமுடியாது. ஒருகாலத்தில் நாம் இப்படித்தானே சொல்லிக்கொண்டிருந்தோம் இல்லையா? நிச்சயமாக இல்லை என்று மறுக்கமுடியாதுதானே?!

அப்படியானால், என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்? என்று நீங்கள் கேட்டதற்கு வழி என்ன? யோகத்தின் வழியாக நம்மை உயர்த்த விரும்பும், குரு தான் நமக்கு உதவக்கூடியவர். நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை. ‘அருட்தந்தை’ என்று அழைப்பதில் இருக்கக்கூடிய அர்த்தமும், உண்மையும் அதுதான். ஒரு தந்தைக்குத்தான், வாழ்வியல் குறித்த முழு அனுபவம் இருக்கும். தாய் நம்மை, உள்முகமாக, மனப்பூர்வமாக ஆறுதல் தரக்கூடியவள்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், வாழ்கின்ற வாழ்க்கையில் பெறக்கூடிய துன்பங்களுக்கு தகுந்த ஆறுதல் தந்து நம்மை தேற்றக்கூடியவர் ‘தந்தை’ மட்டுமே.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை, ‘அருட்தந்தை’ என்ற நிலையில் ஏற்க தயாராகுங்கள். அவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் பெறுங்கள். ‘நான் இருக்கிறேன்’ என்றுதான் அவர் நம்மிடம் சொல்லியிருக்கிறார். சூட்சுமமாக, வான்காந்த வெளியில் கலந்திருக்கிறார். உங்களுக்கு ஆறுதல் தர, உங்கள் குருவை விட வேறு யார் வேண்டும்? இனி கவலையும், துன்பமும் எதற்கு? மிகச்சிறந்த வடிகாலாக, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி இருக்கிறார்.

வேதாத்திரியத்தில் இணையாதவர்களுக்கு, அவரவர் அளவில் அவர்களுடைய குருவை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே குருவின் தோள் சாயுங்கள். ஆறுதல் பெறுங்கள். எல்லாம் கடந்து விட்டு விலகி, வாழ்வில் உயர்ந்து, மெய்யுணர்வு பெறுங்கள். வாழ்க்கையின், பிறப்பின் கடமையில் சிறந்து விளங்குங்கள். 

வாழ்க வளமுடன்

-

I want to share my grievances with someone. How to solve this?


என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


பதில்:

உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய கேள்விதான். என்றாலும் கூட இதை தீர்க்க எளியவழி உண்டு. உங்களின் வயது சொல்லவில்லை, எனினும் எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. பருவ வயதினரும், நடுத்தர வயதினரும், வயது முதிந்தோர்க்கும் என்றவகையில், அவரவர்களுக்கான அளவில் மனக்குமறல்கள் உண்டு. முதலில் மனக்குமறல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். 

‘தான் நினைத்ததை, தான் விருப்பத்தை, தன்னுடைய நிலையை, தன்னுடைய திட்டத்தை, எதிர்பார்ப்பை சொல்லமுடியாமல், தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளுதல்’ என்பதுதான் மனக்குமறலாக நாம் கருதமுடிகிறது. இதன் அளவு அன்றாடம் கூடிக்கொண்டே போக, தன்னுடைய எந்தக்கருத்தும் செயல்படாது என்ற எண்ணமும் கூடி, மன அழுத்தம் அதிகமாகிவிடும். அந்த மன அழுத்தம், தான் வாழ்கின்ற வாழ்க்கையையே, அர்த்தமில்லாதாக மாற்றி, இனி ஒன்றுமில்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது. அந்த நிலையில்தான், யாரிடமாவது இதை சொன்னாலாவது ஒரு ஆறுதல் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து பிறரிடம் சொல்ல துடிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, எல்லோருமே இத்தகைய மன அழுத்தத்தில் இருப்பதால், ‘ஏற்கனவே என்கிட்ட நிறைய இருக்கு, நான் வேறே உன் மனக்குமறலை கேட்டு வாங்கிக்கனுமா?’ என்ற சிந்தனையில் தவிர்த்து விடுவார்கள். நகர்ந்துபோய்விடுவார்கள்.

இத்தகைய மன அழுத்தம் காரணமாகவே, போதைப்பொருட்களை நாடுவதும், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவதும் நிகழ்ந்துவிடும். பொது கவனத்தில் இருந்து விலகி, தனிமையும் கூடி, மன அழுத்தம் தாங்காமல், இனி வாழ்வதில் பிரயோஜனம் இல்லை என்ற அளவில், தற்கொலை முடிவுக்கும் வந்துவிடுவதுதான் சோகம்.

உண்மைத்தெளிவு வந்துவிட்டால், இதற்கெல்லாம் அவசியமில்லை. முக்கியமாக, ஒரு ஆறுதலாக யாராவது இருந்தால் நல்லது என்ற நிலை சிறப்பு. ஆனால் அது யார்? இந்த கேள்வி உங்கள் முன் நின்றால், நீங்கள் உங்கள் குருவை தேர்ந்தெடுங்கள். நம்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நம்முடைய குரு மட்டுமே என்பது உறுதியான உண்மை. யோகத்தில் இருக்கின்ற நமக்கு, குருவின் அக்கறையும், அணுசரனையும் உண்டு. எனவே மிக எளிமையாக, உங்களுக்கு ஆறுதல் தர குரு தயாராக இருக்கிறார்.

எப்போதுமே, உங்களுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதை கேட்கத்தான் வெளியிலே யாருமே தயாராக இல்லையே?! அதனால் குருவை மட்டுமே நாடுங்கள். தினமும் தவம் செய்து, அகத்தாய்வின் வழியாக, தற்சோதனையில் உங்களை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் மனக்குமறல்களை பட்டியலிடுங்கள். எதையும் விட்டுவிடாமல் எழுதுங்கள். ஒருவாரம், பத்து நாட்கள், ஒருமாதம் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளியே கொட்டி, பட்டியலில் கொண்டுவாருங்கள்.

மீண்டும் தவமும் அகத்தாய்வும் செய்து, எதனால்? ஏன்? எப்படி இதை கடக்கலாம்? அவசியமானதா? அவசியமற்றதா? விட்டு விலகவேண்டியாதா? என்று கேள்விகள் கேட்டு பகுதி பகுதியாக பிரித்து அலசுங்கள். உண்மை விளக்கம் பெறுங்கள். உங்கள் குரு, ஆசிரியரிடம் தொடர்பில் இருங்கள். அவர்களின் ஆலோசனையை கேட்டு மாற்றம் பெறுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். மன உறுதியோடு, இன்றே இந்த மாற்றத்தை துவங்கி வெற்றி காணுங்கள்.

வாழ்க வளமுடன்

-

Should my Guru grace will be help to relieve from problems? Please let know me how?!


என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்:

வாழும் மனிதர்களாகிய நமக்கு, பிரச்சனைகள் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம்? என்பதில்தான் அது உண்மையிலேயே பிரச்சனையா? பிரச்சனையாக தோன்றுகிறதா? கடந்துவிடக் கூடியதா? என்பது நமக்குத் தெரியவரும். பெரும்பாலானவர்கள் அதை ஏற்று, அதில் சிக்கிக் கொள்வதுதான் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. சிலர் அந்த பிரச்சனையில் சிக்கி, அதை சரி செய்யமுடியாமல் தோற்றுப்போய், வாழ்க்கையில் இருந்து விலகி ஓடிவிடுவதும் உண்டுதான். அதுதான் மிகப்பெரும் சோகம்.

இந்நிலையில், குழந்தையாக இருந்தால், நல்லதுதான் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் இக்கால குழந்தைகளுக்கும் அன்றாட சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குரிய அளவில் அவை இருக்கின்றன என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடுவார்கள். அப்படியானால், பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாத வயது எது? யார் அவர்கள்? என்றால், மூன்று வயது நிரம்பிடாத குழந்தைகள் தான் எனலாம். ஏனென்றால், அக்குழந்தைகள் மூன்று வயதுவரையிலும், தன்னியல்புக்கு வருவதில்லை. என்றாலும் கூட சில குழந்தைகள் விதிவிலக்கு.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? என்று கேட்டால், அதற்கான பதில் நிச்சயமாக உதவிடும். உதவிக்கொண்டும் இருக்கிறது எனலாம். இதை நான் உறுதியாகவே சொல்லுகிறேன். அப்படியானால், அதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது உங்களின் இன்னொரு கேள்வி. இதோ அதற்கும் பதிலை காணலாம். குருவருளின் உதவியை நாடும் நீங்கள், ஆன்மீக சாதனையில் உங்களை இணைத்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குரு அவர்கள் உங்களுக்கு வழங்கிய, யோக பயிற்சிகளை அன்றாடம் செய்துவருவீர்கள் என்றும் நினைக்கிறேன். அதை தொடர்ந்து செய்துவாருங்கள். உங்கள் பயிற்சிகளில் மனம் லயித்து செய்வதை உறுதி செய்யுங்கள். வெறுமனே கண்மூடி நிமிடங்களை கடத்துவதை விட்டுவிடுங்கள்.

தவம் செய்ய அமரும்பொழுதே, உங்கள் மனம், உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலில் இருந்தும், அந்த நேரம் மட்டுமாவது விலகி நிற்கிறதா? அதிலேயே உழல்கின்றதா? அந்த பிரச்சனைகளையே எடுத்துக்காட்டிக் கொண்டே வருகிறதா? இதை எப்படி நான் தீர்ப்பேன் என்று எண்ணி வருந்துகிறதா? இந்த தவம் செய்து என்ன ஆகப்போகிறது என்று உங்களை திசை திருப்புகிறதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தால், தவம் இயற்றாமல், சிறிது நேரம் அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து மனதை இயல்பாக்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகன்று, வேறு இடத்திற்கு செல்லுங்கள். அடிக்கடி உங்களைச் சுற்றிலும் ‘நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’ என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இதன் வழியாக மனம் விடுபட்டு, இயல்பாக இருக்க வழி கிடைக்கும். அதன் பிறகு தவம் செய்யலாம்.
தவம் இயற்றும் பொழுது, குருவை நினைந்து போற்று மகிழுங்கள். அவரிடம் சரணாகதி அடையுங்கள். நீங்களாக எதும் கேட்காதீர்கள். நீங்களாக எதும் சொல்லியும் புலம்பாதீர்கள். அமைதியாக உள்முகமாக, குருவை நினைந்து வணங்குங்கள். தவமும் இயற்றுங்கள்.

தவமுடிவில், ‘அருட்பேராற்றலின் கருணையினால், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்’ என்பதை மனம் ஒன்றி சொல்லுங்கள். வெறும் வார்த்தையாக இல்லாமல், ஒப்பிப்பது போலவும் இல்லாமல், அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள். நாளடைவில், குருவருள் உங்களுக்கு உதவுவதை உணர்வாகவும் பெறலாம். மேலும் உங்களுக்கு ஆலோசனை தேவையென்றால், நேரடியாகவும் என்னை அணுகலாம்! நானும் உங்களை குருவோடு, இறையருளோடு இணைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-

Why getting wrong result and difficulties as almost in every action in my life?


என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?

பதில்:

பெரும்பாலான அன்பர்களின் கருத்தாகவே இதை எடுத்துக் கொள்ளமுடியும். சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லிக்கொள்ளாமல் தனக்குள் புலம்பித் தவிப்பார்கள். சிலர்,  என் தலைவிதியே என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நாம் எதைச் செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறதா? அது உண்மைதானா? பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ‘முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுதான் அது. உங்களுடைய எந்த ஒரு செயலிலும், அதனுடைய தொடக்கம் சரியாக அமையவில்லை, மனம் ஒப்பவில்லை, குழப்பத்தோடு தொடங்குகிறது என்றால், அந்த செயலும், அதனுடைய விளைவும் நிச்சயமாக பிரச்சனைக்குரியதாகவோ, துன்பம் தருவதாகவோதான் அமையும் என்பது உறுதி. இயற்கையின் எந்த ஒரு செயலிலும், அதன் விளைவிலும் ஒற்றுமை, நேர்மை, ஒழுங்கு, காலம் என்பது அடங்கியிருக்கிறது. இதில் எல்லாவற்றிலுமே ‘துன்பம்’ எழுவதில்லை. ஆனால் நாம்தான் துன்பம் மட்டுமே எழுகிறது என்று புலம்பித்தவிக்கிறோம்.

இங்கே இரண்டு முக்கிய குறிப்புக்களை காணலாம். 1) நாமாக ஏதேனும் விளைவை நினைத்துக்கொண்டு, நம்முடைய செயலை செய்வது. 2) இதைச் செய்தல் இன்னதுதான் விளையும் என்ற எதிர்பார்ப்போடு செய்வது ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எப்படி ஒரு செயலை செய்வதற்கு ஆயத்தமாகிறீர்கள்? என்பதில்தான் உங்களுக்கான பதில் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை நீங்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பாகவும், சிந்தனை செய்துகொள்ளுங்கள். ‘இந்த இரண்டும் என்னிடம் இல்லை’ என்ற தெளிவான நிலையில் செயலை செய்ய தயாராகுங்கள்.

அடுத்ததாக, எப்போதும் ஒரு செயலை அனுபவமாக செய்யுங்கள். அனுபவம் இல்லை என்றால், அந்த செயலை செய்துவிட்டு, அதையே அனுபவமாக பெறுங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விளக்கம் பெற்று, தெளிவாக, கவனமாக, சிறப்பாக அடுத்தபடி செய்யுங்கள். இந்த இடத்தில் அந்த விளைவு தவறாக, துன்பமாக இருக்குமானல், அதை உடனடியாக திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தும் அதேபோல செய்யாதீர்கள்.

எந்த ஒரு செயல் செய்தாலும், உங்கள் உடல், மனம் விழிப்புணர்வோடும், ஒன்றுக்கொண்டு தொடர்புடையதாகவும் செய்யுங்கள். ஏனோதானோ என்று செய்யாதீர்கள். அசால்ட் என்று சொல்லப்படும் நிலையிலும் அச்செயலை செய்யாதீர்கள். மேற்கண்ட விளக்கங்களை நீங்கள் தெளிவு செய்துகொண்டால், ‘என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?’ என்று கேட்பதற்கு இடமிருக்காது.

வாழ்க வளமுடன்
-

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?


பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?

பதில்:

அந்தக்காலம் முதல், இப்போது இருக்கின்ற, நவீன அணு விஞ்ஞான காலம் வரையிலும், மனிதர்களின் வாழ்வில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று பொருள்முதல்வாத உலகில் வாழ்கிறோம். ஒவ்வோரு மனிதரும், இன்னொரு மனிதனோடு ஏதேனும் ஓர் வகையில் இணைந்துதான் வாழ்கிறான். ஒருவருக்கொருவர் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னளவில் வாழ்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களோடு வாழ்பவருக்கும் பணம் முக்கியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் ஒருவர் என்ற நிலைமாறி, எல்லோருமே பணம் சம்பாதிக்கவேண்டிய சூழலும் இன்று பெருகிவிட்டதை மறுக்கமுடியாது. 

தன்னியல்பாக, தற்சார்பாக வாழ்ந்தாலும்கூட பிறருக்கு உதவுதல், சமூகத்திற்கு உதவுதல், அதன்வழியாக தானும் பயன்பெறுதல் என்றுதான் வாழ்வும் முடியும். பண்டம் மாற்று என்று, பணமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் இனி வழியில்லை. பணம் என்ற ஒன்றை தேடுதலின் வழியாகவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனின் கல்வியும், படிப்பும், பயிற்சியும், படிப்பறியாதோர்க்கு அனுபவமும், பழக்கமும், உடல்வலிவும் அவரவருக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு பிரதானமாக இருக்கிறது.

தன் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்ற ஓவ்வொருவருக்கும் பணம் தேவை. குழந்தைகளும், உடல் உழைப்பை தர இயலாத வயதானவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருதரப்பினருக்கும், யாரேனும் சிலர் உதவி செய்துதான் காக்கவேண்டும்.

இந்த வகையில், நீங்கள் சொன்னதுப்போலவே, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் என்பதும் குறிப்பிடவேண்டியதாகும். இதில் யோகத்தின் வழியே வாழ்வது என்றால், இந்த சிந்தனை எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த சம்பாத்தியத்தை, பணத்தை, அதன் பயனை விட்டுவிடவேண்டுமோ? என்று கேட்பதுபோல இருக்கிறது!

யோகம் என்பது என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்க. யோகம் என்பது, மனிதனின் மூலம் எது? என்று அறிந்து தன்னை நெறிப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி முறைதான். இதை எல்லாவற்றையும் விட்டுவிடுதல் எங்கே வந்தது? மேலும் யோகமும், துறவும் என்று முடிச்சிட்டுக்கொள்வது இன்னொரு பிரச்சனை. யோகம் என்பது பொருளாதார வாழ்க்கைக்கு எதிரானது என்ற நம்பிக்கையும், துறவு என்பது எல்லா சுகங்களையும், குடும்பத்தையும், விட்டுவிட்டு கையேந்தும் நிலைக்கு மாறிக்கொள்வது என்ற ரீதியில்தான் மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே உண்மைக்கு புறம்பான தகவல்கள். மக்களிடம் அப்படி இன்னும் நிலைத்துவிட்டது.

யோகம் என்பது பயிற்சிமுறை என்பதுபோல, துறவு என்பது அளவிலும், முறையும் வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழி ஆகும்.  இந்த இரண்டு உண்மைகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் வேறுயார், தவறாக சொன்னாலும், அவர்களையும் திருத்துங்கள். 

இப்படியாக, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது என்கிறபோது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன? மன நிறைவாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறதா? பணம் இல்லாதவரும் ஒரு பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். பலகோடி சொத்துக்கு அதிபதி என்றவரும் பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். இருவருக்கும் உடல் வலி, நோய், பசி, தூக்கம், உறக்கம் ஆகிய இவற்றில் எப்படி இருக்கிறார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியுமே? அன்றாடம் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் அளவே இல்லை எனலாம். வெளிப்பார்வைக்கு ஏழைக்கும், பணக்காரருக்கும் நிறைவாகவோ, குறைவாகவோ இருப்பதாக தோனலாம். ஆனால் அவர்கள் அளவில், ஏகப்பட்ட பிரச்சனை தாக்கம் இருப்பதை மறுக்கமுடியாது. அதை அவர்கள் மட்டுமே அறிவார், நமக்குத் தெரியாது, சிலர் நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள்.

அத்தகைய வாழ்வில் நிம்மதி என்ற ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்யவல்லது, யோகம் மட்டுமே என்பதை மறுக்கமுடியாது. யோகம் இல்லாமல் வாழ்வதில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அற்புதமான ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள். யோகம் என்பதை அறிவதற்காக இன்னொரு பிறப்பும் நிகழப்போவதில்லை என்பதை அறிவீர்கள்தானே?

உங்களை, உங்கள் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யோகத்தால் உருவாகும். இல்லையேல் கைநழுவிப் போகும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்
-

When every living being is happy in his own life, why is there so much suffering for human beings?


ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒவ்வொரு ஜீவனும் அதனதன் வாழ்வில் இன்பம் திளைத்து வாழும்பொழுது மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பங்கள்? இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்வை வாழமுடியாதா? வழி என்ன?

பதில்:

வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவின் ஆரம்பத்திலும் மக்களின் வாழ்வு நிலை குறித்த தன்னுடைய கவலை தெரிவித்துவிட்டுத்தான், அதற்கான மாற்றுவழியை அறியத்தரும் யோகம் குறித்து பேச ஆரம்பிப்பார். இந்த உலகில் ஓரரறிவு முதல் ஐயறிவு வரையிலான எல்லா ஜீவன்களும் நிறைவாக வாழ்கின்றன. அதனதன் இயல்பில், அந்த வாழ்வில் இன்பம் திளைத்து வாழ்கின்ற என்பதே உண்மை. அவைகளுக்கும் பிறப்பு, வாழ்வு, பசி, தாகம், வலி, துன்பம், நோய், இறப்பு உண்டுதான். எனினும் அவைகள் தன்னளவில் இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று, அளவோடு, முறையாக வாழ்கின்றன.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடும்பொழுது, ‘ஒழுக்கம் என்பதை உருவாக்கிக்கொள்ளாத, இத்தகைய ஜீவன்கள், இயற்கையை மீறிடாமல், இயல்பாக வாழ்ந்து வருகின்றன. ஆனால், வாழ்வதற்காகவே, ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட மனிதனோ, ஒழுக்கத்தையும், இந்த இயற்கையையும் மீறிட தயங்குவதில்லை’ என்று சொல்லுகிறார்.

மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த துன்பங்கள்? என்ற கேள்வியை முன்வைத்தால், வேதாத்திரி மகரிஷியின் மேற்கூறிய வார்த்தைகளிலேயே பதில் கிடைத்துவிடும். மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவின் உச்சத்தில், சிந்தனை உயர்வை பெற்றவன். தன்னையும், இந்த பிரபஞ்சத்தையும், மூலமான இறையாற்றலையும் கூட உணரத்தக்கவன். ஆனால் அந்தவகையில் அறிவை செலுத்தாமல், குறுகிய நிலையில், முடக்கிக் கொள்கிறான். ஒரு பிரமாண்டமான சக்தியை ஒரு குவளையிலும், பானையிலும் அடக்கிவைத்தால் எப்படி பொருந்தும்? அதுதான் அவனுக்கே அது துன்பமாகிறது எனலாம்.

மனிதன் மட்டுமே தன்னிலை மறந்து, தான் என்ற தன்முனைப்பில் செயலாற்றுகிறான். அவனுடைய எண்ணம், சொல், செயல் ஆகிய அனைத்திலுமே இந்த தன்முனைப்பு முதன்மை என்றால் மிகையில்லை. இதனால், அத்தகைய மனிதன், தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். அதன்வழியில் தான் வாழும் சமூகத்திற்கும், இந்த உலகுக்கும் துன்பம் விளைவிக்கிறான். மேலும் இயற்கையின் நீதியாக எல்லாவற்றிலும், அளவும் முறையும் இருக்கிறது.

அது மீறப்பட்டால், அந்த விளைவு உடனடியாகவோ, தாமதமாகவோ, நீண்டகாலம் கழித்தோ நிச்சயமாக உண்டாகிறது. அந்த விளைவுகளின் தாக்கமே துன்பமாக அவனுடைய வாழ்வில் வந்துவிடுகிறது. காலத்தால் நிலைத்தும் விடுகிறது.

இதிலிருந்து மீண்டுவரவேண்டும், துன்பமில்லாத வாழ்க்கையை பெறவேண்டும், இன்பமாக வாழவேண்டும், நிறைவாக இருக்கவேண்டும் என்றால், முதலில் செய்த தவறுகளை திருத்தி அமைக்க வேண்டும். அதற்கு அல்லது தவிர்த்து நல்லது செய்யவேண்டும். அதற்கான வழி, யோகமே ஆகும். குருவின் துணையோடுதான் அத்தகைய மாற்றம் நிகழும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்
-

Why my experience in dhyan is simple instead of awesome of others experience?


தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?

பதில்:

இதுபோலவே நிறைய அன்பர்கள் என்னிடம் சொல்லியதுண்டு. அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகிறேன். வாருங்கள் அலசுவோம். முதலில், தியானம் என்பது குறித்த உண்மையை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளகூடாது. அதாவது நீங்களாகவே ஒரு நூலை வாசித்து, யாராவது குருவின் வாழ்க்கை வரலாறை படித்து அதுபோன்ற தியானம் அனுபவம் பெறலாம் என்று நினைத்து, தியானம் இயற்றக்கூடாது. முறையாக குருவிடம் தீட்சை வழியாக கற்றுக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழியாகும்.

உங்கள் குரு உங்களுக்கு எவ்வகையில் உபதேசமும், தியான முறையும் சொல்லித்தருகிறாரோ, அதன் வழியேதான் தியானம் செய்யவேண்டும். எந்தவகையிலும் நீங்களாகவே அதில் மாற்றம் கொண்டுவரக்கூடாது.  அதுபோலவே ஒரு தியானம் செய்வதற்கான நேரம் முக்கியமானது. அதை நீடிக்கவும், குறைக்கவும் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் தானாகவே தியானத்தில் ஆழ்ந்து நீடிக்குமானால் அதில் எந்த தவறும் இல்லை. அப்படி ஆழ்ந்து நீடித்தல், பல ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தில்தான் கிடைக்கும் என்பதால் அந்த பயமும் இப்போதில்லை.

தியானம் கற்றுக்கொள்ளும் அன்பர்கள், தங்களின் வயது, அனுபவம், வாழ்க்கை முறை, ஏற்கனவே பக்தியில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, முற்றிலும் புதிய அனுபவம் என்ற வகையில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் இருக்கும் என்பதால். ஒரு தியானம் எல்லோருக்குமே ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு வகுப்பில் உங்களோடு உள்ள அன்பர்களின் தியான அனுபங்களையும், ஏற்கனவே அனுபவம் மிக்க அன்பர்களின் தியான அனுபவங்களையும், உங்களுடைய தியான அனுபவங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது நல்லதல்ல. 

தியானத்தில் மனம் நிகழ்த்தும் மாயாஜாலம் யாராலும் புரிந்துகொள்ளவும் முடியாது. நீங்கள் உங்கள் வழியிலே செய்யும் தியானத்தில் என்ன நிகழ்கிறதோ? அதில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, குருவோடும், ஆசிரியர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களின் சக அன்பர்களோடு பகிரலாம். ஆனால் ஒப்பீடு தேவையில்லை. முக்கியமாக, மற்ற அன்பர்களின் தியான அனுபவங்களை எல்லாம் கேட்டு, அதை உங்களுடைய மனதில் ஏற்றிக்கொண்டு, எனக்கும் அதுபோல நிகழுமா? என்ற கேள்வியோடும், எனக்கும் அதுபோலவே நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரின் அனுபவம் அவருக்கு. உங்கள் அனுபவம் உங்களுக்கு என்பதுதான் உண்மையானது. இதில் எந்த ஒப்பீடும் உதவாது.

உங்கள் யோகபயணத்தில், நீங்கள் இயற்றுகின்ற தியானத்தில், உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களே மிகச் சிறந்தது என்பது உணர்ந்துகொள்ளுங்கள். அதையே சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள். உங்கள் யோகத்தில் சிறப்பான நிலையை அடையலாம்.

வாழ்க வளமுடன்
-

Is it true Kayakalpa yoga and kayakalpam for endless happy life?


காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?

பதில்:

சித்தர்களின் வழிவந்த பரம்பரையினர் உலகெங்கும் சிதறிப்போன பிறகு, பல்வேறு இடங்களில் ஆங்காங்கே இருந்தவர்கள், அவர்களுக்கு தெரிந்த காயகல்ப யோக பயிற்சிகளை, மக்களின் நல்வாழ்வுக்காக கற்றுக்கொடுத்தனர். அதை பார்த்த வேறுசிலர் அந்த பயிற்சியின் உண்மையை புரிந்து கொள்ளாமல், காயகல்ப பயிற்சியை, காயகல்ப மருந்தாக மாற்றி, மக்களின் ஆர்வத்தை தூண்டி, மருந்து வியாபராமாக்கி வாழ்ந்து வந்தனர். அந்த நிலையில்தான் காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்ற கருத்து பல நூறாண்டுகளாக நிலைத்துவிட்டது. 

காயகல்ப யோக பயிற்சி, அதன் சிறப்பு, பயிற்சி முறை என்று பலதரப்பட்ட உண்மைகளை, கவி வடிவில் குறிப்பாக எழுதி வைத்திருந்தாலும், உண்மையை மறைத்து, உளப்பூர்வமாக அறியும்வகையிலும், ஒரு குருவின் மூலமாகமட்டுமே கற்றுக்கொள்ளும் வகையிலும் அமைத்துவிட்டார்கள். அதனால் மொழிவல்லுனர் ஒருவர் படித்தால் கூட முற்றிலும் உண்மையை அதில் அறியமுடியாத நிலைதான் உள்ளது. என்றாலும், சித்தர்களின் வழியில் வந்த பலருக்கு, ஏதோ ஒருவகையில் இந்த காயகல்ப யோகபயிற்சி சொல்லித்தரப்பட்டு வந்தது.

ஆனால் அதற்கு நீண்டகாலம் குருவிற்கு தொண்டு செய்யும் சீடனாக இருக்க வேண்டிய நிலையும் தேவையானது. என்றாலும் கூட அந்த குருவிற்கு எந்த அளவு, பயிற்சியின் உண்மை தெரியுமோ? அதே அளவுதான் சீடனுக்கும் பகிரப்படும் நிலை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக, காயகல்ப பயிற்சி அதன் உண்மையை இழந்து, ஆண் பெண் நீடித்த போக இன்பத்துக்கான ஒரு பயிற்சியாக உலகில் இருந்துவந்தது.

குரு மகான் வேதாத்திரிக்கும், காயகல்ப பயிற்சி குறித்த ஐயப்பாடும், குழப்பங்களும் இருந்துவந்தது. எத்தனையோ சித்தர்களின் குறிப்புகளை ஆய்வு கண்டும், முழுமையான பயிற்சி வடிவம் கிடைக்கவில்லை. என்றாலும்கூட அதன் அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டார். உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று, அங்குள்ள ஆன்மீக அமைப்புகளில் உள்ளவர்களை சந்தித்து உண்மை அறிந்து, அவற்றை தன் ஆராய்ச்சியோடு ஒப்பிட்டு, ஒழுங்கு செய்து, பயிற்சியாக வடிவமைத்தார். அதுவே இப்போதுள்ள ‘வேதாத்திரிய காயகல்ப பயிற்சியாக’ மலர்ந்துள்ளது.
 
வாழ்க வளமுடன்

Please let me know the Vethathiriya simplified exercise within simple words!


எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?

பதில்:

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் சிறப்பை மிக எளிமையாக, சுருக்கமாக சொல்லமுடியுமே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆரம்ப காலம் முதலாகவே, எளியமுறை உடற்பயிற்சியில் அவ்வப்பொழுது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டே வந்தார். ஆண்பாலருக்கு மட்டுமல்லாமல், பெண்பாலருக்கும் உண்டான பொருத்தங்கள், விளைவுகள், சங்கடங்கள், பலன்கள் இவற்றை ஆராய்ந்து திருத்தங்களும் செய்து வந்தார். அதை மறுபயிற்சியில் திருத்தங்களோடு சொல்லியும் வந்தார். அறிவும், அனுபவமும் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவ ஆலோசகர்களையும் கலந்தாலோசித்தும், அவர்கள் சொன்ன கருத்துக்களையும் ஏற்று, திருத்தம் அமைத்துக் கொண்டபிறகுதான், முழுமையான இப்போது இருக்கும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்தபயிற்சியில், அதை வடிவமைத்த வேதாத்திரி மகரிஷியே எளிய விளக்கங்களை மட்டுமே தந்து நிறுத்திக்கொண்டார். கேட்பவர்களையும், பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களையும், பயிற்சி கற்றுக்கொண்டவர்களையும், கற்றுக்கொண்டு இருப்பவர்களையும் குழப்பவில்லை. ஆனால் இன்று அதற்கு மாறான போக்கு வந்துவிட்டது, விபரம், நுணுக்கம், அற்புதம், அது இது என்று பல்வேறு வகையான, பல்லாயிரக்கணக்கான தகவல்கள் ‘வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில்’ கிடைக்கிறது. காலத்தின் மாற்றம் என்பதில் ஐயமில்லை. எனவே ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

இதனால்தான், உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மிக எளிமையாக, சுருக்கமாக இங்கே உண்மைகளை தருகிறேன். உலகில் இப்போதும் நாம் செய்துவருகின்ற எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் நம்முடைய உடல் இயக்கத்தை சரி செய்கிறது. இதில் வயதுக்கு ஏற்றமாதிரியான பயிற்சிகளும் உண்டுதான். சில உடற்பயிற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் எலும்புகள், தசைகள் இயக்கங்களை மறு சீரமைப்பும் செய்கிறது. வலி ஏற்படுத்தினாலும், நாளைடைவில் தானாக சரி செய்யும். உடலுக்கு போதுமான இரத்த ஓட்டத்தையும் காற்று சுழற்சியையும் தடையற்று இயக்குகிறது, உடல்வெப்பம் இயல்பாகிறது. என்றாலும் கூட, சில அசைவுகள் முரண்பாடானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இத்தகைய பயிற்சிகளில், கவனம் செலுத்தி வந்த குருமகான் வேதாத்திரி மகரிஷி, அதை முழுவதுமாக சீராக்க நினைத்து ஆராய்ந்தார். ஓவ்வொரு நாட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம். அவர்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் உடல், மனம் தொடர்பான வேலைகள், பயிற்சிகளை கேட்டுத்தெரிந்து கொண்டார். அதை பயிற்சியாக இணைத்தும்கொண்டார். அதனால், வேறெந்த உடற்பயிற்சிகளுக்கும் மேலாக வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உடலுறுப்புக்களின் இயக்கத்தை சீரமைத்து வலு ஊட்டுகிறது.

உடலில் ஒவ்வொரு உறுப்புக்களிலும், சதை, தசை, எலும்பு ஆகியவற்றின் இயக்கங்களிலும், அவற்றின் மூலக்கூறு, செல் அமைப்புகளிலும் நாம் செய்கின்ற செயல்கள், இயக்குகின்ற இயக்கங்கள் பதிவுகளாகிவிடுகின்றன. தேவைக்கேற்றபடி தானாகவோ, விரும்பும் பொழுதோ, சூழ்நிலையாகவோ அவை மறுபடி செயலாக மலர்கின்றன. அப்படியாக, இதுவரை நாம் செய்துவந்த செயல்களின் வழி

பதிந்த தேவையற்ற முரண்பாடான உடலியக்க பதிவுகள் சீராக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விடவும் முக்கியமாக, இயற்கையோடு ஒன்றிணைந்து உடல், மனம், உயிர் ஒத்துழைப்பாக இயங்க வழி தருகிறது!

வாழ்க வளமுடன்
-

What is truth of fulfil lean yoga, service and teaching to others?


யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்த பிறகுதான் கிடைக்கும் என்பது சரியானதுதானா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான் என்பது சரியானதுதானா?

பதில்:

இந்த கேள்வியை சிறந்ததாக கருதுகிறேன். இந்த உலகத்தில், பக்தியை கடந்த, அதன் உண்மையான ‘நான் யார்?’ என்ற கேள்வியை துணைகொண்டு உண்மை அறிய, அதை ஆராய்ச்சி செய்ய, வேதாத்திரியம் போல பலதரப்பட்ட யோக வழிமுறைகளும், யோகம் அல்லாத உண்மையும், விடுதலையும் பெறும் அமைப்புக்களும், பக்தியோடு கூடிய ஆன்மீக நிலையங்களும் இருகின்றன. அதேபோல, சித்தர்களின் வழியிலான யோகமுறைகளும் இன்னமும் தொடர்கிறது என்பது உண்மை.

உங்களுக்கு விருப்பமான ஓர் வழியை, நம்பிக்கையான ஓர் வழியை, ஆராய்ந்து தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. வேதாத்திரியம் என்னுடைய வழி என்பதால், நான் உங்களை ‘கட்டாயப்படுத்த முடியாது’. அதே வேளையில், இன்னொன்றை குறை சொல்லவும் முடியாது. ஆனால் ஓவ்வொரு யோக முறைகளுக்கான உண்மை, நோக்கம், பயிற்சி, இவையெல்லாம் ஆராய்ந்து உண்மை சொல்வதில் தவறில்லை. அது நிச்சயமாக எது சரியானது? என்ற உங்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?

வேதாத்திரியத்தின் பாடத்திட்டம், அந்ததந்த பயிற்சிகளின் வழியாக, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஆசிரியர் நிலை அடையலாம். பிறருக்கு தீட்சை வழங்குதலும், குறிப்பிட்ட பாடங்கள் நடத்துவதற்கும் அனுமதி தரப்படுகிறது. ஆசிரியர் பயிற்சியின் மேல் நிலையில், குறிப்பிட்ட தவ மையம் மட்டுமில்லாமல், எந்த தவமையத்திற்கும் சென்று பயிற்சியும் பாடமும் நடத்த தகுதி கிடைத்துவிடுகிறது. இத்தகைய எளிமை வேறெந்த யோக மையத்தில் இருப்பதில்லை என்றே கருத இடமிருக்கிறது.

இப்படியாக, எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான், யோகத்தில் நிறைவு வருமா? என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் இன்னொரு முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது. நீங்கள், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கு கற்றுத்தரும் முன்பாக, அதில் நீங்கள் ஆழ்ந்த உண்மையை, தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை உதாரணமாக சொல்லுவதென்றால். முப்பத்தி மூன்று வயதில் முழுவதுமாக தன்னை யோகத்தில் இணைத்துக்கொண்ட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான், தன் அனுபவத்தை கவிகளாகவும், கட்டுரைகளாகவும், திட்டமாகவும், பாடங்களாகவும் வெளிப்படுத்தினார். அதுவரையிலும் தான் அறிந்து கொண்டதை, ஆராய்ச்சி, ஆராய்ச்சி எனவே காலத்தை செலவு செய்தார். இதில் அவரின் கண்ணும் பாதிக்கப்பட்டது, உடலும் பாதிக்கப்பட்டது என்று அவரே தன்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வார்த்தையாக சொல்லுகிறார்.

எனவே நீங்களும் அத்தகைய, ஆராய்ச்சியில் இறங்கி, உண்மையை அறிந்து, அந்த தெளிவினில் பிறருக்கு தீட்சையும், பாடமும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். என்றாலும்கூட அதை  நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Can we change the day, time, place for the yoga practice? Is it Okay?


தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


பதில்:

சாதாரணமாக  கண்கள்மூடி தவம், தியானம் செய்வதற்கும், குருவிடம் தீட்சை பெற்று, யோகவழி தவம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதுபோலவே நாம் இயற்றும் வேதாத்திரிய தவங்களுமாகும். பொதுவாகவே யோகவழி தவங்களுக்கு, உங்களுக்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்வது மிக நல்லது. அப்போதுதான் மனம் அமைதியில் இருக்கும். தவமும் சிறக்கும்.

இடம் என்பதை, நீங்கள் என்றுமே பயன்படுத்தாத, எப்போதாவது பயன்படுத்துகின்ற இடமாக இருக்கக்கூடாது. வழக்கமான வாழ்வில், எப்போதும் நிறைவாக பயன்படுத்தும் அறையாக, இடமாக இருக்கவேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய படுக்கையறையும் பொருத்தமானதே. பலர் வந்து போகின்ற அறையாகவோ, வரவேற்பறையாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தவம் இயற்றுகின்ற நேரம் முழுவதும் எந்த தொந்தரவும், தடையும் ஏற்படுத்தாத நிலையும் முக்கியம்.

காலம் என்பது, ஒவ்வொரு நாளும், சூரிய உதயத்திற்கு முன்பான காலம் சிறப்பு. கூடுதலாக காலை, நண்பகல், மாலை வைத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேலாக தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நேரம் என்பதை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தவத்திற்கு 15 நிமிடம் போதுமானது. அதை நீடிப்பது உங்கள் விருப்பம். அதை தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நேரம் முழுவது உங்களுக்கு தடையோ, பிரச்சனையோ பிறரால் எழாத தனிமை அவசியமாகும்.

இந்த காலம், நேரம், இடம் இம்மூன்றையும், ஏதேனும் சூழ்நிலை கருதி மாற்றிக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக், உங்கள் இல்லத்தில் விருந்தினர் வருகை என்றால், அவர்களை தொந்தரவும் செய்யாமல், ஏதேனும் மற்றோர் இடத்தில் தவம் செய்யலாம். ஆனாலும் உங்களுக்கு பொருந்தாத இடத்தில் தவம் செய்வதை தவிர்க்கலாம். தவம் இயற்றுவதற்காகவே வெளியிடங்களுக்கு, இன்னொருவர் வீட்டிற்கு செல்வதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம். ஏனென்றால் அது உங்கள் மனதிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அருகில் உள்ள மனவளக்கலை தவமையத்திற்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ செல்வது மிகச்சிறந்த வழியாகும்.

ஏதேனும் சூழலில், நீங்கள் வெளியூரில் இருந்தால், அங்கே தவம், தியானம் இயற்றுவதை தவிர்க்கலாம். புதிய இடங்கள் எப்படிப்பட்டவை என்ற அனுபவம் நமக்கு இல்லை என்பதால் விட்டுவிடலாம். அதுபோல பொது இடங்களில் தவம், தியானம் இயற்றுவதும் நல்லதல்ல.

ஏன் இப்படியாக மாற்றிக்கொள்ளக்கூடாது? அதற்கு சில காரணங்கள் உண்டு. தினமும் உங்கள் வீட்டில் ஒரே இடத்தில், தவம், தியானம் செய்துவந்தால், அந்த அறை, இல்லம் முழுவதும் நல்ல ஆற்றல்களம் நிறைந்திருக்கும். தவத்திற்கு அமர்ந்த உடனே மனம் லயித்து செய்யவும் முடியும். உங்கள் யோக பயணத்தில் நல்ல வளர்ச்சியை தந்துவிடும் எனலாம். பொதுவாக உங்கள் மனதில் தோன்றும் ‘உள்ளுணர்வுக்கு’ மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு பொருந்தாத இடம், காலம், நேரம் என்பதை தானாகவே உணர்த்திவிடும் என்று சொல்லலாம். அதை கணித்து மாற்றம் செய்து கொள்க.

வாழ்க வளமுடன்

-

Does the occasion and the situation automate? If not, do we create ourselves?


சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


பதில்:

நல்ல மிக சிந்தனைக்குரிய கேள்வியை கேட்ட உங்களை பாராட்டுகின்றேன். பொதுவாகவே உலகில் வாழும் மனிதனை ‘சூழ்நிலைக் கைதி’ என்று பொருள்பட சொல்லுவார்கள். நினைத்தை செய்யமுடியாத தன்மையில் சிக்கிக் கொண்டவன் என்ற உண்மையான அர்த்தத்தை அது தருகிறது எனலாம். அப்படியான சூழ்நிலை கைதி என்றால், மனிதானனவனுக்கு, வாழ்கின்ற இந்த உலகில் அவனுக்கு நிகழ்வது, வந்து சேர்வது ஆகிய எல்லாமே தானாகவே வந்து அமைவதுபோன்ற நிலைதான் இருக்கிறது என்ற பொருளையும் உருவாக்கும். இது ஓரளவு உண்மைதான் எனினும் மற்றொரு தன்மையும் உண்டு.

மனித வாழ்வியலில், எந்த ஒரு மனிதரும் தனித்த வாழ்க்கைமுறையை கடைபிடிக்கவழியில்லை. எப்படியாயினும், ஒரு குடும்பத்தின் வழியாக, சமுகத்தின் வழியாக, நாட்டின் வழியாக, உலகின் வழியாகவேதான், அப்போதுள்ள வழக்க பழக்கங்களை ஏற்றுத்தான் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. தனித்து வாழ்ந்தாலும், விலகி வாழ்ந்தாலும் அது சமூக குற்றமாகவும் ஆகிவிடும். அதற்கு அவன் வாழ்கின்ற நாட்டின் சட்டமும், விதிமுறைகளும் இடமளிக்காது. மேலும் தண்டனையும் தந்துவிடும் என்பது உறுதி.

இதனால், மனம்போன போக்கில் என்பதுபோல ஒரு மனிதன் தற்சார்பாக, தன்னியல்பாக வாழமுடியாது. எந்தவகையிலாவது, இன்னொருவரோடு, பிறமனிதர்களோடு, இந்த சமுகத்தோடு இணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் பகிர்வும் இருந்திடவேண்டும். இந்த வாழ்வியல் அடிப்படையில் கவனித்தால், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைவதும் உண்டு, தேவையின் காரணமாக, நாமும் உருவாக்கிக் கொள்வதும் உண்டு என்ற ‘இரட்டை நிலைப்பாடு’ இருப்பதை அறியலாம்.

ஐந்தறிவு உயிரினங்கள் வரையிலும், அவை ‘இயற்கைச் சூழலின் கைதி’ என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் ஐந்தறிவு உயிரினங்கள் ‘இயற்கையை மீறுவதில்லை’. இந்த இடத்தில்தான் ஆறாவது அறிவான மனிதன் வித்தியாசப்படுகிறான். தான் இயற்கைக்கும் அப்பாற்பட்டவன் என்று கருதிக்கொண்டு, இருக்கின்ற / அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையை தாண்டி, தானாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று, தனக்கும், பிறருக்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் சிக்கலை உண்டாக்கிக் கொள்கிறான். மேலும் இந்த இயற்கையையே பாழ்படுத்திவிட்டு அவனும் அதில் சிக்கி அழிந்தும் போகிறான் என்பதில் மாற்றுக்கருத்துண்டா?

எனவே, மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால், இயற்கையின் மிகப்பெரும் ஒத்துழைப்போடு,  தனக்கும் பிறருக்கும்  பயனளிக்கும் வகையிலே, இயற்கையை மீறாத நிலையில், பலனளிக்கும் வழியிலே, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து உருவாக்கிக் கொள்ளலாம். தானாக அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய திறமை மனிதனுக்குமட்டுமே உண்டு என்றும் சொல்லமுடியும்.

வாழ்க வளமுடன்

-

Why need to search good one in life always? Sometimes it is not available also!


வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே?


பதில்:

உங்களுக்கு ஒர் உண்மை தெரியுமா? இந்த வாழ்க்கை நாம் உருவாக்கிக் கொண்டதல்ல. ஏற்கனவே நம் பெற்றோரும், முன்னோர்களும், தலைமுறையினரும் உருவாக்கி, பாதை போட்டுத்தந்த வழியிலே நாம் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை.  இன்று நீங்கள் பயணிக்கும் பாதையில், இன்னும் சிலவழிகளை, உங்கள் பயணத்தின் பொழுது, நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கிற அதேவேளையில், உருவாக்குகிறீர்கள். அந்தவழியில் பயணிக்க உங்கள் குழந்தைகள், உங்களுக்கு வேண்டியோர் பயணிப்பார்கள். உங்கள் நண்பர்கள்கூட பயணிக்க தயாராவர்கள்.

இப்படியான பாதைகளும், வழித்தடங்களும் எண்ணற்றவை. ஒரு மரத்தின் கிளைகள் போல இல்லாமல், அதன் வேராக எங்கும் படர்ந்து விரிந்து சென்று, ஏதேனும் ஓரிடத்தில் அவை இணைந்து பிண்ணி பிணைந்துகொள்ளவும் செய்யலாம். விடுத்து இன்னொன்றாக பிரிந்தும் விரியலாம். அது அதனதன் தன்மையையை பொறுத்தது.

இந்த பாதைகளை பொறுத்தவரை எது நல்லபாதை? எது கெட்டபாதை? எது அவசியமற்றது? எது தவிர்க்கவேண்டியது? எது பிரச்சனைக்குறியது? எது மிகச்சிறந்தது? என்பதெல்லாம், அந்த வழியில் பயணித்து சிக்கி பாடம் கற்றோர், இந்த சமூகத்திற்கு, உலகுக்கு விபரத்தை தந்திருக்கிறார்கள். அதுதான் அறவழி என்றும் சொல்லுகிறார்கள். மனித வாழ்வின் நோக்கத்தை சிறப்பாக்கும் என்றும் வாழ்க்கையில், நல்ல வழக்க பழக்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அறவழியில் பயணிப்போர், மேலும் பல உண்மைகளை அறிந்து, உணர்ந்து அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு தந்து செல்கிறார்கள்.

என்றாலும், குறுமதியார்கள் மக்களை, அவர்களின் மனதை குழப்பி, பாதை தடுமாறச்செய்து, அதில் தனக்கான பொருளையும், புகழையும் பெறத்துடிக்கிறார்கள். இவர்கள் அந்ததந்த பாதையில் நின்று, நல்வழியில் செல்லும் மக்களை தடுத்து திசைமாறச் செய்கிறார்கள். இதனால் பெரும்பாலோர் சிக்கி திணறுகிறார்கள். இப்படியான பாதையில்தான் நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என்று கருத இடமிருக்கிறது. அதனால்தான், வாழ்வில் நமக்கான நல்ல விசயங்களை ஏன் தேடவேண்டியது இருக்கிறது? மேலும் அப்படி தேடினாலும் கிடைப்பதில்லையே? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்.

ஒரு வீட்டின் சமையலையில், உணவு சமைப்பதிற்கு தேவையான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருளை தேடாமல் எடுத்து பயன்படுத்துபவர் உங்கள் தாயாராகவோ, வாழ்க்கை துணைவராகவோ, நீங்களாகவோ இருக்கலாம். இன்னொருவரை அழைத்து வந்து, ‘அந்த வெள்ளை சக்கரையை எடு’ என்றால் அவர், உப்பை எடுத்துத்தரக்கூடும் அல்லவா? அதற்கு வாய்ப்பில்லை என்றால், எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருப்பார். இன்னொரு உதாரணமாக, வெள்ளை சர்க்கரை மட்டுமே இருக்கிற இடத்தில், உப்பையும், மாவையும், ரவையையும், வெள்ளை சோப்புத்தூளையும், இன்னும் சில ரசாயன உப்புக்களையும் நிரப்பி வைத்தால், அனுபவப்பட்ட நீங்களே கொஞ்சம் குழம்பித்தான் போவீர்கள் அல்லவா? இத்தகைய குழப்பும் வேலையைத்தான் ‘இன்றைய சமூகத்தில்’ சில குறுமதியார்கள், உண்மைக்கு புறம்பாக  செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இதை அடையாளம் காணுங்கள், எது உண்மை என்பதை கண்டடைய பழகுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுப்போல, ‘அல்லதை விடுத்தால் நல்லது அங்கேயே இருப்பதை அறியலாம்’.

வாழ்க வளமுடன்

-

Why I have a problems even nothing do not mistake and helping to others in life?


என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில் நான் எந்த துன்பமும் செய்யவில்லை. எல்லோருக்கும் உதவியும் வருகிறேன், ஆனாலும் எனக்கு பிரச்சனைகள் எழுவது ஏன்?


பதில்:

உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யாமல் வாழ்வது சிறப்பு. அதற்காக பாராட்டுகிறேன். உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் ஓரு கவனமும் அதற்கான விளக்கமும் பெற்றிருக்கிறீர்கள். அந்த விழிப்புணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களால். உங்கள்மீது அக்கறை உள்ள மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம். உங்களை வழிநடத்திய ஆசியர்கள் மூலமாகவும் இத மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால், ஒருவரின் குணாதசியம் என்பதை மீறி இப்படித்தான் வாழவேண்டும் என்று வழி சொல்லி திருத்துவதில், குடும்பத்தினரை விட ஆசிரியர்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் மற்றவர்களுக்கு துன்பம் தராத நிலையில், உதவியும் வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.  இந்த இரண்டு வகையிலும் உங்களுக்கு மன நிறைவும், அமைதியும் அல்லவா கிடைக்கவேண்டும். ஆனால் பிரச்சனை எழுகிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சில காரணங்கள் நிச்சயமாக இருக்கலாம். அவை என்ன? என்று பார்க்கலாம். 

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த துன்பமும் செய்யவில்லை என்பது உங்களின் நன்னடத்தையை சுட்டிக் காட்டுகிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல் என்பதில் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதை கூறலாம். உங்களை முன்னிறுத்தாது, உங்களுடைய வாய்ப்புகளுக்கு காத்திருந்து நகர்தல்தான் இதன் சிறப்பு என்று சொல்லலாம். உண்மைதானே?! இந்த நிலையில் உங்களுக்கான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதலாம். ஏனென்றால் உங்கள் கவனம் இதில் சிதையவில்லை. நீங்களே தேர்ந்தெடுத்து நகர்வதால், எளிதாக விட்டு விடவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

எல்லோருக்கும் உதவுவது, பெரும்தன்மை வாய்ந்தது. இங்கே சில சிக்கல், பிரச்சனைகள் எழுந்திட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு உதவி செய்வது என்பது, தீர்வா? என்று யோசித்தால், அந்தந்த நபர்களின் வாழ்க்கைச் சூழல், தேவை, அளவு, பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல், அனுபவம் ஆகியவற்றை பொருத்தது. நீங்கள் உதவி செய்தும் கூட அதை பயன்படுத்த தெரியாதவர்கள் இருப்பார்கள் தானே? உங்கள் உதவியை ஒருதடவை மட்டுமில்லாமல், அடிக்கடியோ, தினம் தினமோ தேவை என்று எதிர்பார்ப்பவர்கள் இருந்தால் அது இன்னொருவகையான சிக்கல் தானே? எவ்வளவு காலம் நீங்கள் உதவிக்கொண்டே இருப்பீர்கள்? மேலும் உதவி கேட்பவரின் எதிர்பார்ப்பை நீங்கள் அந்த அளவில் தீர்க்கவில்லை என்றால் அதுவும் சிக்கல் தானே? இப்படியாக பலவழிகளில், நீங்கள் உதவி செய்தும் கூட அதில் திருப்தி இல்லாமல், உங்களுக்கு மேலும் மேலும் தொந்தரவை அவர்கள் தந்தால் அது உங்களுக்கு துன்பமும், பிரச்சனைகளும் எழும் அல்லவா?

கூடுதலாக, உங்களுடைய பிரச்சனைகளுக்கு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்கவும் வேண்டுமே? அவர்களின் விருப்பம் இல்லாமல் நீங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும்? முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சரியாக உள்ளதா? அவர்களுக்கு அதில் ஏதும் வருத்தம் உள்ளதா? குழப்பம் உள்ளதா? என்பதை கவனித்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள்.  அதனினும் மேலாக, ஒருவர் நல்லவர், பிறருக்கு துன்பம் இழைக்காமல் உதவி செய்து வாழ்கிறார் என்பதால் மட்டுமே, எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வாழ்வார் என்பது உறுதியில்லை. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷியும் உறுதி செய்கிறார். காரணம், ஒருபக்கமாக உங்களுக்கு நல்ல எண்ணங்களின் எழுச்சி இருக்கும் என்றாலும், பரம்பரை வழியாக, தலைமுறையின் வழியாக, தீர்வு காணப்படாது இருக்கின்ற கர்மா என்ற வினைப்பதிவு தொடர்ச்சியும், அதன் எழுச்சியும் இருக்குமல்லவா? அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது இருக்கும் உங்களுடைய கவனம், இன்னும் ஆழமாக, உங்கள் வெளிப்பாடுகளுக்கு முன் இருக்கவேண்டியது அவசியம். உங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றில், ஆராய்ச்சி செய்யுங்கள். பிறருக்கு உதவும் முன்பாக, கூடுதலாக தேவை, அளவு, முறை குறித்து யோசித்து செயல்படுங்கள், அந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள். இப்படியாக தொடர்ந்தால், வழக்கமான உங்கள் செயல்பாடுகள் வழியாக பிரச்சனை எழாத நிலையும், இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவு தீர்வதற்கான வழிகளும் உருவாகிவிடும்!

வாழ்க வளமுடன்

-

What happen if we give up the yoga in the life by problem or mindset?


வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?

பதில்:

இந்த உலகில் வாழும் எல்லோருக்குமே, அவரவர் நிலையில் பிரச்சனைகள் உண்டு. தனித்து வாழ்ந்தாலும், குடும்பமாக வாழ்ந்தாலும், சமூக அமைப்பில் இருந்தாலும் கூட இந்த பிரச்சனைகள், ஒவ்வொரு விதத்திலும் வந்துமோதும். அப்படியான உலகம் இது. பொருள்முதல்வாத உலகத்தில், நாமும் நம்மையறியாமல் சிக்கி திணறுகிறோம். நம் மூச்சு நிற்கும் வரை. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை எனினும், வாழ்கின்ற இந்த வாழ்க்கையிலேயே நல்லதை நோக்கி நகர்ந்து அல்லதை விடுவதற்கு வழிஉண்டு. தன்னளவில் பிரச்சனை இல்லாமலும், பிறருக்கு துன்பம் விளைவிக்காமலும் நாம் வாழ்வதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு வழியை உருவாக்கித்தருவதும், அதற்கு நம்மை தயார் செய்வதும்தான் யோகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இத்தகைய யோகத்தை உருவாக்கித்தந்த சித்தர்களின் நோக்கமும் இதுவேதான்.

மனம் இதனான மனிதன், தன்னளவில் குறுகி வாழ்ந்துவருகிறான் என்பதில் சந்தேகமில்லை. தான் தனது என்ற தன்முனைப்பில் வாழ்ந்து அதையே மற்றவர்களுக்கும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தன்னளவில் திருப்தியும், நிறைவும், அமைதியும் இன்றி தவிக்கிறான். தனிமனிதன் அமைதியில்தான் குடும்பமும், சமூகமும், உலகமும் அமைதியடையும் என்பதை மறவாதீர்கள். அப்படியான அமைதியை தந்து, அளவு முறையோடு உலகில் வாழவே யோகம் உதவுகிறது. வேதாத்திரியமும் அதையே வழங்கிவருகிறது.

உங்களுடைய வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால், மிகப்பெரும் இழப்பு என்பது உண்மைதான். ஆனால் அதை திருத்திட வழியே இல்லை என்ற தெளிந்த நிலையில், வேறுவழியே இல்லாமல் கைவிடுகிறேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதான். ‘அடடா, இப்படியெல்லாம் சொல்லலாமா? எப்படியாவது தொடரத்தான் வேண்டும் என்றல்லவா அறிவுரை கூற வேண்டும்’ என்று நினைக்கிறீர்களா? உண்மையை அறிந்தவர்களின் பார்வையிலும், அனுபவத்திலும் ‘பொய்யாக’ சொல்லமுடியாது. எது சரியோ? அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனவே வாழ்க்கைச்சூழல், மனமாற்றம், பிரச்சனைகள் தாக்கம்  இருந்தால் ‘கைவிட்டு விடுங்கள்’. அது குறித்து கவலை இல்லாமல், அந்த சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். எவ்வளவு காலத்தில் சரி செய்யமுடியுமோ, அதுவரை உங்களுக்கு ‘யோகம்’ வேண்டாம்.

வாழ்க்கை முழுவதுமே இனி தொடர்முடியாத சூழலா? சரி வேறு வழியில்லை என்றால் அதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். உங்களுக்காக, உங்கள் வழியில் வேறு யாரெனும், வாரீசாக, தலைமுறையில் உருவாகலாம். அவரின் முயற்சியில் உங்களுக்கும் விளக்கம் உருவாகும். அதுவரை அமைதியாக வாழ்க்கையை கடந்து செல்லவேண்டியதுதான். எந்த வருத்தமும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்
-

Needing of money is only the reason of barrier on yoga journey, correct?


பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியானதுதானே?!

பதில்:

நாம் வாழ்கின்ற இந்த உலகவாழ்க்கையில், பணத்தேவை என்பது மிக அவசியமானதே. மேலும் ‘மனிதர்களுக்கு மட்டுமான வாழ்வில்’ என்றுதான் வைத்துக் கொள்ளவேண்டும். எப்படியோ மனிதன் இந்த பணம் என்கின்ற அமைப்பிற்குள் சிக்கிவிட்டான். மனிதன் மட்டுமல்ல மனிதமும் சிக்கிவிட்டது. பொருள்முதல்வாத உலகம் எங்கும் நிரம்பிவிட்டது. மனிதர்கள் எல்லோரும் உழைத்து வருமானம் ஈட்டி, பொருள் பெற்று வாழ்தல் அவசியம் என்பதும், அதன்வழியாக மனிதர்களின் தரமும் நிர்ணயிக்கப்படுவதும் நிலைத்துவிட்டது. அதில் நாமும் வெற்றி பெறவேண்டியது அவசியமே.

பணத்தேவையை பூர்த்தி செய்யாமல், நாம் இந்த உலகில் வாழ்வும் முடியாது.
சில அடிப்படை விசயங்களை பெறவும் பணம் அவசியமாகிறது. முக்கியமாக, ஒரு மனிதன் சும்மா, வெறுமனே இருக்கக்கூடாது. அவன் உழைக்கவேண்டும், தன்னுடைய உழைப்பை, உலகுக்கு, சமூகத்திற்கு, பிறமனிதர்களுக்கு தரவேண்டும், அதற்கு அந்த மனிதன் சன்மானம், வெகுமதி பெற்றுக்கொள்ளலாம் என்பது உலம் ஏற்றுக்கொண்ட ஒரு நியதி. குழந்தைகளும், வயோதிகர்களும் மட்டுமே விதிவிலக்கு. சிலவேளைகளில் அவர்களும் சிக்கிக் கொண்டு துன்புறுகின்றனர். துன்புறுத்தவும்படுகின்றனர்.

இந்த பணத்தேவை, தனிமனிதனுக்கும் அவசியம், குடும்பம் என்ற சமூக நிலையில் வாழ்பவருக்கும் அவசியம். கூட்டுக்குடும்பம் சிதைந்து போனதால், தனித்தனி நபர்களும், இந்த பணத்தேவையை நிவர்த்தி செய்ய உழைக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதையெல்லாம் கடந்துதான் ‘யோகம்’ என்பதும் அவசியமாகிறது. ஆனால் பணத்தேவை யோகத்திற்கு தடையா? என்ற கேள்வியும், யோகத்திற்கு பணம் தடையா? என்பதும் அவசியமற்ற கேள்விகளாகும். எப்படி என்பதையும் பார்க்கலாம்.

சராசரியாக ஒரு குடும்பத்தின் தேவை, இன்றைய காலத்தில் இந்திய ரூபாய் 20000/- (இருபதாயிரம்) என்று வைத்துக் கொள்ளலாம். இந்த வருமானம் குறைவு, யோகத்தில் பயணிக்க முடியாது என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது பற்றாக்குறை என்றால், கூடுதலாக பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பொழுது இந்த தொகையை ரூபாய் 40000/- (நாற்பதாயிரம்) என்று வைத்துக்கொண்டால், யோகத்திற்கு தடையில்லைதானே? ஆனால் யோகத்திற்கு வந்துவிடுவார்களா? இல்லையே.

அப்படியானால், மாதத்திற்கு 80000/- (எண்பதாயிரம்) வருமானம் ஈட்டுபவர்கள் யோகத்தில் இணைந்திருக்கிறார்களா? அதுவும் இல்லையே. எவ்வளவு வருமானமும் ஈட்டினாலும்கூட குறைவு மனப்பான்மையில் அவர்கள் சிக்கியிருந்தால், யோகம் அவர்களுக்கு கசக்கும். எனவே, பணத்தேவையில் மூழ்கி நிற்பதுதான் யோகத்திற்கு தடையாக இருக்கிறது என்பதெல்லாம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல ‘சப்பைக்கட்டு’. நீங்களும் இந்த உண்மையை ஆராய்ந்து பார்த்து விளக்கம் பெறமுடியும். 

உங்களுடைய தேவை என்ன? குடும்பத்தின் தேவை என்ன? வருமானம் எந்தெந்த வகையில் ஈட்டமுடிகிறது? எவ்வளவு வருகிறது? அதன் செலவும், அளவும், முறையும் என்ன? வருங்கால தேவை என்ன? அதற்கான சேமிப்பு எவ்வளவு? என்பதெல்லாம் ஆராய்ந்து கணித்துப்பாருங்கள். யோகத்தில் நீங்கள் முழுமனதோடு இணைந்து பயணிக்கலாம் என்பதே முடிவாகும்!

வாழ்க வளமுடன்.
-

It is true the Nature power will provide our request?


கேட்பதை வழங்க இயற்கையாற்றல் தயாராக இருக்கிறதா? அது உண்மைதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கேட்பதை வழங்க இயற்கையாற்றல் தயாராக இருக்கிறதா? அது உண்மைதானா?


பதில்:

கேட்பது என்பது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்ற குணாதசியம் என்று நிச்சயமாக சொல்லலாம். இந்த கேட்பது என்பது செயலின் முதல் நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள முடிவோம். அப்படியென்றால் கேட்பதற்கு முன்னதாக என்ன இருந்திருக்கும்? இருக்கவேண்டும்? என்றால், ‘தேவை’ என்றொரு நிலை இருந்தாகவேண்டும். அந்த தேவை என்பதற்கும் சில அளவு முறை உண்டு என்றும் சொல்லலாம். அதன் அடிப்படையில்தான் அந்த தேவையான கேட்கின்றவருக்கு, கேட்கின்ற நமக்கு உபயோகமாக இருக்கும் என்று சொல்லலாம். இப்பொழுது அந்த தேவை, உண்மையிலேயே தேவைதானா? என்ற ஒரு துணைக்கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலோர் இந்த துணைக்கேள்வியை கைவிட்டுவிடுவார்கள்.

தேவை என்பது இயல்பாக எழும் உணர்வுதான். அதில் குறையொன்றும் இல்லை. உண்மையிலேயே தேவைதானா? என்று சிந்திக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் உண்டு, மேலும் தேவையை நிறைவேற்றக்கூடிய வழிகளும் நமக்கு தோன்றிவிடவும் கூடும். அதுதானே ஆறாவது அறிவின் சிறப்பு. அந்த தேவையை எப்படி நிறைவேற்ற முடியும்? யாரால்? எந்த சூழலில்? என்றெல்லாம் கூட ஆராய்ந்து தெளிவாக விளக்கமும் பெற்றுக்கொள்ள முடியும். சிறிய ஆய்வு செய்தாலே போதுமே. இந்த தேவை குறித்து, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும் பொழுது, ‘இயற்கையாலும், பேராற்றலாலும். பேரறறிவாலும் மனிதனுக்கான தேவைகள் எல்லாமே நிறைவேற்றப்பட்டுள்ளது, கேட்பதற்கு ஒன்றுமே இல்லை’என்றுதான் சொல்லுகிறார்.

ஆனால், நமக்கோ அப்படியெல்லாம் விட்டுவிட முடியவில்லையே, ஏதேனும் தேவை மிச்சம் இருந்துகொண்டே அல்லவா உள்ளது? அதனால்தான் கேட்பது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். உண்மையாகவே, நாம் கேட்பதை வழங்க இயற்கையாற்றல் தயாராகவே இருக்கிறது என்பதே உறுதியானது. என்றாலும் கூட, அது நமக்கு தேவையானதா? என்ற துணைக்கேள்விக்கு, நாம் கேட்பது பதிலை தருவதாக இருக்கவேண்டியது அவசியம். தேவை என்பதை விட விருப்பத்திலும், ஆசையிலும் கேட்கிறேன் என்றால் அங்கேதான் சிக்கல் உருவாகிவிடுகிறது. அப்படி விருப்பத்திலும், ஆசையிலும், கூடுதலாக பேராசையிலும் கேட்டால், அது தடை ஆகிவிடும், தாமதமாகிவிடும், சிக்கலை உண்டாக்கிவிடும். வந்தாலும் கூட நிலைத்து நிற்காது என்பதாக நாம் குறிப்பிட முடியும்.

இந்தக்காலத்தில் PRAYER கூட BEGGING என்று மாறிவிட்டதுதானே?!

உண்மையான தேவையின் வழி கேட்பதை வழங்க, இயற்கையாற்றல் தயாராக இருப்பதால், உங்கள் தேவை என்ன? அதன் அளவு என்ன? முறை என்ன? அவசியம் என்ன? என்ற துணைக் கேள்விகளை ஆராய்ந்து விடையை குறித்து வைத்துகொண்டு கேளுங்கள். நீங்கள் உறுதியாக பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Sharva Vashya Dhana Agarshana Sankalpa - Complete information


Sharva Vashya Dhana Agarshana Sankalpa


Welcome dear friends,

Here I wish you and your family be blessed by the divine.

Today we come to know the greatness of the sankalpa. You can use this for your healthy and wealthy on this life forever. That sankalpa is called by, Sharva vashya dhana agarshana sangalpa.

--

Did you check or analysis the name? 

What it mean? 

The sharva vashya means, you can collect all what you need.

Dhana means, the prosperity.

Agarshana means, you can attract for your life by the action.

sankalpa means, the mantra, chanting.

--

Do you know the truth of how this sankalpa works?

The ancestors, like as siddhars found, the sound makes vibrates and it stimulates the universal magnetism. yes, this vibrations forms at and into the universal power and collect, come back with benefits, what we need as per as our request. Actually the nature, universal power is working as a providence. This is working based on entra, tantra and mantra. The sharva vashya sangalpa is a mantra. We attach the entra by the pooja and worship and next we attach the tantra by a calling angels with the requirements.

--

How we calling the Angles?

You come to understand the magical effort on this sankalpa, some of angels based on our requests and we call them with their names. They are the replica of the our needs.

--

How many times you will be chant this Sankalpa?

Some of interruptions in our life, the interruptions will happen by our karma, unruled thoughts, word, deeds and some of planets, starts waves. As per our action on demand by this sankalpa, the interruptions will clear on the time and our need will be provided on within our lifetime. Please do this sankalpa perfectly, calm and with belief.

--

How to start this, Sharva vashya dhana agarshana sankalpa at your home?

Set you as usual pooja room or make it like as in hall too. Collect some of your friends, neighbors or relatives and friends or you can do it as single.

Lightning the 5 faces brass standby lamp by ghee or best light oils.

Put it on the big rounded brass or silver plate.

Collect 108 coins. Any coin or use one rupee or 2 rupee coins, for pouring to under the lamp by 108 times. You can reuse this coins for all every time of sankalpa.

Collect some of white flowers, for pouring to under the lamp by 108 times.

Take and make a white rice coated with turmeric powder, for pouring to under the lamp by 108 times.

Make sweetly milk like as payasam or candy to share it all after end of the pooja.

You can use Agarpathi or benzoin smokes for this pooja time.

--

Care about it.

This sankalpa is sound vibrated base, so keep perfect sound for every word in this sankalpa start to end by 108 times. Some of people will criticize you, Why you do this sankalpa for 108 times, just do it for 9 times only. Just refuse them. If you need full of benefit by this sankalpa, please do it 108 times.

--

When you can do this sankalpa?

Any day you can do this sankalpa pooja. but pournami, the full moon day is very special. Sometimes you can choose Guru hora and Sukra hora. East or south face is best for this sankalpa pooja. 

--

How you modify the sankalpa based on your needed?

After the end of the sankalpa word, Un Vasam Aanar Pol, just change the next word like as, 

My family members get recover from problems,

Will get that job based on my experience,

Need to success on this project,

and as you like anyway!

Please do this for perfect or complete form only. Do not use it for just desire.

--

What is root of the, Sharva vashya dhana agarshana sankalpa?

No one guess. No detailed information is available. But by the greatness, this sankalpa is working for all. Sri, Guru mahan vethathiri maharishi, share this sankalpa for his disciples on that time for problem fixing. By the way it spread all over the world with name of Sri, Guru Mahan Vethathiri Maharishi. 

--

How to chant this mantra?

Here we happy to share, the complete detailed playlist videos from out 'Vethathiriya Channel'. Please check and hear, the method of, how to chant this sankalpa with sri, Guru Vethathiri Maharishi voice. Please listen and hear carefully!

Link: Sankalpa Playlist

-

Thanks for joining with Vethathiriya Channel, subscribe the channel for more videos!

Be blessed by the  Divine! 

--

Here the Sankalpa in words!

Hari Om, Sriyum, Aiyum, Kliyum, Chavvum.

Chandra Lakshmiye Namaha!

Krum Kreem, Swarna Lakshmiye Namaha!

Vang Sung Dung Ring, Veera Lakshmiye Namaha!

Om, Hum Sarva Baghya Lakshmiye Namaha!

Navvyum Mavvum Nadu Ezhuthagiya Surya Lakshmiye Namaha!

Theiva Vasya, Bhootha Vasya, Loga Vasya, Raja Vasya.

Jana Vasya, Purusha Vasya, Sthree Vasya, Putra Sampath Vasya.

Naga Logathil Undagindra Sarva Jeeva Pranigalum,

Un Vasam Aanar Pol,

En Vasam Aaga

Vasya Vasya Om Swaha!

-

What would happen if my self-realization did not take place within my life?


வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


பதில்:

நல்ல புரிதல் உள்ள கேள்வியாக கருதுகிறேன். பொதுவாகவே எல்லோருக்கும் இந்த கேள்வி உண்டு எனினும், சிலர்தான் வாய்விட்டு கேட்பார்கள். அத்தகையவர்களுக்கும் இந்த பதில் உதவும் என்பது உண்மை. இந்த கேள்வி எழுந்துவிட்டால், அவர்களுக்கு ஒரு திசை மாற்றம் ஏற்பட்டுவிடும். அதாவது அவ நம்பிக்கை. ‘இனிமேலாவது தன்னையறிவதாவது’என்று கைவிட்டுவிடுவார்கள். மேலும் இதுவரை வாழ்ந்தவர்கள் எல்லோரும், தன்னையறிந்தா போய்ச்சேர்ந்தார்கள்? இல்லையே? என் குடும்பத்தில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்தவரையிலும், அறிந்தவரையிலும் யாருமில்லையே? அதனால் எனக்கென்ன அக்கறை வந்ததது? அவர்களைப்போலவே நாமும் போய்ச்சேர்வோம். என்ன குறை ஆகிவிடப்போகிறது? போகும் காலம் வந்தால் போய்த்தான் சேரவேண்டும், நிலைத்து நிற்கவா முடியும்? என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, வழக்கமான பக்தியிலேயே தன்னை கரைத்துக்கொள்வார்களே தவிர, யோகத்தின் பக்கம் வரமாட்டார்கள்.

உண்மையிலேயே யோகம் யாருக்கும் கட்டாயமில்லை, ஆனால் யோகம் தான் தனையறிதலுக்கான சிறந்த தீர்வு. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும்படி, பிறப்பு நீண்டுகொண்டே போகும். இங்கே பிறப்பு நீளும் என்றால் அவரே பிறந்துகொண்டே வருவார் என்று நினைத்துவிடக்கூடாது. அது அறியாமை. ஒருவர் உலகில், பிறந்து வாழ்வில் மறைந்துபோனாலும், அவரின் கர்மா என்ற வினைப்பதிவு, அவரின் குழந்தை, வாரிசுகள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் பிறவித்தொடர் ஆகும். அது அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு தலைமுறையில், யாரெனும் ஒருவர் யோகத்தின் வழியில் தீர்க்கும் வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அது இயற்கையின் வினை விளைவு நீதியும் ஆகும்!

ஆனால், யோகத்தின் உண்மை அறிந்து, தங்களை இணைத்துக்கொண்டு, குருவின் வழிகாட்டலோடு பயணிக்கும் ஒருவருக்கு காலத்தால், எத்தகைய கர்ம வினைப்பதிவு சுமையாக இருந்தாலும் கூட அது களைந்து, தூய்மைக்கு வழி பிறக்கும். இதற்கு தேவை, ஆர்வம், முயற்சி, பயிற்சி, செயலாக்கம், ஆராய்ச்சி என்பதுதான். எனவே, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழுமா? என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது? நீங்கள் யோகத்தில் உங்களை இணைத்துக்கொண்ட பிறகு.

யோகத்திற்கு வராமலேயே, முடியுமா? நிகழுமா? என்று கேட்பது நியாயமும் இல்லை. ஒருவேளை, யோகத்தில் இணைந்துகொண்ட பிறகும், தவம் தியானம் செய்துவரும் பொழுதும், வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுமானால். நீங்கள் யோகத்தில் பயணிப்பதால், உங்கள் முயற்சி, செயல், ஆராய்ச்சி என்ற அளவில் அதில் மாற்றம் நிச்சயமாக நிகழந்திருக்கும். எனவே இங்கே வருத்தமும், கவலையும் பெறவேண்டிய அவசியமில்லை. அந்த வழியில் இருக்கும் அடுத்தவற்றை, உங்கள் வழியில் வந்த, வரும் வாரீசுகள், தலைமுறைமுறையினர் தீர்த்துவைப்பார்கள் என்பது உறுதி, மாற்றுக்கருத்தும் இல்லை.

வாழ்க வளமுடன்.

-