swindle-the-artist | CJ

swindle-the-artist

swindle-the-artist


ஓவியரை ஏமாற்றும் வித்தை

என் வாடிக்கையாளர்கள், (Customer) கஷ்டமராக மாறிவிடுவர். எப்படி ஒரு தேள் தன்னை காப்பற்றுபரைக்கூட தன் கொடுக்கால் கொட்டி வலியையும், விஷத்தையும் தருமோ, அதுபோலவே நானும் கடிபெற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைதேடிவரும் ஓவ்வொரு தேள்களால்...

அது என்னுடைய தவறுதானே!

ஒரு வேலைகொடுத்தால், அதை ஆர்வத்தோடுதான் செய்யவிழைவது வழக்கம். இதற்கு இவ்வளவு பணம் கொடுத்தால்தான் செய்வேன், செய்யமுடியும் என்று சொல்லுவது என் வழக்கமில்லை...

சிறிய, பெரிய நிறுவனங்களும், சில தனிமனிதர்களும் தான் கேட்டவேலைகள் செய்துமுடித்தபின்னரே அதற்கான பணத்தை காசோலைகளாக தருவது வழக்கம். இதற்கு கிட்டதட்ட 15 நாட்கள் நான் காத்திருக்க வேண்டியதுவரும். அப்படியும் சிலர் காசோலையோ, அல்லது தாமதத்திற்கான பதிலோ கூட தருவதில்லை...


செய்துகொடுத்த வேலைக்கான கூலி, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சொன்னது போல “உஊஊஊ” தான்...

இந்த ஓவியம் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கானது...



ஆனால் இதனாலெல்லாம், இந்த மனிதர்களாலெல்லாம் நான் சலிப்படைந்துவிடுவதில்லை... மக்களில் சிலர் அப்படித்தான் இருப்பார்கள்... இவர்களுக்காக நல்ல மனிதர்களை இழக்கமுடிவதில்லை. ஓவ்வொரு முறையும் நான் கவனமாக இருக்க நினைப்பதும், பிறகு ஏமாற்றபடுவதும் தொடர்கதை...

அதில் நிறைய ஓவியங்களும், என் உழைப்பும், நேரமும் வீணாகபோயிருக்கின்றன. இந்த கார்டூனும் இதில் சேர்த்திதான்... கார்டூன் என் பணி இல்லை என்றாலும், செய்வதில் ஆர்வமிருந்ததால் “கேட்ட ஒருவருக்காக” செய்தேன்... இதுவரை ஒரு பதிலும் இல்லை...






இதில் வேடிக்கை... இந்த கார்ட்டூன் அந்த அரசியல் தலைவர்களை படம்பிடித்து காட்டவில்லை என்றும் எனக்கு பதில் கிடைத்தது...

ஆக நான் இன்னமும் பாடம் படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஏமாறக்கூடாது என்று, ஓவ்வொரு ஏமாற்றப்படுவதிலும்.