Srirangam-Live-sketch-sugumarje

ஷேசராயர் மண்டபம் என்றழைக்கப்படும், சிற்ப மண்டபத்தில் ஓவியம் வரைய ஆரம்பித்தோம். ஒரு குறவன், குறத்தியை தலையில் சுமந்து செல்லும் காட்சிக்கான சிற்பத்தை தேர்வு செய்து, என் மாணவர்களுக்கு எப்படி வரையலாம் என்பது மாதிரியான சில விளக்கங்களை சொல்லிவிட்டு, நானும் அவர்களோடு வரைய ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு சுற்றுலாகுழு ஒரு வழிகாட்டியோடு சிற்பத்தூணைக்கான வந்தது. நான் அந்த வழிகாட்டியிடம்...
“இவர்களில் யாரேனும் ஒருவருக்கு நான் ஓவியம் வரைந்து தருகிறேன்” என்றேன்...
“எவ்வளவு ஆகும்?”
“பணம் வேண்டாம், இவர்களுக்கு அது பிடிக்கும் என்பதே போதும்” என்றேன்
“சரி செய்யுங்க”
ஒரு பெண் (என் வயதுக்கு அக்கா எனலாம்) முன்வந்தார். ஒரு நிமிடத்திற்குள்ளாக அவருக்கு கேரிகேச்சரை வரைந்து தந்தேன்... “வாவ்” என்று சொல்லி சிரித்தபடி வாங்கிக்கொண்டார்...
அவர் குழுவினரும் சந்தோசம் அடைந்தனர். அந்த பெண் தன் கைப்பையை திறந்து ரூபாய் 100 எடுத்தார்...
“Get It”
“No Please... This is My Gift for you"
"Thanks"
அவர்களிடம் சொல்லி, ஒரு ஒளிப்படமும் எடுத்துக்கொண்டேன்...

திருச்சியில் ஓவிய ஆர்வலர்கள் நிறைய இருப்பதாக தெரிகிறது. ஆனால் யாரும் குழுவாக சேரமறுக்கிறார்கள்!
இனி இந்த புகழ்பெற்ற, அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பதூண்களின் நிலை...
முதல் தூணில் சிறுத்தையில்லை, குதிரையின் கால்களும் இல்லை :(
இரண்டாவது தூணில் குறத்தியின் இடதுகால் இல்லை :(
மூன்றாவது தூணில் சிறுத்தையை கொல்லுபவர்களின் கால்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன :(
இப்படியாக எல்லா சிற்பங்களிலிலும்...
ஓவியமாக வரைவதற்குக்கூட கடினமான இவ்வளவு நுணுக்க சிற்பத்தை இப்படியா சிதைப்பார்கள்??? இந்த உலகின் பயங்கரமான விலங்கு “மனிதனைத்தவிர” வேறெதும் இல்லை!
கலை இவர்களால் கலைகிறது...