Horoscope research service for all | CJ

Horoscope research service for all

Horoscope research service for all



 எல்லோருக்குமான ஜோதிட / ஜாதக ஆலோசனை சேவை

வேண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு, ஜாதகம் வழியாக, கர்மா என்ற வினைப்பதிவு குறித்து சிலருக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த நிகழ்வு, ராகு கேது குறித்த, என் ஆராய்ச்சிக்காக நடத்தப்பட்டது. ஒருவாரம் மட்டும்தான் அதை செயல்படுத்தினேன். பிறகு அந்த சேவை நிறுத்திவிட்டேன். பல நாட்களாக மீண்டும் அதை செயல்படுத்துக என்று சில அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, வேதாத்திரிய சேவையை தரும் இந்த வேளையிலும், ஜாதக ஆலோசனையை தருவதற்கு முடிவு செய்துள்ளேன்.

இங்கே நாம் எதைப்பகிர்ந்து கொண்டாலும், அதற்கு எசப்பாட்டு பாடுவதற்கு நாலு அன்பர்கள் வந்துவிடுவார்கள். எதையுமே முழுதாக புரிந்து கொள்ளாமல், ஆராய்ந்து பார்க்காமல் உடனே எதையாவது மறுத்து பேச வேண்டும், தான் அறிவாளி என்று காட்டவேண்டும் என்று துடிப்பார்கள். ‘வேதாத்திரியத்தில் இருப்பவர்களுக்கு, ஜோதிடம், ஜாதகம் தேவையா?’ என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவதும், கேட்பதும் என்னவென்றால் ‘உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்களப்பா! துரியாதீத தவத்தில் ஏன் சந்திரன், சூரியன் என்று போகிறீர்கள்? டைரக்டா போக வேண்டியதுதானே?’ 

ஜாதக ஆலோசனை

நான் வழங்கும் இந்த சேவை, மற்ற ஜோதிட நிபுணர்கள் சொல்லும் நிலையிலிருந்து மாறுபடும். அதாவது அவர்கள் பரிபாசை பாடல்கள், ஆய்வு குறிப்புக்கள், பலவிதமான குறிப்பேடுகள், அனுபவம், பல ஜோதிட நூலகள் படிப்பறிவு, பல ஜாதக குறிப்பு ஆராய்ச்சி என்பதாக, இவற்றைக் கொண்டு பலன்களை, பரிகாரங்களை சொல்லுவார்கள்.

ஆனால், இங்கே நாம், வேதாத்திரியத்தில் இருப்பதால் அடிப்படையான, நேரிடையான விளக்கமும், அனுபவ குறிப்பும் கொண்டு சொல்லப்படும். காரணம் நமக்கு எது பஞ்சபௌதீக தோற்றங்களாக, நம் பிரபஞ்சத்தில், கிரகங்களாக, இயற்கையாக, பொருட்களாக, தனிமங்களாக, ஜீவன்களாக, மனித உயிர்களாக வந்திருக்கிறது என்ற உண்மை தெரியும். கிரகங்கள் என்ன தன்மையில் இருக்கிறது? எத்தகைய அலைகளை வீசுகிறது? எப்படி நமக்குள் பாதிப்பை, நன்மையை, சமநிலையை உருவாக்குகிறது? என்பதும் தெரியும். மேலும் குறிப்பாக, மனம் என்பது என்ன? அதன் தன்மை என்ன? எப்படி செயல்படுகிறது என்பதும் நாம் அறிவோம். முக்கியமாக, இருந்த இடத்திலிருந்தே, பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும் தெரியும். இதன்வழியாக, நம் பிறப்பு ஜாதக குறிப்பில் இருக்கும் உண்மையை இயல்பாக, தெளிவாக, வெட்டவெளிச்சமாக சொல்லிட முடியும்.

நமக்கு நாமே பரிகாரம்

குழப்பமில்லாத தானே தன்னால் தீர்த்துக்கொள்ளும் பரிகாரங்களும் தெரியும். கோவில் குளமென்று அலைய தேவையின்றி, தவத்தாலும், செயல்களாலும், திருத்தங்களாலும் நாம் அதை பரிகாரமாக தீர்க்கலாம். மேலும் நாம் கற்ற அகத்தாய்வும், தற்சோதனையும் உதவுமே! எனவே நமக்கு தெரியவேண்டியது என்ன? என் ஜாதகம் வழியாக, என் துன்பச் சிக்கலுக்கு தீர்வு தெரிகிறதா? என்பது மட்டுமே. அதைத்தான் இங்கே நான் வழங்கும் சேவை தருகிறது. இந்த இடத்தில் என்னுடைய நண்பரை (காலமாகிவிட்டார்), நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நானும் அவரும் பல ஆய்வு கட்டுரைகளை 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறோம். அவரும் பரிகாரத்தை, மற்ற சோதிட நிபுணர்கள் போல சொல்லாமல் ‘நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மூலமாக’ என்பார். 

வேதாத்திரி மகரிஷியின் கைரேகை

ஏதோ ஒரு நிகழ்வில், ஒருவர் மகரிஷியிடம், 

‘நான் உங்கள் கைரேகையை பார்க்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். மகரிஷியும் சிரித்துக்கொண்டே ‘சரி பாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். கைரேகைகளை ஆய்ந்து பார்த்துவிட்டு, விளக்கம் சொல்லிவிட்டு, 

‘ஐயா, ஐம்பத்திநான்கு ஆண்டுக்காலம் வாழ்வீர்கள்’ என்று சொன்னாராம். மகரிஷியோ ‘நான் வந்த வேலை இன்னும் முடியலையேய்யா? அது இன்னும் காலம் ஆகுமே? ஏதாவது இந்த ஐம்பத்திநான்கை நீடிக்கும் வழி இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த கைரேகை பார்த்தவர் ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, நீங்களேதான் எதாவது வழி தேடனும், இல்லைன்னா தெய்வத்துகிட்ட முறையிடனும்’ என்றாராம்.

நடந்தது என்ன? வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய 96 வயதில்தான் உடல், உதிர்த்து வான் காந்தத்தில் தன்னை நிறைத்துக் கொண்டார். தன்னுடைய 95 வயது நிறைவிலேயே ‘நான் வந்த வேலை முடிந்துவிட்டது, நான் போகிறேன், யாருக்கும் பாரமில்லாமல்’ என்று சொல்லிவிட்டார் என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

ஜாதக சேவைக்கு?!

இதன் வழியாக பெற்றப்படும் ஜோதிட, ஜாதக சேவைக்கு Rs. 999/- (ஒரு நபர்/ ஒரு ஜாதக குறிப்பு) என்ற வகையில் செலுத்திட வேண்டும்.

கைபேசி App வழியாக செலுத்துக:

9442783450@UPI

வங்கி வழியாக செலுத்திட விபரம்:

AC Name: J.SUGUMARAN
SB Ac: 50100081694540
IFSC: HDFC0000058
Branch: THILLAINAGAR (Tiruchirappalli, Tamilnadu, INDIA)

பலன்கள் பெற

உங்கள் ஜாதகுறிப்பு அனுப்புக. அக்குறிப்பு உங்களுக்கு எழுதப்படவில்லை என்றால்,
1) பெயர்
2) தாய்/தந்தை பெயர்கள்
3) ஆண்/பெண்
4) பிறந்த தேதி/மாதம்/வருடம்
5) பிறந்த நேரம்
6) பிறந்த ஊர்/மாவட்டம்/நாடு
7) தற்பொழுது வசிக்கும் முகவரி
8) கைபேசி எண்
9) வாட்சாப் (WhatsApp)எண்
10) ஏதேனும் 7 கேள்விகள்
ஆகிய முழு விபரங்களை அனுப்புக.

ஜாதக குறிப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்ப: checkmyhoroscope@gmail.com

ஜாதக குறிப்பு வாட்சாப் (WhatsApp) வழியாக அனுப்ப: wa.me/+919442783450

கூடுதலாக நீங்கள் நன்கொடை செலுத்திய விபரமும் தெரிவிக்க வேண்டும். நன்கொடை செலுத்தப்படாத ஜாதக குறிப்புக்கள், ஆலோசனைக்கும், ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அறிக.

விபரமான, விளக்கமான, ஆய்வு முடிவுகள், எழுத்து வடிவிலான PDF மின்னஞ்சல் வழியாக பெற, குறைந்தது 3 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காத்திருக்கவும்.

இந்த சேவை சிறுது காலம் நீடிக்கும் என்பது உறுதி.

குறிப்பு: இந்த சேவை குறித்து, நேரடியாக கைபேசி அழைப்பு செய்வதை தவிர்க்கவும். வாட்சாப் (WhatsApp) மட்டும் தொடர்பு கொள்க!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!