Home » vethathiriya kayakalpam » How you describe the Vethathiriya Kayakalpa Yoga Practice is the best for better life?
இப்படியான, அரைகுறை புரிதலில் பல கேள்விகள் வருவதுண்டு. யாரோ சொன்னதை கேட்டு, உண்மையை வேறுமாதிரி புரிந்து கொள்வார்கள். இவர்களாகவே எதேதோ தப்பாகவும் புரிந்து கொள்வார்கள். இந்த கேள்வி அப்படிப்பட்டதுதான்.
இவருக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. இது உண்மையா? என்று நேரடியாகவே, வேதாத்திரிய தவமையங்களுக்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ சென்று கேள்வி கேட்டிருக்கலாம். அவருக்கான விளக்கத்தை ஆசிரியர்கள் தந்திருப்பார். ஆனால், அதை யாருமே செய்வதில்லை. இப்படி பொதுவெளியில் ஏதேனும் கூறிக்கொண்டே, புலம்பிக்கொண்டே இருப்பது இந்தமாதிரியான ஆட்களின் வாடிக்கை.
யோகமும் பாலுறவும் எதிரெதிர் துருவங்கள் அல்ல. ஒரு மனிதனின் பிறப்பே பாலுறவின் வெளிப்பாடுதானே? அதிலே வந்த ஒரு மனிதன், அதை விட்டு விலகி, மறுத்து ஒதுக்கிவிட்டு, யோகத்திற்கு வருவது தகுமா? அது இயற்கைக்கு முரண்பாடு ஆகாதா?
அந்தக்காலத்தில், குண்டலினி எனும் உயிராற்றல் சக்தியை மேலே எழுப்பி கொண்டுவர, பல கடினமான முறைகள் பயிற்சிகள் இருந்தன. மேலே உயர்த்திடும் குண்டலினி சக்தி, நம்முடைய பாலுறவு ஆசையாலும், எண்ணங்களாலும், உடலுறவாலும் மறுபடி கீழே இறங்கிவிடும் என்பதால், பாலுறவை தவிர்க்கச் சொன்னார்களே தவிர, யோகத்திற்கு பாலுறவு எதிரி என்று சொல்லவில்லை. நீங்களாக தவறாக புரிந்துகொண்டால் யார் பொறுப்பு?
வெறுமனே உங்கள் அறியாமையை, ஊருக்கு வெளிக்காட்டிக் கொள்வதற்கு பதிலாக, உண்மையை, அதன் அருகில் இருந்து, அறிந்து கொள்ளுங்கள். மனித பிறப்பின் உண்மையை அறியாமல், முடங்கி, வெறுமனே மடிந்து போகாதீர்கள். இந்த காணொளி, உங்களுக்கான புரிதலை தரலாம்.
காயகல்பம் யோகம் செய்வதால் காமத்தில் ஆர்வம் குறைகிறதா? #Vethathiriya #Kayakalpa yoga truth & benefits
வாழ்க வளமுடன்
-