March 2025 | CJ for You

March 2025

How to compose Pancha Bhuta Navagraha Penance? What is the method? Can you explain how it works?


வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் எப்படி இயற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? எப்படி பயன் தருகிறது என்ற விளக்கம் சொல்லுவீர்களா?

இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான, சிறு பெரு ஆலயங்களிலும், கோவிகளிலும், நவக்கிரகங்களுக்கு தனிப்பட்ட சந்நிதியும், ஒன்பது கிரங்கள் இணைந்து இருக்கும் வழிபாட்டு அமைப்பும் இருக்கும். ஆலயம் மற்றும் கோவிலில், முக்கியமான மூலவரை வணங்குவிட்டு, நவக்கிரகங்களை வழிபடுவது வழக்கம். இது இன்னமும் தொடருகின்ற பழக்கமும் ஆகும். எங்கோ இருக்கும் கிரகங்களை, இங்கே, இந்த இடத்தில் இருந்து வழிபடுவது தகுமா? என்றுதான் கேள்வி எழும். ஆனால், மனிதனின் மனதிற்கு எங்கே? ஏது எல்லை? பிரபஞ்சமும் நொடியும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும். பிரபஞ்சத்திற்கு அப்பாலும் மனம் செல்லும் அல்லவா?

அதுதான் இங்கே நிகழ்கிறது. கண்மூடி வணங்கும் நேரத்தில் மனம், அந்தந்த நவக்கிரங்களோடு தொடர்பு கொள்கிறது. அருள் கிடைக்கிறது. இதே தத்துவம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றிய, பஞ்ச பூத நவக்கிரக தவத்திலும் இருக்கிறது. நவக்கிரகங்களுக்கு முன்னதாக, பஞ்ச பூத தன்மைகளையும் இங்கே வணங்கிக் கொள்கிறோம். இத்தவம் செய்வதற்கு தனியே எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே, வீட்டிலேயே செய்துவரலாம். குருவின் வழிகாட்டுதல் போதுமானது. யோகத்தில் இணைவதும், குண்டலினி தீட்சையும் தேவையில்லை.

எல்லோரும், எவ்வயதிலும் செய்துவரலாம். எளிமையானது, பாதுகாப்பானது, மிகவும் நன்மையானது. ஜோதிட பரிகாரம் என்பதாக, எங்கெங்கோ கோவில், குளம், காடு, மலை, குளம், நதி, கடல் என்று தேடிப்போகாமல், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தே, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து அதற்கான நன்மையை பெறலாம். வாழ்விலும் மாற்றத்தை உணரலாம்.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்ற வேண்டுமானால், அதற்கென்று நேரம் ஒதுக்குக. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் விளக்கத்தை, காதால் கேட்டுக்கொண்டே, வார்த்தைகளில் கவனம் வைத்துக்கொண்டே, தவம் செய்யலாம். பொதுவாக அதிகாலை நேரம் முதலாக மாலை வரை செய்யலாம். இரவு 7, 8 மணிக்கு மேலாக செய்யவேண்டியதில்லை. இத்தவத்தை நீங்களாகவே வார்த்தைகளை சொல்லி செய்யலாம் எனினும், எல்லாவற்றையும் கவனம் வைத்துக்கொள்வது கடினம். எனவே யாராவது சொல்லக்கேட்டு, நீங்கள் தவம் செய்வது சிறப்பாகும். இதோ உங்களுக்காக, தவ செய்முறை பதிவு.

வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவக்கிரக தவம் - Panchabootha Navakraha Thavam by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்

-

Pancha Bhootha Navagraha Penance has never been heard of. Will all this new penance help? And they say that everyone can do this? Do you know that penance has its own rule? If everyone could do it, it would be just a ritual.


பஞ்ச பூத நவக்கிரக தவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்படியெல்லாம் புதிது புதிதான தவம் எல்லாம் உதவுமா? மேலும் இதை எல்லோரும் செய்யலாம் என்றும் சொல்லுகிறார்களே? தவம் என்றால் அதற்கென்று ஒரு விதி இருக்கிறது தெரியுமா? எல்லோரும் செய்யமுடியும் என்றால் அது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். சரிதானே? விளக்கம் தருக.

நீங்கள் வேதாத்திரியத்தில் இல்லை என்று கருத இடமிருக்கிறது. கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே, அல்லது உங்கள் வயதிற்கு மேலாகவே, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம், வேதாத்திரியத்தின் வழியாக அன்பர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தவமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அன்பர்களுக்கு உதவும் வகையில், முழுமையான பலன்களை பெறுவதற்கும், தன் மனதை பிரபஞ்ச அளவில் விரித்துப்பழகிடவும் இத்தவம் உதவுகிறது. இதன் எளிமை கருதியே, வேதாத்திரியத்தில் அல்லாத மற்றவர்களும் இத்தவத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ளோர் இந்த, பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றி பயன் பெறுகின்றனர். உங்களைப் போல கேள்வி கேட்போர் தவிர்த்து விடுகின்றனர்.

பொதுவாக, இறையை வணங்கு, உனக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து எல்லோருக்கும் பொருந்தும் தானே? இதற்கு ஏதேனும் தனிப்பட விதி இருக்கிறதா? இல்லையே. வணங்குபவரின் மனம் ஒன்றிப்போனால் போதுமானது.

நீங்கள் சொல்லும் விதி, குண்டலினி யோகம் என்ற தியானத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதில் எட்டுவிதமான படிநிலைகளும் உண்டு. அதில் தியானம் என்பது ஏழாவது நிலையாகும். ஆனால், பஞ்ச பூத நவக்கிரக தவம் மிக எளிமையானது. இதில் எந்தவித தடையோ, பிரச்சனையோ, குழப்பமோ ஏற்பட வழியும் இல்லை. குண்டலினி என்ற உயிராற்றல் எழுப்பும், தீட்சைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குருவின் வழிகாட்டுதல், இதை எப்படி செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி, பஞ்ச பூத நவக்கிரக தவம், வீட்டிலே இருந்தபடி செய்யவும் முடியும்.

நீங்கள் சொல்வதுபோல, சடங்கும் சாதாரணமானது அல்ல. விதிகளை உள்ளடக்கியதுதான் சடங்கு என்றும் மாறிவிடுகிறது. ஆனால், இது தவம். இதில் சடங்கு என்பது இல்லை. மனம் ஒன்றிச்செய்யும் தவம், சடங்குகளைவிட மேலானது என்பதை அறிவீர்களா? இப்போது உங்களுக்கான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கூடுதல் விபரம் அறிய, இந்த காணொளி உதவும்.

பஞ்சபூத நவக்கிரதவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றமுடியுமா? எப்படி? ஏன்? #Vethathiriya

வாழ்க வளமுடன்

Happiness is what we get in this worldly life. It is truly blissful to be in the union of twos. But, you are confusing people by calling it erotic. It's been like this for a long time. It is foolish to call a godman who has nothing as bliss. How many people have felt such bliss? It's all a lie. If you have other good work, go check it out. Don't cheat.


உலக வாழ்க்கையில் நமக்கு கிடைப்பதுதான் இன்பம். அதில் ஆண் பெண் கலப்பில் கிடைப்பதுதான் உண்மையிலேயே பேரின்பம். ஆனால், நீங்கள் அதை சிற்றின்பம் என்று சொல்லி, மக்களை குழப்புகிறீர்கள். நீண்டகாலமாக இப்படித்தான். ஒன்றுமே இல்லாத சாமியார்தனத்தை பேரின்பம் என்று சொல்லுவது முட்டாள்தனம். அப்படியான பேரின்பத்தை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எல்லாமே பொய். வேறு நல்ல வேலை இருந்தால் போய்பாருங்கள். ஏமாற்றாதீர்கள்.




இப்படியாக, மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் அன்பர்களும், நாம் தரும் தத்துவ விளக்களை காண்பது மகிழ்ச்சி. இப்போது அவருக்கு புரியாவிட்டாலும்கூட, ஏதேனும் ஒருநாள், அவருக்கான விளக்கம் நிச்சயமாக கிடைத்துவிடும். இந்த இயற்கை அதற்கான வாய்ப்பை வழங்கவும் செய்யும். அது அப்படித்தான்.

இதை அந்த அன்பர், படிப்பாரா? என்பது தெரியாது எனினும், இதைப்போன்ற கருத்து கொண்டு, வெளியே சொல்லாமல், இதேபோலவே பார்க்கும், வேறு சில அன்பர்களுக்கு உதவும் அல்லவா? அதனாலேயே இந்த பதிவை தருகிறேன்.

மனிதன் தனக்குள்ளாகவே முழுமையானவன். முழு வட்டம் கொண்டவன். குழந்தைகள் விளையாடும் ஜிக் ஜாக் போல, இன்னொன்றை இணைத்து முழுமையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லாதவன். அதனாலேயே அவன், தன்னளவில் சிந்திக்கவும், செயல்படவும், விளைவை பெறவும் முடியும். குடும்பமாக, சமூகமாக, உலகமாக இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகமாக இருப்பது இதனால்தான்.

இந்த உலகில், பொதுவாகவே இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை முறையாக அனுபவித்தாலே பேரின்பமும், அதைத்தொடர்ந்து அமைதியும் கிடைத்துவிடும். இதில் சிக்கல் என்னவென்றால், இன்பம் நீடிக்கவேண்டும். ஆனால் நமக்கு கிடைக்கிற இன்பமெல்லாம், சில நொடிகள்தானே நீடிக்கிறது? உண்மைதானே?

அப்படி குறைவுபட்ட இன்பத்தை சிற்றின்பம் என்று சித்தர்கள்தான் சொன்னார்கள். நிலையாக நீடிக்கும் இன்பத்தை பேரின்பம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அறியாதோ ஏற்க மறுக்கின்றனர். தன்னை அறிவதையும், பிறவிக்கடமை தீர்ப்பதையும், மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்வதையும் மறந்துவிட்டு, அதை சாமியார்தனம் என்று சொல்வது சரிதானா? 

இத்தகைய பேரின்பத்தை உணர்ந்து அறிந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும்தான், நமக்கும் அது கிடைக்கவேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார்கள். ஆனால், நாம் சிற்றின்பத்திலேயே மூழ்கி கிடக்கிறோம். இந்த விளக்கங்களோடு, இந்த இணைப்பில் உள்ள காணொளி பதிவையும் கண்டு உண்மை அறிக!

சிற்றின்பம், பேரின்பம் என்றால் என்ன? What is Pleasure and Bliss? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்

Anyone can do the practice of biomagnetic gazing? will it give you immense power? Someone saying that we can make our lives better and get what we want. Is that really the truth? Explain


வாழ்க வளமுடன் ஐயா, ஜீவகாந்த பெருக்கம் பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற் சொல்லப்படுகிறது. அதனால் அபரிதமான சக்தி கிடைக்கும். நம் வாழ்க்கையை மிகசிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்றும், நினைத்ததை பெறலாம் என்றும் சொல்லுகிறார்களே? அது உண்மைதானா? விளக்கம் தருக.



வேதாத்திரிய அன்பர்கள் கூட, இப்படியான கேள்வியை கேட்பது வியப்பாக இருக்கிறது. எனினும் நீங்கள் ஆரம்ப சாதகராக இருந்தால், அதற்குரிய விபரங்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவின் வழியாக உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

இணைய உலகில், தடுக்கிவிழுந்தால் தகவல்கள் என்று, எல்லோருமே அள்ளிப்போடுகின்றனர். அது உண்மையா?, பொய்யா? தனக்கு அனுபவம் உண்டா? என்றெல்லாம் சொல்லுவதில்லை. ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களின் பதில் என்ன? எங்கேயோ படித்தேன், யாரோ சொன்னார்கள், இப்படியெல்லாம் பெயர் தெரியாத சித்தர் சொன்னார் என்று மழுப்புவார்கள். அதை இவர்களே, செய்து பலன்கண்டார்களா? என்றும் தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்து, நீங்களும் குழப்பிக்கொள்ள வேண்டாமே? அதுவும், வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு, உண்மை விளக்கம் பெறாமல் இருக்கலாமா?

ஜீவகாந்தம் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி செய்ய, உடலை, மனதை தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று நேரம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முறையான வழிமுறைகளை, ஆசிரியரின் வழியாக கற்றுத்தேர வேண்டும். சும்மா, வெறுமனே எனோ தானோ என்று, ஜீவகாந்த பெருக்க பயிற்சியை செய்யமுடியாது. அப்படி செய்யவும் கூடாது. அதனால் ஏற்படும் தவறான விளைவுகள், உங்கள் உடலையும், மனதையும் பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிருக்கும் கூட பிரச்சனை தருவதாக அமைந்துவிடலாம். எனவே, கவனமாக இருங்கள்.

உங்களுக்கென்று, பயிற்சி வழங்கப்படும் வரை பொறுமையாக காத்திருங்கள். தெளிவாக, ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு பிறகு, பயிற்சி செய்யுங்கள். சரிதானே? இந்த காணொளி தரும் விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஜீவகாந்த பெருக்கம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா? செய்தால் என்ன பலன் கிடைக்கும்? உண்மை விளக்கம்
வாழ்க வளமுடன்
-

Everyone in the world worships a different God. But who or who is the true God? How to understand the truth? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா,  உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர். ஆனால், எது அல்லது யார் உண்மையான இறை? எப்படி உண்மை விளங்கிக் கொள்வது? விளக்கம் தருக.


    உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர் என்ற கருத்து சரிதான். பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் இருந்து வருகின்றனர். நிச்சயமாக அதை குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. சொன்னால் மதம் முன்னே வந்து நிற்கும். அப்போது உண்மை மறைந்துவிடும்.

கடவுள் என்பது ‘கடந்து உள்ளே’ என்ற வினைச்சொல்லின் விளக்கமாகும். ஒரு மனிதன் தனக்குள்ளே கடந்து உள்ளே கவனித்தால், தன்னை விட மதிப்பு வாய்ந்த, எல்லாவற்றிக்கும் மூலமான, தெய்வீகத்தை உணர்ந்து அறியலாம் என்பதுதான், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முன்னோர்களின் வாக்கும், வழிமுறைகளும் ஆகும்.

ஒரு பொருள் என்பதைக் கடந்து, எப்போதும் இருக்கும் பொருள், என்பதை மெய்ப்பொருள் என்று சொல்லுவது வழக்கு. ஏனென்றால், நாம் இந்த உலகில் காணும் எல்லாமே, பொருள் நிலையில் இருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் கூட, சிறு அணுவாக இருந்து சிசுவாக, குழந்தையாக, சிறுவராக, இளைஞராக, மனிதராக மாறிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா? இந்த வளர்ச்சியில், ஒருகட்டத்தில் இல்லாமலும் போகிறோம். ஆனால், இந்த உண்மை உணரா மயக்கத்தில், நாமும், மற்ற எல்லாமும், எப்போதும் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். 

ஆனால், மெய்ப்பொருள் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தன்மையை கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம், நிலை, முடிவு அறியாதும் இருக்கிறோம். அதனால்தான் அத்தன்மையை, இறை என்று உயர்ந்த மதிப்பு கொடுத்து வணங்குகிறோம். அந்த உண்மைதான், பல்வேறு மனிதர்களிடத்தில், சிக்கிவிட்டது.

சிவம் என்பது உலக உயிர்களுக்கு பொதுவான வார்த்தையாகும். இதில் எந்தவிட பாகுபாடும் வருவதற்கில்லை. சிவம் என்பதுதான் பின்னாளில் பல்வேறு மாற்றங்களை கொண்டது. அந்த மாற்றங்களின் வழியாக, உண்மை மறைந்து அதில் பொய்யும் கலந்துவிட்டது. சிவத்திற்கு பதிலாக வேறு என்னென்னமோ வந்து மக்களை குழப்பியும்விட்டது, பிரித்தும்விட்டது.

உலகில் உள்ள எல்லா மனிதர்களும், யோகத்தின் வழியாக, தன்னையறிந்தால், இந்த உண்மை விளங்கிவிடும். வேறெதையும் எங்கே? எங்கே? என்று தேடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை ஏதோ தடுக்கிறது.

மெய்பொருள் என்பது என்ன? என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள், இங்கே விளக்குகிறார். அறிந்து கொள்வோம்.
மெய்ப்பொருளே சிவம் என்பதை உணர்வோம்! Let's Perceive the Absolute Matter is Shivam!
வாழ்க வளமுடன்
-