Pancha Bhootha Navagraha Penance has never been heard of. Will all this new penance help? And they say that everyone can do this? Do you know that penance has its own rule? If everyone could do it, it would be just a ritual.
பஞ்ச பூத நவக்கிரக தவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்படியெல்லாம் புதிது புதிதான தவம் எல்லாம் உதவுமா? மேலும் இதை எல்லோரும் செய்யலாம் என்றும் சொல்லுகிறார்களே? தவம் என்றால் அதற்கென்று ஒரு விதி இருக்கிறது தெரியுமா? எல்லோரும் செய்யமுடியும் என்றால் அது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். சரிதானே? விளக்கம் தருக.
நீங்கள் வேதாத்திரியத்தில் இல்லை என்று கருத இடமிருக்கிறது. கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே, அல்லது உங்கள் வயதிற்கு மேலாகவே, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம், வேதாத்திரியத்தின் வழியாக அன்பர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தவமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அன்பர்களுக்கு உதவும் வகையில், முழுமையான பலன்களை பெறுவதற்கும், தன் மனதை பிரபஞ்ச அளவில் விரித்துப்பழகிடவும் இத்தவம் உதவுகிறது. இதன் எளிமை கருதியே, வேதாத்திரியத்தில் அல்லாத மற்றவர்களும் இத்தவத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ளோர் இந்த, பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றி பயன் பெறுகின்றனர். உங்களைப் போல கேள்வி கேட்போர் தவிர்த்து விடுகின்றனர்.
பொதுவாக, இறையை வணங்கு, உனக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து எல்லோருக்கும் பொருந்தும் தானே? இதற்கு ஏதேனும் தனிப்பட விதி இருக்கிறதா? இல்லையே. வணங்குபவரின் மனம் ஒன்றிப்போனால் போதுமானது.
நீங்கள் சொல்லும் விதி, குண்டலினி யோகம் என்ற தியானத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதில் எட்டுவிதமான படிநிலைகளும் உண்டு. அதில் தியானம் என்பது ஏழாவது நிலையாகும். ஆனால், பஞ்ச பூத நவக்கிரக தவம் மிக எளிமையானது. இதில் எந்தவித தடையோ, பிரச்சனையோ, குழப்பமோ ஏற்பட வழியும் இல்லை. குண்டலினி என்ற உயிராற்றல் எழுப்பும், தீட்சைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குருவின் வழிகாட்டுதல், இதை எப்படி செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி, பஞ்ச பூத நவக்கிரக தவம், வீட்டிலே இருந்தபடி செய்யவும் முடியும்.
நீங்கள் சொல்வதுபோல, சடங்கும் சாதாரணமானது அல்ல. விதிகளை உள்ளடக்கியதுதான் சடங்கு என்றும் மாறிவிடுகிறது. ஆனால், இது தவம். இதில் சடங்கு என்பது இல்லை. மனம் ஒன்றிச்செய்யும் தவம், சடங்குகளைவிட மேலானது என்பதை அறிவீர்களா? இப்போது உங்களுக்கான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கூடுதல் விபரம் அறிய, இந்த காணொளி உதவும்.
பஞ்சபூத நவக்கிரதவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றமுடியுமா? எப்படி? ஏன்? #Vethathiriya
வாழ்க வளமுடன்