How to compose Pancha Bhuta Navagraha Penance? What is the method? Can you explain how it works?
வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் எப்படி இயற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? எப்படி பயன் தருகிறது என்ற விளக்கம் சொல்லுவீர்களா?
இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான, சிறு பெரு ஆலயங்களிலும், கோவிகளிலும், நவக்கிரகங்களுக்கு தனிப்பட்ட சந்நிதியும், ஒன்பது கிரங்கள் இணைந்து இருக்கும் வழிபாட்டு அமைப்பும் இருக்கும். ஆலயம் மற்றும் கோவிலில், முக்கியமான மூலவரை வணங்குவிட்டு, நவக்கிரகங்களை வழிபடுவது வழக்கம். இது இன்னமும் தொடருகின்ற பழக்கமும் ஆகும். எங்கோ இருக்கும் கிரகங்களை, இங்கே, இந்த இடத்தில் இருந்து வழிபடுவது தகுமா? என்றுதான் கேள்வி எழும். ஆனால், மனிதனின் மனதிற்கு எங்கே? ஏது எல்லை? பிரபஞ்சமும் நொடியும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும். பிரபஞ்சத்திற்கு அப்பாலும் மனம் செல்லும் அல்லவா?
அதுதான் இங்கே நிகழ்கிறது. கண்மூடி வணங்கும் நேரத்தில் மனம், அந்தந்த நவக்கிரங்களோடு தொடர்பு கொள்கிறது. அருள் கிடைக்கிறது. இதே தத்துவம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றிய, பஞ்ச பூத நவக்கிரக தவத்திலும் இருக்கிறது. நவக்கிரகங்களுக்கு முன்னதாக, பஞ்ச பூத தன்மைகளையும் இங்கே வணங்கிக் கொள்கிறோம். இத்தவம் செய்வதற்கு தனியே எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே, வீட்டிலேயே செய்துவரலாம். குருவின் வழிகாட்டுதல் போதுமானது. யோகத்தில் இணைவதும், குண்டலினி தீட்சையும் தேவையில்லை.
எல்லோரும், எவ்வயதிலும் செய்துவரலாம். எளிமையானது, பாதுகாப்பானது, மிகவும் நன்மையானது. ஜோதிட பரிகாரம் என்பதாக, எங்கெங்கோ கோவில், குளம், காடு, மலை, குளம், நதி, கடல் என்று தேடிப்போகாமல், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தே, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து அதற்கான நன்மையை பெறலாம். வாழ்விலும் மாற்றத்தை உணரலாம்.
இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்ற வேண்டுமானால், அதற்கென்று நேரம் ஒதுக்குக. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் விளக்கத்தை, காதால் கேட்டுக்கொண்டே, வார்த்தைகளில் கவனம் வைத்துக்கொண்டே, தவம் செய்யலாம். பொதுவாக அதிகாலை நேரம் முதலாக மாலை வரை செய்யலாம். இரவு 7, 8 மணிக்கு மேலாக செய்யவேண்டியதில்லை. இத்தவத்தை நீங்களாகவே வார்த்தைகளை சொல்லி செய்யலாம் எனினும், எல்லாவற்றையும் கவனம் வைத்துக்கொள்வது கடினம். எனவே யாராவது சொல்லக்கேட்டு, நீங்கள் தவம் செய்வது சிறப்பாகும். இதோ உங்களுக்காக, தவ செய்முறை பதிவு.
வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவக்கிரக தவம் - Panchabootha Navakraha Thavam by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-