Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 04 | CJ

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 04

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 04


Shri Vethathiri Maharishi- Art by Sugumarje


CENTER FOR THE SELF-REALIZATION BY VETHATHIRIYA YOGA



சுருக்கமாக ‘SEREVEYO’ (செரெவியொ) என்ற பெயரில் இந்த, வேதாத்திரிய யோகம் வழியாக, தன்னையறிதல் (குண்டலினி யோக அடிப்படையில்)  என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அன்பர்களே, முக்கியமாக இந்த சேவை வழியாக, குண்டலினி யோக தீட்சை, காயகல்ப பயிற்சி வழங்கப்படுவதில்லை. எனவே அவற்றை, ஆழியாறு அறிவுத்திருக்கோவில், உங்கள் நகரில் அமைந்திருக்கும் மனவளக்கலை மன்றங்கள், தவ மையங்களில் தொடர்பு கொண்டு  கற்றுக்கொள்ளலாம். அதன்படி வேதாத்திரியம் வழியாக கற்றுக்கொண்ட அன்பர்களுக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் உதவும் வகையில் இந்த சேவை வழங்கப்படுகிறது

அந்த வகையில், சேவை இரண்டு வகையாக செயல்படுகிறது. 


முதலாவது/ நன்கொடை வழியில் சேவை / நேரடி இணையவழி தொடர்பு சேவை
1) இணையம் வழியான கருத்தரங்கு, கலந்துரையாடல் அதன் பிறகான கேள்விக்கான பதில் நிகழ்வாக இருக்கும். இதில் நன்கொடை செலுத்திய அனைவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். நேரடியாக தத்துவ விளக்கம், கேள்வி பதில்! தனி நபருக்கான நன்கொடை Rs.999/- காலை  / மாலை  என இருநேர நிகழ்வு.
ஒரு நபர் தனியாக, விரும்பினால், ஒரு பகிர்வுக்கு, ஒரு நாளில் 30 to 40 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.(Google Meet or Zoom)
அதற்குப்பிறகு அவரே தொடர முடியாது. மறுநாள் வரை காத்திருக்க வேண்டும், எனவே அடுத்த வாய்ப்பு வேறு நபருக்கு வழங்கப்படும். இப்படியாக நன்கொடை அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்
இதற்கு நன்கொடை Rs. 999/- செலுத்தியவர்கள் WA.ME/919442783450 என்ற வாட்சாப் (WhatsApp) வழியாக விபரமளித்தால், அவர்களுக்கான இணைய கருத்தரங்கு இணைப்பு சுட்டி (Link) அனுப்பிவைக்கப்படும். இதை பிறருக்கு பகிர்வது தவறு என்று அறிந்து கொள்க! நீங்கள் பகிர்ந்து வேறு யாரேனும் வர அனுமதிக்காதீர்கள்.
நன்கொடை செலுத்தாதவர்கள் இணைவதற்கு அனுமதி மறுக்கப்படும். We will block that persons, who entered to webinar without donate.
இந்த நிகழ்வு ஒருபோதும் இணையத்தில், வேறுயாரும் பார்ப்பதற்காக பதிவாக பகிரப்படாது


இரண்டாவது/ நன்கொடை வழியில் சேவை / YouTube பதிவுகள் வழியான சேவை
2a) அடிப்படை உறுப்பினருக்கான விரிவான தகவல்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், விஞ்ஞான விளக்கங்கள் அடங்கிய காணொளிகள் (YouTube ல்) உறுப்பினர் / Membership வழியாக, நன்கொடை Rs.299/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
2b) தவமும் தவவிளக்கமும் பயன்களும், அனுபவங்களும், விளக்கங்களும் கொண்ட காணொளிகள் பெற நன்கொடை Rs.799/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
2c) இறை உண்மை ஆய்வு பதிவுகள், தனையறியும் பயணத்தில் கண்ட உண்மைகள், ஆராய்ச்சிகள், பயன்கள், கிடைத்த விளக்கங்கள் ஆகியன பலவித தலைப்பிலான காணொளிகள். நன்கொடை Rs.1.999/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
இதற்கான நன்கொடையை இங்கே YouTube வழியாகவே, அதன் வரையறைக்குட்பட்டு செலுத்தி பயன் பெறலாம். எங்கள் சேவை இந்நிர்வாகத்தால் கண்காணிக்கப்படும் என்றும் அறிக!
இந்த காணொளிகளை பொதுவெளியில் யாரும் பார்க்க முடியாது

விளக்கமாக!
வேதாத்திரியத்தில் என் 34 ஆண்டுகளுக்கு மேலான அனுபவ அறிவை தருகிறேன். எனவே சரியான நபர்களுக்கு சேரவேண்டும் என்றும் விரும்புகிறேன். அவர்களின் வளர்ச்சியில் என் பங்காக சிலவற்றை தரவும் எண்ணம் கொண்டுள்ளேன். எங்களின் அனுபவம், உழைப்பு, அறிவுப்பகிர்வு இவையெல்லாம் சரியான அன்பர்களுக்கு, தேவையானவர்களுக்கு, நோக்கத்தின் வழியாக முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டுமே சேரவேண்டும் என்று விரும்புகிறோம்.

சமீபமாக, வேதாத்திரியத்தில் நம் கைகளை உயர்த்தினால், வேதாத்திரி மகரிஷியைத் தவிர பற்றிக்கொள்ள யாருமில்லை என்று சொல்லுகிற அன்பர்களின் மனக்குறையை, நாங்கள் போக்கிட முயற்சிக்கிறோம்.

மேலும் இங்கே இணையம் வழியாக அறிவுத்திருட்டு அதிகமாக நிகழ்வதை காணமுடியும். ஒருவருடைய பதிவை, அவரிடம் கேட்காமல், தெரியப்படுத்தாமல், நன்றி சொல்லாமல், யாருடையது என்றும் சொல்லாமல், ஏதோ தானே ஆராய்ந்து கண்ட உண்மைபோல பேசி, அவர்களுடைய பெயரில் பகிர்ந்து விடுவார்கள். ஆனால், வேதாத்திரிய சானலில், ஒருபோதும், யாருடைய பதிவையும் எங்கள்பதிவாக வெளியிட்டதில்லை. வேதாத்திரி மகரிஷி பதிவுகள், ஏற்கனவே பொது தன்மையில் உள்ளதால், அவை மட்டுமே இருக்கும். மற்ற எல்லா பதிவுகளிலும் எங்கள், சிந்தனையும், உழைப்பும், ஆராய்ச்சியும், அனுபவங்கள் மட்டுமே இருக்கிறது.

மேலும் என் ஓவிய வாழ்க்கையிலும், 16 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை நான் சந்தித்து இருக்கிறேன். நான் வரைந்த ஓவியம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாக, அந்த ஓவியத்தை எடுத்து திருத்தி, மேலும் ஓவியத்தில், என் கையெழுத்தை அழித்துவிட்டு, தன் பெயரில் வெளியிட்டவரிடம் கேட்டதற்கு, ‘இணையத்தில் வந்துவிட்டால், அது உன் சொத்து அல்ல’  என்று என்னிடம், தெனாவட்டாக பதில் சொன்னவரோடு முரண்பட்டு அவரை என் நட்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளேன்.

மேலும் 2c) திட்ட வழியாக இணையும் அன்பர்களுக்கு மட்டும், பகிரப்படும் சில ஆய்வு பதிவுகளுக்கு, கூடுதலாக அதன் வடிவ கோப்பும் (PowerPoint Document) தர முடிவு செய்துள்ளோம் எனினும், எல்லாவற்றிற்கும் அப்படி தர இயலுமா என்பது கடினமே. வார்த்தையாலும், ஒளிப்படங்களாலும், ஓவியத்தாலும் சொல்லமுடியாத உண்மைகளும் இருக்கின்றனவே. எனினும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கவே நாங்கள் தயாராக உள்ளோம். வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள, அன்புடன் வரவேற்கிறோம்
.
இந்த சேவை வழியாக, என்னோடு துணை நிற்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷிக்கும், இன்னும் பல நல்ல சித்தர் பெருமக்களுக்கும் என் நன்றி.

-
குறிப்பு: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நன்கொடை திட்டத்தை அகற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்! அருட்பேராற்றலும், குரு மகானும் அந்நிலை அமைந்திட உதவட்டும்!
-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
Link for 1st part: Sereveyo Part1