How many meditation will practice on the starting level? | CJ

How many meditation will practice on the starting level?

How many meditation will practice on the starting level?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆரம்ப தவசாதகர் ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்?


பதில்:

ஆரம்ப தவசாதகர் என்றால், முதலில் எளியமுறை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், தவத்தில் அமர்ந்தால், மிக எளிதாக, உடல் வலி ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். முதுகுதண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார வேண்டியது அவசியம். சாதரண பதமாசனத்தில் அமர்ந்தால் போதும் என்றாலும் கூட, அதில் கூட கால்வலி எதுவும் வரக்கூடாது. 

உடலில் வலி, சோர்வு இருந்தால் தவம் மிகச்சரியாக இயற்ற முடியாது, அந்த தவமும் உதவாது, இடைப்பட்ட நேரத்திலேயே முடித்துவிடத் தோன்றும். எனவே உடல் அதை எல்லாம் பொருட்படுத்தாத நிலையை, உடற்பயிற்சியால் வரவழைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒருவாரம் முதல் ஒருமாதம் எடுத்துகொள்வது நல்லதுதான். கூடவே காயகல்பமும் செய்து பழகி வந்தால் இன்னமும் நன்மை கூடும், தவமும் சிறக்கும்.

ஆரம்ப தவசாதகருக்கு, ஆக்கினை முதல் துரியாதீதம் வரை கற்ற அனுபவம் பெற்றிருப்பார் என்றாலும் கூட, முதல் வாரம் ஆக்கினை தவம் மட்டுமே செய்துவரலாம். ஒருநாளைக்கு இரண்டு முறை தவம் இயற்றினால் போதுமானதே. அதிகாலையில் மற்றும் மாலையில் என்று அமைத்துக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த அனுபவத்தி நினைத்துப் பார்ப்பதாக நேரத்தை செலவிட்டுக் கொள்ளலாம்.

அடிக்கடியோ, ஒரு நாளைக்கு பல நேரமோ, அதிக நேரமோ தவம் இயற்ற வேண்டியதில்லை. ஒரு தவம் இயற்ற எந்தளவு நேரம் தரப்பட்டிருக்கிறதோ அந்த நேரம் மட்டும் இயற்றினால் போதுமானது. அமிர்தம் என்பதற்காக அடிக்கடி உண்ணக்கூடாது என்பார்கள். அதுபோலவே தவமும் என்று சொல்லலாம்.

ஆக்கினை தவம் இயற்றிவரும் நாட்களில் ஒரு சிலருக்கு, தவ ஆற்றல் கூடிவிடும். அதனால் தலைபாரம் உணர்ந்தால், உடனடியாக சாந்தி தவம் செய்து, அதிகமான தவ ஆற்றலை, உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றிக்கொள்ளலாம். 

உங்களின் ஆரவம், முயற்சி, ஆராய்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட, ஒருநாளைக்கு இருவேளை தவம் என்பது, ஆரம்ப சாதகருக்கு பொருத்தமானது.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!