Is it true that they say that we were born to solve karma? | CJ

Is it true that they say that we were born to solve karma?

Is it true that they say that we were born to solve karma?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?


பதில்:

கர்மாவை தீர்க்கவே பிறந்தோம் என்பதை விட, கர்வால்தான் பிறந்தோம் என்று சொல்லுவதே மிக பொருந்தமாக இருக்கும். இந்த கர்மா என்பதை புரிந்து கொள்வதில் பல குழப்பங்கள் இருந்துவருவதால், கரமா என்பதை வினப்பதிவுகள் என்றே, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒரு வினை, அதன் விளைவு ஆகிய இரண்டும் சேர்ந்து பதிவாக மாறிவிடுகிறது. அதுவே வினைப்பதிவு, கர்மா என்று அழைப்படுகிறது!

இயற்கையோடு ஒட்டிவாழும் உயிரினங்களுக்கு, கர்மா என்ற வினைப்பதிவு எழுவதில்லை, பதிவாகவில்லை, மறுபடியும் எழுவதில்லை. உதாரணமாக ஐந்தறிவு விலங்கினங்கள் மற்றும் பறவைகள். ஆனால், ஆறறிவான மனிதன், அவனின் விரிந்த ஆற்றலாலும், இயற்கையின் ஒர் அங்கமாகவே பரிணாமத்தில் வந்ததால், அவன் எது செய்தாலும் அது வினையாக பதிவாகிறது. நல்லது என்றால் அது நல்ல பதிவையும், தீயது, ஏற்பில்லாதது என்றால் அதுவும் வினைப்பதிவாகவும், அதை சரி செய்யும் பொருட்டாக, திருத்தம் பெறும் வழியிலும் மறுபடி மலர்கின்றது. சரியாக புரிந்து கொண்டு, திருத்தாவிட்டால், மறுபடியும் எழும் மற்றொரு விளைவோடு கூடுதலாக பதிவாகிவிடும். 

ஒரு மனிதனால், தன் ஆயுட்காலத்தில் தீர்க்கமுடியாத, கர்மா என்ற வினைப்பதிவுகளை, கருத்தொடர் வழியாக அவர்களின் வாரிசுகளுக்கு கடத்தப்படுகிறது. இங்கே இறையாற்றலே செயல்படுகிறது. அப்படி கடத்துவதற்காகவே, பிள்ளைகள் பிறப்பும் நிகழ்கிறது எனலாம். எனவே பிறவின் நோக்கம், கர்மாவை தீர்க்க மட்டுமில்லாமல், ஏற்கனவே தீர்க்கப்படாத கர்மாவால்தான் அந்த பிறப்பே நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

இந்த கர்மா என்ற வினைப்பதிவு இருப்பதால்தான், ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி சிறப்புத்தன்மையும் அமைகிறது எனலாம். ஓவ்வொருவருடைய செயல் ஒன்றாகவே இருந்தபொழுதும், விளைவு என்பதில் வேறுபட்டு அமைகிற உண்மையை எல்லோரும் அறிவார்கள். அந்த விளைவை தருவதில் ‘கர்மா என்ற வினைப்பதிவு’ முதன்மையாக அமைகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!