How to understand and perform the Shanti Thavam? | CJ

How to understand and perform the Shanti Thavam?

How to understand and perform the Shanti Thavam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி அந்த சாந்தி தவம் செய்வது? இதுவரை எனக்கு முழுமையாகவில்லை ஏன்?


பதில்:

சாந்தி தவம் என்பது அற்புதமான, சித்தர்களின் கொடை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார். தவத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல, உடல் அந்த தவ ஆற்றலை தாங்கமுடியாமல் பல்வேறு வேதனை வெளிப்படுத்தும். இதனால் உடல், மனம், உயிரும் பாதிப்படையும். இதை சீர் செய்து, திருத்தம் பெறுவதற்காக உண்டான தவமே, சாந்தி தவம். இதை இறங்குபடி தவம் என்றும் சொல்லுவார்கள்.

யோகத்தில் தவம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பக்தி வழியில் அதீதமாக இருப்போருக்கும் கூட இந்த சாந்தி தவம் உதவுகிறது என்பது உண்மை. அப்படி பக்தி வழியில், பாதிப்படைந்தோர்க்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இத்தவத்தை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார்.

யோகத்தில் உயர்வு மட்டும் இல்லை, அவ்வப்பொழுது அதீத தவ ஆற்றலை, உடல் ஏற்றுக்கொள்ளவும் பழக்கவேண்டும். குண்டலினி சக்தியை, ஆக்கினையில் இருந்து, மூலாதரம் கொண்டுவந்து நிறுத்துவதே சாந்தி தவம் ஆகும். ஆரம்ப தவசாதகர்கள், வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை கட்டாயமாக சாந்திதவம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த தவம் செய்வது மிக எளிதே, சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, முதுகுதண்டு நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். மூலாதாரம் என்ற சக்கரத்தை, ஆதாரத்தை மட்டும் நினைத்து தவம் இயற்ற வேண்டும். வேறு எந்த சக்கரத்தையும் நினைவில் கொண்டுவரக் கூடாது. மனம் அந்த மூலாதரம் என்ற இடத்தில் நிலைத்து நிற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். காலை 10 நிமிடம், மாலை 10 நிமிடம் செய்தால் போதுமானது.

வெள்ளிக்கிழமை பெரும்பாலும், எல்லா மனவளக்கலை அன்பர்களும் சாந்தி தவம் செய்வதால், நமக்கும் அத்தகைய நிலை கைவரப்பெறும். ஒரு நாள் உங்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தால், அதாவது தலைபாரம், உடல்வலி தொடர்ந்தால், மறுநாளும், சனிக்கிழமையும் கூட இந்த சாந்தி தவமே செய்துவரலாம், தவறொன்றும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!