How to accept critic on our home and life circle? | CJ

How to accept critic on our home and life circle?

How to accept critic on our home and life circle?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எப்போதுமே நம்மை குறைசொல்லுபவர்களை, அது வாழ்க்கை துணையாகட்டும், மாமியாராக ஆகட்டும், யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். எப்படி சரி செய்வது?


பதில்:

இது எல்லா குடும்பங்களிலும், வேலைகளிலும், தொழில்களிலும், வியாபார தளங்களிலும் நிகழக்கூடியதுதான். உங்களை குறை சொல்லும் நபர்கள் மூன்று விஷயங்களுக்காக இதைச் செய்கிறார்கள் எனலாம். அதென்ன அந்த மூன்று விஷயங்கள் என்றால்...

1) அவர்களுக்கு பொழுதுபோகவில்லை. ஏதேனும் பரபரப்பாக செய்யவேண்டும் என்ற நினைக்கிறார்கள்

2) எதிராளோடு வம்பு தும்பு செய்யவும், சண்டை போடவும், அதனால் ஒரு தன்மீது ஒரு பரிதாபத்தை சும்மாவேணும் ஏற்படுத்திக்கொள்ளவும் விரும்புகிறார்கள்

3) தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று மமதையில் இருக்கிறார்கள் அதை நிரூபிக்க ஆசை கொள்கிறார்கள்.

இதற்கு நீங்கள் ஏன் பலி ஆடாக இருக்கவேண்டும்? தேவையே இல்லையே. இனிமேலும் யாராவது உங்களை குறைசொன்னால், அந்த வார்த்தைகள், உங்கள் காதில் விழாதது போல நடித்துவிடுங்கள். உங்களை தட்டி சொன்னால் கூட, நான் வேறேதோ கனவத்தில் இருந்தேன் என்று பொய்யாக சொல்லுங்கள். மறுபடியும் சொன்னால், அப்படியா சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு, உங்கள் வேலையை கவனியுங்கள். இல்லையானால் அந்த இடத்தை விட்டு நகருங்கள். குறை சொல்லுபரை உங்கள் அருகில் வர விடாது நகர்ந்துகொண்டே இருங்கள். 

இந்த இடத்தில், உங்களை குறை சொல்லுபவரை நீங்கள் அவமானபடுத்துவதாக, புதிய ஒரு குறையை அவர் அடுக்கினாலும், கண்டுகொள்ளாதீர்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அப்படியே நடந்துகொள்ளுங்கள். பிறகு என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்.

மேலும் நீங்கள் தவம் செய்யும் பொழுது, அவரை நினைத்து ‘வாழ்க வளமுடன்’ என்று வேறெந்த நினைப்பும் இல்லாமல் வாழ்த்தி வாருங்கள். அவரை நினைத்து ஏற்கனவே நீங்கள் வருத்தப்பட்டிருந்தால் அதை அகற்றிவிடுங்கள். அவரை நல்லவராகவோ, கெட்டவராகவோ கூட நினைக்கக் கூடாது. உங்களுக்கு தெரிந்த, பழக்கமான, புதிய அன்பரைப்போல மட்டுமே நினைத்துக் கொள்ளுங்கள். அவரால் இதுவரை உங்களுக்கு எந்த துன்பமும் இல்லை, இன்பமும் இல்லை என்ற நிலைக்கு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இனி நலமே விளையும். 

வாழ்க வளமுடன்.