Why they always replied as practice meditation it is the solution | CJ

Why they always replied as practice meditation it is the solution

Why they always replied as practice meditation it is the solution


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யாரிடம் எந்த சந்தேகம் கேட்டாலும், பொதுவான பதிலாக ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்கிறார்களே? 


பதில்:

அந்த பதிலிலும் ஓர் உண்மை இருக்கிறதுதானே?! என்றாலும் கூட, கேட்கிற அன்பரின் சந்தேகம் எத்தகையது என்பதை, கேட்பவருடைய பார்வையிலேயே பார்க்க வேண்டியதும் அவசியம். ஒரு சிலருக்கு, மூன்றாம் பார்வைகோணம் கிடைப்பதில்லை அல்லது பழகுவதில்லை. இதெல்லாம் எதற்கு என்று தள்ளி வைத்துவிடுவார்கள். தனக்கு புரிந்ததுபோலவே, இன்னொரு நபருக்கும் புரிந்திருக்கும் என்பதும், புரியவேண்டும் என்பதும் நிகழ்வதில்லையே!?

கருமையம், மனம் என்பது எல்லா மனிதருக்கும் பொதுவானது என்றாலும், அதில் இருக்கின்ற களங்களும், பதிவுகளும், அனுபவங்களும் வேறுவேறானவை தானே? அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதனால், அவரவர் தனித்தனியான எண்ணம், சொல், செயல்பாடு என்றுதானே இருப்பார்கள்?! இதுபொதுவானது!

ஆனால், ஏன் தவம் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது என்றால், மனம் இயல்பு நடவடிக்கைகளில் இருந்தும், வாழ்க்கைச்சூழலுகான பரபரப்பில் இருந்தும் கொஞ்சமாக விலகி, தன்னுடைய மூலம் நோக்கி நகரத்துவங்கும். மனதின் அலைச்சுழல் ஆல்பா என்ற தூக்கத்திலும் விழிப்பு நிலை என்ற அலைநீளத்தில், இயங்கிட ஆரம்பமாகும். அந்த நிலையில், மனமே தன்னுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, காட்சிவடிவமாக காணத்துவங்க நல்ல வாய்ப்பு கிடைத்திடும். அதனால்தான், ‘நல்லா தவம் செய்யுங்கள் மாற்றம் கிடைக்கும்’ என்று சொல்லிவிடுகிறார்கள்.

அதாவது, உங்களுக்கான தீர்வு உங்களிடமே இருக்கிறது என்பதுதான் இதன் நோக்கமாக இருக்கிறதே தவிர வேறெந்த காரணமும் இதில் இல்லை! வேதாத்திரியத்தில் அப்படியான குறை காணவும் அவசியமில்லை.

வாழ்க வளமுடன்.