Shall I join on the temple Homa, is it useful to me? | CJ

Shall I join on the temple Homa, is it useful to me?

Shall I join on the temple Homa, is it useful to me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கோவிலில் யாகம் வளர்க்கும் பொழுது நாம் கலந்து கொண்டால் நல்லதா?


பதில்:

இறை உண்மை அறிந்த முன்னோர்கள், அந்த தெய்வீகத்தை, யோகத்தில் வரமுடியாத மக்களுக்கு தெரியப்படுத்தவும், அதன் சக்தியை பெற்று வாழ்வில் உயரவுமே பக்தி உருவாக்கப்பட்டது. அந்த பக்தி, கோவில் என்ற வழிபாட்டு தளத்தில், உருவ வழிபாடாகவும் அமைக்கப்பட்டது. அப்படியான தளத்தில், தெய்வீக ஆற்றல் நிறைபெறவும்,  ஆற்றலை சேமிக்கவும், தக்கவைக்கவும் அந்தந்த வழிபாட்டு தளங்களில் யாகம் நடத்தி முறைப்படுத்துகிறார்கள். யாகம், ஹோமம் என்பது தமிழில் வேள்வி என்று அர்த்தமாகிறது.

கோவில் என்ற வழிபாட்டு தளங்களுக்குச் செல்லும் மனிதர்கள், தெய்வீகத் தன்மையை எளிதில் புரிந்து அந்த பெற்று தங்களையும் உயர்த்திக் கொண்டு, அதன் வழியாக நல்வாழ்க்கை வாழவும் இந்த ஆற்றல் உதவிடும் என்பது உறுதி. ஆனாலும், இக்காலத்திய யாகம், ஹோமம் இவற்றில் இருக்கிற உண்மை சில இடங்களில் தடுமாறுவதும் உண்டு. உண்மை உணர்ந்து செய்வதற்கும், வெறுமனே சடங்காக செய்வதற்கும் வித்தியாசம் உண்டுதானே?!

யோகத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு இருந்தால், அந்த அமைப்பில் ஒருவராகவோ, ஏதேனும் ஒரு உதவியிலோ கலந்து கொள்வதில் தவறில்லை.  மேலும் யோகத்தில் இல்லாத மக்களுக்கு, பக்தியில் திளைக்கும் மக்களுக்கு நிச்சயமாக உதவிடும். ஆனால் குண்டலினி யோகத்தின் வழியாக, தொடர்ந்து தவம் செய்பவர்கள் யாகம், ஹோமம் என்ற வேள்வி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. ஏன்? என்று கேட்டால், யாகத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது, நீங்கள் இயற்றும் தவத்தில் கிடைத்துவிடும் என்பதே உண்மையாகும்!

என்றாலும் கூட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம், இதுபோல, வேதாத்திரிய தவம் கற்றோர், கோவிலுக்கு போகலாமா? என்று கேட்டவருக்கு, ‘போகலாம் அதில் தவறொன்றும் இல்லை. தவிர்க்கவேண்டிய அவசியமும் இல்லை’ என்று சொல்லுகிறார். அதில் உள்ளர்த்தமாக நிறை உண்மைகள் மறைந்து இருக்கின்றன. என்றாவது ஓர் நாள் என்னிடம் நேரிலே கேளுங்கள். அந்த உண்மையை சொல்லுகிறேன். 

வாழ்க வளமுடன்.