Why do some people degrade other human beings and live with competition and jealousy? | CJ

Why do some people degrade other human beings and live with competition and jealousy?

Why do some people degrade other human beings and live with competition and jealousy?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிலர் தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் வாழ்வது ஏன்?


பதில்:

தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் நடத்திக்கொள்வதற்கு காரணம், சிலர் தங்களையும், பிறரையும் சம அளவில் கருதாததே ஆகும், மனிதன் என்பவன் மன இதனானவன் என்ற உண்மையை அவர்கள் உணர்வில்லை. மேலும் அத்தகைய மனிதர்களின் பரம்பரையில் வாழ்ந்தவர்களும், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் அதற்கு மிக மதிப்பளித்தும் வாழ்ந்து வந்திருப்பார்கள். அதுவே இப்போது வாழும் தலைமுறையினருக்கும் தொடர்கிறது எனலாம்.

மேலும் பரிணாமத்தின் வழியாக, விலங்கின பதிவுகளின் தாக்கமும் அதிக செயல்பாட்டில் இருக்கும் என்று சொல்லாம். அதாவது அவர்களின் கருமையம் களங்கத்தோடு இருக்கிறது. அதை திருத்திடவும், திருத்தி அமைக்கவும் வாய்ப்பில்லாமல் போகிறது. பல பிறவிகளின் வழியாக அந்த சுமையையும் கூட்டிக்கொண்டே போகிறார்கள். இதன் வழியாக, அவர்களுக்கு இயற்கை சில பாடங்களை கொடுத்து திருத்தம் செய்கிறது எனினும், அதை அவர்கள் ஏற்று நடப்பது இல்லை. இந்த களங்கத்தின் வழியாக, அவர்களின் உடல்நலம், மன நலம் பாதிக்கும், பிறவித்தொடர் நோய்களும், துன்பங்களும் இருக்கும் என்பதே உண்மை. யோகத்தில் இணைந்து தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் இரண்டொழுக்க பண்பாடும் கொண்ட வாழ்வாகவும் வாழவேண்டியதும் அவசியமாகும்.

இத்தகைய மனிதர்களிடம் சிக்கிக் கொண்டவர்களின் துயரம் சொல்லில் அடங்காது எனினும், இவர்களோடு இணைப்பில் உள்ளவர்கள், தனியே, தன் திறமையக்கொண்டு வாழ பழகுதல் வேண்டும், இவர்களை சாராத வகையில், வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நல்லதுதானே. அவர் நம்மை சக மனிதனாக மதிக்காவிட்டாலும் கூட இவர்கள் திருத்தம் பெற நாம் வாழ்த்தலாம். அது நமக்கு நன்மையே தரும்.

வாழ்க வளமுடன்