I have been without sleep for many days or it's not enough. Will penance help in this? | CJ

I have been without sleep for many days or it's not enough. Will penance help in this?

I have been without sleep for many days or it's not enough. Will penance help in this?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பல நாட்களாக தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். தூங்கினாலும் அது போதுமானதாக இல்லை. இதற்கு தவம் உதவுமா?


பதில்:

உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் தூக்கத்தைக் கெடுக்கும் எந்த வேலையையும், செயலையும் செய்யக்கூடாது, முடிந்தளவு தவிர்க்கவேண்டும். தற்போதைய காலத்தில், கைபேசி பயன்பாடு தவிர்க்கமுடியாது எனினும், இரவில் அதை பார்க்கமாட்டேன் என்று உறுதி செய்து கொள்க. யாரேனும் அழைத்தால் பேசலாமே தவிர, அதில் தேவையில்லாத கவனம் செலுத்தக்கூடாது. இரவில் தொலைகாட்சி, சினிமா பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். 

முக்கியமாக இரவு உணவு வயிற்றுக்கு எந்த கெடுதியும் செய்யாததாக அமைத்துக்கொள்ள வேண்டும். இன்றோ பலருக்கு, பலவித மாசாலாக்கள் கலந்த, அசைவ உணவுகள்தான் இரவு உணவாக உள்ளது. அதிலும் நேரடியாக வெளிநாட்டு தயாரிப்பு கொண்டதாகவும் இருக்கிறது. அவை நம் உடலுக்கு அதிக வெப்பத்தை தரக்கூடியவையாக இருக்கலாம். மேலும் இரவில் காஃபி, தேனீர், பால் அருந்துவது கூட தூக்கத்தை கெடுக்கும் என்பதை அறிந்துகொள்க.

ஒவ்வொருநாளும், இரவு பத்து மணிக்குள் படுக்கைக்குச் செல்லவும், தூங்கப் பழகவும் முயற்சிக்க வேண்டும். இதன் வழியாக, நீங்கள் என்னென்ன தவறுகள் உள்ளன என்பதை பட்டியலிட்டு, திருத்தம் கொள்ளவேண்டும்.

இரவில் உங்கள் படுக்கையறையில் அதிக வெளிச்சம் இல்லாததாகவும், அதிக சப்தம் இல்லாததாகவும் அமைத்துக் கொள்க. நல்ல காற்றோட்டம் வந்துபோவதாகவும் அமையவேண்டும். குளிரூட்டபட்ட வசதி இருந்தால் கூட அது சில நேரம் தூக்கத்தை கெடுக்கலாம். மேலும் படுக்கை அறையிலும், படுக்கையிலும் ஏதேனும் வேலை செய்வதை தவிருங்கள். இந்த அறையை நான் தூங்குவதற்காக மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதி கொள்க.

இதெல்லாம் செய்தும் தூக்கம் வரவில்லை என்றால், சாந்தி தவம் உதவிடும். மிக சுருக்கமாக, ஐந்து நிமிட சாந்தி தவம் கூட போதுமானதே. சாந்தி தவம் செய்தால், மனம் அமைதி அடைகிறது, உடல் சீராகி தளர்வை சரி செய்து கொள்கிறது. உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. முக்கியமாக, தூங்குவதற்கு முன்பாக, உங்கள் பரபரப்பை குறைத்து, சிந்தனைகளை முழுமை செய்து கொள்ள வேண்டும். இரவே நாளைய வேலைகள் குறித்து திட்டமோ, கவலைகளோ யோசிக்க கூடாது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு, தூங்கப்பழக  வேண்டும். நல்லதூக்கம் இருந்தால், காலையில் உற்சாகத்தோடு எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும்தானே?!

வாழ்க வளமுடன்.