Why Kayakalpa yoga morning exercise has 2 stages on level 3? | CJ

Why Kayakalpa yoga morning exercise has 2 stages on level 3?

Why Kayakalpa yoga morning exercise has 2 stages on level 3?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சியில், காலை மூன்று பயிற்சிகளில், நான்காவதாக ஆண்களுக்கு மட்டும் தனி நிலை என்பது ஏன்?


பதில்:

சித்தர்கள் வழியான, உடலை உறுதி செய்து, வித்துநாதம் காக்கும் அற்புத பயிற்சியே காயகல்பயோக பயிற்சி ஆகும். இந்த புராதனமான இக்கலையை, முழுமைசெய்து வடிவமைத்தவர், குரு மகான வேதாத்திரி மகரிசி அவர்களே. காலையில் செய்தும் பயிற்சி மூன்று, அதில் மூன்றாவது பயிற்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி நிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஆண்களுக்கு கூடுதலாக ஒரு நிலை உண்டு. இதற்கான காரணம், பெண்களுக்கு உள்ளமைந்த கர்பப்பை, மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவும், அதனால் வேறுவிதமான பாதிப்புக்களும், தொந்தரவுகளும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் மூன்றாவது பயிற்சி நிலையிலேயே பத்து அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சும் செய்துவந்தால் போதுமானது ஆகும்.

ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு உடலை விட்டு வெளிப்புறமாக அமைந்திருப்பதால், மூன்றாவது பயிற்சியின் முதல் நிலையில் 10 அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சு செய்வதற்குமுன் உடலை வளைக்கும் விதமாக, கால்களுக்குள் கைகளை கோர்த்த நிலையில் வந்தபிறகு ஓஜ்ஸ் மூச்சு வெளியிட வேண்டும் என்று பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான உண்மை விளக்கம், நீங்கள் இந்த காயகல்ப யோகப் பயிற்சியை கற்கும் பொழுதே சொல்லித்தரப்பட்டிருந்தாலும், நீங்கள் அதில் கவனமின்றி மறந்திருக்க வாய்ப்பு உண்டு எனினும் இப்பொழுது அறிந்துகொண்டது நன்மைதானே.

வாழ்க வளமுடன்.