Detailed information about the Manonmaniya Thavam | CJ

Detailed information about the Manonmaniya Thavam

Detailed information about the Manonmaniya Thavam


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனோன்மணிய தவம் குறித்து உண்மை விளக்கம் தருக!


பதில்:

மனோன்மணிய தவம், இப்பொழுது தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுப்போல பல தவங்கள், அதன் அடிப்படை நிலை கருதி நிக்கப்பட்டது. காரணம், நாம் நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுவிடுகிறோம். எனவே அத்தகைய உயர்நிலை தவங்கள் கற்கும் நிலையில், அதற்கு மாறான நிலைகொண்ட தவங்கள் தேவை குறைந்துவிடுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில், கற்றுக்கொடுக்கப்பட்டது. 

ஏனென்றால், அன்பர்கள் படிப்படியாக உயர்நிலைக்கு வரவும், அவர்கள் தவங்களை, குண்டலினி சக்தி நிறையும் ஆதார, சக்கர நிலைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்பட்டது. ஆனால் காலமாற்றத்தில், அன்பர்களின் ஆர்வம், முயற்சி இவற்றை கருத்தில் கொண்டும், அவர்களின் தினசரி வாழ்வியல் சூழல் தன்மையைக் கொண்டும், நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அன்பர்களின் நோக்கம் நிறைவேற, கற்ற தவங்களை, தடையில்லாமல் தொடர்ந்து செய்துவருவதில்தான் இருக்கிறது.

எனவே, தவிர்க்கப்பட்ட தவங்களை நாம் மீண்டும் கற்று செய்துவருவது நல்லதுதான் எனினும், அது தேவையில்லை என்பதே கருத்தாக நிற்கிறது.

இதை இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால். மனோன்மணியம் என்பது, பீனீயல் சுரப்பி என்று விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் ஒரு சக்கரம், ஆதாரமாகும். இந்த மனோன்மணி என்பதை துரிய சக்கரத்தின், அடிப்புற நிலை, மூலை நிலை எனலாம். நாம் இந்த இடத்தில் மனம் செலுத்தி தியானித்து பழக, மனோன்மணிய தவம் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மனோன்மணிய இடத்தை, இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, ஆக்கினை வழியாக உள்முகமாகவும், தலை உச்சியிலிருந்து கீழாகவும் ஒரு கோடு வரைந்தால், இரண்டு கோடுகளும் இணையும் புள்ளி எனலாம். சிலர் இரு காதுகளின் மேல்புறத்தின் வழியாக கோடுவரைந்தால், அக்கோட்டின் மையப்புள்ளி என்றும் கூறுவார்கள்.

மனோன்மணிய தவம், இணையத்தில் காணக்கிடைப்பதால், அதன்வழியாக நீங்கள் தவம் இயற்றலாம். தவறில்லை.

வாழ்க வளமுடன்.