How Amavasya fast will benefit to us and which meditation is best for that day? | CJ

How Amavasya fast will benefit to us and which meditation is best for that day?

How Amavasya fast will benefit to us and which meditation is best for that day?


அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?

பதில்:
அமாவாசை, பௌர்ணமி என்பதும் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்து நிகழும் இயற்கையின் அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த புவியில், பஞ்சபூதங்களுக்கும், அதன் மலர்ச்சியில் உள்ள இயற்கைக்கும், பரிணாமத்தின் வழியாக மலர்ந்த ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் ஓர் உந்துதலையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அக்காலத்தில் இருந்தே இதை உணர்ந்தறிந்த முன்னோர்கள், மக்களின் வாழ்க்கை முறையை, அன்றைய நாளில் மட்டும் ஒழுங்குசெய்தார்கள். நிலவு, சூரியன், பூமி இவற்றின் அமைப்பில் மாறும் ஆற்றலை, நமக்கு சாதகமான வகையில் ஏற்று நன்மை பெற வழி வகுத்தார்கள்.

அமாவாசை என்றால், சூரியனும் நிலவும் இணைகிறது எனலாம். பௌர்ணமி என்றால் சூரியனும், நிலவும் தனித்தனியே எதிரெதிராக பிரிந்து நிற்கிறது எனலாம். இந்த இரண்டு நிலைகளிலும், சூரியன், நிலவு, நாம் வாழும் பூமி இவற்றின் காந்தக்களம் மாறுபாடு அடைகிறது. ஏனென்றால் ஓவ்வொரு கிரகத்திற்கும், தனித்தன்மையான காந்த அலைகள் உண்டு. அவை எப்போதும் பரவி வீசிக்கொண்டே இருக்கும். அமாவாசையில் சூரியனும், நிலவும் இணைவதால், அதன் காந்த அலைகள், புமியை நோக்கிய நிலையில் பலமாகின்றன. இதனால் ஒர் ஆகர்ஷணசக்தி ஏற்படுகிறது. இது மனிதர்களாகிய நம் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, ஜீரணமண்டலத்தையும் பாதிக்கிறது.

அதனால்தான் அமாவாசையில் விரதம் என்ற நிலைபாட்டை வைத்தார்கள். இந்த விரதம், குறிப்பிட்ட எளிய உணவுகளை குறைவாக சாப்பிடுவது என்றும், ஒரு நேரம் மட்டும் எதுவும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்றும் முன்னோர்கள் வழிசெய்தார்கள். இதில் அந்த ஆற்றலை வணங்குவதற்கு பக்தி வழியாகவும் பூஜை என்று வைத்தார்கள். இதனால் உடல், மன, உயிர் நலம் காக்கப்படும் என்பது உறுதி.

உணவு என்ற விரதம் மட்டுமல்ல, எந்த ஒரு புதிய செயல் தவிர்ப்பது, கடினமான வேலைகளை தவிர்ப்பது, ஆயுதங்களை கையாளாமல் இருப்பது என்று பல விரதங்கள் உண்டுதான். முக்கியமாக ஆண், பெண் உடலுறவையும் தடுக்கவே சொல்லுகிறார்கள். அதற்கான காரணங்கள் நிறைய உண்டு. அதை தனிப்பதிவாகவே தரலாம். ஆனால் இதை எல்லாம் மறுத்து, பொய், கட்டுக்கதை என்போர், வரக்கூடிய பிரச்சனையை அனுபவிக்க வேண்டியதுதான். அதுகுறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?!

அமாவாசையில் தவம் செய்வதாக இருந்தால், சாந்தி தவம் செய்யலாம். தவ ஆற்றலை உடலாற்றலாக மாற்றம் செய்யும் வகையில், உடல்நலம் காக்கப்படும். சக்தி இழப்பும் ஏற்படாது. மனமும் சிதறாத நிலைக்கு உதவும். வேறு தவங்கள் தேவையில்லை.
வாழ்க வளமுடன்
-