Any best solution and prevention as lifelong to our body? | CJ

Any best solution and prevention as lifelong to our body?

Any best solution and prevention as lifelong to our body?


நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?

பதில்:

இந்த உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் நோயும், அதன் தாக்கமும், குணமடைதலும் உண்டு. அது இயற்கயாகவும் உண்டாகும். சில சூழ்நிலை காரணாகவும் வந்துவிடும். நாமே உருவாக்கியும் சிக்கிக் கொள்வோம். 2019ம் ஆண்டு உலகை பாதித்த கரோனா தொற்றுநோய், மனிதர்கள், தன்னுடைய ஆய்வகத்தில் உருவாக்கியதன் விளைவுதானே? அது இன்னமும் மிச்சம் மீதியாக ஆங்காங்கே தொடரத்தான் செய்கிறது. சிலவகை நோய், நோய்க்கிருமிகள், தாவரங்களை நாம் உணவாக உட்கொள்வதின் மூலமாக வந்துவிடுகிறது. வேறு சில நோயும், நோய்கிருமிகளும் பறவைகள், விலங்குகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வழியாகவும் நம்மை வந்துடந்து பாதிக்கிறது.

இயற்கையின் இயல்பாகவே தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் நிலை உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் உண்டு. அதில் ஏமாற்றமும், பலன் இல்லாது போலும் பொழுதும்தான் அது நோயாக வடிவமெடுக்கிறது. 
நம்முடைய வாழ்க்கையில், நமக்கு இந்த உடலை மிகச்சரியாக இயக்காமல் இருந்தாலும், அதிகமான வேலையை ஒரு உறுப்புக்கு கொடுத்தாலும் வலி வந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அந்த வலி சரியானபடியாக தீர்கப்படாவிட்டால், அதுவே நோயாகவும் மாறிவிடும் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உணவு, நொறுக்குதீணி, அதீத சுவை, திடீர் உணவுகள் எடுத்துக்கொள்வதில் கவனம் வேண்டும். உடலுக்கு பொருத்தமானதா? என்பதை ஆராயவேண்டும். பசி வந்தால் மட்டுமே உணவு என்ற முறைக்கு மாறவேண்டும். நேரம் கடத்துதலும், நேரம் சுருக்குதலும் செரிமான உறுப்புகளை பாதிக்கும். 
உடலுக்குள்ளாக இயங்குகின்ற காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கப்படாமல் இயங்கிட வேண்டியது அவசியம். அதற்கு நம்முடைய உடலும், உடல் உறுப்புகளும் சரியாக பயன்படுத்திடவும் வேண்டும். அந்த பயன்பாடு இப்போதைய உலக வாழ்வியலில் பெரும்பாலோர்க்கு இல்லை.

இதனால் உடல் அங்காங்கே சோர்வுற்று வலியாகவும், நோயாகவும் மாறிவிடுகிறது. இளம் வயதுவரை எட்டிப்பார்க்காத பரம்பரை வழியாக வந்த நோய்கள், குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியும் நம்மை பாதிக்கிறது. தகுந்த மருந்துகளை உட்கொள்வதின் மூலமும், எடுத்துக்கொள்வதின் வழியாகவும் தீர்க்கலாம். இல்லையேல் அது நீடித்த நோயாக மாறி, குணப்படுத்த முடியாத  நிலைக்குப் போய்விடும்.

மருந்தில்லா மருத்துவம் என்றாலும், அதற்கு முன்பாக, இந்த உடல் நோய் இல்லாத தன்மையில் வைத்துக்கொண்டால் தானே அது உதவும்?! நோய் வந்தபிறகும், முற்றியபிறகு அது எப்படி உதவமுடியும்?

மிகசரியான பருவ வயதில் உடல் அசைவுக்கு பழகவேண்டும். வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சரியான தீர்வு. வருமுன் காப்பது என்ற நிலையில், வலி, நோயை தடுத்துக்கொள்ள நல்ல வழி. எனினும் எல்லாவயதினரும், எந்த வலி, நோய் நிலையில் உள்ளவரும்கூட கற்றுக்கொண்டு பயிற்சியை தொடர்ந்து செய்துவரலாம். வலி, நோயின் தீவிரம் குறைந்து குணமளிக்கும். என்றாலும் மருந்தும் அவசியம். தொடர்ந்து செய்துவரும்பொழுதுதான், மருந்தில்லா நிலைக்கு உடலும், உறுப்புகளும் பழக்கமாகலாம். அதுவரை மருந்துகளை நிறுத்திவிடாமல் தொடர்வும் வேண்டும். இதற்கிடையில் மருத்துவரின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி எல்லாவயதினரும் செய்யலாம். அதன் வழியாக உடல், மன, உயிர் வளம் காக்கலாம். வாழ்நாள் நீடிப்பும் செய்யலாம். இயற்கையோடு இணைந்த உடல் இயக்கத்தை பெறலாம். வாழ்வில் பசிக்கு உணவு என்பதைபோல, உடலுக்கு எளியமுறை உடற்பயிற்சி என்றவகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக உங்கள் உடலை பேணிக்காப்பதில், உங்களுக்கு மட்டுமே அக்கறை உண்டாக வேண்டும். அதில் ஆர்வம், முயற்சி, பயிற்சி இவைகளும் முக்கியமாகும்.

வாழ்க வளமுடன்.
-